திருமணம் செய்து கொண்டோம்
எங்களுக்குப் பிள்ளைகள் பிறந்தன
ஒரு நாள் எதிர்பாராமல்
வழியில் சந்தித்தும் கொண்டோம்
அவள் கணவனுக்கு என்னை அறிமுகம்
செய்தது போலே
நானும் என் மனைவியை அவளுக்கு
அறிமுகம் செய்து வைத்தேன்...
பின் விடைபெற்றுக் கொண்ட
அந்த நாளின் மதியத்தில்
துளசி என்னிடம் தொலைபேசியில்
இன்னும்தான் உன்னை காதலிக்கிறேன் என்றாள்...
நானும்தான் காதலிக்கிறேன்
என்று சொல்லாமல் அலைபேசியை வைத்தது
என்னமோ இன்னமும் வலித்துத் தொலைக்கிறது...!
தேவா சுப்பையா..
Comments
துளசி... வாவ்... இன்னும் வாசமாய்...
ரொம்பப் பேரு இப்படித்தான் போல...