Skip to main content

நான் அவன் இல்லை....!





















என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!

நான் யாரென்று...
இனியும் என்னிடம் கேட்காதீர்கள்
ஒற்றை வார்த்தையில்
நான் உங்களுக்கான...
பதிலானவன் அல்ல...!

என் கனவுகளின்
எல்லை எதுவென்று
கணக்குக் கூட்டி கூட்டி
நீங்கள் தொலைந்து போகாதீர்கள்;
நான் எல்லைகளுக்குள்
ஏதோ ஒரு திசையை நோக்கி
எப்போதும் பயணிப்பவன் அல்ல..!

என் சித்தாந்த வேர்களை
தேடிப் பிடித்து..
என்னைக் கணிக்க...
கனவிலும் முயன்று தோற்காதீர்;
நான் சித்தாந்தங்களை எல்லாம்
செதுக்கி எறிந்து
வெற்றில் நிரம்பிக் கிடப்பவன்!

என் காதல்கள் எல்லாம்
யாருக்காயிருக்கும் என்று
உங்கள் புத்திகளை உலுக்கிக் கொண்டு
பொழுதுகளை வீணடிக்காதீர்கள்;
நான் தேகம் கடந்த வெளியில்
தேவைகளற்ற காதலில்
லயித்துக் கிடப்பவன்...!

என் இறுதி என்னவாயிருக்கும்
என்று கூடிக் கூடி பேசி
ஓய்ந்து போகாதீர்கள்
நான் நெருப்பில் சுடப்பட்டாலும்
மண்ணில் புதைபட்டாலும்
மரித்துப் போய்விடுபவன் அல்ல...!

நெருப்புக்குள் நான் குளிரானவன்
குளிருக்குள் சூடானவன்
தேனினுள் கிடக்கும் கசப்பானவன்
நீரற்ற ஒரு பாலையின்
வற்றிப் போன சுனையின் தடமானவன்
எல்லாவற்றுக்கும் இடமானவன்,
பிரபஞ்ச வெளியினில் வெளிப்படாத
புள்ளியில் நின்று வெளிப்பட்ட
யாவற்றையும் வேடிக்கை பார்க்கும்
நிறையானவன்...;

என்றெல்லாம் சொன்னால்...
மீண்டும் என்னிடமே நீங்கள்
கேள்விகள் கேட்பீர்கள்...

அதனால்...

என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!


தேவா. S


Comments

நல்லாவே புரியுது... :)))
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.
என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!

EXCELLENT!
நான் யாரென்று...
இனியும் என்னிடம் கேட்காதீர்கள்
ஒற்றை வார்த்தையில்
நான் உங்களுக்கான...
பதிலானவன் அல்ல...!

திமிர்ர்ர்ர்ரூ :)
என் கனவுகளின்
எல்லை எதுவென்று
கணக்குக் கூட்டி கூட்டி
நீங்கள் தொலைந்து போகாதீர்கள்;
நான் எல்லைகளுக்குள்
ஏதோ ஒரு திசையை நோக்கி
எப்போதும் பயணிப்பவன் அல்ல..!

Beyond Imagination..
என் சித்தாந்த வேர்களை
தேடிப் பிடித்து..
என்னைக் கணிக்க...
கனவிலும் முயன்று தோற்காதீர்;
நான் சித்தாந்தங்களை எல்லாம்
செதுக்கி எறிந்து
வெற்றில் நிரம்பிக் கிடப்பவன்!

அதுவும் இல்ல.. இதுவும் இல்லன்னா எப்படி?
என் காதல்கள் எல்லாம்
யாருக்காயிருக்கும் என்று
உங்கள் புத்திகளை உலுக்கிக் கொண்டு
பொழுதுகளை வீணடிக்காதீர்கள்;
நான் தேகம் கடந்த வெளியில்
தேவைகளற்ற காதலில்
லயித்துக் கிடப்பவன்...!

‘காதல்களில்’னு இருக்கனுமோ? :)
என் இறுதி என்னவாயிருக்கும்
என்று கூடிக் கூடி பேசி
ஓய்ந்து போகாதீர்கள்
நான் நெருப்பில் சுடப்பட்டாலும்
மண்ணில் புதைபட்டாலும்
மரித்துப் போய்விடுபவன் அல்ல...!

சபாஷ்!
நெருப்புக்குள் நான் குளிரானவன்
குளிருக்குள் சூடானவன்
தேனினுள் கிடக்கும் கசப்பானவன்
நீரற்ற ஒரு பாலையின்
வற்றிப் போன சுனையின் தடமானவன்
எல்லாவற்றுக்கும் இடமானவன்,
பிரபஞ்ச வெளியினில் வெளிப்படாத
புள்ளியில் நின்று வெளிப்பட்ட
யாவற்றையும் வேடிக்கை பார்க்கும்
நிறையானவன்...;

அருமை..
முடிவு செம :))

சரி உங்க கிட்ட ஒரு கேள்வி.. உங்களப் பாத்து யாரு என்ன கேள்வி கேட்டா?
எல்லாத்தையும் விட சூப்பர்.. அந்தப் படம் தான் :))))
/என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!//

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கிறேன்.எப்பிடி உங்களால இப்பிடியெல்லாம் முடியுது?

உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த