Skip to main content

காட்டுப் பூக்கள்...!



















சுத்த சரீரங்களை
சுரமாகக் கொண்ட
வாசகன் விரும்பும்
மெல்லிசையல்ல எமது எழுத்துக்கள்...!
அவை கர்ண கொடூரமான
கரடு முரடுகளைச் சுமந்த
கேட்கவொண்ணா சப்தங்களால் ஆனா
முரட்டு ராட்சசனின் கர்ஜனைகள்!

நளினங்களை கூட்டிக் கழித்து
விழிகளுக்கு விருந்து கொடுக்கும்
ஓவியங்களை எப்போதும்
நாம் சமைப்பதில்லை....,
மாறாக...
புலன்களைக் கடந்த
புத்திகளுக்குள் ஜனிக்கும்
கோணல் மாணல் கோடுகளை
கோரமாய் வெகுண்டெழச் செய்து
விரும்பத்தகா பிரமாண்டங்களாக்கவே
முயன்று கொண்டிருக்கிறோம்..!

அழகியலைப் பட்டியலிடும்
கூட்டத்தில் யாம் எப்போதும்
வரிசையில் நிற்பதும் கிடையாது
உயரங்களில் இருப்பதாலேயே
எல்லோரையும் அண்ணாந்து
பார்ப்பதும் கிடையாது...!

வாழ்க்கையை எழுத்தாக்கையில்
வசீகரம் எதற்கு...
வசீகரமாகவே எல்லாம் இருந்து விட்டால்
வாழ்க்கைதான் எதற்கு...?

ஆமாம்...

இது கரடு முரடான பாதைதான்
காட்டருவி கொட்டும்
கடக்க முடியா வழிமுறைதான்
ஆனால் மறுத்து நகர்ந்தாலும்
இயற்கை என்பது இயல்புதானே?
இல்லை என்றாலும்
இருப்பு என்பது நிஜம்தானே...?

அதனால்....

அக்னியில் கோடுகள் கிழித்து
முற்கள் தைத்த வார்த்தைகளால்
எமது முதுகெலும்பின் நீட்சிகளை
உடைத்து எப்போதும்
இராட்சச வடிவங்களில்
வார்த்தைகளை கோர்க்கிறோம்...
காட்டுப்பூக்கள் எல்லாம்
என்ன கடவுளுக்காகவா பிறக்கின்றன...?
அவை பூக்கின்றன.... மடிகின்றன...
அவ்வளவே...!


தேவா. S




Comments

ரசிப்பவர் யாரும் இல்லை என்றாலும் அழகழகாய் பூக்கும் "காட்டுப் பூக்களை" கவிதைக்கு தலைப்பாக்கியது இன்னும் அழகு
Unknown said…
'காட்டுப்பூக்கள் ' நல்ல தலைப்பூ
ஹேமா said…
தேவா...அருமை அழகு.உங்கள் தளத்தில் பூக்கும் பூக்கள் எல்லாமே எப்போதும் அழகு.சிலசமயம் முட்களோடும் வாசனையோடும் வண்ணங்கள் மாறி மாறி !
காட்டு பூக்கள் மனம் வீசுகிறது.
Anonymous said…
simply super
//அக்னியில் கோடுகள் கிழித்து//

அக்னிகுஞ்சு தம்பி நீங்க :)
dheva said…
ருஃபினா, ஹேமா, சாய் பிரசாத், கருணாகரசு & அட்சயா... - நன்றிகள்!

கிருஷ்ணா @ உங்க கூட சேர்ந்துதான் அண்ணே!
///கிருஷ்ணா @ உங்க கூட சேர்ந்துதான் அண்ணே! ///

:))

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...