Skip to main content

மிச்சமென்ன....?




















அலுத்துதான் போகிறது
சராசரி அன்றாட....
அட்டவணைகளுக்குள் சுழலும்...
இந்த இயந்திர வாழ்க்கை!

நேரங்களுக்குள் ஒளிந்து கொண்டு
கண்ணடித்து சிரிக்கும்..
வாழ்க்கையின் இதழோரங்களில்
படிந்திருக்கும் சோகத்தில்
தொலைந்து போய் கிடக்கிறது
என் சுயம்....!

யாருமற்ற வனமொன்றில்
ஒரு பேடைக்குயிலாய்
நான் கூவி கூவி
காற்றோடு சல்லாபித்து
தீரக்காதலோடு..
திக்குகளின்று பறக்க
ஆசைகள் கொண்டிருந்தேன்..!

ஆனால்..

அலார ஒலியோடு
அலறலாய் விடியும் பொழுதுகள்
சக்திகளை உறிஞ்சிக் கொன்டு
கசங்கலாய் என்னை
இரவுகளிடம் ஒப்படைக்கும்
வழமையில் அது கரைந்தே போனது..!

ஒரு மரத்தின் இலையாய்...
ஜனித்து காற்றில் ஆடி
அசைந்து விளையாடி
மனமற்ற திசுவாய் மழையில்
திளைத்து குதித்து,
வெயிலைக் காய்ந்து அனுபவித்து
தடமில்லாமல் மரமிலிருந்து
ஒரு நாள் சருகாய் கழன்று
மெளனமாய் மண்ணில்
மட்கி மடியும்
பெருங்கனவுகள் கொண்டிருந்தேன்...

ஆனால்...

இரைச்சலான மனிதர்களின்
புத்திகளிடம் இருந்து என்னைக்
காத்துக் கொள்ளும் முயற்சிகளில்
விழிப்பான நிலையில்தான்
ஏதேதோ எண்ணங்களோடு
நகர்ந்து, அவசரமாய் விடிகிறது
என் நீண்ட இரவுகள்!

ஒரு காற்றாய் நதியின்
மேனி தடவி மெல்ல நகர்ந்து
சிலிர்ப்பாய் அலைந்து திரிந்து
மானுட நாசிகளுக்குள் சென்று
எங்கே இருக்கிறது உயிரின்
உள் முடிச்சு என்றறியும்
ஆசைகள் கொண்டிருந்தேன்...

ஒரு வயல் வெளியில்
சிறு பூவாய் யாரும் கவனியாமல்
பூத்து சிரித்து....தலையசித்து
மடிய நினைத்திருந்தேன்..

ஆனால்...

விரிந்த விழிகளில் தேங்கிக்
கிடக்கும் கனவுகளோடு
வெளுத்த வானத்தை பார்ததபடி
நகரும் என் வார இறுதிகளோ
வரப்போகும் வாரத்திற்கான
திட்டமிடுதல்களாய் எப்போதும்
தொலைந்தேதான் போகிறது...!

மிச்சமாய் என்னவிருக்கும்
என்று உடைக்கும் கேள்விகளை
நித்தம் சுமந்து கொண்டு
தேடலாய் நகரும் பொழுதுகளின்
இலக்குகளில் எங்கோ
ஒளிந்து கிடக்கிறது கட்டுக்களை
உடைத்தெறிந்து ஒற்றைப் பாய்ச்சலில்...
மொத்தமாய் கரையப் போகும்
சுவடுகளற்ற எமது சுயம்...!


தேவா. S

Comments

இந்த இயந்திரதனமான வாழ்க்கையில், நாம் தொலைத்த விசயங்கள் பல.. மிச்சமிருப்பது என்ன என்ற தேடலில்....நாம்!!!
நல்ல கவிதை.
இன்றைய வாழ்க்கையில் நிறைய இழக்க வேண்டியிருக்கிறது.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...