Skip to main content

பரமசிவம் தாத்தா....என் ஹீரோ!


















கற்றை முடியை கையால்...
கலைத்து சற்றே நிமிர்கையில்...
கண்ணாடிக்குள்ளிருந்து கண்ணடித்து
வெளுப்பாய் பார்த்து சிரித்தன
சில வெள்ளை முடிகள்!

கறுப்பு ராஜ்யத்துக்குள்...
காலம் அனுப்பி வைத்த...
பளீச்சிடும் படை வீரர்களாய்
தம்மை மறைத்து மெலிதாய் சிரித்து
சூட்சுமமாய் வாள் சுழற்றி
சொல்லாமல் சொல்லின...
காலத்தின் கணக்கினை.....!

எதிர் வீட்டு சம்பசிவம் தாத்தா....
என் அப்பா, என் மாமா என்று...
வாங்கிய வெளுமையினை
சாயங்களால் ஏமாற்றி
கருப்பாய் வெளுப்பை
அவ்வப்போது தோற்கடித்திருந்தாலும்
முழுதும் வெளுத்த தலையுடன்
எப்போதும் நடக்கும் பக்கத்து வீட்டு
பரமசிவம் தாத்தாதான்
என் ஆதர்சன ஹீரோ!

சொடக்கு போட்டு....
காலம் அழைத்து கொடுக்கும்
பரிசினை மறைத்து வைக்கும்
மடைமையில் எப்படி விடியும்
மீண்டும் இளமை?

என் நரைத்த தலையை
முழுதாய் காணும் ஏக்கத்தில்
மீண்டும் மீண்டும்
கனவுகளில் பறக்கிறேன்...
கேசத்தினை....கலைத்து கலைத்து...
கணக்குகள் கூட்டி காதலாய்...
காத்திருக்கிறேன் கருப்பினை
கடக்கும் என் வெள்ளை நாட்களுக்காக!

மிச்சமும் எப்போது வெளுக்குமென்ற
என் கனவுகளின் பின்னால்...
காலம் கடக்கும் ஆசையொன்றுளதை
யார்தான் அறிவார்?

தேவா. S


Comments

Chitra said…
என் நரைத்த தலையை
முழுதாய் காணும் ஏக்கத்தில்
மீண்டும் மீண்டும்
கனவுகளில் பறக்கிறேன்...
கேசத்தினை....கலைத்து கலைத்து...
கணக்குகள் கூட்டி காதலாய்...
காத்திருக்கிறேன் கருப்பினை
கடக்கும் என் வெள்ளை நாட்களுக்காக!


.....ரொம்பவும் வித்தியாசமான ஆசை.... எனக்குத் தெரிந்து இதுவரை, இளமையிலேயே முதுமை லுக் வர ஆசைப்பட்டது அவ்வையார் மட்டும் தான். :-)))))
//சொடக்கு போட்டு....
காலம் அழைத்து கொடுக்கும்
பரிசினை மறைத்து வைக்கும்
மடைமையில் எப்படி விடியும்
மீண்டும் இளமை?//

நல்லா கேக்குறாய்ங்கய்யா கேள்வி

படித்து முடித்ததும் பாட்டையாவின் ஞாபகம் ..!
ஹேமா said…
ஆசைப்படறீங்களோ படலையோ வெள்ளையன் வந்தே தீருவான்.
அது நிச்சயம் !

சில வயதானவர்கள்தான் வாழ்வின் முன்னோடிகள் !
Anonymous said…
வாழ்க திருவாளர் அன்ன ஹசாரே அவர்கள் !
சட்டம் ஒழுங்கின் பெயரில் கைகள் கட்டப்பட்டுள்ளோம். உண்ணா விரதம் இருக்க அனுமதியில்லை.சென்னை வேங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் (நந்தனம் சிக்னல் அருகில்)தினமும் ஒன்று கூடுகிறோம். முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை நடக்கிறது. தயவு செய்து கலந்து கொள்ளுங்கள்.

இன்று மாலை 5 மணி அளவில் கோவையில் வா.வு.சி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளார்கள். உங்கள் கோவை நண்பர்களிடம் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்கள்.
சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த