Skip to main content

இசையோடு இசையாக...தொகுப்பு 9!




















காரணம் இல்லாமலேயே கண்ணீரை வரவழைத்து விடும் இந்தப்பாடல் இப்போது எனக்கு கண்ணீர் வரவைக்கும் காலச்சூழலில் எதையோ நான் தேடுகையில் எதேச்சையாய் என் முன் வந்து விழ....மனதை அழுத்தும் நினைவுகளை எப்படி நான்உள்ளுக்குள் வைத்துக் கொள்வது....? வலியை தாங்கிக் கொண்டு வாழ்வதெப்படி...? பிரிவைச் சுமந்து கொண்டு நகர்வெதப்படி என்று கை பிடித்து விளையாடிய காலங்களில் எனக்கு தெரியாமலேயே போயிற்று என் உயிர் அக்காவிற்கும் எனக்கும் இப்படி ஒரு தூரம் ஒன்று வந்து விழுமென்று....

கல்லூரி வரை கைப்பிடித்து அழைத்து சென்று... திருமணமென்னும் கப்பலில் ஏற்றி விட்டு தனியாய் கரை நின்று கை அசைத்த பிடிபடாத வாழ்க்கை கண்ணீராய் வந்து விழுந்தது. எத்தனை அழுதாலும் பெண் என்பவள் பிறந்த வீட்டுக்கா சொந்தம் அவள் எப்போதும் வாழப் போகும் வீட்டுக்கு நாம் வாரிக் கொடுக்கும் செல்வம் தானே..., 

ஒரு வருடம் எனக்கு முன்னதாக பிறந்த அந்த உயிர் வாசம் செய்த பின் தானே கடவுள் எனக்கு கருவறையை பரிசளித்தான். வளர்ந்து இருவேறு வாழ்க்கைச் சூழலுக்குள் வந்து விட்ட பின்பே...அவ்வப்போது பேசிக் கொள்ளும் தொலைபேசி பேச்சுக்களையும் காலம் என்ற கத்தி அடிக்கடி அறுத்துப் போட சிங்கப்பூரும், துபாயும் தொப்புள் கொடி உறவுகளின் தூரமாகிப் போனது....

எனக்கு ஒரு வாழ்க்கையை விதி வகுத்துப் போட அவளுக்கொன்றை பிரித்துப் போட்டது. விடுமுறைகள் வேறு வேறாகிப் போனது, கட்டிய துணைகளால் விருப்பங்களும் வெவ்வேறாகிப் போனது....வாழ்க்கையின் துரத்தலில் எங்கோ நாங்கள் ஓடிக் கொண்டிருக்க....

அவள் கைப்பிடித்து நடந்து சென்ற பால்யத்தின் வீதிகளுக்குள் என் நினைவுகளால் நடந்து பார்க்கிறேன். செல்ல சண்டையிட்டு அவளைச் சீண்டிப்பார்த்த நாட்கள் எல்லாம் மீண்டும் வரவே மாட்டோமென்று மனதுக்குள் நிதர்சனத்தை எழுதிப்பார்க்க..., எல்லா சண்டைகளிலும் எப்போதும் விட்டுக் கொடுத்து என் விருப்பத்திற்காய் தோற்றுப் போகும் அவளை இப்போது உள்ளுக்குள் தேடிக் கொண்டிருக்கிறேன். சூழல்களை வார்த்தைப்படுத்தி நான் இங்கே அடுக்க நினைத்தால் நான்  எழுதிக் கொண்டே இருப்பேனே தவிர முடிக்க முடியாது....! 

யாரை வேண்டுமானலும் அக்கா என்று அழைத்து விடலாம்... ஆனால் நினைத்து விட முடியாது... அப்படியாய் நினைத்து அழைக்கும் போது உடன் பிறந்தவள் என்றில்லாமல் அந்த உறவுக்குள் சிக்கிக் கொண்ட எல்லோருமே அன்பின் வெளிப்பாடாய்த்தான் இருப்பார்கள்...! 

தாயென்ற உறவின் இன்னொரு பிரதியான அக்காவை எப்படித்தான் நான் பிரிந்தேன் என்ற துயரம் என் நெஞ்சில் ஊஞ்சலிட்டு ஆடிக் கொண்டிருக்கிறது. ஏ.....ஏ...பால்யமே.... மீண்டும் ஒரே ஒரு முறை என் வாழ்வில் வந்து சென்று போ... அப்படியாய் வருகையில் என் அக்காவையும்  உன் கையோடு கூட்டிவா.... அவள் இல்லாத என் பால்யம் பாலைவனம் என்பது உனக்கும் எனக்கும் மட்டும் தானே தெரியும்...


ஒவ்வொரு ஆணிற்கும் ஒரு சகோதரி கண்டிப்பாய் இருக்க வேண்டும். அது அவனை ஆசுவாசப்படுத்தும். அவன் வாழ்க்கையை நிதானப்படுத்தும். அவன் பொறுப்பினை அதிகப்படுத்தும். வாழ்க்கையில் எதிர்ப்படும் பெண்களைப் பற்றிய புரிதலைக் கொடுக்கும். சீற்றத்தைக் குறைக்கும். தெளிவினை அதிகப்படுத்தும். சகோதரி என்னும் பெண் கொடுக்கும் ஆதரவில் தாயின் அன்பும் நண்பனின் நேசமும் தந்தையின் கண்டிப்பும் சேர்ந்தே இருக்கும்....

டி.எம் செளந்தராஜனும், சுசீலாவும் பாடியிருக்கும் இந்தப்பாடலை வெறும் பாடல் என்ற அளவோடு நாம் கடந்து சென்று விட முடியாது. இரண்டு குரல்களும், பாடல் வரிகளும் ஒரு பெரும் வாழ்க்கை ஓட்டத்தின் தவிர்க்க முடியாத சூழலை வலுவாய் பதிவு செய்து சென்றிருக்கும் காலத்தால் வெல்ல முடியாத காவியம். சிவாஜி சாரின் நடிப்பைப் பற்றி நாம் தனியே சொல்ல வேண்டியதில்லை...

வாழ்க்கையில் பிரிவு தவிர்க்க முடியாதது.....ஆனால் உடன் பிறந்து வளர்ந்து பட்டென்று ஒரு நாள் வேறு ஒருவனின் சொந்தமாய் ஆகிப் போய் அந்த வாழ்க்கைச் சூழலுக்குள் நம் கண் முன்னே இடம் பெயரும்... ஒரு சகோதரியின் பிரிவு...வாழ்க்கை முழுதும் சுமக்க வேண்டிய ஒருவிதமான சுகமான சுமை...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்  என்னிடம் இருந்து வார்த்தைகள் தற்காலிகமாய் விடை பெற எத்தனிக்கின்றன..... உயிரின் வலி என்னவென்று உணரவைக்கும் இந்தப்பாடலை....நீங்கள் கேளுங்கள்...

நான் கொஞ்ச நேரம் அழ வேண்டும்....!



தேவா. S



Comments

எப்போதும் இந்தப் பாடலை வானொலியில் கேட்கும் போதும் கூட... கண்கள் கலங்குவதும், மனம் பாரம் ஆவதும் உண்மை...

நெகிழ வைத்தது பகிர்வு...
tm3

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...