வெறிச்சோடி கிடக்கும்
நீயில்லாத மனதில்
ஒரு பெரு மழைக்குப்
பின்னான தெருவோர
நீர்த்தேக்கமாய் தேங்கிக் கிடக்கிறது
உன் நினைவுகள்!
கரையைத் தொடும்
அலைகளின் வாடிக்கையான
நிகழ்வைப் போல
மீண்டும் மீண்டும் வரும்
உன் நினைவுகளை எல்லாம்
எரித்து போட்ட இடத்திலிருந்து
சிரிக்கிறது என் இயலாமை.
ஒற்றைப் பாறையில்
உரிமைகளற்ற ஒரு பந்தத்தில்
ஒன்றிக் கிடக்கிறேன் ஒரு
பேடைக் குயிலின் குரலோடு...
ஒரு ஈரக் காற்றின் துணையோடு!
விடியும் பொழுதே பெய்யும்
மழையாய் நச நசக்கும்
உன் ஞாபகங்களை எல்லாம்
எழுத்துக்களாக்கும் அளவில்
இருக்கிறது என் முயற்சிகள்!
ஒரு நெல் பிடித்த நாற்று
மெல்ல தலையசைத்து
என்னை வா என்கிறதா
இல்லை போ என்கிறதா
என்ற குழப்பத்திலேயே
வரப்புகளில் வழியறியாமல்
பறப்பதைப் போலவே
நடக்கிறேன்!
வழக்கம் போலவே
சில சிட்டுக்குருவிகளின்
வரப்போர வாய்க்கால்
நீரோடான சில்மிசங்களும்
உச்சி வானில் ஒரு
கழுகின் சிறகடிப்பும்
புற்களைக் கடிக்கும்
பசுக்களின் பின்னால்
மோகித்து நிற்கும் காளைகளும்
என்று வாழ்க்கை மட்டும்
வாழ்க்கையாகவே இருக்கிறது
ஒரு ஓரத்தில் என்னையும்
கூட சேர்த்துக் கொண்டு....
நானிருக்கிறேன்...!
தேவா. S
Comments
மழையாய் நச நசக்கும்
உன் ஞாபகங்களை எல்லாம்
எழுத்துக்களாக்கும் அளவில்
இருக்கிறது என் முயற்சிகள்!//
:)
உரிமைகளற்ற ஒரு பந்தத்தில்
ஒன்றிக் கிடக்கிறேன் ஒரு
பேடைக் குயிலின் குரலோடு...
ஒரு ஈரக் காற்றின் துணையோடு!
......அருமை, தேவா.... அருமையாக எழுதி இருக்கீங்க. ரசித்தேன்.
வாழ்த்துக்கள்..
அலைகளின் வாடிக்கையான
நிகழ்வைப் போல
மீண்டும் மீண்டும் வரும்
உன் நினைவுகளை எல்லாம்
எரித்து போட்ட இடத்திலிருந்து
சிரிக்கிறது என் இயலாமை.//
வாவ் கவிதை சூப்பர்....
மழையாய் நச நசக்கும்
உன் ஞாபகங்களை எல்லாம்
எழுத்துக்களாக்கும் அளவில்
இருக்கிறது என் முயற்சிகள்!//
ரொம்பதான் அடிபட்டுருக்கீங்க போல...
வாழ்த்துக்கள் தேவா.
கூட சேர்த்துக் கொண்டு....
அழகு .