Skip to main content

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 4


இதுவரை...




இனி....

சிரித்துக் கொண்டே கேட்ட பூர்ணாவின் ஊதாக்கலரில் சிறு பூக்கள் சிதறிக் கிடந்த வெள்ளை நிறச் சுடிதார் அவளுக்கு கூடுதல் வசீகரம் கொடுக்க...அவள் உள்ளே வருவதற்கு முன் நான் மறைக்க நினைத்த மது பாட்டில்கள் எங்கே இருக்கின்றன..வரவேற்பரையிலா..ப்ரிட்ஜிலா இல்லை கிச்சனிலா..புத்திக்குள் கணக்குப் போட்டபடியே..யோசித்துக் கொண்டிருந்தேன்...

நோ.. நோ.. வாங்க.. வாங்க.. வழிந்த படியே வீட்டுக்குள் அவளை அழைத்தேன்..! மது அருந்துதல் எப்போதுமே ஒழுக்க நெறிமுறைகளுக்கு எதிராய்த்தான் பார்க்கப்படுகிறது. மது அருந்தி விட்டு குடித்தேன் அதனால் இப்படி ஆனது, அப்படி ஆனது என்று சொல்லி தப்பித்துக் கொள்ளும் கோழை மனிதர்களின் விழிப்புணர்வில்லாத தன்மையால் குடி குடியை கெடுக்கவும் செய்தது. புரிந்து தெளிந்து அளவாய் அருந்துகையில் மது மிகப்பெரிய சந்தோசமாகிறது. அறிதலும் புரிதலும் இருந்தால் வாழ்க்கையே சுகம்தானே...அதுதானே இங்கே இல்லாமல் இருக்கிறது.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா... பிரிட்ஜில்தான் இருக்கிறது. பெரு மூச்சு விட்டபடியே... ஒரு பத்து நிமிடம் கொடுத்தால் பிரஷ் அப் ஆகிட்டு வந்துடுவேன்...அவளிடம் சொன்னேன். 

பத்து மணி வரை உங்களுக்கு ஒரு பத்து நிமிடம் கிடைக்கவில்லையா...

கேள்வி கேட்டாளா இல்லை ஏதேனும் அடுத்து கவிதை சொல்கிறாளா?  இரண்டு நொடிகள் அவளின் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு....கிவ் மீ 10 மினிட்ஸ்...வில் ஹேவ் ஷவர் அண்ட் கம்....பாத்ரூமிற்குள் ஓடினேன்....

ஆண்களின் உலகம் எப்போதுமே கதாநாயக மனோபாவத்தில் கட்டமைக்கப்பட்டு வார்க்கப்பட்டது. தாய்வழிச் சமூகம் என்றறியப்படும் திராவிட சமூகத்தில் பெண் தான் எல்லாமாய் இருந்திருக்கிறாள். அவள்தான் ஒவ்வொரு குழுவாய் வாழ்ந்த ஆதி மனிதர்களை வழி நடத்தி இருக்கிறாள். உணவு தேடுவதிலிருந்து, தங்களின் குழுவுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் தலைமை தாங்கி எதிரிகளிடம் சண்டையிடுவதிலிருந்து, திட்டங்கள் தீட்டி பருவகாலங்களுக்கு ஏற்றார் போல தங்களின் இருப்பிடத்தை மாற்றிக் கொள்வதிலிருந்து எல்லாமே பெண்தான்.

ஒரு பெண்தான் தனது துணையை தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள்.  ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை தனது துணையாகக் கொண்டு அவள் நகர்ந்த ஆதி சமூகத்தில் உறவுகள் என்று யாதொரு வரைமுறையும் இருந்திருக்கவில்லை பருவம் எய்திய பின்பு புணர்ச்சி...என்று உள்ளுணர்வு என்ன சொன்னதோ அதை செய்து நகரும் ஒரு இயல்பான வாழ்க்கை முறை இருந்தது. அங்கே குற்ற உணர்ச்சி என்ற ஒன்று இருந்திருக்கவே இல்லை...மிருகங்களை கீழ்த்தரமாக மனிதன் நினைக்க ஆரம்பித்தது எல்லாம் அவன் குறுகலான மனோநிலையில் சிந்திக்க ஆரம்பித்த பின்புதான்...

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு இயல்பு இருந்தது. ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றார் போல மாறி மாறி சிந்தித்து தங்களை தற்காத்துக் கொள்தல் ஒன்றே உயிர்க் கொள்கையாய் இருந்தது. வாழவேண்டும் என்பதும் இனப்பெருக்கம் செய்யவேண்டும் என்பது மட்டுமே உயிர்களின் தலையாய நோக்கமாய் இருந்தது. இப்படியான ஒரு காலச்சூழலில் பெண் மட்டுமே எல்லாவற்றையும் அரவணைப்பவளாக, எதிர்த்து நிற்பவளாக, திட்டமிடுபவளாக ஒரு சூப்பர் பவராக இருந்திருக்கிறாள்....

இதில் எப்போது ஆண்கள் கதாநாயக கட்டமைப்பை உருவாக்கி தங்களை இனத்தின் தலைவர்களாகவும், குழுக்களின் தலைவர்களாகவும் ஆக்கிக் கொண்டார்கள் என்றுதான் தெரியவில்லை. பெண்களை அவர்கள் குறுக்குப் புத்தியால் அடக்கி ஆண்டதைத்தான் வரலாறு முழுதும் பதிந்து வைத்திருக்கிறார்கள்....ஆனால் பெண் தோற்கடிக்கப்பட வில்லை..அவள் விட்டுக் கொடுத்திருக்கிறாள் அவ்வளவே....!

குளித்து விட்டு வெளியே வந்து ஷார்ட்ஸ் டீ சர்ட்டுக்குள் நுழைந்து பூர்ணாவிற்கும் எனக்கும் காஃபி போட்டு கொண்டு வந்து அவளின் முன் காபியை வைத்து...ஹேவ் இட்.. பூர்ணா...என்றேன்...

ஓ...இவ்ளோ சீக்கிரம் குளிச்சுட்டீங்க...காக்கா குளியலா...? கண்ணடித்து கிண்டல் செய்தாள்....

குளிருக்கு இதமாயிருந்த காபியை உறிஞ்சியபடியே அவளின் கண்ணடிப்பை ரசித்தேன். பெண்களின் வசீகரமே அவர்களிடம் குடி கொண்டிருக்கும் நளினம்தான். ஒரு ஆணுக்கு பெண்ணின் மென்மையான எல்லா செயல்களுமே பிடித்துப் போகிறது. அவள் பேசுவதிலிருந்து, அழகாய் முடி ஒதுக்குவதிலிருந்து, சிரிப்பதிலிருந்து எல்லாவற்றிலுமே அவர்கள் நளினமாய் நடந்து கொள்கிறார்கள். பூர்ணா சோபாவில் அமர்ந்திருந்த விதமும் அவள் காஃபியை உறிஞ்சிய விதமும் ஒரு ஸென் ஹைக்கூவை வாசிப்பதைப் போலிருந்தது....

ஆள் அரவமற்ற 
சாலையோரங்களை
அலங்கரிக்கும் மரங்கள்
எல்லாம் பூக்கின்றன
பிறகு ஒன்றன் பின்
ஒன்றாக விழுகின்றன...
ஒன்று விழுகிறது..
பின் சிறிது நேரம்...
எதுவும் விழுவதில்லை....
பின் மற்றொன்று விழுகிறது...

சந்தோசம் என்பது நிகழ்வு அல்ல. நிகழ்விற்குப் பின்னான நினைவு.......

ஹேய்.......முகில்...வேர் ஆர் யூ மேன்.....?

கனவைக் கலைத்தது கவிதை. தெளிந்த நீரில் அழுந்தாமல் விழுந்த ஒரு சிறு பூவாய் என்னை சலனப்படுத்திக் கொண்டிருக்கும் உன்னைத்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று எப்படி அவளிடம் சொல்வது...


தேவதைகள் வெள்ளை உடைதான் அணியுமாம் பூர்ணா..உன்னை மாதிரி இருக்கவேண்டும் என்றா...?

ஹா.. ஹா சட்டென்று சிரித்தவள்.....வைரமுத்து  எல்லோரையும் கெடுத்து வைத்து விட்டார் என்றாள்.....

வைரமுத்துவின் வார்த்தைகள்தானே பெரும்பாலான இளைஞர்களை காதலூருக்கு கூட்டிச் சென்று கற்பனைப் பால் புகட்டிய தாய்.....

கவிதைகள் என்றாலே கிளர்ச்சியூட்டுபவையாய் இருக்கவேண்டும். இரண்டு வரியை வாசித்து விட்டு இரவும் பகலும் நாம் உறக்கம் தொலைக்க வேண்டும். வைரமுத்து கற்பனைகளுக்கு சிறகு கொடுத்தவர் என்றால் கலீல் ஜீப்ரான்....என் கனவுகளுக்கு வர்ணம் தீட்டியவர்....

முறிந்த சிறகுகள் வாசித்து மூன்று இரவு இரண்டு பகல்கள் நான் எங்கோ தொலைந்து போயிருந்தேன்...நான்காம் நாள்...ரிச்சர் டாக்கின்ஸைப் படித்து மீண்டெழுந்து வந்தேன். .....

ரிச்சர் டாக்கின்ஸ்... யார் அவர்...? அவளிடம் கேட்டேன்...

ஓ.. ..நீங்கள் த காட் டெலுயூசன்ற ( The God Delusion) புக் படிச்சது இல்லையா ? பேசிக்கலி அவர் ஒரு எத்தாலிஜிஸ்ட்....கனவுகளுக்கு அவர் வேலை கொடுப்பதே இல்லை. நிகழ்வுகளுக்கும் அர்த்தம் கொடுப்பதும் இல்லை...

நீங்க சென்னை வரும் போது அந்த புத்தகமும் த  கிரேட்டஸ்ட் ஷோ  ஆன்  எர்த்  (The Greatest Show on Earth) இந்த ரெண்டு புத்தகமும் தர்றேன் மறக்காம வாங்கிப் படியுங்க...

டார்வின் தியரிய பேஸ்பண்ணி நிறைய நிறைய விசயம் அதில பேசி இருப்பாங்க முகில்...

கடவுள் இல்லேன்னு சொல்றீங்களா...பூர்ணா...?

இந்த "ங்களா"  போடுறத கொஞ்சம் ஸ்டாப் பண்றீங்களா சார்...?  நான் உங்கள விட சின்னப் பொண்ணுதான்....தலை முடியைப் பின்னுக்குத் தள்ளியபடியே நாக்கு காட்டி பளிப்பு காட்டினாள்...

ஆல்ரைட்... கடவுள் இல்லேன்னு சொல்றியா...நீ..? கேட்டேன்

இருக்க வேண்டிய அவசியம் இல்லேன்னு நினைக்கிறேன்....பதிலினாள்..

ஏன் அப்டி நினைக்கிற...?

கடவுள் உனக்கு எதுக்கு தேவைப்படுறார் முகில்..? வாழ்க்கைக்கு கடவுளின் அவசியம்தான் என்ன....? அதை சொல்லு முதல்ல....ஒழுக்கமா இருக்கறதுக்கு, இன்னொரு மனுசன துன்பப்படுத்தாம இருக்கறதுக்கு, மொத்ததுல அடுத்த மனுசன தொந்தரவு பண்ணாம நிம்மதியா வாழ்றதுக்கு ... வேற எதுக்கு கடவுள் தேவைப்படுறார்..? கடவுள் மனிதர்களுக்கு ஒரு பெரிய டைம் பாஸ்....அவர் நிஜமா இருக்கணும்னு  அவசியமில்லை...ஹா... ஹா... சிரித்தாள்.

யூ  நோ முகில்...நான் ஒரு ஆன்மீகவாதி..ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவள் இல்லை. கடவுள் இல்லை என்றும் சொல்கிறவளும் இல்லை. நான் இருக்கிறேன்,  நீ இருக்கிறாய்.. இந்த வாழ்க்கை இருக்கிறது....அவ்வளவுதான்....

என்ன பூர்ணா ஓஷோவுக்குள் வழுக்கி  விழுகிறாயே....? அவள் விழிகளை பார்த்துக் கொண்டிருந்தேன்...

இஸ் இட்... ?ஆக்சுவலி.. நான் அதிகம் ஓஷோவைப் படிச்சது இல்லடா.......ஐயம்..சாரி...டா போட்டுட்டேன்...உனக்கு ஒண்ணும் பிரச்சினை இருக்காது இருந்தாலும் பரவா இல்ல...

இட்ஸ் ஓ.கே.. நோ. ..ப்ராப்ளம் அட் ஆல்..எல்லா ஆண்களையும் போல நானும் சொல்லி வைத்தேன்....


வாழ்க்கையின் எல்லா தருணங்களும் மிக மிக அழகானவை முகில். இங்கே ஆராய்ச்சி செய்து பொழுதைக் கழிப்பதை விட  அனுபவித்து வாழ்வதே மேல்...நிறைய புத்தகங்களை வாசித்து, நல்ல திரைப்படங்களைப் பார்த்து, அற்புதமான உறுத்தாத இசையைக் கேட்டு  என் வாழ்க்கையை நகர்த்திக்கிட்டு இருக்கேன் முகில்...

தாஸ்தோயெவெஸ்கியோட "வொயிட் நைட்ஸ் "(White Nights) படிச்சிருக்கியா....?

இல்லை பூர்ணா.. என் வாழ்க்கை முழுதும் இயற்கை, தேடல் இப்டியேதான் போய்ட்டு இருக்கு, சுஜாதா, பாலகுமரான், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், கி.ராஜநாரயணன், கல்கி, இப்போ அப்போ அப்போ ஜெயமோகன் நிறைய ஓஷோ....போதும்ன்ற அளவுக்கு சென்  ஹைக்கூக்கள் பற்றிய  ஆராய்ச்சி, சேகுவரா, பிரபாகரன், மாவோ, லெனின், காரல் மார்க்ஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, லாவோட்சூ, கன்பூசியஸ், சிக்மண்ட் பிராய்ட் இப்டி...ஏதோ ஒரு வழியில நான் பயணிச்சாலும்.... சிவம் அப்டீன்ற வெற்றிடம்தான் இடம்தான் என்னோட பூர்வீகமான உள்ளமையா இருக்கு...

ஏதோ ஒரு தேடல் எனக்குள்ள இருக்கு அந்தத் தேடலை நான் வலியோட செய்யாம அனுபவிச்சு செய்றேன் பூர்ணா..எனக்கு  வாழ்க்கை ரொம்ப அழகான ஒரு விசயம். இந்த அழகை அனுபவிக்கிற அதே நேரத்துல இதை அனுபவிக்கிறது யாரா இருக்கும்னு ஒரு கேள்வி எப்பவும்  எனக்குள்ள இருந்துட்டே இருக்கு...

நான் அவளைப் பார்த்தேன்....

வொயிட் நைட்ஸ் படிச்சுட்டு ஒரு இரவு முழுதும் பிரமிச்சுப் போய் உட்கார்ந்து இருந்தேன்.  வாழ்க்கையோட அழகு அதுல இருக்குற முரண்கள்தான்னு தெளிவா புரிய ஆரம்பிச்சுது... எப்பவுமே தனிமையில இருந்து அவஸ்தப்பட்டுக்கிட்டு இருக்க ஒருத்தன் நாஸ்டென்கான்னு ஒரு பெண்ணை சந்திக்கிறான்...அவளோட காதலனை அவ கண்டிபிடிக்க நிறைய கடிதங்கள் எழுதிக் கொடுத்து உதவுறான்.. ஒரு கட்டத்துல இரண்டு பேருமே காதலிப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் வரும் போது நாஸ்டென்காவோட லவ்வர் வந்துடுறான், அவ அவன் கூட போய்டுறா....நம்ம ஹீரோ மீண்டும் தனிமைக்கு தள்ளப்படுறாரு...

அவனோட வாழ்க்கையில காதலும் கிடையாது. வேறு துணையும் கிடையாது. தனியாதான் நகரணும் அப்டீன்றது அவனுக்கு விதியாகிப் போகுது...! குறிப்பா ரஷ்யன் நாவல்கள் பயணிக்கிற தளங்களே அலாதியானவை அது நாம் எப்போதும் பயணித்திராத ஒரு உலகத்துக்குள்ள நம்மள கொண்டு போய் சேத்துடும்..முகில்..அதுதான் அந்த எழுத்துக்களோட ஸ்பெசாலிட்டி அதுவும் தாஸ்தோவெஸ்கியோட எழுத்துக்கள் நாம் பார்த்திராத வர்ணங்களால் நமக்கு புதுப்புது ஓவியங்களை  படைத்துக் காட்டும்...அந்த ஆச்சர்யத்தை விவரிக்க முடியாது வாய் பிளந்து ரசித்துக் கிடக்க மட்டுமே நம்மால் முடியும்...

காதல் அப்டீன்ற வார்த்தை காமத்துக்கான துருப்புச் சீட்டா மட்டும் இருக்குமோன்னு கூட  பல தடவை நான் நினைச்சு இருக்கேன்டா....நீ என்ன நினைக்கிற....? .என்னைச் சீண்டினாள்...

ஹ்ம்ம்ம்ம்ம்ம் நான் பெருமூச்சு விட்டேன்...எப்டி...பூர்ணா இப்டி எல்லாம்...?! ஒரு பெண்ணை அறிவு சார்ந்து பார்க்கும் பார்வையும் அதனைச்  சார்ந்து எழும் உணர்வுகளும் எப்படி இருக்கும்னு இப்போ எனக்குப் புரியுது...யூ ஆர் கிரேட்....

காதல், காமம் எல்லாமே நாம எதுவுமற்றுப் போவதற்கான கேட்டலிஸ்ட்ஸ் அப்டீன்னு நான் நினைக்கிறேன்...

எதுவுமற்றுன்னா...? திரும்பக் கேட்டாள்...

நீ கேட்டியே ஆரம்பத்துல கடவுள் ஏன் இருக்கணும்னு அந்த கேள்வியை உடைக்கத்தான்....என்றேன்...

புரியல.. அவள் புருவம் உயர்த்தினாள்.

கடவுள் எதுக்கு இருக்கணும்னு அல்லது கடவுளின் அவசியம் என்ன?ன்னு கேட்டீல்ல அந்த கேள்வி காமத்தைப் புரிஞ்சுக்கிட்டா உடைஞ்சு போகும்னு நினைக்கிறேன். மரணம், ஜனனம் இது ரெண்டுதான் மனித வாழ்க்கையின் சூட்சுமம். மரணம் அப்கோர்ஸ் நாம செத்ததுக்கு அப்புறம் பெறப்போகுற ஒரு அனுபவம் அதை மறுபடி வந்து மனுசங்க கிட்ட பேச முடியாது...பட் ஜனனம்....நாமதான் அதுல பங்கெடுத்துக்கிறோம்...ஒரு உயிர் உருவாகும் மிக நுட்பமான இடம் காமம்....சோ.. காமத்தை விளங்கிக்க ஆரம்பிச்சா ஏதோ ஒண்ணு புரியும்னு தோணுது...

என்னைப் பாத்தா உனக்கு ஏதாச்சும் தோணுதா..? கேட்டாள்....

என்ன சொல்வது.. என்று நான் உள்ளுக்குள் தடுமாறிக் கொண்டிருந்தேன்.....கொடைக்கானல் மிரட்டத் தொடங்கி இருந்தது....



                                                     ... பாடல் தொடரும்....



தேவா சுப்பையா...



Comments

ம்... சுவாரஸ்யமாக செல்கிறது....
Its going very interesting....!

conversation between mukil and poorna is poetic ...! Superb na ...!

// கொடைக்கானல் மிரட்டத் தொடங்கி இருந்தது....// u tooo...!
அழகான கவிதையாய் எழுத்து...

அழகாய்ப் போகுதுண்ணா....

கொடைக்கானல் மிரட்டத் தொடங்கிவிட்டதா.... சரி தொடருங்கள்....

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த