எந்த ஸ்வரத்தினை
ஓதுகிறாய் மரத்திடம் நீ
தலைசயசைத்து...தலையசைத்து...
ரசனையாய் சிரிக்கிறது எப்போதும்!
தண்ணீரைத் தடவிச் செல்லும்
ஸ்பரிச சந்தோசத்தில்
அலை அலையாய்
வெட்கத்தை இறைக்கிறது
அந்த மரத்தோரத்து நதி...!
பூக்களுக்குள் புகுந்து..
மகரந்தங்களை கலைத்துப் போட்டு
வண்டோடு அது கொண்ட காதலை
சொல்லிச் சிரித்தபடி செல்லும்...
இந்த காற்றின் பயணம்தான் ...
எதை நோக்கி...?
புல்லாங் குழலுக்குள் புகுந்து
இசையாய் உடை உடுத்தி
செவிகளுக்குள் பயணப்பட்டு
இசையாய் மயங்க வைக்கிறது ...
மனித மனங்களை...!
ஆக்ரோசங்களை எல்லாம்
தன்னுள் அடைகாத்துக் கொண்டு
சந்தோசங்களை பரப்பும்
காற்றை யார்தான் கட்டிப்போட...?
வயல் வெளிகளுக்குள் புகுந்து
பயிர்களிடம் செய்யும் சில்மிஷங்களை
பகுத்தறிவு கொண்டு
நிறுத்தவா முடியும்?
மனிதருக்குள் புகுந்து
நினைவுகளில் நிறைந்து
உயிராய் ஊடுருவியிருக்கும்
ஓசையற்ற சூட்சுமத்தினை
உணரத்தானே முடியும்...?
கையிலெடுத்து காட்டவா முடியும்...!
எல்லாம் கூட்டிக் கழித்து
விடைகளின் வேரினில்
கிடைக்கும் பதில்களில் இருந்து
எழும் ஒற்றை கேள்வி..இதுதான்...
காற்றுதான் கடவுளா?
தேவா. S
புல்லாங் குழலுக்குள் புகுந்து
இசையாய் உடை உடுத்தி
செவிகளுக்குள் பயணப்பட்டு
இசையாய் மயங்க வைக்கிறது ...
மனித மனங்களை...!
ஆக்ரோசங்களை எல்லாம்
தன்னுள் அடைகாத்துக் கொண்டு
சந்தோசங்களை பரப்பும்
காற்றை யார்தான் கட்டிப்போட...?
வயல் வெளிகளுக்குள் புகுந்து
பயிர்களிடம் செய்யும் சில்மிஷங்களை
பகுத்தறிவு கொண்டு
நிறுத்தவா முடியும்?
மனிதருக்குள் புகுந்து
நினைவுகளில் நிறைந்து
உயிராய் ஊடுருவியிருக்கும்
ஓசையற்ற சூட்சுமத்தினை
உணரத்தானே முடியும்...?
கையிலெடுத்து காட்டவா முடியும்...!
எல்லாம் கூட்டிக் கழித்து
விடைகளின் வேரினில்
கிடைக்கும் பதில்களில் இருந்து
எழும் ஒற்றை கேள்வி..இதுதான்...
காற்றுதான் கடவுளா?
தேவா. S
Comments
விடைகளின் வேரினில்
கிடைக்கும் பதில்களில் இருந்து
எழும் ஒற்றை கேள்வி..இதுதான்...
காற்றுதான் கடவுளா?//
nalla kavithai... kadaisiyil kelviyudan...
கண்னருகே காட்டி விட்டீர்கள்..
உள்ளத்தில் உணரத் தான் முடியும்..
உள்ளங்கையில் உட்கார வைக்க முடியாதுன்னு அழகா சொல்லிட்டீங்க..
உங்க ரசனையை ரசித்தேன்.. :-))
தன்னுள் அடைகாத்துக் கொண்டு
சந்தோசங்களை பரப்பும்
காற்றை யார்தான் கட்டிப்போட...?
வயல் வெளிகளுக்குள் புகுந்து
பயிர்களிடம் செய்யும் சில்மிஷங்களை
பகுத்தறிவு கொண்டு
நிறுத்தவா முடியும்?
...wow! lovely way of writing it. nice.
ரொம்ப யோசிக்க வைக்கிறதே இந்த கவிதை...?! :))
என்ன இருக்கிறது இந்த கவிதையில் என்று யோசிக்க வைப்பதும் படைப்பாளியின் சூட்சுமம் தானோ !?
இன்னும் கற்றுகொண்டே இருக்கிறேன்.....
நன்றி.
கடவுளைப்போல காற்று என்று சொன்னால் சரியாகுமா !