Skip to main content

எரிமலைகள் வெடிக்கட்டும்.....!




















ஈழம் நமது சிந்தனையில் இருந்து நகர்ந்து போய் விட்டதா தமிழினச் சகோதரர்களே....! தனி நாட்டினை பெற்றெடுப்போம் என்ற சிந்தனையை விட....அந்த மண்ணில் தமிழினத்துக்கு நடந்த அநீதி எல்லாம்...உலகக்தமிழர்களின் உள்ளத்தை விட்டு பெயர்ந்து போய் விட்டதா?

தமிழ் நாட்டில் இருக்கும் எம் மக்கள் தினசரி செய்த்தித்தாள் செய்திகளின் பின் செல்லும் ஆட்டு மந்தையாய் மாறி விட்டனரா? எம்மக்களின் இன உணர்வுகளுக்கெல்லாம் அரசியல் சாயங்கள் பூசி ஓட்டுக்காய் கூவி விற்கும் கைப்பாவை ஆகி விட்டனரா? கொதித்தெழுந்திருக்க வேண்டிய ஒரு சமுதாயம்...இன்று எதுவுமே நடவாதது போல...சாமியார்களின் செய்தியிலும்...ஆயிரம் ஊழலோடு நடந்தேறிய விளையாட்டுப் போட்டிகளிலும்... கவனங்கள் திரும்பி விட்ட காரணத்தால்... நடந்து விட்ட அநீதி அழிந்து விடுமா?

எழுத்துலக நண்பர்களும் மற்ற கட்சிசார் ஊடகங்கள் போல வசதியாய் எல்லாவற்றையும் மறந்து விட்டு....ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நமது எழுத்தில் இருந்து வெளிவரும் அக்னி உலகைச் சூழ வேண்டாமா?. நம் தாய் தமிழின் வளத்தில் வார்தைகள் வந்து தெறிக்க வேண்டாமா? ஒவ்வொரு தமிழனும் தன் சக தமிழனுக்கு அநீதிகளை எடுத்துக் கூற வேண்டாமா?

ஒரு இயக்கம் ஒரு தலைவன் இத்தோடு முடிந்துவிடுவதில்லை ஒரு இனத்தின் போராட்டமும் லட்சியமும்....! ஈழத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணம் தவறென்று கூறுபவர்கள் தங்களின் மனசாட்சியிடம் கேட்கட்டும் அதில் என்ன தவறென்று....? நம்மில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனோ நிலையில் இருந்தால் அவர்களுக்கு மனித உரிமைகள் என்றால் என்ன என்று படிக்கச்சொல்வேன் ...ஏன் தெரியுமா? மனித உரிமைகள் என்றால் என்ன என்று தெரிந்தால்தானே... அது மறுக்கப்படும் போது அல்லது கிடைக்காத போது என்ன மாதிரியான மன நிலைக்கு மனிதன் தள்ளப்படுவான் என்று உணர முடியும்.

தமிழ் நாட்டில் கட்சி நடத்தும் தலைவர்களிடமும்..அதை பின்பற்றும் தொண்டனிடமும் கேட்டுப்பாருங்கள்...மனித உரிமைகள் என்றால் என்ன? உங்களின் கட்சியின் கொள்கை என்ன? எந்த சித்தாந்ததையப்பா நீங்கள் பின் பற்றுகிறீர்கள் என்று...சரியாக எத்தனை பேர் பதில் சொல்வார்கள்? இவர்கள் தான் முட்டாள் தனமாக ஏதோ ஒரு கருத்தை ஆதரித்தோ அல்லது மறுத்தோ பேசி வருகிறார்கள்.

ஈழம் பற்றி பேசுபவனெல்லாம் இவர்களுக்கு புலிகள்..அப்படி என்றால் ஒட்டு மொத்த தமிழினமும் புலிகளா? என்ன பைத்தியக்காரத்தனம் இது..உங்களின் பழிவாங்கல்களுக்கு ஏன் எல்லா தமிழர்களையும் ஒரு போராட்ட இயக்கத்துக்குள் அடைத்துப்பார்க்கிறீர்கள்? ஈழம் வேண்டும் என்பது புதிதாய் ஏதோ தேசத்தை உருவாக்க நினைப்பதாய் எனக்குப்படுகிறது...அது தவறு... இழந்த நாட்டை திரும்ப பெற வேண்டும் என்று தேசத்தை இழந்தவன் நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?

இனி எந்தத் தமிழனும் கனவோடு இருக்க வேண்டாம் ...கனலோடு இருங்கள்....! நமது இனம் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது.... எமது சகோதரிகள் கற்பு சூறை போயிருக்கிறது...எமது இனத்து குழந்தைகள் கருவிலேயே சமாதியாக்கப்படு இருக்கிறார்கள்...வாழ்க்கையை இழந்து இன்று...கப்பல்களில் நடுக்கடலிலும்...இன்ன பிற தேசங்களிலும் கையேந்தி ஆறுதல் தேடி நிற்கிறார்கள்...!

உலகிலுள்ள் இனத்திற்கு எல்லாம் தொன்மையான இனம் இன்று..ஒவ்வொரு நாட்டிலும் துரத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.....தாய்த் தமிழன் என்ன செய்கிறான்.....டி.வியில் நித்யானந்தாவின் லீலைகளைப் பார்த்து விட்டு அது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்ருக்கிறான்....! ஆள்பவர்கள் அடுத்த தேர்தலில் இலவசமாய் எதைக் கொடுத்து மடக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.....!

கொதிக்கவில்லையா..உங்களின் இரத்தம்......?


(எரிமலை இன்னும் வெடிக்கும்)


தேவா. S










Comments

Chitra said…
///இனி எந்தத் தமிழனும் கனவோடு இருக்க வேண்டாம் ...கனலோடு இருங்கள்....! ////


/////கொதிக்கவில்லையா..உங்களின் இரத்தம்......?////

////ஆள்பவர்கள் அடுத்த தேர்தலில் இலவசமாய் எதைக் கொடுத்து மடக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.....!////


.......அந்த அந்த நேரத்துக்கு உணர்ச்சிகரமாக பேசினாலே போதும் என்ற மனநிலை தான், இன்றைய சமுதாயம். வேதனையான உண்மை.
Unknown said…
//உலகிலுள்ள் இனத்திற்கு எல்லாம் தொன்மையான இனம் இன்று..ஒவ்வொரு நாட்டிலும் துரத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.....தாய்த் தமிழன் என்ன செய்கிறான்.....டி.வியில் நித்யானந்தாவின் லீலைகளைப் பார்த்து விட்டு அது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்ருக்கிறான்....! ஆள்பவர்கள் அடுத்த தேர்தலில் இலவசமாய் எதைக் கொடுத்து மடக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.....!///

mmmmmmmmmmmm.....................
இலவசங்களை கொடுத்து மக்களை மடையர்களாகிவிட்டனர். பணத்துக்கும் பதவிக்கும் விருதுக்கும் தன்மானத்தை விட்டு கொடுத்து எழுதுகிறவர்களும், பத்திரிக்கை நடத்துபவர்களும் ஒரு நாள் தமிழீழம் மலர்ந்தது இன்று என எழுதுவைப்போம். அதுவரை தன்மானமுள்ள தமிழர்கள் அனைவரும் போராடாடவேண்டும். எவராலும் நம் பேனாவின் எழுதுக்களை விலைக்கு வாங்க முடியாது. ஒவ்வொரு தமிழனும் எரிமலையாய் வெடிக்க வேண்டும். மலரட்டும் தமிழீழம்..
Kumar said…
excellent thought..fully agree with you
//டி.வியில் நித்யானந்தாவின் லீலைகளைப் பார்த்து விட்டு அது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்ருக்கிறான்....! ஆள்பவர்கள் அடுத்த தேர்தலில் இலவசமாய் எதைக் கொடுத்து மடக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.....! //

மறுக்க முடியாத உண்மை, தேவா.. தனக்கென்ன என்று இருப்பவர் தான் அதிகம் இந்த பூவுலகில்..!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...