Skip to main content

பரமசிவம் தாத்தா....என் ஹீரோ!


















கற்றை முடியை கையால்...
கலைத்து சற்றே நிமிர்கையில்...
கண்ணாடிக்குள்ளிருந்து கண்ணடித்து
வெளுப்பாய் பார்த்து சிரித்தன
சில வெள்ளை முடிகள்!

கறுப்பு ராஜ்யத்துக்குள்...
காலம் அனுப்பி வைத்த...
பளீச்சிடும் படை வீரர்களாய்
தம்மை மறைத்து மெலிதாய் சிரித்து
சூட்சுமமாய் வாள் சுழற்றி
சொல்லாமல் சொல்லின...
காலத்தின் கணக்கினை.....!

எதிர் வீட்டு சம்பசிவம் தாத்தா....
என் அப்பா, என் மாமா என்று...
வாங்கிய வெளுமையினை
சாயங்களால் ஏமாற்றி
கருப்பாய் வெளுப்பை
அவ்வப்போது தோற்கடித்திருந்தாலும்
முழுதும் வெளுத்த தலையுடன்
எப்போதும் நடக்கும் பக்கத்து வீட்டு
பரமசிவம் தாத்தாதான்
என் ஆதர்சன ஹீரோ!

சொடக்கு போட்டு....
காலம் அழைத்து கொடுக்கும்
பரிசினை மறைத்து வைக்கும்
மடைமையில் எப்படி விடியும்
மீண்டும் இளமை?

என் நரைத்த தலையை
முழுதாய் காணும் ஏக்கத்தில்
மீண்டும் மீண்டும்
கனவுகளில் பறக்கிறேன்...
கேசத்தினை....கலைத்து கலைத்து...
கணக்குகள் கூட்டி காதலாய்...
காத்திருக்கிறேன் கருப்பினை
கடக்கும் என் வெள்ளை நாட்களுக்காக!

மிச்சமும் எப்போது வெளுக்குமென்ற
என் கனவுகளின் பின்னால்...
காலம் கடக்கும் ஆசையொன்றுளதை
யார்தான் அறிவார்?

தேவா. S


Comments

Chitra said…
என் நரைத்த தலையை
முழுதாய் காணும் ஏக்கத்தில்
மீண்டும் மீண்டும்
கனவுகளில் பறக்கிறேன்...
கேசத்தினை....கலைத்து கலைத்து...
கணக்குகள் கூட்டி காதலாய்...
காத்திருக்கிறேன் கருப்பினை
கடக்கும் என் வெள்ளை நாட்களுக்காக!


.....ரொம்பவும் வித்தியாசமான ஆசை.... எனக்குத் தெரிந்து இதுவரை, இளமையிலேயே முதுமை லுக் வர ஆசைப்பட்டது அவ்வையார் மட்டும் தான். :-)))))
//சொடக்கு போட்டு....
காலம் அழைத்து கொடுக்கும்
பரிசினை மறைத்து வைக்கும்
மடைமையில் எப்படி விடியும்
மீண்டும் இளமை?//

நல்லா கேக்குறாய்ங்கய்யா கேள்வி

படித்து முடித்ததும் பாட்டையாவின் ஞாபகம் ..!
ஹேமா said…
ஆசைப்படறீங்களோ படலையோ வெள்ளையன் வந்தே தீருவான்.
அது நிச்சயம் !

சில வயதானவர்கள்தான் வாழ்வின் முன்னோடிகள் !
Anonymous said…
வாழ்க திருவாளர் அன்ன ஹசாரே அவர்கள் !
சட்டம் ஒழுங்கின் பெயரில் கைகள் கட்டப்பட்டுள்ளோம். உண்ணா விரதம் இருக்க அனுமதியில்லை.சென்னை வேங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் (நந்தனம் சிக்னல் அருகில்)தினமும் ஒன்று கூடுகிறோம். முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை நடக்கிறது. தயவு செய்து கலந்து கொள்ளுங்கள்.

இன்று மாலை 5 மணி அளவில் கோவையில் வா.வு.சி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளார்கள். உங்கள் கோவை நண்பர்களிடம் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்கள்.
சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...