மேகங்களுக்கென்று திசையொன்றும் இருப்பதில்லை
காட்டு மலர்கள் யார் பார்க்கவும் பூப்பதுமில்லை
ப்ரியங்கள் என்னும் விதையில்
விரிந்து கிடக்கிறது அகண்டப் பெருவெளி...!
இரவுகளை உடுத்திக் கொண்டு
வருவதெல்லாம் பகல்களென்றும்
பகல்களுக்குள் படுத்திருப்பது இரவென்றும்
யார்தான் அறிவார்..?
கனவுகளை எல்லாம் விழிகளொன்றும் காண்பதில்லையே...
அவை புலனறிவுக்கு அகப்படாத
புத்த நிலையின் தத்துவ விளக்கங்கள்தானே....!
பெயரில்லாத ஒன்றுக்கு
எத்தனை பெயரிட்டாலும்
அது பெயரில்லாததே....
திட்டமிடாத புத்தி
எந்த திசையைத்தான் கால்களுக்குச்
சொல்லிக் கொடுத்து விட முடியும்..?
தேவா. S
Comments