Skip to main content

கனவிலாவது...?
















நேற்றைய கனவும்
உன்னால்தான் நிரம்பி வழிந்தது,
வழக்கம் போல நெருக்கமாய்
தூரத்தில்தான் அமர்ந்திருந்தாய்,
வழக்கம் போல காதலை
மெளனத்திற்கு இரையாக
இருவருமே போட்டுக் கொண்டிருந்தோம்!

ஏதேனும் செய்திகளை
உன் விழிகள் எனக்குப் பகிருமா?
என்று உற்று நோக்கினேன்
அது காதலைத் தவிர
வேறொன்றும் பகிரேன் என்று
பிடிவாதம் பிடித்தது...!

என் மெளனத்துக்கு காரணத்தை
நீயும் மெளனத்தால் தேடியது
போலவே நானும் தேடியதில்
குடி கொண்டிருந்த நிசப்தத்தில்
பரவிக் கிடந்த அதிர்வுகளோடு
சப்தங்களை அதிகமாக்கிக்
கொண்டிருந்த நமது இதய துடிப்பும்
அன்னிய தேசத்து எல்லையை
கடந்து செல்லும் அவஸ்தையோடு
தொண்டையை கடக்கும்
அவ்வப்போது நாம் விழுங்கும் உமிழ்நீரும்
சேர்ந்தேதான் காதலை கனப்படுத்தின...!

நான் உன்னை காதலிக்கிறேன்
என்று சொல்லப்போவதில்லை
என்பதைப் போல...
நீயும் சொல்லப்போவது இல்லை
என்பதை உரக்க கட்டியம்
கூறிக் கொண்டிருந்த
மெளனத்தை உடைக்கும் முயற்சியில்
முதலில் எட்டிப் பார்த்த
உனது உதட்டோரப் புன்னகையில்
நான் உடைந்தேதான் போனேன்..!

ஏதாவது சொல் என்றேன்...
போகவா என்றாய்....!
சொல் என்றுதானே சொன்னேன்...
கொல் என்றா சொன்னேன்?
வார்த்தைகளை வாங்கிக் கொண்டு
நீ கணீரென்று சிரித்தாய்
நான் சிதறிக்கிடந்தேன்..!

கலைந்து போன கனவில்
நிஜத்தை தொலைத்த வெறுமையோடு
விடியப்போகும் பொய்மையில்
உன்னை சந்திக்கையில்....
இப்போதாவது உன் காதலைச் சொல்லேன்
என்று என் மெளனத்தால்
உன் மெளனம் மோதி
ஒரு கேள்வி கேட்கிறேன்...
நிஜத்தில் நீ மெளனித்தாலும்
பரவாயில்லை,
அடுத்த கனவிலாவது சொல்
நான் உன்னை காதலிக்கிறேன் என்று!


தேவா. S




Comments

//ஏதாவது சொல் என்றேன்...
போகவா என்றாய்....!
சொல் என்றுதானே சொன்னேன்...
கொல் என்றா சொன்னேன்? //

உணர்வுபூர்வமாக எழுதியிருக்கீங்க நண்பா. அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இந்த வார்த்தையின் வலி. கலக்கலான காதல் கவிதை. வாழ்த்துக்கள்.
உணர்வுபூர்வமாக ரசித்து எழுதியுள்ளீர்கள் சொல் என்றாள் போகவா என்பது தவிப்பின் உச்சம் வாழ்த்துக்கள்!
Kousalya Raj said…
கவிதை அதன் பின் ஒலிக்கும் பாடல் இரண்டும் மனதை இழுத்து பிடித்து வைத்து கொள்கிறது !

கவிதை படித்ததும் அந்த உணர்வு படிப்பவர்களுக்கும் ஏற்பட வேண்டும்...அதை கச்சிதமாக செய்துவிடுகிறது இந்த கவிதை.

வாழ்த்துக்கள்.
//ஏதாவது சொல் என்றேன்...
போகவா என்றாய்....!
சொல் என்றுதானே சொன்னேன்...
கொல் என்றா சொன்னேன்? //

...அடடா.. செம செம.. வார்த்தை கோர்ப்பு பின்றீங்க போங்க.

...கனவிலாவது சொல் என்னை காதலிக்கிறாய் என்று! :)

Beautiful Kavithai.. with perfect song on the Background!
அழகான கவிதை. இந்த மௌனத்தால் தோற்று போன காதல் ஏராளம்.
//சொல் என்றுதானே சொன்னேன்...
கொல் என்றா சொன்னேன்? //
பொருத்தமான வார்த்தை பயன்பாடு !
நீ கணீரென்று சிரித்தாய்
நான் சிதறிக்கிடந்தேன்..!

அழகு கவிதை-அழகு வரிகள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html
அருமையான கவிதை...
பல காதல்கள் மௌனத்தை உடைக்காமல் மரணித்துப் போகின்றன. இங்கு கனவிலாவது துளிர்க்கட்டும்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த