Skip to main content

கவிதையெனப்படுவது யாதெனில்...





















நொடிக்கு ஒரு முறை
என்னைப் பார்....
கவிதைகளென்ற பெயரில்
ஏதேனும் கிறுக்கு....
நிறைய பேசு...
அவ்வப்போது மெளனமாயிரு...
சண்டையிடு...
கோபத்தில் கண்கள் சிவந்து போ...
காற்றில் கலையும் கேசம் சரி செய்...
நான் கடந்து போகையில்
என்னை கவனிக்காதே...
தூரமாய் சென்று திரும்பிப் பார்...
சொல்லாமல் கொள்ளாமல் தொலைந்து போ...
எதிர்பாராமல் எதிரே வா...
எப்போதாவது புன்னகை செய்..
உன் தோழிகளோடு உரக்கப் பேசு...
சப்தமாய் சிரி....
சோகமாயிரு...
சந்தோசமாயிரு...
பிடித்த புத்தங்களை
நான் பார்க்கும் படி சுமந்து போ...
பிடித்த பாடலை முணு முணுப்பாகவாவது பாடு....
மழையில் நனை...
குளிரில் நடுங்கு...
வெயிலை திட்டு....
வராத பேருந்துக்காய் முகம் சுழி...
மணிக்கட்டு கடிகாரத்தை முறைத்துப் பார்...
ஓவியமாய் தலை வாரிக் கொள்...
கவிதையாய் பூச்சூடிக் கொள்..
......
......
......
........
எல்லாம் செய்து கொள்...
என்னை தூரமாய் நின்று....
உன்னைப் பார்க்க மட்டும் விடு....


தேவா. S



Comments

அடடா என்ன ஒரு அழகு பார்ப்பதற்கே அனுமதி கோரிய விதம் மனதைக் கவர்ந்தது.
VELU.G said…
//நொடிக்கு ஒரு முறை
என்னைப் பார்....
கவிதைகளென்ற பெயரில்
ஏதேனும் கிறுக்கு....
நிறைய பேசு...
அவ்வப்போது மெளனமாயிரு...
சண்டையிடு...
கோபத்தில் கண்கள் சிவந்து போ...
காற்றில் கலையும் கேசம் சரி செய்...
நான் கடந்து போகையில்
என்னை கவனிக்காதே...
தூரமாய் சென்று திரும்பிப் பார்...
சொல்லாமல் கொள்ளாமல் தொலைந்து போ...
எதிர்பாராமல் எதிரே வா...
எப்போதாவது புன்னகை செய்..
உன் தோழிகளோடு உரக்கப் பேசு...
சப்தமாய் சிரி....
சோகமாயிரு...
சந்தோசமாயிரு...
பிடித்த புத்தங்களை
நான் பார்க்கும் படி சுமந்து போ...
பிடித்த பாடலை முணு முணுப்பாகவாவது பாடு....
மழையில் நனை...
குளிரில் நடுங்கு...
வெயிலை திட்டு....
வராத பேருந்துக்காய் முகம்
//

அதெல்லாம் பண்ணிக்கலாம் பாஸ்
கொஞ்சம் தள்ளி நில்லுங்க போட்டோ மறைக்குது.

Superb
இதுதான் கவிதை என்பதோ..
இது ஒரு தொடர்கதை ஆச்சே...

போங்கப்பா... நான் இந்த விளையாட்டிற்கு வரலே...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...