எனக்குள்ளே தேடல்
ஒன்றிருந்தது...!
சற்று முன் தான்...
மனமென்ற ஒன்று ஒழிந்து...
அது நிரந்தரமாய் நின்று போனது!
எனக்குள்ளே காதலென்ற
ஒன்று உணர்வாயிருந்தது
சற்று முன் தான் அதை
சட சடவென்று உடைத்துப் போட்டேன்!
எனக்கு காதலியென்றொருத்தி
கற்பனையில் வீற்றிருந்தாள்
சற்று முன் தான்.. அவளை
என் ஞானத்தால் எரித்துப் போட்டேன்...!
இப்படி உறவென்றும், நட்பென்றும்
அறிவென்றும், கடவுளென்றும், கல்வியென்றும்
கூடிக் கிடந்த குப்பைகளெல்லாம்
ஒவ்வொன்றாய் அழித்தே விட்டு
எச்சமாயிருந்தது ஒன்றை
நான் உற்று நோக்க....
பல்லிளித்துக் கொண்டு
என்னைப் பார்த்து சிரித்தது...
ஜென்மங்களாய் தொடர்ந்த
அகங்காரம்...
ஒரே வீச்சில் அதையும்
கொன்றே போட்டேன்.....!!!!
நானென்ற யாருமில்லை...
இப்போது!
தேவா. S
Comments
அருமை அண்ணா
வாழ்த்துக்கள்.
.
.