Skip to main content

காவியமானவனே....!

























மழை நின்று
போயிருந்த ஒரு...
மாலையில் தூரலாய்
பெய்யத் தொடங்கியிருந்தது
உன் நினைவுகள்!

கனவுகளை நிஜமாக்கியவன்
நிஜமாய் கனவாகிப் போன
ஆச்சர்யத்தை செரிக்க முடியாத
எண்ணங்கள் ஒரு கவிதையாய்
என்னுள் ஊற்றெடுக்க
கலைந்து சென்ற மேகமாய்
நகர்ந்து கொண்டிருந்த
நினைவுகளை எட்டிப் பிடிக்க
முயன்று முயன்று..
தோற்றுக் கொண்டிருந்தன
என் முயற்சிகள்!!!!

தொலைதலில் ஜெயித்துப் போன
என் காதலின் படிமங்கள்
காதோரம் ஏதேதோ கிசு கிசுக்க
உடல் தழுவிச் செல்லும்
காற்று உன்னை நினைவுபடுத்தியதை
மறக்க முயற்சித்து மறக்காமல்
காத்திருக்கிறேன் நான்..!


***

திக்குகளும் திக்குகளின்
தெரிவுகளும் மறந்து
ஆதியும் அந்தமும் அறியா
மூலத்தின் சாயலில்
வழியற்று நிற்கிறேன் நான்!

சுற்றிச் சுழலும்
பாதைகளில் பயணிக்கும்
கால் தடங்களின்
போதனைகளின் அருவெறுப்புகளில்
விலகி நின்று
தெருவோர குப்பைகளோடு
கரைந்து கிடக்கிறது மனம்..!

தொடராத பயணமாய்
தடைப்பட்டிருக்கும் என்
தருணங்களில் தீக்குச்சியாய்
உன் நினைவுகளைக்
கிழித்துப் போட்டு விட்டு
மெளனமெனும் வேடமிட்டு
சப்தமாய் சிரிக்கிறது காலம்!


தேவா. S

பின் குறிப்பு: இரண்டு கவிதையும் பெண்ணின் பார்வையிலிருந்து.......


Comments

நீங்க உங்க பார்வைல...கவிதை பின்னி பெடல் எடுப்பீங்க தெரியும்.. இப்போ பெண்ணின் பார்வையில் இருந்து வேறயா??? கலக்குறீங்க போங்க.. :)
காவியமானவனே...!!!!

...ஹ்ம்ம்ம்ம்ம்ம்

தலைப்புக்கே தங்க மெடல் குடுக்கலாமேங்க :))
//உடல் தழுவிச் செல்லும்
காற்று உன்னை நினைவுபடுத்தியதை
மறக்க முயற்சித்து மறக்காமல்
காத்திருக்கிறேன் நான்..!//

...இது தான் காதல் என்பதா? மறக்க முயற்சிக்கும் எதுவும், விஸ்வரூபம் எடுத்து.. நம்மை மயக்க வைக்கும் ஆயுதம். :))
காவியமானவனே...!!!!

...ஹ்ம்ம்ம்ம்ம்ம்

தலைப்புக்கே தங்க மெடல் குடுக்கலாமேங்க :))//

தேவா,
கோரிய மொழி எழுத்தாளர்/கவிஞர் ,
துபாய் பஸ்டாண்டுக்கு பின்னாடி,
மொட்டை மாடி,
துபாய்...

இந்த முகவரிக்கு தங்க மெடல் அனுப்பிடுங்க
//தேவா,
கோரிய மொழி எழுத்தாளர்/கவிஞர் ,
துபாய் பஸ்டாண்டுக்கு பின்னாடி,
மொட்டை மாடி,
துபாய்...

இந்த முகவரிக்கு தங்க மெடல் அனுப்பிடுங்க//

...ஹா ஹா ஹா. சரி ஓகே.. :))
காவியமானவனே...!!!!///

ரொம்ப வயசானவர் போல....!!!
arasan said…
இரண்டுமே சிறப்பு vaazhthukkal ...
Unknown said…
தலைப்பும் கவிதையும் சிறப்பே-உடன்
தந்த படமும் சிறப்பே
வலைப்பூ வழியே சந்திப்போம்-இனம்
வாழ வழியும் சிந்திப்போம்

வற்றிப் போக கண்ணீரும்-அழுது
வடித்த நீரும் வென்னீராம்
பற்றி எரியுது அடிவயிரே-பக்சே
பாவியே பிரியும் உன்னுயிரே

மீண்டும் சந்திப்போம்

புலவர் சா இராமாநுசம்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த