Skip to main content

போதும்..." தலைவா "....போதும்..!

















ஏதாவது ஒரு காட்சியாவது புதுசா இருந்துச்சுன்னு சொன்னா ஏதோ படத்தை பத்தி கொஞ்சாமாச்சும் நாம பேசலாம். டைரக்டர் விஜயும், நடிகர் விஜயும் சேர்ந்து மிஸ்ரி புரடக்சன் தலையில மண்ண அள்ளிக் கொட்டுன கதைய என்னத்த நாம பேசிக்கிட்டு...!  நிறைய கருப்புப் பணம் வச்சு இருக்கவங்க காச காலி பண்ண இப்டி படம் கிடம் எடுப்பாய்ங்களோன்னு கூட ஒரு டவுட்டு..எனக்கு. 

இதுல என்ன கொடுமைன்னா எப்பவும் ஏதாவது ஒரு படத்தை பத்தி நான் எழுதறதுக்கு முன்னாடியே நிறைய பேர் விமர்சனம் எழுதி படத்தோட கதை என்னானு எல்லோருக்கும் முன்னாடியே தெரிஞ்சு இருக்கும். சோ... நான் எனக்கு படம் பாத்தப்ப ஏற்பட்ட உணர்வுகளை மட்டும் பதிவு செஞ்சுட்டு போய்கிட்டே இருப்பேன். தலைவா படத்தைப் பொறுத்த வரைக்கும் சிக்கல் எனக்கு வேற மாதிரி இருக்கு. அதாவது ஊர்ல இன்னும் படம் ரிலீஸ் ஆகலை அதனால படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே படத்தைப் பார்த்துட்டு விமர்சனம் பண்ற ரொட்டீன் கடமையுணர்ச்சிக் கொண்டவர்கள் படத்தைப் பத்தி எதுவும் இன்னும் எழுதவும் இல்ல..

நாம வழக்கப்படி படத்தை பார்த்த நம்ம உணர்வுகளைப் பதிவு செஞ்சுட்டுப் போகணும்னுனா இப்போ நாலு  கொலை பண்ண வேண்டி இருக்கும் ஆனா அது முடியாது. சரி வேணாம், தலைவா படத்தோட கதைய உங்க கிட்ட சொல்லலாம்ணு யோசிச்சா அப்டி ஒரு மண்ணாங்கட்டியும் படத்துல இல்லை. எனக்கு எல்லாம் டைரக்டர் விஜய பாத்து ஏன்யா..உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லையா....? எத்தனையோ வருசத்துக்கு முன்னால வந்த நாயகன், தளபதி, பாட்சா இப்படி எல்லா படத்தையும் உல்டா பண்ணி ஒரு படம் எடுத்ததோட இல்லாம டயலாக் டெலிவரி மொதக்கொண்டு அப்படியே வச்சு இருக்கீங்களே...இது எல்லாம் கேவலம் இல்லையான்னு கேக்கணும்னு ஆசையா இருக்கு...!

இதுல என்ன காமடின்னா இவனுக சீரியசா ஏதோ புதுசா பேசுற மாதிரி திரையில டயலாக் பேசிட்டு இருக்கானுக ஆனா அது எல்லாமே நாம ஏற்கெனவே பாத்து பாத்து அலுத்துப் போன அதே பில்டப் டயலாக் ஸ்தான் அப்டீன்றதுனால்...ஓ...சரி...அடுத்து இன்னும் பெஸ்ட்டா உங்க கிட்ட இருந்து எதிர்ப்பார்க்கிறோம்ற ரேஞ்சுக்கு ஒவ்வொரு சீனா நவுத்தி நவுத்தி பாத்து அவனுக தளபதி, தளபதின்னு கூட்டம், கூட்டமா திரையில கத்தும் போது எல்லாம்...தப்பாம நமக்கு தலைவலி வர்றத தவிர்க்கவே முடியலைங்க..!

அட...கதை என்னானு கேக்குறீங்களா..? ச்ச்சும்மா கேட்டுப்புட்டு அப்புறம் என்னைய ஏன்டா கதை சொல்லச் சொன்னா பழைய தமிழ் சினிமாவுல இருந்து உல்டா பண்ணி சொல்றியான்னு கேட்டுச் சண்டைக்கு வரப்புடாது....மீ பாவம்...மீ ஒன்லி ஆடியன்ஸ் ஓ.கே....சரி மனச திடப்படுத்திக்கோங்க..

மும்பைல வேதான்னு ஒரு பெரிய தமிழர்களுக்கு ஆதரவா இருக்க தாதாவ....எதிரி குருப்பு போட்டுத் தள்ளிடுது.அதுக்கப்புறம் தராவிப் பகுதி தமிழர்களுக்கு ஆதரவா அவரோடு கையாளு சத்யராஜ் உருவாகுறாரு..இந்த எதிரி குரூப் என்ன பண்ணுது சத்தியராஜ கொல்ல வரும் போது அவரக் காப்பாத்த அவரோட பொண்டாட்டி ரேகா ஆண்ட்டி..(கடலோரக் கவிதைங்க ஜெனிஃபரா வந்த அழகு தேவதையா இப்டி கெழவியாயிடுச்சு..ஓ....ஜீசஸ்..!!!!) வழக்கப்படி குறுக்க விழுந்து சத்திராஜ்ன்ற அன்னா சார காப்பாத்திடுறாங்க..!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பாடா...!

பொண்டாட்டிய கொன்ன தாதாவ சத்தியராஜ் என்கிற அண்ணா போட்டு தள்ளிட்டுறாரு. அப்டி போட்டுத் தள்ளும் போது அந்த தாதாவோட பையன் ஒருத்தன் இருக்கான் அவனை கொல்லாம இரக்கப்பட்டு விட்டுடுறாரு....அந்த பையன் தான் சத்தியராஜ் அன்கோவை பழி வாங்குவான் பின்னாலன்னு நம்ம யாருக்குமே தெரியாதுன்னு டைரக்டர் நினைச்சு இருக்கலாம் ஆனா அது சத்தியராஜ் அவனை கொல்லாம விடும் போதே கிளியரா நமக்குத் தெரியும்.

சத்தியராஜ்க்கு இருக்குற ஒரே ஒரு ஆசைப்புள்ளைய, இந்த அடிதடி வாழ்க்கை பிடிக்காம தன் மகனோட தப்பிச்சுப் போற தன் நண்பர் நாசர்கிட்ட கொடுத்து வளர்க்கச் சொல்லிட்டு சத்தியராஜ் மும்பை தராவி மக்களின் குறைய தீர்த்து வைக்கிற வேலு நாயக்கரா மாறிடுறாரு. சத்தியராஜ் நாசர்கிட்ட வளர்க்கச் சொன்ன பிள்ளைதான் விஜய். நாசரோட புள்ளதான் சந்தானம்ன்றது எல்லாம் ஃபர்ஸ்ட் சீன்லயே நமக்குத் தெரிஞ்சு போய்டுது.

அப்புறம் என்ன சத்தியராஜ அந்த வில்லனோட பையன் போட்டுத் தள்ளிடுவாரு. அப்பா என்ன தொழில் பண்றாருன்றதே தெரியாம ஆஸ்திரேலேயாவுல வளர்ந்த புள்ளை விஜய் மும்பைக்குள்ள எப்டி வருவாரு, ஏன் வரணும்... ? ஆஸ்திரேலியாவுல சாப்பாட்டுக்கு என்ன பண்ணிடு இருந்தாரு..? வெறுமனே மினரல் வாட்டர் கம்பெனி நடத்துறேன் பேர்வழின்னு தமிழ்ப்பசங்கன்னு ஒரு டீம் வச்சுட்டு டான்ஸ் காம்பிட்டேசன்ல எல்லாம் கலந்து ஜெயிச்சாரா...? சத்தியராஜ் சார் அவ்ளோ பெரிய தாதாவா இருந்தது கதைப்படி இருபத்தஞ்சோ இல்ல முப்பது வயசோ ஆன அவரோட மகன் விஜய்க்கு எப்டி தெரியாம இருந்துச்சு....?

தாத்தா ஆகுற வரைக்கும் தாதாவ  இருக்குற தன் அப்பாவை விஜய் எப்டி இழக்குறாரு...? அப்டீன்றதை எல்லாம் நீங்க வெண் திரையில பாத்துக்கோங்க...! ஆனா...தேவர்மகன் கமல் மாதிரி அப்பா விட்ட இடத்தை விஜய் தொடர்ந்து கையில எடுத்குக்கிட்டு, வேலுநாயக்கர் மாதிரி (மாதிரிதான்..!!!!) பாட்சா மாதிரி, தளபதி தேவா மாதிரி சட்டத்தால திருத்த முடியாத பல வேலைகளை தான் செஞ்சு...மக்கள் முன்னாடி தலிவரா நிப்பாருன்ற ரகசியத்தை நான் சொல்ல மாட்டேன்.

சத்தியராஜ் கூடவே இருக்கும் விஜயோட சித்தப்பா பொன்வண்ணன் சத்தியராஜ்க்கு ரொம்ப விசுவாசாமா இருப்பாரு...அப்புறம் விஜய்க்கு விசுவாசமா இருப்பாரு. ரொம்ப விசுவாசமா இருந்து ஓவராப் பேசுறப்பவே நமக்கு எல்லாருக்கும் தெரிஞ்சு போயிடுது இவருதான் எதிரிங்க கூட தொடர்பு வச்சிட்டு இருக்காரு..கடைசில விஜய்க்கு ஆப்பு வைப்பார்னு..., எத்தனை படம் வந்துடுச்சு தமிழ்ல்ல கொஞ்சமாச்சும் யோசிச்சு ஒரு திரைக்கதை  எழுத வக்கு இல்லாம...படத்துக்கு என்னாத்துக்கு இவ்ளோ பில்டப் கொடுக்குறீங்கன்னு கேக்குறேன்...!

சந்தானம், பழைய நடிகர் சுரேஷ், ஓய்.ஜி. மகேந்திரன், டைரக்டர் மனோபாலா இப்டி கூட கொஞ்ச ஆளுங்களும் நடிச்சு இருக்காங்க...! சந்தானம் அப்போ அப்போ லைட்டா சிரிக்க வைக்கிறாரு...மத்தபடி சந்தானமும் டோட்டல் வேஸ்ட்...! தயவு செஞ்சு அமலாபாலை எல்லாம் விஜய்க்கு ஜோடியா போட்டுத் தொலைக்காதீங்கய்யா...அப்போ அப்போ யாரு விஜய், யாரு அமலாபால்னு நமக்கே ஒரு டட்வுடு வருது...அப்டி ஒரு புரோ..சிஸ்டர் பேஸ்கட்டு ரெண்டு பேருக்கும்....ஹக்...ஆம்...!

அல்லாத்தையும் வுட ஒரு பெரிய கொடுமை..டைட்டில் கார்டு போடும் போது உலகத்துல புரட்சி செஞ்சு மாற்றத்தை உண்டு பண்ணின தலைவர்ங்க பேர எல்லாம் போட்டோவோட போட்டு, அது எந்த வருசம்னு வேற காட்றாங்க...உதாரணமா சேகுவாரா, மர்ட்டின் லூதர் கிங், மாவோ, வின்சன் சர்ச்சில், பிடல் காஸ்ட்ரோ..இப்டி....

அப்டி போட்டு என்னா சொல்ல வர்றாங்கோன்னா....அத்து மாதிரி நம்ம தமிழ்நாட்ல விஜய் சார் மாற்றத்தை கொண்டு வருவார்னு சூசகமா சொல்றாங்களாம்...! விஜய்க்குன்னு ரசிகர்கள் கூட்டம் இருக்கறது எல்லாம் நியாயம்தான். ஒரு மாஸ் ஹீரோன்னு சொன்னா தன்னோட இமேஜை கூட்டிக்கிறதுக்காகவும், காட்டிகிறதுக்காகவும் பஞ்ச் டயலாக்ஸ், சூப்பர் பில்டப் ஸ்டோரி, வெயிட்டான வசனங்கள், அதிரடி சண்டைக்காட்சிகள், விறுவிறுப்பான ஸ்கிரீன் ப்ளேன்னு எல்லாமே  பொறி கலங்குற மாறி இருக்கணும். நம்ப முடியாத லாஜிக் இல்லாத சீன்ஸா இருந்தா கூட நம்ம ஹீரோ செய்வார்டா அப்டீன்ற நம்பிக்கையை படம் பாக்குற ஆடியன்ஸ்க்கு கொடுக்கணும்.

ரஜினி  நடிச்சார்னா... அவர் படத்துல ஓவர் பில்டப் இருந்தாலும் இன்னோவேட்டிவா, கிரியேட்டிவிட்டியோட ஒவ்வொரு பிரேமும் வெயிட்டா இருக்கும். நாயகன் படத்துல கமல ஒரு தாதாவா மட்டுமா மணி சார் கட்டி இருப்பாரு..? அவர் வாழ்க்கை எங்க ஆரம்பிச்சு எப்டி முடியுதுன்னு நூல் புடிச்ச மாதிரி காட்டி இருப்பாரு. அதுல ஒரு வலி இருக்கும், நாமளும் படத்தோட ஒன்றிப் போயிடுவோம். தலைவா மாதிரி படம் எல்லாம் புதுசா எடுக்குறோம்னு நினைச்சுக்கிட்டு விஜய் மாஸா ஏத்துறதுக்கு பத்துப் படத்துல பிச்சை எடுத்து எடுக்கப்பட்டது. இதை விடக் கேவலம் ஒண்ணுமே இல்லை.

ஒரே ஒரு பாட்டு அதுல மட்டும் அப்பட்டமான விஜய் டச் இருந்துச்சு. அதே மாதிரி விஜயோட ஒரிஜினல் டேலண்ட்ஸ வெளிப்படுத்துற மாதிரி காட்சி அமைப்புகளும் திரைக்கதையும் இருந்து இருந்துச்சுன்னா கொஞ்சமாச்சும் தப்பிச்சு இருக்கலாம். ஆனால் ஒட்டுப்போட்டு திரட்டிய கதை, மட்டமான திரைக்கதை, கேவலமான எடிட்டிங், படு கேவலமான பாடல்கள், அதைவிட கேவலமான பின்னணி இசை, தொடர்பற்ற, தேவையில்லாத காட்சிகள்னு...

மொத்ததில் தலைவா  ஒரு படம் இல்ல....எப்படி எல்லாம் படம் எடுக்கக் கூடாதுன்றதுக்கு சொல்லப்பட்ட ஒரு பாடம். இந்தப் படத்தை வெளியிடுறதுக்கு பிரச்சினை ஏன் பண்றாங்கன்றதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அப்டி எல்லாம் நினைக்கிற அளவுக்கு இதுல ஒண்ணும் இல்லை.....ஹா.. ஹா!!!!! இது எல்லாத்தையும் தாண்டி தளபதியோட ரசிகர்கள் படத்தை ஓட வைப்பாங்கன்றது வேற விசயம் அந்த பஞ்சாயத்துக்கு நான் வரலை...!

விஜய் சார்.. ஏன் படம் கிடம்னு எடுத்து இப்டி டைம் டு லீட்னு பில்ட அப் எல்லாம் கொடுத்து டைம் வேஸ்ட் பண்றீங்க....பேசாம அரசியல்ல ஸ்ட்ரெய்ட்டா இறங்கிட வேண்டியதுதானே....அட்லீஸ்ட் இந்த மாதிரி படங்களாவது வராம இருக்குமே.....

நாங்க கேப்டனையே சகிச்சுக்கிட்டோம்....ஒங்கள சகிச்சுக்க மாட்டமா என்ன....?


தேவா சுப்பையா...





Comments

ஹா...ஹா...

இதுக்குத்தான் நம்ம ஊரில் ஓவர் பில்டப்பா...

டைரக்டர் விஜய் என்று கேள்வி பட்ட போதே இப்படி தான் சொதப்பும் என்று நினைத்தோம்.அவர் எந்த படத்தை சொந்தமாக யோசித்து எடுத்தார். விஜய் எப்படி அவரை நம்பினார்.
இப்போ தான் மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. எங்க துப்பாக்கி மாதிரி ஹிட் ஆகிடுமோனு கொஞ்சம் பயம்மா இருந்தது. இப்போ ஆல் க்ளியர்!!!

இதுல அந்த "அம்மா" தேவை இல்லாம மூக்கை நுழச்சி தேவை இல்லாம ஹிட் ஆக்காம இருந்தா சரி :-)
அண்ணா...
தாங்கள் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்... நேரம் இருக்கும் போது எழுதுங்கள்...
http://vayalaan.blogspot.com/2013/08/blog-post_10.html
Robert said…
பாதிக்கப்பட்ட யார்கிட்டயாவது கேட்டுட்டு போயிருக்கலாமுள்ள ?? என்ன பண்றது "விதி வலியது"

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த