Skip to main content

விவேகானந்தர் என்னும் பெருஞ்சக்தி...!

























நரேந்திரன் ஒரு விழிப்புணர்வு பெற்ற இளைஞனாக இருந்ததால்தான் தன்னைக் கடந்து மானுடநலம் சார்ந்து அவனால் சிந்திக்க முடிந்தது. வாழ்வியல் பிரச்சினைகளின் தீர்வுகளை கையில் சுமந்து கொண்டிருந்த பட்டங்களையும், வாசித்த புத்தகங்களையும் கடந்தும் அவன் தேடியதன் விளைவாகத்தான் அவனுக்குள் ஞானம் குடிகொண்டது. நரேந்திர தத்தா என்னும் சராசரி மனிதன் விவேகாந்தர் ஆனார்.

வாழ்வியல் தேடலின் பிரதிபலிப்பாய் ஆன்மீகம் இருப்பதை அறிந்திருக்கும் உலகத்தீர், ஆன்மீகம் என்பதற்கு யார் யாரோ பின்பற்றும் மூடநம்பிக்கைகளை மட்டும் உதாரணமாகக் காண்பித்து விட்டு தங்களை அறிவு ஜீவிகள் என்ற உறைக்குள் புதைத்துக் கொண்டு ஆன்மீகம் சார்ந்த தேடல் உடையவர்களை முட்டாள்கள் என்று நினைக்கின்றனர்.

கடவுளை நம்புவனுக்கும் கடவுளைத் தேடுபவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. கடவுளைத் நம்புபவன் யாரோ ஒருவரிடம் கோரிக்கைகளை வைத்து விட்டு ஆட்டு மந்தையைப் போல எதையையோ பின்பற்றுகிறான், ஆனால் கடவுளைத் தேடுபவன், படைப்பின் அற்புதத்தை ருசித்து விட்டு இதன் மூலமும் எப்படி வந்து இருக்கும் என்ற ஆர்வ மிகுதியால் வாழ்க்கை என்னும் அற்புதத்திற்கு பின்னாலிருக்கும் அதிசயத்தை தேடி அலைகிறான்.

கோபம், காமம், தூக்கம், காமம், பசி இந்த ஐந்து உணர்வுகளை மட்டும் கொண்டிருந்து அதை மையப்படுத்தியே வாழ முற்படுவாயின் அவன் விலங்கை ஒத்தவனாகிறான். அதனைக் கடந்து இவை எல்லாம் ஏன் தோன்றுகின்றன? எங்கே நகர்கிறது வாழ்க்கை என்று உள்ளுணர்வு விழித்தெழும் போது அவன் ஆன்ம விசாரத்தை தொடங்குகிறான்.

நான் பிறந்திருக்கிறேன். சிரிக்கிறேன், கதைக்கிறேன், அழுகிறேன், என்னவெல்லாமோ செய்கிறேன் எனது நகர்வு எதை நோக்கி என்று சிந்திக்காமல் இட்டதை உண்டு, கிடைத்ததை குடித்து ஒரு தெரு நாய் சாலையைக் கடக்கையில் மரித்துப் போவது போல மரித்தலில் என்ன சிறப்பு இருக்கிறது...

நரேந்திரன் தன்னை உணர்ந்ததால் மட்டும் விவேகானந்தர் ஆகவில்லை. அவர் இயல்பிலேயே தன்னை உணர்ந்தவராய் தியானம் என்ற மன ஒருநிலை கூடியவராய் பிறந்திருந்தார் ஆனால் அவர் வாழ்க்கையையும் சக மனிதர்களையும், தான் சார்ந்திருந்த மண்ணின் மகத்துவங்களையும், கடவுள் என்ற விசயத்தில் பதிந்து கிடந்த விஞ்ஞானத்தையும் உணர்ந்த போதுதான் விவேகானந்தர் ஆனார்.

" எனது வீரக் குழந்தைகளே! நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம்”

விவேகானந்தர் உத்வேகம் கொடுத்து இளையர் சக்தியை உசுப்பேற்றி விட்ட ஒப்பற்ற இந்திய தேசத்தின் இளம் தலைவர். தான் சார்ந்து இருந்த மண்ணில் வேறோடு பற்றியிருந்த ஒரு சித்தாந்தத்தை உணர்ந்து வேதாந்தப் பாடங்களின் தொழில் நுட்ப மற்றும் விஞ்ஞான வடிவங்களை உள்வாங்கிக் கொண்டு அதை செயல்வடிவமாக்கிய சூத்திரதாரி.

கடவுள் தேடலின் உச்சத்தில் விவேகானந்தருக்கு கிடைத்த தெளிவுதான் இந்திய தேசத்தின் ஆன்மீக வரலாற்றின் மீது விழுந்த ஒரு புதிய பரந்த வெளிச்சம். கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் ஏன் வாழ்க்கையில் இவ்வளவு ஏற்றத் தாழ்வுகளை படைக்க வேண்டும் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் தன்னம்பிகையும், சுய சீர்திருத்தமுமே நிரம்பிக் கிடந்தது.

கடவுள் என்பது நம்மை விட்டெ எங்கோ அமர்ந்திருக்கும் ஒரு மனிதரல்ல அவர் சிலருக்கு கொடுத்து சிலருக்கு மறுப்பதற்கு....கடவுள் என்பது நம்மைச் சுற்றியிருக்கும் வாய்ப்புக்களே....பண்படுத்தப்பட்டு தன்னை சரியாக வைத்திருக்கும் ஒருவன் வாய்ப்புக்களை பயன்படுத்தி ஜெயிக்கிறான். தன்னைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லாமல் யாரோ வந்து ஏதோ அதிசயம் செய்வான் என்று நம்பும் சோம்பேறி தோற்கிறான்.

39 வயதில் விவேகானந்தரின் ஆயுள் முடிவடைந்தது அல்லது முடித்துக் கொண்டர் என்றுதான் சொல்லவேண்டும். பிரம்மத்தின் வலுவான சக்தி விவேகானந்தர் என்னும் உடலுக்குள் சென்று அற்புதமான விளைவுகளை பாரத தேசத்தில் உருவாக்கத்தான் செய்தது.

இந்திய தேசத்திலிருக்கும் ஒவ்வொரு இளைஞனின் மிகப்பெரிய ரோல் மாடலாய் விவேகானந்தர்தான் இருக்க முடியும். மொழி, இனம், மதம் சாதி என்று எல்லாவற்றையும் உடைத்துப் போட்டு விட்டு விவேகானந்தரின் வாழ்க்கையை வாசிக்கும் ஒவ்வொரு இளைஞனின் வாழ்க்கையும் சர்வ நிச்சமாய் மாறித்தான் போகும்.

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் அவரின் கருத்துக்களை பற்றியும் நாம் பேசிக் கொண்டே இருக்கலாம்.. அவற்றை எல்லாம் இன்றைய இளையர்கள் எடுத்து வாசிப்பதோடு மட்டுமில்லாமல்....ஆன்ம விசாரணையையும் அறிவுத் தேடலையும், உரம் கொண்ட உறுதியான செயல்களையும், தெளிவான பார்வைகளையும் கைக் கொள்ளத்தான் வேண்டும்.

" நியாயத்தின் வழிகள் சிலவேளைகளில் சிரமமானதாக, துன்பம் தருவதாக இருக்கலாம். ஆனால் நியாயம் என்று நீ கருதுவதைச் செய்வதற்கு ஒருபோதும் தயங்காதே. உண்மையின் பாதையிலிருந்து ஒருபோதும் விலகாதே "

என்ற விவேகானந்தரின் வார்த்தைகளில் இருக்கும் சத்தியத்தை அறிவோம்...! உத்வேகம் கொண்ட இளையராய் இந்த தேசத்தின் அசைக்க முடியாத சக்தியாய் மாறுவோம்...!

அனைவருக்கும் தேசிய இளைஞர்கள் தின வாழ்த்துக்கள்!!!!!


தேவா. S

Comments

Admin said…
இன்றைய தினத்தில் விவேகானந்தர் பற்றிய கட்டுரை..இந்த நாளை இளைஞர் தின நாளாக அறிவித்தது சரிதான்..அது எத்தனை இளைஞர்களுக்குத் தெரியும் என்று நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது..விவேகானந்தரை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி..உங்களுக்கும் இளைஞர் தின வாழ்த்துகள்..
Anonymous said…
When asked to show the proof of God's existence,
Ramakrishna touched him on his shoulder. For the next
few days he was in a state of bliss. He understood the
Nature of God before he became Vivekananda.
This is what I remember reading about him. Great Soul.
Thanks for writing about him.

When the Mullaiperiyar issue broke, I remembered his
View of Kerala - it is a lunatic asylum :-)

I am sure social problems plagued India, wherever he went. It must have been really severe in the State of Kerala!
ஹேமா said…
**கடவுள் என்பது நம்மை விட்டெ எங்கோ அமர்ந்திருக்கும் ஒரு மனிதரல்ல அவர் சிலருக்கு கொடுத்து சிலருக்கு மறுப்பதற்கு....கடவுள் என்பது நம்மைச் சுற்றியிருக்கும் வாய்ப்புக்களே....**

வாசிக்க வாசிக்க நிறைந்துகொண்டே போகிறது தேவா.உங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள் !
dheva said…
நன்றிகள்...ஹேமா, மது, & ரத்னவேல் ஐயா!!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல