இதுவரை...
இனி...
என்னைப் பாத்தா உனக்கு ஏதாச்சும் தோணுதா..? கேட்டாள்....
என்ன சொல்வது..என்று நான் உள்ளுக்குள் தடுமாறிக் கொண்டிருந்தேன்.....கொடைக்கானல் மிரட்டத் தொடங்கி இருந்தது....
ஒண்ணும் தோணலை...அவளிடம் நிதானமாய் சொன்னேன்.
நீ ஒரு ஆண். நான் ஒரு பெண்..எதாச்சும் நடந்துடும்னு பயப்டுறியா..?
இல்லை பயப்படல....சலனமில்லாமல் சொன்னேன்.
இந்தத் தனிமை ஏதாச்சும் பண்ணச் சொல்லுமா நம்மளை...முகில்?....கேட்டாள்.
என்ன பண்ணிடும்...ஒண்ணும் பண்ணாது...நமக்குத்தான் புரிதல் இருக்கு, தெளிவு இருக்கு...ஆனா கட்டுப்பாடுகள் கிடையாதுன்னு நினைக்கிறேன்....
அப்புறம் ஏன் கை கட்டி பவ்யமா என் எதிர்த்தாப்ல உட்காந்து இருக்க....? என் பக்கத்துல வந்து உட்காரலாமே...? ஏதோ ஒரு பயம்தான உன்ன அப்டி உட்காரச் சொல்லுது..... இல்லையா....முகில்...?
பயம் இல்ல.. எனக்கு என்ன பயம்...நாம விழிப்புணர்வோடதானே இருக்கோம்...! காற்றில் ஆடாத ஒரு தீபம் மாதிரியான தெளிவுதானே இது..
அப்போ வந்து என் பக்கத்துல உட்கார முடியுமா உன்னால....?
வொய் நாட்....அவள் அருகில் போய் அமர்ந்தேன். ஹ்ம்ம்ம்ம் சொல்லு பூர்ணா...நிறைய பேசுற...நீ கடவுள் மறுப்பாளர்களை எல்லாம் வாசிச்சு இருக்க, அடிப்படையில நம்பிக்கை இல்லாத ஒரு தன்மைய அந்த கட்டமைப்பு கொடுத்துடும் இல்லையா..? என்னை எப்டி நம்புற நீ...?
அட நீ வேற முகில்......நம்பிக்கைன்றது....மனசு சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை தனி மனித விருப்பம். எனக்கு ஓ.கேன்னு தோணிச்சு....தட்ஸ் ஆல்....
பூர்ணா ரொம்ப பவ்யமா உட்கார்ந்து இருக்கியே எங்கடா கைகால் மேல பட்டா தப்பு நடந்துடும்னு பயப்புடுறியா..?
டேய்... எனக்கு ஒரு பயமும் இல்லடா...உன் கையை எடுத்து இப்டி என் கையோடு கோர்த்துக்கிட்டு பேசினா கூடா எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை....கைகளைக் கோர்த்துக் கொண்டாள்...
இப்போது....கொடைக்கானல் குளிர் கொஞ்சம் மிரளத் தொடங்கி இருந்தது.....
நிஜமாதான் எல்லாமே மனசுதான்.... பூர்ணா நாம கட்டுப்பாடா இருந்தா என்ன நடந்துடும்.. நான் உன் தோள்ள கை போட்டு இப்டி இறுக்கினா கூட ஐ நெவர் கேவ் எனிதிங் இன் மை மைண்ட்....
தோளில் கை போட்டேன்.
யா....யா.... யூ ஆர் கரெக்ட்....!!!!!!!! உடல்கள் உரசினால் என்ன தவறு நடக்கப் போகிறது. இன்ஃபாக்ட் நமக்குள்ள இருக்குற புரிதல் கண்டிப்பா எல்லை தாண்ட விடாது இப்டி நான் உன் மூக்கோடு என் மூக்கு உரசினால் கூட....
அவளின் உதடு என் உதட்டை உரச அனிச்சையாய் அவளின் உதட்டினை இழுத்து உறிஞ்சத் தொடங்க..அவள் என் தலை கலைக்க ஆரம்பித்தாள்...
ஜஸ்ட்....லைக் தட் தான் உன்னைக் கட்டிப்பிடிச்சு இருகேன் பூர்ணா...! தப்பு இல்லையே...
நானும் அப்டிதாண்டா....அவள் வார்த்தைக் குழறியதைக் கவனித்தேன்...ஏதோ ஒரு உணர்வு விழித்துக் கொள்ள....அதைக் கவனிக்கத் தொடங்கினேன்...
நான் கூடத்தான் முகில்...இப்போ உன்னை தொட்டுக் கொண்டிருக்கிறேன் அவ்ளோதான் எனக்கு வேறு ஒண்ணும் தப்பாத் தெரியல......
அவள் என் காது கடித்தாள்.
உள்ளுக்குள் ஏதோ தடம் புரள அவளை இறுக்க அணைத்தேன். இருவர் உடம்புக்குள்ளும் சூடு பரவத் தொடங்கியது.
மூச்சிறைக்க....அவளின் முகம் பார்த்தேன். பூர்ணா...ஆர் யூ ஓ.கே.......இயங்கிக் கொண்டே கேட்க....
பாதி விழிகள் சொருக...அப்சல்யூட்லி...வீ ஆர்......முகில்...
ஒரு வீணையை எப்படி மீட்டுவது என்பது கலை. விபரமறியாமல் அதன் தந்திக் கம்பிகளில் விளையாடும் போதும் ஏதேதோ சப்தங்களை அது அபஸ்வரங்களாய் வெளிப்படுத்துகிறது ஆனால் எந்தக் கம்பியை எப்படி மீட்டவேண்டும் என்ற அறிவோடு அதை அணுகும் போது அங்கே தெய்வீக இசை பிறக்கிறது.
காமம் என்பதை எப்போதும் இனப்பெருக்கத்தோடு தொடர்புபடுத்தியே இந்த சமூகம் அறிந்து வைத்திருக்கிறது. இடைவிடாமல் கேட்கும் சங்கீதம் என்ற ஒன்று இல்லை என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். மனிதர்களின் சுவாரஸ்யம் எப்போதுமே இரண்டில்தான் ஒன்று ஆரம்பம், இரண்டாவது முடிவு. ஆரம்பமும் முடிவும் இல்லாத அனாதியான ஒரு சுயத்தைக் கொண்டவர்கள் இப்படி தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையில் மாட்டிக் கொண்டதுதான் அவித்தை அல்லது மாயா. எந்த ஒரு விசயமும் ஆரம்பிப்பதோ அல்லது முடிப்பதோ அல்ல இந்த பிரபஞ்சத்தின் ரகசியம் என்பது....அது எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது என்பதைக் கடந்து வேறு எதுவும் அங்கே முக்கியமில்லை.
இயங்குதல் மட்டுமே இங்கே சத்தியம். எப்போது..இயங்க ஆரம்பித்தது...? எப்போது முடியும் இந்த இரண்டு கேள்விகளுமே படு அபத்தமானவை.
காமம் என்பது மனித அகந்தை கரைந்து பிரபஞ்ச மூலத்தை தொடும் ஒரு நிலை. அதன் உச்சம் என்பது மீண்டும் நாம் கடவுள் தன்மையிலிருந்து சரேலென சறுக்கி விழுந்து மனமென்னும் கூட்டுக்குள் மனிதனாய் ஒடுங்கும் நிலை. மலை முகட்டில் ஏறுவதும், அதன் உச்சியில் இருந்து எல்லாவற்றையும் ரசிப்பது சுகம் என்றால்....அதன் உச்சியிலிருந்து மீண்டும் தரை நோக்கி விழுதல் சுவாரஸ்யம். சில கணங்கள் நீடிக்கும் அந்த சுவாரஸ்யம் நீடிக்காமல் தரை தொட்டவுடன் முடிந்து போகிறது. பின் மீண்டும் மலையேறுதலும், மேலிருந்து கீழே விழுதலும்..என்பது போல்தான் காமம் இங்கே கையாளப்படுகிறது. உச்சம் தொடுவது என்பது உச்சத்தில் நிற்பது. அதிலிருந்து கீழே விழுவது அல்ல. இப்படியாக உச்சம் தொடாமல் நகர்ந்து, நகர்ந்து நெருப்பாய் எரியும் காமம் முடியவேண்டும் என்றொரு அவசியமில்லாத நிலையில்.....
பூர்ணாவோடு இயங்கிக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வந்த ஒன்று தன்னை மீண்டும் அங்கே கொண்டு செல்லும் நிகழ்வொன்றை நிகழ்த்திக் கொள்ள இரு உடல்கள் சேர வேண்டிய நிர்ப்பந்தமே திருமண பந்தமென்னும் கட்டுப்பாடாய் முறைப்படுத்தி மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தன்னை தானே பல்கிப் பெருகி விருத்தி செய்து கொள்ளும் அதே நேரத்தில் தன்னை யாரென்றும் உணர்ந்து கொள்ள தனக்குத் தானே வைத்துக் கொண்ட உச்ச வசியம் காமம். காமத்தை அறிய முடியாமல் வழுக்கி விழுந்து விட்டு அது கொடுக்கும் உச்சத்தை மட்டும் கற்பனை செய்து கொண்டே இங்கே காமத்தை வரையறுத்துக் கொள்கிறார்கள்.
தந்த்ரா காமத்தைப் பெண்ணைக் கொண்டு ஆணையும், ஆணைக் கொண்டு பெண்ணையும் பயிலச் சொல்கிறது. பிறிதொரு நாளில் ஆணுக்கு பெண்ணாயும், பெண்ணுக்கு ஆணாயும் பிரபஞ்சமே ஆகிப் போகையில் அங்கே யாதொரு துணையும் தேவையில்லாமல் போகிறது. பிரபஞ்சத்தோடு சல்லாபித்து சல்லாபித்து மனம் கழிந்துப் போய் யாராலும் தடுக்க முடியாத மிகபெரிய உணர்வு நிலையில் மூழ்கிப் போய் தன்னை கரைத்துக் கொண்டு பிரபஞ்சத்தில் காணாமல் போய் விடவும் முடிகிறது. ஆதி உணர்வு என்பது கோடாணு கோடி கூடலின் உச்ச சுகத்தை ஒத்தது என்று நான் சொல்லுமிடம் கூட மட்டுப்பட்டதுதான். அதைப் பற்றி அதிகம் விவரித்தால் அது ஒரு கேலிச் சித்திரமாய்ப் போய்விடும்....
பேச்சற்று கிடந்த அந்த பொழுதில் சமூகக் கட்டுப்பாடுகளும் ஒழுக்க நெறிகளும் வெற்று மாயபிம்பமாய்த் தெரிய மூச்சு இறைத்துக் கொண்டிருந்தது இருவருக்கும். போதும் என்று தோன்றிய போது....எழுந்து அமர்ந்த அந்த நிலையில் காமத்தை சட் டென்று முடித்துக் கொள்ள தோன்றாமல் அந்த உணர்வினை அணைந்து விடாமல் மெல்ல அப்படியே உடல்களுக்குள் தேக்கிக் கொண்டு நீரிலிருந்து நீர் விலகுவது போல விலகிக் கொண்டோம்.
பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் இருந்தது. சப்தமில்லாமல் விழிகள் மூடி கிடந்த சூழலை மெதுவாய் கண் திறந்து நான் கலைத்த போது உடை மாற்றிக் கொண்டு தரையில் அமர்ந்தபடியே பூர்ணா என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்....நிமிர்ந்து அவள் முகம் பார்த்தேன்....
உடலுக்குள் இருந்த அதிர்வுகள் கூடாமல், குறையாமல் மூளையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தன. மூளையைத் தொடத் தொட அவை அனுபவமாகி நினைவுப்பகுதிகளில் நிறைந்து கொண்டிருந்தன.
பூர்ணா இப்போ நடந்த விசயம் உடல் ஈர்ப்பா? முதல்ல இது சரியா, தப்பா...?
நேத்துதான் உன்னைப் பாத்தேன்....அடுத்த நாள் இப்டி ஒரு சூழலுக்குள்ள நாம வந்து விழுந்துடுவோம்னு நினைச்சுக் கூட பாக்கலை...ஏதோ படம் பாத்தது மாதிரி, கதை படிச்ச மாதிரி என்னால....நம்பவே முடியலை....ஆக்சுவலா....திட்டமிடாமலே இது நடந்துடுச்சு....
பூர்ணா ஆழமாய் என்னைப் பார்த்தாள். முகில் மழை பெய்யறதுக்கு என்ன காரணம் இருக்க முடியும் இல்லை அதுக்கு காரணம் வச்சுக்கிட்டு மேகங்கள் சூல் கொண்டு மழையா பெய்யணும்னு ஆசைப்பட்டா மட்டும் மழை பெஞ்சுடுமா என்ன....
எப்போ மழை பெய்யணுமோ அப்போ பெய்யும்...!!!!
ஒரு மழை பெய்வதற்கு முன்னும் பின்னும் அந்த மழையை பத்தி சொல்ல ஒண்ணுமே இல்லை. மழை பெய்யும் போது மட்டும் மழை, மழையாகிறது. விரும்பினால் நனையலாம், விரும்பாவிட்டால் நனையத் தேவையில்லை. விரும்பாமல் இருப்பவர்களை இழுத்துக் கொண்டு போய் நனைய வைத்தாலும் தப்பு...நனைய விரும்புபவர்களை தடுத்து நிறுத்தினாலும் தப்பு....
நான் நனைய விரும்பினேன்...நனைந்தேன். மீண்டுமொரு மழை வேண்டுமென இப்போது நான் ஆசைப்பட மாட்டேன்...
இன்னொரு பொழுதினில்
முகிலோடு காற்று கூடலாம்
கனத்த மழையொன்றும் பெய்யலாம்
சப்தங்கள் செய்து கொண்டே
பூமியைப் போன்று
சந்தோசத்தில் நனைந்தும் கிடக்கலாம்...
எப்போதும் வாய்ப்பதில்லை
மழையில் நனையும் வாய்ப்பு....
நனைந்தபின்பு எப்போதும்
நகராத நினைவுகளைப் போல....!
முகில் நனைத்த மழையில் இந்த பூரணமானாள் பூர்ணா...சொல்லிவிட்டு தன்னை முழுதுமாய் சரி செய்து கொண்டு சோபாவில் விழுந்தாள்.
நான் உனக்கு இப்போது யார் பூர்ணா? நீ என் காதலியா? உறவு கொண்டதால் நான் உன்னை மணம் முடிக்க வேண்டுமா? உன்னை இப்படியே விட்டு விலகினால் நான் செய்தது தவறா? நிறைய கேள்விகள் எனக்குள்ள அலை மோதுது....
பூர்ணா தலை முடியைச் சரி செய்த படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்....
அவள் பார்வை எனக்குள் ஊடுருவி ஏதேதோ இம்சைகள் செய்தது...
சொல்லு பூர்ணா............மீண்டும் அவள் மெளனம் கலைத்தேன்...
... பாடல் தொடரும் ....
தேவா சுப்பையா...
Comments