Skip to main content

எப்படி ஜெயித்தாய் ரஜினி...?!


ரஜினிய ஏன் பிடிக்குதுன்னு சொல்ல குறிப்பிட்டு சொல்லும்படியான வார்த்தைகள் என்கிட்ட கிடையாது. சின்ன வயசுல இருந்து உள்ளுக்குள்ள பத்திக்கிட்ட நெருப்பு இந்த ரஜினி. ஏதோ படத்துல பிடிச்ச மாதிரி நடிக்கிறாங்க அதுக்காக அவுங்க ரசிகனா கண்மூடித்தனமா அவுங்கள ரசிக்கலாம் அப்டீன்ற அளவோட ரஜினிய ஒரு நாளும் என்னால நிறுத்திட முடியாது...! எட்டு வயசுல ராகவேந்திரா மந்த்ரத்தை எதிர்வீட்டு சுகுணா அக்கா கிட்ட எழுதி வாங்கி மனப்பாடம் பண்ணினது மூலமா ராகவேந்திராவ உள்ளுக்குள்ள கொண்டு வந்தது ரஜினி...., ஆன்மீகத்தை பத்தி விபரம் தெரிஞ்ச பிறகு புத்தகங்கள்ல படிச்சு தெரிஞ்சுக்கிட்டாலும் ராகவேந்திரர் படம் நடிக்கிறதுக்கு முன்னாடி அதாவது அடுத்த வாரிசு படம் நடிச்சு முடிச்ச உடனே எனக்கு எதுவும் வேணாம் நான் சாமியாரா போகப் போறேன்னு சொன்ன சூப்பர் ஸ்டார் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாவே தெரிஞ்சார்...

அப்போ ஒண்ணும் புரியலேன்னாலும் நிலையாமை நிறைஞ்ச இந்த வாழ்க்கையில ஒண்ணுமே இல்ல...டக்குன்னு ஒரு நாள் எல்லாம் முடிஞ்சு போயிடும்ன்ற விதையை எனக்குள்ள முதன் முதல்ல விதைச்சது சூப்பர் ஸ்டார்தான்....!

ஏன் சார் வருசத்துக்கு ஒரு படம் பண்ணீங்க அப்புறம் அதை ரெண்டு வருசத்துக்கு ஒரு படமா மாத்துனீங்க, அப்புறம் அது மூணாகி இப்போ நாலு வருசமாயிடுச்சு நீங்க நடிச்சு, இப்டி படம் கொடுக்குற கால இடைவெளிய அதிகரிச்சுக்கிட்டே போறீங்களேன்னு ரஜினி கிட்ட ஒரு பேட்டியில கேட்டப்ப அதுக்கு ரஜினி....


கண்ணா... வாழ்க்கையில ஓய்வெடுத்து உட்காருற நேரம்னு ஒண்ணு வரும், அப்போ நாம விரும்பினாலும் விரும்பலேன்னாலும் காலம் நமக்கு ஓய்வ கொடுத்துடும், அட என்னடா இது இப்டி ஓடிட்டு இருந்த நாம உக்காந்த்துட்டோமேன்னு சொல்லி வருத்தப்பட்டு பழக்கபட்ட மனசு ரொம்பவே நம்மள படுத்தி எடுத்துடும்.... அதனாலேதான் பிசியா இருக்கும் போதே சும்மா இருக்கறது எப்டீன்னு பயிற்சி எடுத்துக்குறேன்னு சொல்லி இருப்பாங்க...!!! நியாயமா யோசிச்சுப் பாத்தா தலைவர் சொல்லி இருக்க இந்த செய்திக்குப் பின்னால ஆழமான உண்மை இருக்கறது நமக்குப் பிடிபடும். எப்பவுமே நான், நான்னு சொல்லி வாழ்ந்துட்டு கடைசியில வாழ்க்கை நம்மள வீட்டுத் திண்ணை ஓரமா முதுமையில தூக்கிப் போட்டுட்டு அதுபாட்டுக்கு ஓடிட்டு இருக்கப்ப….நாம பிசியா இருந்த காலங்களும், நம்மள எல்லோரும் மையமா வச்சு பேசுன விசயங்களும், எல்லோரும் கொடுத்த மரியாதையும், இப்போ யாருமே கண்டுக்கவே மாட்டேன்றாங்களேன்னு சொல்லி ரொம்பவே நம்மள புலம்ப வைக்கும்….

கூட்டத்துக்கு நடுவுல இருக்கப்பவே தனியா இருக்கப் பழகிக்க, தனியா இருக்கும் போது பெருங்கூட்டத்தோட சல்லாபிக்கிறதா உணர்ந்துக்கன்னு ஆன்மீகத்துல சொல்லுவாங்க, அதைத்தான் தலைவர் அன்னிக்கு சொல்லி இருக்கார்னு அப்போ புரிஞ்சுக்கிட்டேன். ரஜினி தன்னோட ரசிகர்களுக்கு வெறும் நடிகனா மட்டும் தன்னை வரிஞ்சு காட்டிக்கவே இல்லை. ஒரு விழா மேடையில கூட அவர ஒப்பனையோட பார்க்க முடியாது. ஆன்மீகத்தோட உயரத்துல இருக்குற தலைவர் கிட்டதட்ட ஒரு குழந்தை மாதிரிதான். அவருக்குப் பொய்யா பேசவும் தெரியாது, ஆசைக்காக வாழவும் தெரியாது. யாராச்சும் அரசியல்வாதிங்க, இல்ல தத்துவ மேதைங்க, மருத்துவர்ங்க, அறிவியலார்கள்னு அவுங்க சொல்ற கருத்துக்கள சமூக பிரக்ஞை கொண்ட கருத்தா எடுத்துக்கிட்டு அதை பெரிசா பேசுர சோ கால்ட் அறிவு ஜீவிகளுக்கு ரஜினி சாரோட வாழ்க்கை முன்னேறத் துடிக்கிற தன்னம்பிக்கையோட போராடிக்கிட்டு இருக்க எல்லா இளைஞர்களுக்குமே மிகப்பெரிய பாடம்ன்றது புரியறதே இல்லை.

இன்னிக்கு தலைவர அவதூறு பேசுற நரம்பில்லாத நாக்குகளுக்கும், ஒளி இல்லாத கண்களுக்கும் அவரை சூப்பர் ஸ்டாரா மட்டுந்தான் தெரியும்….ஆனா அந்த சூப்பர் ஸ்டார்ன்ற சிம்மாசனத்துல அசைக்க முடியாத மன்னனா, ராஜாதி ராஜாவா நிரந்தர சக்கரவர்த்தியா உட்கார சிவாஜிராவ் கெய்க்வாட்ன்ற ஒரு சாதாரண குடும்பத்தச்  சேர்ந்த இளைஞன் என்ன என்ன செஞ்சான் எப்டி போராடினான்? எந்த ஒரு அதிகாரப் பின்புலமும் இல்லாம எப்டி அவனால இந்த உச்சாணிக் கொம்புக்கு வர முடிஞ்சுது…? யாரோ ஒரு ரானோஜி ராவ்க்கும், ரமாபாய்க்கும் பிறந்த இந்த சிவாஜிராவ் கெய்க்வாட்ட தேடி இந்திய தேசத்தோட மிக முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் எல்லாம் ஏன் வர்றாங்க? இவ்ளோ பெரிய மாஸ் அவருக்கு எப்டி உருவாச்சு? இவ்ளோ ரசிகர்கள் எப்டி அவரைச் சுத்தி வந்தாங்க...?அப்டி வரவைக்க இந்த சிவாஜிராவால எப்டி முடிஞ்சுதுன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா சிவாஜிராவ் டூ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அப்டீன்ற பயணத்தோட விபரம் என்னான்னு தெளிவா புரியும். புரிஞ்சுச்சுன்னா ச்ச்ச்சும்மா மெரண்டு போயிடுவோம்...!

இன்னிக்கு தேதி வரைக்கும் ரஜினி ஃபீல்ட்ல ரொம்ப வலுவா நிக்குறதுக்கு காரணம் யாரோ செஞ்ச உதவி கிடையாது, யாரோட கரிசனத்தாலயம் அவரோட படங்கள் ஓடுறதும் கிடையாது. தமிழ்நாட்டு ஜனங்க அவ்ளோ முட்டாள்தனமா படம் எவ்ளோ கேவலமா இருந்தாலும் ரஜினி நடிச்ச படம் அப்டீன்றதால அதை பார்த்து வெற்றியடைய வச்சுடவும் மாட்டாங்க. ரஜினியோட ஒவ்வொரு படமும் அவரோட உழைப்பு, அவரோட புதுப் புது யுத்திகள், அவரோட ஸ்டைல், ரசிகர்களுக்கு எது பிடிக்கும்னு யோசிச்சு படத்தைத் தேர்ந்தெடுக்குற தனித்தன்மை, எல்லாத்துக்கும மேல அவரோட அட்டகாசமான வேகம் நிறைந்த நடிப்பு இது எல்லாம் சேர்ந்துதான் அவரோட படங்கள வெற்றிப்படமா மாத்திருக்கு. 

இயல்பா வாழ்றது ஈஸி ஆனா இயல்பா இருக்குற மாதிரி அசாதாரணமான விசயங்கள திரையில நடிப்பா கொண்டு வர்றது கஷ்டம். திரையில தத்ரூபமா அழுதோ அல்லது உணர்ச்சிவசப்பட்டோ சாதாரண வாழ்க்கயில நடக்குற விசயங்களப் பிரதிபலிச்சுட முடியும் அதை ஜனங்க நம்பி பாத்து அந்தக் காட்சிகளோட ஒன்றிப் போறது ஒண்ணும் பெரிய பிரமாதம் கிடையாது ஆனால் நம்ப முடியாத விசயங்கள திரையில நிகழ்த்திக் காட்டி அந்த மாயாஜாலத்தை மக்களை நம்ப வைக்க எல்லா நடிகராலயும் முடியாது. ரஜினி அந்த மாயாஜாலத்தை அனாயாசமா செய்றதுனாலதான் இன்னிக்கு வரைக்கும் அவர் சூப்பர் ஸ்டாரா இருக்காரு பாஸ்.  அவர் தீக்குச்சியைப் பாத்தாலே தீ பத்திக்கும் அது எப்டிடா பத்திக்கும்…அப்டீன்னு யாராச்சும் கேள்வி கேட்டா அந்த தீக்குச்சிய பார்த்தது ரஜினிடான்னு நாம சொல்லும் போது ஓ..ரஜினியான்னு கேட்டுட்டு அப்ப ஓக்கேன்னு சொல்லிட்டு மக்கள் நகர்ந்து போற அளவுக்கு  தன்னோட அசாத்தியமான திறமையினால ஒவ்வொரு படத்துலயும் ரஜினி பத்த வைக்கிறது எல்லாமே சரவெடிதாங்க…!

பாபா படம் தோல்வியடைஞ்சு போச்சுன்னு எல்லோரும் சொல்லி ஏதேதோ பேசிட்டு இருந்தப்ப சந்திரமுகி பட பூஜையில தலைவர் பேசின டயலாக் தான் தோத்துப் போய்ட்டமேன்னு சொல்லி மூலையில முடங்கிக் கிடக்குற அத்தனை மனிதர்களுக்கும் எனர்ஜி பூஸ்டர். கீழ விழுந்தா டக்குனு எழுந்துடுவேன் நான் யானை இல்லே….குதிரேன்னு அவர் எப்டி  சொன்னார்..? நாம எப்டி குதிரையா மாறுறது..? தலைவர் மட்டும் எப்பவும் ஜெயிக்கிற குதிரையா எப்டி இருக்கார்னு...? யோசிச்சுப் பாத்தா அவரோட கூர்மையான திட்டமிடல் என்னன்னு விளங்கிக்க முடியும். ஜெயிச்சு ஜெயிச்சு டயர்டாகிப் போன ஒரு மனுசனுக்கு எப்டி ஜெயிக்கிறதுன்னு யாராச்சும் சொல்லிக் கொடுக்கணுமா என்ன…? 


ரஜினி படத்தை ஓட வைக்க அரசியல் பேசுறார்னு சொல்லிட்டு தெரியுற ஓநாய்கள் கடைவாயில எல்லாம் காழ்ப்புணர்ச்சி எச்சில்தாங்க வழிஞ்சிட்டு இருக்கு….! ரஜினின்ற மனுசனே ஒரு மெகா ட்ரண்ட் அவருக்கு அனாவசியமான ஸ்டண்ட் எல்லாம் தேவையே கிடையாதுன்னு இந்த கத்துக்குட்டிப் பசங்க கிட்ட சொன்னா…ரஜினி தமிழ்நாட்டு உப்பை தின்னுதான் வளர்ந்தார்னு ஒரு குட்டிக் கதாகாலட்சேபம் பண்ணுவாங்க… ! உண்மைதான் அவர் தமிழ்நாட்டு உப்பைத் தின்னுதான் வளர்ந்தார் ஆனா அந்த உப்ப சும்மாவாடா கொடுத்தீங்க கடையெழு வள்ளல்களான்னு திருப்பிக் கேட்டா திருட்டுப்பய ராஜபக்க்ஷே மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு பல்லக் காட்டுவானுங்க…!

ரஜினி தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சார்னு இன்னொரு டாக்டரேட் கேள்வி கூட நம்மாளுங்க கிட்ட இருக்கு..! நியாயமா இந்தக் கேள்விய யார்கிட்ட கேக்கணும்ன்ற ஒரு காமன் சென்ஸ் இல்லாத கரப்பான் பூச்சிகள் எல்லாம் தன்னை முழு நேர நடிகரா வச்சிக்கிட்டு அப்பப்போ தன்னோட சமூகம் சார்ந்த கருத்துக்கள பேசிட்டு இருக்க தலைவர பாத்து கேக்க என்ன ரைட்ஸ் இருக்குன்னுதான் எனக்குப் புரியலை. கேட்டா அவர் ஒரு கட்சிக்கு சப்போர்ட் பண்ணி இருக்கார் ஒரு தேர்தல்ல, அப்புறம் நதிகள இணைக்கத் துட்டு தர்றேன்னு சொன்னார், காவிரி பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தார் அது எல்லாம் என்ன அரசியல் இல்லையா..? அது எல்லாம் போக வேற என்ன பிரச்சினைக்குப் போராடி இருக்கார்னு துருவி துருவி ரஜினிய கேள்வி கேக்குற டுபாக்கூர் பாய்ஸ் எல்லாம் அரசியல்ல முழு நேரமா இறங்கி மக்களுக்காக போராடுறேன்னு சொல்லிட்டு வாய்க்கரிசியை எடுத்து வாய்ல போட்டுக்கிட்டு போய்ட்டு இருக்க பொலிட்டீசியன்ஸ பாத்துதானே இந்தக் கேள்விகளை எல்லாம் கேக்கணும்...?


அரசியலுக்கு வர்றது பெரிய விசயம் இல்ல, அதன் ஆழம்தான் எனக்கு கொஞ்சம் கலக்கமா இருக்கு, அரசியல்ல வெல்ல யார் யார் தோளையோ மிதிச்சு நான் மேல போகணும்ன்றது எல்லாம் எனக்குத் தெரியாம இல்ல….எல்லாமே ஆண்டவனோட கையிலதான் எல்லாமே இருக்கு இன் ஷா அல்லாஹ் கடவுள் விரும்பினா அரசியலுக்கு வருவேன்னு கூட பேச ரஜினிக்கு மட்டும்தான் இந்த சுதந்திர இந்தியாவுல ரைட்ஸ் கிடையாது போல……! ரஜினி நாக்குல அரசியல் அப்டீன்ற வார்த்தை வந்துட்டாலே மக்கள் தலையில குல்லாப் போட்டு கல்லா கட்டிக்கிட்டு இருக்க ஒரு சில பேருக்கு தலை சுத்துது, வயிறு குழையுது, கிட்டத்தட்ட மெண்டல் மாதிரி ஆகி எங்க நீ வந்து பாரு அப்டீன்னு தலைவர்க்கு சவால் வேற விடுறாங்க….

இது எல்லாம் பாத்தா ச்ச்சும்மா காமெடியா இல்லை…!

தன்னை இதுவரையும் நூறு சதவீதம் ஒரு சூப்பர் நடிகரா நிலை நிறுத்தி வெற்றி பெற்றிருக்க சூப்பர் ஸ்டாரோட அரசியல் வருகை பற்றிய விமர்சனங்களை எல்லாம் அவர் அரசியலுக்கு வந்தபின் வைப்பதுதான் ஆகச் சிறந்த நாகரீகம்….!!!!

இதோ தலைவரோட லிங்கா ரிலீஸ் ஆகப் போகுது. ஒரு ரஜினி ரசிகனா என்ன என்ன ரசாயன மாற்றங்கள் உள்ளுக்குள்ள நடக்கணுமோ அது எல்லாம் எனக்கு ஆல்ரெடி ஆரம்பம் ஆயிடுச்சு…முதல் நாள், முதல் ஷோ.. தலைவர மெகா ஸ்கீரீன்ல பார்க்குற அந்தப் பரவசம்னு அதை எல்லாம் வார்த்தையில கொண்டு வர முடியாது….!!! லிங்கா ரிலீஸ் தலைவர் பிறந்த நாள் இந்த இரண்டும் கொடுத்த உந்துதல்தான் இந்தக் கட்டுரை. லிங்கா பாத்துட்டு அதை பத்தி ஒரு ரஜினி ரசிகனா என் கருத்தை பகிர்ந்துக்குவேன்…. அதுவரைக்கும் காத்திருங்கள் நண்பர்களே….!



தலைவர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்….!!!!!!




தேவா சுப்பையா...








Comments

ARAN said…
Fantastic write up Deva As usual.
Anonymous said…
Gee pinnetenga

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த