Skip to main content

கபாலி... மாற்று சினிமாவின் குரல்!



ரஜினி படத்துக்கு என்றில்லை எந்த ஒரு படத்துக்குமே விமர்சனம் என்று நான் எழுதுவதில்லை. விமர்சன அரசியல் எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. ஒருவரின் புரிதல் இன்னொருவரோடு எப்போதுமே ஒத்துப் போகாது. அதிர்ஷ்டவசாமாய் ஒத்துப்போகும் அலைவரிசைகளே இங்கே குழுக்களாய் மாறுகின்றன. என்னுடைய பார்வை, புரிதல், அனுபவம் இந்த மூன்றையும்தான் எப்போதும் திரைப்படங்கள் பற்றிய பார்வையாக நான் எழுதுவேன். கருத்துப் பகிர்வு, கருத்துத் திணிப்பு இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தில்தான் நாகரீகம் என்ற சொல் எப்போதும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும்.

கபாலி தமிழ்ப்படம்தான் என்றாலும் கதையின் களம் வேறு நிலம். முழுமையாய் கபாலியை ரசிக்க கொஞ்சமல்ல நிறையவே மலேசிய தமிழர்களின் பேச்சு வழக்கு, மலேசியாவின் வரலாறு, நிலத்துண்டாடல், தோட்டத் தொழிலார்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, போராட்டங்கள், வர்க்கப் பிரிவுகள் என்று தொடங்கி இன்று வரை அந்த மண்ணில் நடக்கும் எல்லாவிதமான சமூகக் குற்றங்கள் வரை தெரிந்திருப்பதோடு ஓரளவிற்கு அவர்கள் பயன்படுத்தும் வட்டார வழக்குச் சொற்களையும் நாம் தெரிந்திருக்க வேண்டும். இதுவெல்லாம் அதிகம் புரியாத வேறு நிலம் சார்ந்த தமிழர்களுக்கு கொஞ்சம் இந்தப் படத்தோடு ஒட்டிக் கொள்ள கால அவகாசம் தேவைப்படத்தான் செய்கிறது. படத்தோடு ஒன்ற நம்மிடம் இருப்பது ரஜினி என்னும் மந்திரம் மட்டுமே, அந்த மந்திரமும் அந்த வேலையை பொறுமையாய் திரையில் செய்து விடுகிறது.

ரஜினியின் மாஸ் ஸ்டைலைத் தொட்டுக் கொண்டு ஒரு கேங்ஸ்டர் கதையை வித்தியாசமான காமம் கடந்த ஒரு 50+ காதலை வைத்து நெய்து, மனித ஏற்றத்தாழ்வுகள் பற்றி பேச நினைத்த தன்னுடைய வேட்கைக்கு ஒரு களமாய் ஒட்டு மொத்த திரையையும் பயன்படுத்தி கொண்ட இயக்குனர் ப. ரஞ்சித் வெகு நிச்சயமாய் பாராட்டுக்குரியவர். கபாலி படம் வெளியாவதற்கு கொஞ்ச நாள் முன்புதான் நான் இயக்குனர் ரஞ்சித்தின் பேட்டிகளை பார்த்தேன். வெகு நேர்த்தியான புரிதலும், மிகவும் விசாலமான பார்வையும் கொண்டதாக அவை இருந்தன. அடிப்படையில் அவருக்குள் இருந்த அந்த சமூக ஏற்றத் தாழ்வுகளின் மீதிருந்த கோபம் அவரை நிறைய புத்தகங்களை வாசிக்க வைத்திருக்கிறது. அழுத்தி வைக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து மேலெழும்பி அதற்கு முன்பு வலுவான பொருளாதார மற்றும் மனோபலத்துடன் இருக்கும் ஒரு சமூகத்துடன் மோத எவ்வளவு வலு வேண்டும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்கவே முடியவில்லை. பொருளாதார பலத்தை அரசின் திட்டங்களும் அதனால் கிடைக்கும் சூழல்களும் மாற்றினாலும் காலங்கள் கடந்து அவர்களுக்குள் அடங்கிக் கிடக்கும் அடக்கப்பட்ட உணர்வும் தாழ்வு மனப்பான்மையும் அகல வேண்டுமெனில் நிறைய சவாலான சூழல்களை அவர்கள் எதிர்கொள்ளவும் வேண்டும். இப்படியான ஒரு சமூகச் சூழலில் திரைத்துறையில் மேலெழும்பி வந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இன்னும் வலுவாய் கால் பதிக்க காத்திருக்கும் கனவுகள்  நிறம்பிய ஒரு இளைஞர்தான் இயக்குனர் ப. ரஞ்சித்.


ஒடுக்கப்பட்ட சமூகம் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள எப்போதும் கலைகளைதான் முதல் ஆயுதமாக பாவிக்கும். கலைகளினால் ஏற்படும் மீட்சி சமூகத்தில் பெருந்தாக்கங்களை உருவாக்கி புரட்சியை ஏற்படுத்துகிறது. புரட்சி சமூகத்தை மெல்ல மெல்ல மாற்றுகிறது. தெருவில் இறங்கிப் போராடுவது ஒரு வழிமுறை என்றால் திரையில் இறங்கிப் போராடுவது வேறுவகை போரட்ட வழிமுறை என்பதனை அறிக; ப. ரஞ்சித் என்னும் கலைஞன் சூப்பர் ஸ்டார் ரஜினி என்னும் பிரம்மாண்ட கலைஞனிடம் கபாலியின் கதையினை கூறிய பின்பு அதை ரஜினி கேட்டு கொஞ்ச நஞ்சமல்ல முழுக்க முழுக்க தன்னை தன் மிகப்பெரிய சூப்பர் மாஸ் ஹீரோ இமேஜை தியாகம் செய்து விட்டு இது போன்ற படங்களில் நடிக்க காரணம்.....

ஏதோ ஒரு வகையில் இந்த சமூகத்தில் மாற்றம் வந்து விடாதா என்று எண்ணிய ஒரு இளைஞனின் புரட்சி எண்ணம் வீழ்ந்து விடக்கூடாது என்பதுதான். திரைப்படம் பிற்பாடு வணிக நோக்கத்தோடு அதிகமாய் விளம்பரபடுத்தப்பட்டது என்றாலும், இதில் அதிக வருமானம் பார்க்க எல்லா யுத்திகளையும் அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு செய்தார் என்ற போதிலும்....

பலநேரங்களில் தவறான தயாரிப்புகள் விளம்பரங்களால் முக்கியத்துவம் பெற்று சீரழிந்து போவது போல கபாலியால் ஒரு அபத்தம் நிகழாது என்ற விசயம் நமக்கெல்லாம் ஆறுதல்தான் ஏனென்றால் இங்கே விதைக்கப்பட்டிருப்பது நற்வித்து. ரஜினி அறிமுகமாகும் ஆரம்ப காட்சியிலிருந்தே  எந்த ஒரு மிகைப்படுத்துதலும் இல்லாமல்  மிக மெதுவாகவே ஆனால் கூர்மையாகவே கதை நகர்கிறது. ரஜினியை முழுதாய் அபகரித்துக் கொள்ளாமல் அவர்களது ரசிகர்களுக்கும் தீனி போடவேண்டும் என்பதற்காக அட்டகாசமான காட்சிகள் இந்தப்படத்தில் நிறையவே உண்டு என்றாலும் இது பாட்சா போன்று ஹீரோயிசத்துக்கான படமல்ல. இது ஹீரோவை மையமாய் வைத்து சொல்லும் கருத்தை ஹீரோயிசமாய் கொண்ட கதைக் களம். 

64 வயதில் என்ன ஒரு பாடி லாங்வேஜ், என்ன ஒரு சுறுசுறுப்பு எல்லாவற்றுக்கும் மேலாய் என்ன ஒரு ஸ்டைல்? நீலாம்பரியின் டயலாக்தான் நினைவுக்கு வருகிறது ஆமாம் வயதானாலும் அவரது கம்பீரமும், ஸ்டைலும்.....ஹும்கூம்....கொஞ்சம் கூட குறையவே இல்லை அவரிடம். மிகக் கவனமாய் எந்த ஒரு மிகைப்படுத்துதலும் சூப்பர் மேஜிக்கும் இல்லாமல் இயல்பாய் ரஜினி தனது பாத்திரத்தை கையாண்டிருக்கும் விதமும் அவரது நடிப்பும் சூப்பர் ஸ்டார் என்றால் என்ன? யார் என்ற கேள்விக்கு தெளிவாய் விடை சொல்லி இருக்கின்றன. மனைவியைப் பிரிந்த சோகத்தையும் மீண்டும் வெகு நாள் கழித்து தன் மனைவியை பார்க்கும் போது ஏற்படும் உணர்வையும் வெகு இயல்பாய் வெளிப்படுத்தி பின்னி பெடலெடுத்திருக்கிறார் மனிதர். 

நான் மேல வருவேண்டா, முன்னேறுவேண்டா, கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு உங்க முன்னாடி கால்மேல கால் போட்டு உட்காருவேண்டா.....பிடிக்கலேன்னா சாவுங்கடா...

நீ ஆண்ட பரம்பரை டா.........நான் ஆளப்பொறந்த பரம்பரைடா........

என்று உணர்ச்சி பீறிட சூப்பர் ஸ்டார்  பேசும் டயலாக்தானே ரஞ்சித் பரம்பரை பரம்பரையாய் அடிமைப்பட்டுக் கிடக்கும் இனத்தின் ஆதாரக்குரல், இதை திரையில் நிகழ்த்திக் காட்டுவதுதானே அதுவும் ஒரு உச்ச நட்சத்திரத்தை பேச வைப்பதுதானே உனது கனவு.....? என்று கேட்டு பாரட்டத்தான் தோன்றுகிறது நமக்கு.

கபாலியில் நடித்ததோடு சூப்பர் ஸ்டார் நின்று விடக்கூடாது. இதே போன்று ரஜினி என்றால் யார்? அவரது நடிப்பின் முழுப்பரிமாணம் என்ன என்று எடுத்து சொல்லும் நிறைய கதாபாத்திரங்களை அவர் செய்ய வேண்டும். எங்கேயோ கேட்டகுரல், புவனா ஒரு கேள்விக் குறி, முள்ளும் மலரும்.....என்று பார்த்த ஒரு ரஜினியை ஒரு ரசிகனாய் வெகு காலம் கழித்து திரையில் ரசித்த திருப்தியை எப்படி எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. வெறுமனே எதையோ எதிர்ப்பார்த்து அது இல்லை என்று இந்த அவசர கதியில் ஏதோ ஒரு கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நகைச்சுவையாய் இணையத்தில் கருத்து தெரிவிக்கும் அத்தனை பேரும் கபாலி சொல்லவரும் அரசியல் என்ன? சூப்பர் ஸ்டார் என்னும் சிங்கம் தன் பிடரி சிலிர்த்து நடித்து கர்ஜித்திருக்கும் அந்த நடிப்பின் சுவை என்ன என்பதை நிதானமாய் பார்த்தால் எல்லோருடைய ஆழ்மனதிலிருந்தும் வெளிபடும் உண்மை காபலி போன்ற படங்களை நாம் வரவேற்றுதான் ஆகவேண்டும் என்று சொல்லும். 

மேலிருந்து கீழ் பார்த்து தமிழ்த்திரைப்படங்கள் பேசிய வர்க்க அரசியலை நாம் உண்மையென்று நம்பிக் கொண்டிருந்தோம். கீழை மேலாய் மாற்றி மேலை கீழாய் ஆக்காமல் சரி சமமாய் வைத்துக் கூட பார்க்க திரணியற்ற தொடர் தமிழ் சினிமா மரபில் வரவேற்கத்தகுந்த புரட்சிகரமான தனது கருத்துக்களை மிக தைரியமாய் முன்னெடுத்த இயக்குனர் ப. ரஞ்சித் பாரட்டுக்குரியவர், இந்தக் கதைக்கருவில் தனது இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் முழுமையாய் தன்னை ஒப்புக் கொடுத்து நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினி மிகவும் போற்றுதற்குரியவர்.

இது போக படத்தின் இசை,ஒளிப்பதிவு, பாடல்கள் மற்றும் திரைப்படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுமே பாரட்டுதற்குரியவர்கள்தாம்.

கபாலியின் தீம் நெருப்பு...அந்த நெருப்பு கனலாய் படம் முழுதும் பரவி இருக்கிறது. அதை உணர்வாய் பற்ற வைத்துக் கொண்டு சமூக மாற்றத்துக்கான வித்தாய் பார்ப்பதும் அல்லது வெறும் சிகரெட்டுக்கான நெருப்பாய் பார்ப்பதும்...பார்ப்பவர்களின் மனோநிலையைப் பொறுத்த விசயம்.





-தேவா சுப்பையா...






Comments

Anonymous said…
totally different angle review.... need to think...
அருமையான விமர்சனம்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த