Skip to main content

வார்த்தைகளற்ற...வார்த்தைகள்....!
























அலுத்துதான்.. போகிறது...
வார்த்தைகளின்இரைச்சலை
நித்தம்...கேட்டு கேட்டு...
சப்தங்கள் இல்லா...
என் தனியுலகத்திற்குள்...
ஏன் அத்து மீறி.. நுழைகின்றன...?
தத்துவங்களும்..விளக்கங்களும்...

எத்தனை முறை உச்சரித்தாலும்
தவறாய்...கற்பிதங்கள் கொடுக்கும்...
வெற்று வார்த்தைகளை..
வைத்துக் கொண்டு...
நான் என்னதான் செய்வது?

இயற்கை எப்போதும்...
மெளனமாய் போதிக்கிறது...
ஒராயிரம்...விசயங்களை....!
விவரிக்கும் ஆசையில்...
நான் மட்டும்...
ஏன் சிக்கவேண்டும்...
சப்தங்களின்... நெரிசலுக்குள்!

எல்லா ஓசையும் நிறுத்தி விட்டு...
சப்தங்களை உள் நோக்கி..
திருப்பும் கணங்களில் மட்டும்...
கிடைக்கிறது...வெளியே
தொலைந்து போன... நிம்மதி!

சூட்சுமத்தை எழுத்தாய்...மற்றி...
உங்களின் கண்களுக்கு...
விருந்தாக்கிய பின்....
சூட்சுமத்தின் சாரமெல்லாம்....
கற்பூரமாய்....கரைந்து போய்...,
வெற்றுத்தாளிலிருந்து...
ஏதேதோ...எண்ணங்களை...
மாற்றிப் பூக்க வைக்கிறது....
வாசிப்பாளனின் மனதில்.....!

எப்படி பார்த்தாலும் எழுத்தாக்கும் முயற்சியும்...சொல்லிப் புரிய வைக்கும் முயற்சியும் பயனற்றது. ஓரயிரம் முறை முயன்று...ஒரு கருத்தை புரியவைக்க நினைத்தாலும் அது அவ்வளவு எளிதாய் நடந்து விடுவது இல்லை அப்படியே அது நிகழ்ந்தாலும் அது புரிந்து கொள்பவரின் பக்குவ நிலைக்கு ஏற்ப வேறு ஒரு தளத்தில் தான் விளங்கிக் கொள்ளப்படுதிறது.

சென் கதையில் சொல்வது போல ஒரு அழகான ரோஜா மலரை நான் பார்க்கிறேன்...அதை உங்களிடம் சொல்லி விளக்க்க முற்படும் போது உங்களின் கற்பனையில் ஒரு ரோஜா மலர் மலர்ந்து விடுகிறது. நீங்கள் கற்பிதம் கொண்ட ரோஜா மலருக்கும் நான் பார்த்த ரோஜ மலருக்கும் கண்டிப்பாய் எந்த ஒற்றுமையும் இல்லை..... என் உணர்தலை உங்களிடம் விளக்குவது சாத்தியமில்லை...அல்லது நீங்கள் போய் அந்த ரோஜாவை பார்த்து உணர்தால் சரியான விடயமாக இருக்கும். நீங்கல் நேரே பார்க்கும் போது உங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அது உங்களை வசிகரீக்கமலும் போகலாம்...

இதுதானே...உண்மை ...விளக்கி ஒருத்தர் புரிந்து கொண்டார் என்றால்...அது ஒன்று நடிப்பு.....அல்லது அவர் விளங்கிக்கொண்டது வேறு ஏதோ.....சரி....சரி..... நான் மேலும் மேலும் ஏதேதொ எழுதி...உங்களை குழப்ப விரும்பவில்லை..உங்களின் அறிவின் நிலைக்கேற்ப விளங்கிகொள்ளுங்கள்...இந்த பதிவில் எந்த வலியுறுத்தலும் இல்லை.....! ஒரு மெல்லிய காற்று வீசியது...போல அவ்வளவே....!


தேவா. S

Comments

///இயற்கை எப்போதும்...
மெளனமாய் போதிக்கிறது...
ஒராயிரம்...விசயங்களை....!///

;;))) arumai ...!
Dr.Rudhran said…
காதுகளை அடைத்துக் கொள்வதைவிட கண்களை மூடிக் கொள்வது சுலபம்.
வாழ்த்துகள்.
VELU.G said…
//
எத்தனை முறை உச்சரித்தாலும்
தவறாய்...கற்பிதங்கள் கொடுக்கும்...
வெற்று வார்த்தைகளை..
வைத்துக் கொண்டு...
நான் என்னதான் செய்வது?
//

super
ஒரு அழகான ரோஜா மலரை நான் பார்க்கிறேன்...அதை உங்களிடம் சொல்லி விளக்க்க முற்படும் போது உங்களின் கற்பனையில் ஒரு ரோஜா மலர் மலர்ந்து விடுகிறது. நீங்கள் கற்பிதம் கொண்ட ரோஜா மலருக்கும் நான் பார்த்த ரோஜ மலருக்கும் கண்டிப்பாய் எந்த ஒற்றுமையும் இல்லை...

இது முட்ரிலும் உண்மை
Unknown said…
சொலுங்க தல.

எவ்ளோ ஒரு நல்ல விசயத்தை சொல்லி இருக்கீங்க
Chitra said…
எல்லா ஓசையும் நிறுத்தி விட்டு...
சப்தங்களை உள் நோக்கி..
திருப்பும் கணங்களில் மட்டும்...
கிடைக்கிறது...வெளியே
தொலைந்து போன... நிம்மதி!


.... nice one.

இன்னைக்கு நான் லேட் attendance போட்டுருக்கேன். சாரி.
இயற்கை எப்போதும்...
மெளனமாய் போதிக்கிறது...
ஒராயிரம்...விசயங்களை....!


அருமை நண்பரே உண்மைதான்.
இதுதானே...உண்மை ...விளக்கி ஒருத்தர் புரிந்து கொண்டார் என்றால்...அது ஒன்று நடிப்பு.....அல்லது

அவர் விளங்கிக்கொண்டது வேறு ஏதோ


முற்றிலும் உண்மை
இந்த அழமான வரிகள் ஒளிந்து இருந்தது நான் எடுத்து வந்து விட்டேன் உங்களுக்காக
Mohamed Faaique said…
நல்லாயிருக்கு அண்ணா..
ஏன் எப்பொழுதும் விரக்தி அடைந்தது போல் அலுத்கிறீர்கள்..
dheva said…
திரட்டியில் இணைக்கப்படாமலிருந்த பழைய இடுகையை தூசு தட்டி எடுத்து எல்லோர் பார்வைக்கும் கொண்டு வந்த தம்பி செளந்தருக்கு நன்றிகள்...!
Jey said…
பங்காளி நல்லாருக்கு...:)
க ரா said…
என்னத்த சொல்ல... அருமைண்ணே... நீங்க ஒரு மார்க்கமாதான் இருக்கீங்க :)
Anonymous said…
ஏதோ ஒரு எண்ணக் கதவு திறந்துகொண்டது அண்ணா!
A Special Thanks to Soundar :)
TH said…
சூட்சுமத்தை எழுத்தாய்...மற்றி...
உங்களின் கண்களுக்கு...
விருந்தாக்கிய பின்....
சூட்சுமத்தின் சாரமெல்லாம்....
கற்பூரமாய்....கரைந்து போய்...,
வெற்றுத்தாளிலிருந்து...
ஏதேதோ...எண்ணங்களை...
மாற்றிப் பூக்க வைக்கிறது....
வாசிப்பாளனின் மனதில்.....!

Dear DEVA
NAAM PESIKKONTATHU
Anonymous said…
சூட்சுமத்தை எழுத்தாய்...மற்றி...
உங்களின் கண்களுக்கு...
விருந்தாக்கிய பின்....
சூட்சுமத்தின் சாரமெல்லாம்....
கற்பூரமாய்....கரைந்து போய்...,
வெற்றுத்தாளிலிருந்து...
ஏதேதோ...எண்ணங்களை...
மாற்றிப் பூக்க வைக்கிறது....
வாசிப்பாளனின் மனதில்.....!

DEAR DEVA
SUPER.........

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த