Skip to main content

நினைவுத் தேம்பல்கள்..!















நினைவுகளின் முனைகள்
மழுங்கிப் போன ஒரு தினத்தில்
ஓய்வாகக் கிடந்தது என் பேனா...
வார்த்தைகளில் ஆக்ரோஷ உரசல்களிலும்
காதல் சரசங்களிலும் அலுத்துப் போயிருந்த
... என் டையிரின் பக்கங்கள்..
கலவி முடித்த பெண்ணாய்
கவிழ்ந்து கிடக்க..
நிரம்பலின் வெறுமையில்
எங்கோ லயித்துக் கிடக்கிறேன்..நான்..!

                    ***


இன்னமும் சொட்டிக் கொண்டிருக்கிறது..
தாழ்வாரத்தில் மழை நீர்...!
மழை பெய்த அடையாளம்
இன்னும் சற்று நேரத்தில் மறையக் கூடும்..
மேகங்கள் விலகி....
பளீரென்று வெயில் அடிக்கலாம்...
பறவைகளும், மனிதர்களும்
தங்கள் கூடு விட்டு 
மீண்டும் இயல்புக்கு திரும்பலாம்...,
எங்கோ தேங்கிக் கிடக்கும் நீரின்
கடைசித் துளியை 
நிலத்தின் உஷ்ணம் விழுங்கியதோடு
மழையின் தடம் மறைந்தே போகலாம்...
ஆனால் சற்று முன்...
இங்கொரு பலத்த மழை பெய்தது...,
அதன் சாரலில் தொட்டு
நான் என் உயிரினை....
நனைத்து நனைத்து...
அவளுக்காய் ஒரு கவிதை 
செய்து கொண்டிருந்தேன்..!


தேவா.  சு

Comments

தங்கள் வரிகளின் வழியாக மண்வாசனை வருகிறது .
காதல் ரசம் சொட்டும் கவிதை ...அருமை!
//...ஆனால் சற்று முன்...
இங்கொரு பலத்த மழை பெய்தது...,
அதன் சாரலில் தொட்டு
நான் என் உயிரினை....
நனைத்து நனைத்து...
அவளுக்காய் ஒரு கவிதை
செய்து கொண்டிருந்தேன்..!//

அருமையான கவிதை...

காதல் மழை பூத்தூறலாய்...
//...ஆனால் சற்று முன்...
இங்கொரு பலத்த மழை பெய்தது...,
அதன் சாரலில் தொட்டு
நான் என் உயிரினை....
நனைத்து நனைத்து...
அவளுக்காய் ஒரு கவிதை
செய்து கொண்டிருந்தேன்..!//

அருமையான கவிதை...

காதல் மழை பூத்தூறலாய்...
ஹேமா said…
உயிரைத் தொட்டுப் பாடிச் செய்த காதல்....அழகுதான் தேவா !
இறுதி வரிகளில் லயித்து விட்டேன்...

அற்புதம் தேவா சார்...
Shankar M said…
நிரம்பலின் வெறுமை....நினைவுகளை வறுமைக்கு கொண்டுபோனதா ? அற்புதம் தோழா....

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...