Skip to main content

தேடல்....20.08.2011!



















என்னிக்கு பொறக்கறதுக்கு முன்னால எங்க இருந்தேன்னு யோசிச்சேனோ? அன்னிக்கே இறந்ததுக்கு அப்புறம் எங்க போவோம் அப்டீன்ற கேள்வியும் அட்டை மாதிரி கூடவே ஒட்டிக்கிடுச்சு. பொறந்து ஒரு மூணு வயசு அல்லது நாலு வயசு வரைக்கும் இந்த பூமில தான் இருந்தோம். அது எல்லாம் அம்மா நம்ம கிட்ட சொல்லும் போதுதான் தெரிய வருது.

அதாவது, உயிர் இருந்துச்சு, உடல் இருந்துச்சு, சுவாசிச்சோம், எல்லா வேலைகளையும் செய்தோம் ஆனா அது நமக்குத் தெரியாது. உணர்ந்து கூட சொல்ல முடியாது. இப்டி நமக்குத் தெரியல அல்லது உணரமுடியல அப்டீன்றதால நாம இல்லனு சொல்ல முடியுமா? முடியாது. நாம இருந்தோம்...மூளையில எந்தவித அனுபவப் பதிவுகளும் இல்லாம கற்பிதங்களும் இல்லாம, அதன் வளர்ச்சி விகிதம் ஏதோ ஒரு நிலையில இருக்க, நாம இருந்தோம்...!

காலப்போக்குல நமக்குள்ள பலவிதமான கற்பிதங்களை கிரகிச்சுக்கிட்ட மூளை மனம் அப்டீன்ற ஒரு மாயமான ஒரு ஸ்தூல வஸ்து மூலமா எல்லாத்தையும் கிரகிச்சுக் கிட்டு ஐம்புலன்கள் மூலமா கிடைச்ச அனுபவத்தை எல்லாம் மூளையில தேக்கி வச்சுக்கிட்டு அந்த அனுபவத்தின் மொத்ததையும் நமக்கு அடையாளத்துக்கு வச்ச ஒரு பேரையும் தலையில தூக்கிக் கிட்டு நான் யாரு தெரியுமா? நான் யாரு தெரியுமான்னு? ஊரைப்பாத்து கேள்வி கேட்டுகிட்டு புஜபலம் காட்டுது...!

இப்போ என்ன சொல்றேன்ன்னா..., அடிக்கடி நான் யாரு தெரியுமான்னு மூணாவது மனுசன பாத்துக் கேக்காம, நான் யாரு தெரியுமான்னு நம்மளை பாத்தே கேட்டோம்னா அந்த கேள்விக்கு பதில் கிடைக்கிறது சிரமம்ன்றது நமக்குத் தெரிஞ்சு போயிடும். ரமண மகரிஷி நான் யாருன்னு உங்களுக்குள்ள கேளுங்கன்னு சொல்லிட்டு அது பத்தி விளக்கத்தையும் கொடுத்துட்டு அவுங்க யாருன்னு தெரிஞ்சுகிட்டு கரைஞ்சு போய்ட்டாய்ங்க...

நாமளும் இதை பத்தி எல்லாம் தெளிவா நோட்ஸ் எடுத்துக்கிட்டு பேசலாம். எதிராளிய சாச்சுப் போடுற அளவுக்கு விசய ஞானத்தோடு பேசி மிகப்பெரிய ஞானி அல்லது மேதைன்ற நிலைக்கு கூட வரலாம். எல்லோரும் நம்மள சீராட்டலாம், பாராட்டலாம்...!

ஆனா..... நமக்குத் தெரியுமா நாம யாருன்னு? இந்த சிம்பிள் கொஸின்னுக்கு பதில் தெரியாம....ஊருக்கே பெரிய தலைவரா இருந்து அல்லது வழிகாட்டியா இருக்கேன்னு சொல்றதுல இருக்க பொய் என்ன? பித்தலாட்டம் என்ன? அப்டீன்னு வேற யாரும் நமக்குச் சொல்லாமலேயே நமக்கே தெரிஞ்சுடும்.

கட்டுக்களை போடப் போட பிரச்சினை தாங்க..! எல்லாத்தையும் விட்டுட்டு மலை மேல போயி யாரும் இல்லாம சாமியாரா நான் இருக்கப் போறேன்னு ஒருத்தர் இருக்கறதுல தப்பு இல்லை. அப்டீ ஒரு நியதில அவுங்க வெளிப்பாடு இருந்துச்சுன்னா ப்ளீஸ் கோ எகெட்....

துறவறம் மற்றும் எல்லாம் விட்டு போனவங்க, எல்லோருடைய வாழ்க்கையையும் பார்த்தீங்கன்னா இயற்கையே அப்படி அவுங்களை படைச்சி இருக்கும். எனக்குத் தெரிஞ்ச இரண்டு எடுத்துகாட்டுக்கள் சொல்றேன்...1 ) நரேந்திரனாக பிறந்த விவேகானந்தர் 2) பகவான் இரமண மகரிஷி...

இரண்டு பேருடைய வாழ்க்கையுமே அவுங்க பிறப்புல இருந்தே எல்லாத்தையும் விட்டு அவுங்களை வெளில கூட்டிட்டு வந்து இருக்கும். சரி... ரமண மகரிஷி 10 வயசுல திருவண்ணாமலைக்கு ரயில் ஏறிப் போய் பாதாள லிங்கர் குகையில பல நாட்கள் சமாதி நிலையில இருந்தாங்க. நானும் ரயில் ஏறிப் போயி உட்கார்ந்து பாக்குறேன்னு ஒருத்தன் அவரோட வாழ்க்கையை காப்பி பேஸ்ட் பண்ணனும்னு நினைச்சா....அவனோட லைஃப் கண்டிப்பா கரப்ட் ஆகித்தான் போகும்.

நாம பிறக்கும் போதே அம்மா, அப்பா, தம்பி, அக்கா இப்படி வீட்டுக்கு மூத்த பிள்ளையா பிறந்ததுக்கு அப்புறம் சன்னியாசம் போறேன்னு சொல்றது நமக்கு கொடுத்திருக்கிற டாஸ்க்க கம்ளீட் பண்ணாம வேற வேலைய பாக்க போற மாதிரி. இப்டி இந்த லெளகீக பந்தங்களோடு சேர்ந்து வாழ்ந்து கர்மாவ கழிச்சுட்டு, நம்மளை கரைச்சுட்டு போறதுதான் சரியான மார்க்கம்.

இயற்கையில ஒருத்தரோட கருத்தை நாம உள்வாங்கிக் கிட்டு நம்மோட செயல்களை செம்மைப் படுத்திக் கிட்டு நாம நம்மளப் போலத்தான் பரிணமிச்சுக் காட்டணும். இன்னொருத்தர் மாதிரி காப்பி பேஸ்ட் லைஃப் வாழ நினைக்கும் போதுதான் பிரச்சினையும் புரிதலின்மையும் ஸ்டார்ட் ஆகுது பாஸ்!

என்னை மாதிரி நான் மட்டும்தான் இருப்பேன். நான் யாரு மாதிரியோ இருக்க முயற்சி பண்ணினா அதுக்கு பேரு வேசம். ஏற்கனவே பிறப்பு, வாழ்க்கை, பணம், பந்தம்னு ஒரு வேசம் போட்டுகிட்டு இருக்கும் போது ஏன் இன்னொரு வேசம்? மிகப்பெரிய குழப்பமா போயிடுமே அது.

தீடீர்னு ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு விசயம் எனக்குத் தோணிச்சு. தேடல் முடியும்னு நினைக்கிறோம் பாருங்க அப்போதான் டாப் கியர் போட்டு மறுபடியும் தொடங்குது....ஹா ஹா ஹ! அதாவது பூமி, கர்மா, மறு பிறப்பு இப்டி எல்லாம் யோசிச்சு பேசிட்டு இருக்கோம்...

1) உள்ளது அழியாது இல்லாதது தோன்றாது. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு அந்த அடிப்படையில மனிதன் மீண்டும் பிறந்து தன்னோட கர்மாவை கழிச்சுட்டு தானே தன்னில் சமாதி அடைஞ்சு டாஸ்க் கம்ளீட் பண்ணிடுவாங்கன்னு சில பேர் நம்புறாங்க...!

2) செத்ததுக்கு அப்புறம் ஒண்ணுமே இல்ல ராஜா....அவ்ளோதான் அப்டீனு சில பேர் நம்புறாங்க..! அதாவது கடவுள் வேணும் அப்டீன்றது மனிதன் ரொம்ப நாள் இங்க வாழணும் அப்டீன்ற ஆசையில அல்லது மறுமை இருக்குதுன்னு சொல்றது எல்லாம் செத்ததுக்கு அப்புறமும் ஒரு வாழ்க்கையை வரிஞ்சுகிட்டு தான் வாழ ஆசைப்படுற ஒரு விருப்பத்தை இப்டி வெளியிட்டு இருக்காங்க...

சொர்க்க நரகம் எல்லாம் ஒரு செட் அப். இங்க ஒழுங்க வாழறதுக்கு ஏற்பாடு பண்ணி வச்ச ஒரு சப்ஜெக்ட்ஸ் அப்டீன்னு சொல்றவங்களும் இருக்காங்க...

3) சில பேருக்கு கடவுள் கண்டிப்பா வேணும். அப்டீ இல்லன்னா அவுங்க ஏற்படுத்தி பின்பற்றிக் கிட்டு இருக்க எல்லாமே டக்கு டக்குனு ஒடைஞ்சு பொயிடும்ல சோ.. அதை விட்டுக் கொடுக்க முடியாது.

இப்டி எல்லாம் பல கருத்துக்கள் இருக்கும் போது நாம என்ன பண்ணலாம்னு இது எல்லாத்தையும் உள்வாங்கிக் கிட்டு யோசிச்சுட்டு இருந்தப்ப...

முதல் பாயிண்ட் சயின்ஸோட சேத்து யோசிக்கச் சொன்னாலும் அதை அசைச்சுப் பாக்குற மாதிரி ஒரு கேள்வி வந்துச்சு...அதாவது

ஒவ்வொருத்தரும் இறந்து போயி மறுபடியும் பூமில தன் அனுபவங்களுக்கு ஏத்த மாதிரி உடம்பு எடுத்து கர்மாவ கழிக்கணும்னு வச்சுக் கோங்க....ஒரு நாள் பட்டுன்னு பூமி மத்த கோள்களோட மோதியோ அல்லது சூரியனோட மோதியோ உடைஞ்சு போச்சுன்னு வச்சுக்கோங்க....

கர்மா படி பிறக்குற ஆத்மாக்கள் எல்லாம் எங்க சார் பிறக்கும்? பூமியே இல்லையே அப்போ என்ன ஆகும்...? அப்டீன்ற மாதிரி தோணிச்சு. இந்தக் கேள்வி பர்ஸ் மெத்தட கொஞ்சம் ஒடைச்சு அடுத்த லெவலுக்கு ஏதாச்சும் பதில் இருக்கான்னு தேடலை முடுக்கி விட்டு இருக்கு.

செகண்ட் ஆப்சன் இருக்கு பாத்தீங்களா.. இது பர்ஸ்ட் ஆப்சனோட பதிலாவும் இருக்கு, அதே நேரத்துல ச்ச்சும்மா பொறந்து ஒரு பூமி ஒரு வாழ்க்கை அப்டீன்னு ஒரு செட் அப் இருக்கறதோட மட்டும் போயிடாது மனித அறிவுக்கு எட்டாத வேற ஏதாச்சும் இருக்கும் அப்டீன்ற ரேஞ்சலயும் யோசிச்சுப் பார்க்க வைக்குது.....

தேர்ட் ஆப்சன நம்பிக்கை இருக்கவங்கள சிதைக்காம அது உங்க விருப்பம் நீங்க பின்பற்றிக் கோங்கன்னு சொல்லிட்டு........நான் அதை கம்ளீட்டா நிராகரிக்கிறேன். ஏன்னா எனக்கு தனியா கடவுள் அப்டீன்னு ஒருத்தர் தேவையுமில்லை. அப்படி ஒருத்தர் இல்லைன்னும் நல்லாவே தெரியும்....

முடியும், முடியும் தேடிகிட்டே இருக்கறது செம அலாதியான ஒரு விசயம். இப்போதைக்கு தேடலோட சேத்து கொடுக்கப்பட்ட வாழ்க்கையை நிறைவா வாழவும். தேவையில்லாம அடுத்த மனுசங்களை ஆராயதவனாகவும், எதிர் மறையான எண்ணங்களை சேமிக்காதவனாகவும், என்னை சுற்றி இருக்கும் எல்லோருடைய நல்ல மற்றும் சூது வாதுகள், திமிர்கள், புஜம் தட்டி கொக்கரிக்கும் கோபங்கள்....என்று சத்திய மற்றும் அசத்தியங்கள் அத்தனையும் ரசித்து கடந்து போகக்கூடியவனாகவும் இருக்கிறேன்......

எந்த எண்ணங்களையும் சேர்க்காமல்....நகர்ந்து கொண்டே இருக்கும் வாழ்க்கையில் முடிவில்லாமல் தொடர்கிறது என் தேடல்...!


தேவா. S



Comments

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் தேவா.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
அருமையான பகிர்வு.
வாழ்த்துக்கள் அண்ணா.
//உள்ளது அழியாது இல்லாதது தோன்றாது.//


...Very true.

இருக்கறது இருக்கும்.. இல்லாதது தோன்றாது.. தோற்றுவிக்கவும் முடியாது. உங்க தேடல் தொடரட்டும்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...