Skip to main content

காவியமானவனே....!

























மழை நின்று
போயிருந்த ஒரு...
மாலையில் தூரலாய்
பெய்யத் தொடங்கியிருந்தது
உன் நினைவுகள்!

கனவுகளை நிஜமாக்கியவன்
நிஜமாய் கனவாகிப் போன
ஆச்சர்யத்தை செரிக்க முடியாத
எண்ணங்கள் ஒரு கவிதையாய்
என்னுள் ஊற்றெடுக்க
கலைந்து சென்ற மேகமாய்
நகர்ந்து கொண்டிருந்த
நினைவுகளை எட்டிப் பிடிக்க
முயன்று முயன்று..
தோற்றுக் கொண்டிருந்தன
என் முயற்சிகள்!!!!

தொலைதலில் ஜெயித்துப் போன
என் காதலின் படிமங்கள்
காதோரம் ஏதேதோ கிசு கிசுக்க
உடல் தழுவிச் செல்லும்
காற்று உன்னை நினைவுபடுத்தியதை
மறக்க முயற்சித்து மறக்காமல்
காத்திருக்கிறேன் நான்..!


***

திக்குகளும் திக்குகளின்
தெரிவுகளும் மறந்து
ஆதியும் அந்தமும் அறியா
மூலத்தின் சாயலில்
வழியற்று நிற்கிறேன் நான்!

சுற்றிச் சுழலும்
பாதைகளில் பயணிக்கும்
கால் தடங்களின்
போதனைகளின் அருவெறுப்புகளில்
விலகி நின்று
தெருவோர குப்பைகளோடு
கரைந்து கிடக்கிறது மனம்..!

தொடராத பயணமாய்
தடைப்பட்டிருக்கும் என்
தருணங்களில் தீக்குச்சியாய்
உன் நினைவுகளைக்
கிழித்துப் போட்டு விட்டு
மெளனமெனும் வேடமிட்டு
சப்தமாய் சிரிக்கிறது காலம்!


தேவா. S

பின் குறிப்பு: இரண்டு கவிதையும் பெண்ணின் பார்வையிலிருந்து.......


Comments

நீங்க உங்க பார்வைல...கவிதை பின்னி பெடல் எடுப்பீங்க தெரியும்.. இப்போ பெண்ணின் பார்வையில் இருந்து வேறயா??? கலக்குறீங்க போங்க.. :)
காவியமானவனே...!!!!

...ஹ்ம்ம்ம்ம்ம்ம்

தலைப்புக்கே தங்க மெடல் குடுக்கலாமேங்க :))
//உடல் தழுவிச் செல்லும்
காற்று உன்னை நினைவுபடுத்தியதை
மறக்க முயற்சித்து மறக்காமல்
காத்திருக்கிறேன் நான்..!//

...இது தான் காதல் என்பதா? மறக்க முயற்சிக்கும் எதுவும், விஸ்வரூபம் எடுத்து.. நம்மை மயக்க வைக்கும் ஆயுதம். :))
காவியமானவனே...!!!!

...ஹ்ம்ம்ம்ம்ம்ம்

தலைப்புக்கே தங்க மெடல் குடுக்கலாமேங்க :))//

தேவா,
கோரிய மொழி எழுத்தாளர்/கவிஞர் ,
துபாய் பஸ்டாண்டுக்கு பின்னாடி,
மொட்டை மாடி,
துபாய்...

இந்த முகவரிக்கு தங்க மெடல் அனுப்பிடுங்க
//தேவா,
கோரிய மொழி எழுத்தாளர்/கவிஞர் ,
துபாய் பஸ்டாண்டுக்கு பின்னாடி,
மொட்டை மாடி,
துபாய்...

இந்த முகவரிக்கு தங்க மெடல் அனுப்பிடுங்க//

...ஹா ஹா ஹா. சரி ஓகே.. :))
காவியமானவனே...!!!!///

ரொம்ப வயசானவர் போல....!!!
arasan said…
இரண்டுமே சிறப்பு vaazhthukkal ...
Unknown said…
தலைப்பும் கவிதையும் சிறப்பே-உடன்
தந்த படமும் சிறப்பே
வலைப்பூ வழியே சந்திப்போம்-இனம்
வாழ வழியும் சிந்திப்போம்

வற்றிப் போக கண்ணீரும்-அழுது
வடித்த நீரும் வென்னீராம்
பற்றி எரியுது அடிவயிரே-பக்சே
பாவியே பிரியும் உன்னுயிரே

மீண்டும் சந்திப்போம்

புலவர் சா இராமாநுசம்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...