நடுக்கும் இந்த சமவெளியின்
பெருங்குளிரை இன்னும்
ரசிக்க வைக்கிறது
நான் போர்த்தியிருக்கும் கம்பளி....!
***
முழு நிலவு ததும்பும் குளம்,
உடலோடு ஒட்டிக் கிடக்கும்
குளிரை வேடிக்கைப் பார்க்கும்
வசீகர நட்சத்திரங்கள்....,
மரங்களோடு கிசு கிசுப்பாய்
ரகசியம் பேசும் காற்று...!
ஓ....கடவுளே...
இந்த இரவை விடிய வைத்து விடதே...!
***
தொலைந்து போன
ஆட்டுக்குட்டியை முன்னிரவில்
தூரத்தில் தேடிக்கொண்டிருக்கிறான்
மேய்ப்பனொருவன்....
நடுங்கும் குளிரில்...
நான் கம்பளியை இழுத்துப் போர்த்தி
புரண்டு படுத்து..தொடர முயலுகிறேன்...
பாதியில் நின்று போன
ஒரு இனிய கனவை...!
***
பனிக்காலம் ஆரம்பித்து விட்டது...
இரவுகளில் யாரும் வெளியே வரமாட்டார்கள்...
இனிதான்..
நான் நடுங்கிக் கொண்டாவது
வெளியே நடக்கவேண்டும்..!
***
அதிகாலை...பூசணிப்பூவின் மீது
படர்ந்திருக்கும் பனி
புற்களை வெற்றுக் காலோடு
நான் மிதிக்கையில் சிலீரென்று...
என் பாதங்களையும் தொடுகிறது...
நான் கடந்து போவதா..?
இல்லை...
அப்படியே நிற்பதா..?
தேவா. S
Comments
http://arulgreen.blogspot.com/2012/06/blog-post_29.html
“க்ளிக்”
யு மே கோ நவ் :) :)
சில்லிப்பாய் இருக்கிறது...