Skip to main content

நான் ' ஈ ' விமர்சனம்(மா?) ..!?




















ரொம்ப சீரியசாவே போய்ட்டு இருக்கே லைஃப்ன்னு சொல்லிட்டு...நெட்ல ஏதாச்சும் படம் பாக்கலாம்னு எந்த சைட்லடா மாப்ள புது படமெல்லாம் பாக்க முடியும்னு நண்பன் ஒருவனுக்கு போனப் போட்டுக் கேட்டா....திருட்டு விசிடி.காம்னு ஒண்ணு இருக்கு மாப்ள, அதுலதான் உடனே உடனே புதுப் புது படமா போடுறாய்ங்கன்னு சொன்னான்...! 

ஓகோ இந்த புகை பிடிக்காதீர்கள்னு போட்டுட்டு சிகரெட் விக்கிறாய்ங்களே அது  மாதிரி..., குடி குடியை கும்மி அடிக்கும்னு போர்ட்ல போட்டுட்டு கவர்மெண்ட்டே சாராயம் விக்குறாங்களே...கேட்டா காந்தியோட தேசம், புத்தனோட பூமின்னு அகராதி பேசுவாய்ங்களே......, அது மாதிரி திருட்டு விசிடி.காம்னு பேர தைரியமா வைச்சுக்கிடுட் புதுப் புது படமா இறக்குவாய்ங்க போலன்னு நெனச்சுக்கிட்டு....

சைட்ட ஓப்பன் பண்ணின அன்னிக்கு முதல் நாளு ரிலீசான " நான் ஈ..."  படம் அதுக்குள்ள அங்க அப்லோட் பண்ணி இருந்தாய்ங்க..! ப்ரிண்டும், சவுண்டும் செம ஜோரா இருந்ததால மேற்கொண்டு படத்த பார்த்தேங்க. திருட்டு விசிடி.காம்ல திருட்டுத்தனமா படம் பார்த்தது தப்பா ரைட்டன்ற வாக்குவாதத்தை எல்லாம் வேற பதிவுல வச்சுக்கலாம் பாஸ்.... இப்போ படத்த பத்தி பேசுவோம் வாங்க...

அட ...யாருப்பா அது கூட்டத்துல இருந்து சவுண்ட கொடுக்குறது...?  "ஊர் ஒலகத்துல நெறைய பேரு விமர்சனம் எழுதுறாய்ங்க நீயுமாடா டவுசருன்னு...." ! அட நீங்க வேற நான் எப்போ இது விமர்சனம்னு சொன்னேன்...? நாங்க எல்லாம் நாலாவது, அஞ்சாவது படிக்கும் போது எங்கள எல்லாம் சுத்தி  ஒக்கார வச்சுக்கிட்டு ஜெகநாதன்னு ஒரு பையன் கதை சொல்லுவான் பாருங்க...

அவன் சொல்ற கதைய கேட்டுட்டு படம் பார்த்தீங்கன்னா சத்தியமா ங்கொப்புறானே ஒங்களுக்கு படம் சுத்தமா புடிக்கவே புடிக்காது அவன் அம்புட்டு அருமையா கதை சொல்லி இருப்பான்னா பாருங்களேன். கதை சொல்றதுல, கேக்குறதுல இருக்க ஒரு சுகமும், எதார்த்தமும் கதையை விமர்சிக்கும் போது இருக்காதுன்றது என்னோட தனிப்பட்ட அபிப்ராயம்.

இப்பத்தானே சேட்டிலைட் டிவி லொட்டு லொசுக்குன்னு இம்புட்டு வந்து கிடக்கு. நான் சின்ன புள்ளையா இருந்த அந்தக் காலத்துல....(எங்க காலத்துல எல்லாம் இப்புடி ஒண்ணும் இல்லப்புன்னு எங்கப்பத்தா சொல்ற மாதிரியே சொல்றேன் பாருங்க...) தூர்தசன் கூட எட்டிப்பார்க்காத ஒரு ரம்யமான காலத்துல, பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே பைக்கட்ட தூக்கி திண்ணையில எறிஞ்சு புட்டு இருட்டுற வரைக்கும், கல்லா மண்ணா விளையாடிட்டு, இருட்டுன அப்புறம் வெயிலா, நிழலான்னு வெளிச்சத்தையும் இருட்டையுமே மெயின் ஆப்ஜக்கட்டா வச்சு வேர்க்க விறுவிறுக்க விளையாடிப்புட்டு...

கரும் கும்ன்னு இருட்டுன அந்த எட்டு மணி ராத்திரிக்கு சாப்பாடு எல்லாம் முடிச்சுப்புட்டு.... ஏய் அப்பத்தா ஏதாச்சும் கத சொல்றியா இல்லையாடி கெளவி நீன்னு செல்லமா அவுங்க கண்டாங்கி சேலை முந்தானிய எடுத்து முண்டாசு கட்டிக்கிட்டு பக்கத்து வூட்டு பக்கியலையும் கூப்டு சுத்தி ஒக்காந்தம்னா....

நாலணாவுக்கு வாங்கியாந்த களிப் பாக்க உடைச்சு வாயில போட்டுக்கிட்டு கொஞ்சமா பொகையிலைய உருட்டி கடைவாயில வச்சு உறிஞ்சிக்கிட்டு எங்கப்பத்தா கதை சொல்ல ஆரம்பிக்கும் பாருங்க...

செக்கச் செவேர்னு இருப்பாருப்பு அந்த ராசான்னு சொல்லும் போதே செக்கச் செவேர்னு ராசா (அட. ஸ்பெக்ட்ரம் ஆ. ராசா இல்லேங்க நெச ராசா...) நம்ம மனசுக்குள்ள வந்து நிப்பாரு...,


ஆளுப்பேரு இல்லாத வனாந்திரக் காட்டுக்குள்ள ராசா ஒத்தையில போகையில காத்து சல சலன்னு  அடிச்சுச்சாம், காஞ்சு கிடந்த சருகு எல்லாம் காத்துல பர பரன்னு பறந்து போயிருக்கு ராசாவுக்கு, தூரத்துல கருப்பா ஒரு உருவம் ராசா கண்ணுல தட்டுப்பட்டிருக்கு அப்பு....ன்னு  கெளவி சொல்லி முடிக்கையில சுத்தி இருந்த புள்ளக் குட்டிங்க எல்லாம் அப்பத்தா கெளவி மடியிலயும், காலுக்குள்லயும் கைக்குள்ளையும் அணைஞ்சாப்ல ஒக்காந்து இருக்குங்க...

கதைய பாதியில நிறுத்துன கெளவி விளம்பர இடைவேளை மாதிரி ஒரு வெத்தலைய எடுத்து நல்லா நீவி விட்டு காம்ப கிள்ளி என் வாயில திணிச்சுப்புட்டு, மெல்ல சுண்ணாம்ப தடவி களிப்பாக்க சேத்து வாயில மடிச்சு போட்டுக் குதப்பிட்டு மறுபடி கதை சொல்ல ஆரம்பிக்கிறதுக்குள்ள சுத்தி இருக்க அம்புட்டு பேருக்கும் ஈரக்கொலை ஆடிப்போயி அந்த கருப்பு உருவம் என்னவா இருக்கும்னு ஏதேதோ கற்பனைக்கு எல்லாம் போயி அப்பத்தாவோட வாய பாத்துக்கிட்டே இருப்போம்....

படமா பார்க்கும் போது பாக்குற காட்சிக்குள்ள சிக்கிக்கிட்டு அது பின்னாடியே ஓடுற நம்ம புத்தி ஒரு அடிமை வேலைதான் பாக்குது, ஆனா கதை கேக்கும் போது ஒரு ராஜா குதிரையில போற மாதிரி நம்ம மூளை கம்பீரமா கதைய கற்பனை செஞ்சு நமக்கு எப்டி எல்லாம் வசதியோ அந்த திசையில எல்லாம் சிட்டா பறக்குது....அந்த லயிப்பே தனிதான் போங்க...

பொதுவா ஏதோ ஒரு விசயத்தை விமர்ச்சிக்கிறேன் அப்டீன்னு சொல்லிட்டு நாம பேனா மூடிய திறக்குறது ஒரு மாதிரியான வன்முறையாத்தான் நான் பாக்குறேன். உள்ளத் உள்ளபடி சொல்லி நான் விமர்சிக்கிறேன் அப்டீன்றது எப்டீங்க பொதுவான கருத்தா இருக்கும்? ஒரு படம் பார்த்தேன் அதை ஒரு கதையா சுவாரஸ்யமா இப்படி நான் புரிஞ்சுக்கிட்டேன் அப்டீன்றதோட நிறுத்திக்கிட்டா ஒரு டீசன்ஸி இருக்கும்னு நினைக்கிறேன். 


அதுக்கு அடுத்த லெவலுக்குப் போயி கதை இப்படி வந்து இருக்கலாம், திரைக்கதை இப்படி வந்து இருக்கலாம்னு, மியூசிக் இந்த  இடத்துல சொதப்பல், கேமரா இன்னும் நல்லா இருந்து இருக்கலாம், படம் சொதப்பல் ஊத்தல் என்று பொதுவுல சொல்ற கருத்து என்ன பண்ணுதுன்னு கேட்டீங்கன்னா....

ஒரு வெவரமும் இல்லாம படிக்கிற அத்தனை பேரையும் படம் சரி இல்லேன்ற ஒரு மனோநிலைக்கு மனோதத்துவ ரீதியா இழுத்துக்கிட்டு போகுது. அதனால படம் பாக்கணும்னு நினைச்சு இருக்கவங்க கூட பாக்காம போயிடலாம், ஒரு வேளை அவுங்க பார்த்து இருந்தா அவுங்களுக்குப் படம் புடிச்சு கூட இருக்கலாம்...

எனக்கு படுமொக்கைன்னு தோணுற படம் எங்க எதுத்த வீட்டுக்கார அங்கிளுக்கும் ஆண்ட்டிக்கும் ரொம்ப பிடிச்சு இருக்குன்னு சொல்லி இருக்காங்க...! அவுங்க படு மொக்கைன்னு பீல் பண்ற படம் எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்து இருக்கு...! பிரபலமான ஊடகங்கள் எல்லாம் படம் செம ஊத்தல்னு சொல்லி விமர்சனம் எழுதிட்டு இருக்கும் போது படம் தியேட்டர்ல கலெக்சன் பிச்சு உதறிக்கிட்டு இருக்கும்.... செம சூப்பர் படம்னு விமர்சனம் எழுதி இருப்பாங்க பார்த்தா தியேட்டர்ல கூட்டமே ஈ ஆடாது.....


அட....... ' ஈ ' ன்னு சொன்ன உடனேதான் ஞாபகம் வருது.....

ஓ...மை காட்......நாம இந்த கட்டுரைய எழுதினதோட நோக்கமே நான்....ஈ படத்த பத்தி உங்க கிட்ட சொல்றதுக்குதானே....பாத்தீங்களா? எங்க ஆரம்பிச்சு எங்க முடிச்சுட்டேன்னு....கொடுமை..! சரி விடுங்க நான் ஒண்ணும் கதை எல்லாம் சொல்லல எனக்கு படம் ரொம்ப புடிச்சு இருந்துச்சு...செம ரகளைன்னு  வச்சுக்கோங்களேன்...! நீங்களும் பாருங்க உங்களுக்குப் பிடிக்கலாம் பிடிக்காமலும் இருக்கலாம்.....

அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா....!


தேவா. S



Comments

தேவா...நீங்களுமா...????
இப்பதான் நம்ம லைன்க்கு மீண்டும் வரீங்க....வாங்க...
Anonymous said…
இது மாதிரி ஒரு சினிமா விமார்சனம் என்னோட வாழ்க்கையில படிச்சதுல்லை பாஸ்... ஆனா இது கூட நல்லாத்தான் இருக்கு....

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த