Skip to main content

எரிமலைகள் வெடிக்கட்டும்.....!




















ஈழம் நமது சிந்தனையில் இருந்து நகர்ந்து போய் விட்டதா தமிழினச் சகோதரர்களே....! தனி நாட்டினை பெற்றெடுப்போம் என்ற சிந்தனையை விட....அந்த மண்ணில் தமிழினத்துக்கு நடந்த அநீதி எல்லாம்...உலகக்தமிழர்களின் உள்ளத்தை விட்டு பெயர்ந்து போய் விட்டதா?

தமிழ் நாட்டில் இருக்கும் எம் மக்கள் தினசரி செய்த்தித்தாள் செய்திகளின் பின் செல்லும் ஆட்டு மந்தையாய் மாறி விட்டனரா? எம்மக்களின் இன உணர்வுகளுக்கெல்லாம் அரசியல் சாயங்கள் பூசி ஓட்டுக்காய் கூவி விற்கும் கைப்பாவை ஆகி விட்டனரா? கொதித்தெழுந்திருக்க வேண்டிய ஒரு சமுதாயம்...இன்று எதுவுமே நடவாதது போல...சாமியார்களின் செய்தியிலும்...ஆயிரம் ஊழலோடு நடந்தேறிய விளையாட்டுப் போட்டிகளிலும்... கவனங்கள் திரும்பி விட்ட காரணத்தால்... நடந்து விட்ட அநீதி அழிந்து விடுமா?

எழுத்துலக நண்பர்களும் மற்ற கட்சிசார் ஊடகங்கள் போல வசதியாய் எல்லாவற்றையும் மறந்து விட்டு....ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நமது எழுத்தில் இருந்து வெளிவரும் அக்னி உலகைச் சூழ வேண்டாமா?. நம் தாய் தமிழின் வளத்தில் வார்தைகள் வந்து தெறிக்க வேண்டாமா? ஒவ்வொரு தமிழனும் தன் சக தமிழனுக்கு அநீதிகளை எடுத்துக் கூற வேண்டாமா?

ஒரு இயக்கம் ஒரு தலைவன் இத்தோடு முடிந்துவிடுவதில்லை ஒரு இனத்தின் போராட்டமும் லட்சியமும்....! ஈழத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணம் தவறென்று கூறுபவர்கள் தங்களின் மனசாட்சியிடம் கேட்கட்டும் அதில் என்ன தவறென்று....? நம்மில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனோ நிலையில் இருந்தால் அவர்களுக்கு மனித உரிமைகள் என்றால் என்ன என்று படிக்கச்சொல்வேன் ...ஏன் தெரியுமா? மனித உரிமைகள் என்றால் என்ன என்று தெரிந்தால்தானே... அது மறுக்கப்படும் போது அல்லது கிடைக்காத போது என்ன மாதிரியான மன நிலைக்கு மனிதன் தள்ளப்படுவான் என்று உணர முடியும்.

தமிழ் நாட்டில் கட்சி நடத்தும் தலைவர்களிடமும்..அதை பின்பற்றும் தொண்டனிடமும் கேட்டுப்பாருங்கள்...மனித உரிமைகள் என்றால் என்ன? உங்களின் கட்சியின் கொள்கை என்ன? எந்த சித்தாந்ததையப்பா நீங்கள் பின் பற்றுகிறீர்கள் என்று...சரியாக எத்தனை பேர் பதில் சொல்வார்கள்? இவர்கள் தான் முட்டாள் தனமாக ஏதோ ஒரு கருத்தை ஆதரித்தோ அல்லது மறுத்தோ பேசி வருகிறார்கள்.

ஈழம் பற்றி பேசுபவனெல்லாம் இவர்களுக்கு புலிகள்..அப்படி என்றால் ஒட்டு மொத்த தமிழினமும் புலிகளா? என்ன பைத்தியக்காரத்தனம் இது..உங்களின் பழிவாங்கல்களுக்கு ஏன் எல்லா தமிழர்களையும் ஒரு போராட்ட இயக்கத்துக்குள் அடைத்துப்பார்க்கிறீர்கள்? ஈழம் வேண்டும் என்பது புதிதாய் ஏதோ தேசத்தை உருவாக்க நினைப்பதாய் எனக்குப்படுகிறது...அது தவறு... இழந்த நாட்டை திரும்ப பெற வேண்டும் என்று தேசத்தை இழந்தவன் நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?

இனி எந்தத் தமிழனும் கனவோடு இருக்க வேண்டாம் ...கனலோடு இருங்கள்....! நமது இனம் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது.... எமது சகோதரிகள் கற்பு சூறை போயிருக்கிறது...எமது இனத்து குழந்தைகள் கருவிலேயே சமாதியாக்கப்படு இருக்கிறார்கள்...வாழ்க்கையை இழந்து இன்று...கப்பல்களில் நடுக்கடலிலும்...இன்ன பிற தேசங்களிலும் கையேந்தி ஆறுதல் தேடி நிற்கிறார்கள்...!

உலகிலுள்ள் இனத்திற்கு எல்லாம் தொன்மையான இனம் இன்று..ஒவ்வொரு நாட்டிலும் துரத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.....தாய்த் தமிழன் என்ன செய்கிறான்.....டி.வியில் நித்யானந்தாவின் லீலைகளைப் பார்த்து விட்டு அது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்ருக்கிறான்....! ஆள்பவர்கள் அடுத்த தேர்தலில் இலவசமாய் எதைக் கொடுத்து மடக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.....!

கொதிக்கவில்லையா..உங்களின் இரத்தம்......?


(எரிமலை இன்னும் வெடிக்கும்)


தேவா. S










Comments

Chitra said…
///இனி எந்தத் தமிழனும் கனவோடு இருக்க வேண்டாம் ...கனலோடு இருங்கள்....! ////


/////கொதிக்கவில்லையா..உங்களின் இரத்தம்......?////

////ஆள்பவர்கள் அடுத்த தேர்தலில் இலவசமாய் எதைக் கொடுத்து மடக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.....!////


.......அந்த அந்த நேரத்துக்கு உணர்ச்சிகரமாக பேசினாலே போதும் என்ற மனநிலை தான், இன்றைய சமுதாயம். வேதனையான உண்மை.
Unknown said…
//உலகிலுள்ள் இனத்திற்கு எல்லாம் தொன்மையான இனம் இன்று..ஒவ்வொரு நாட்டிலும் துரத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.....தாய்த் தமிழன் என்ன செய்கிறான்.....டி.வியில் நித்யானந்தாவின் லீலைகளைப் பார்த்து விட்டு அது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்ருக்கிறான்....! ஆள்பவர்கள் அடுத்த தேர்தலில் இலவசமாய் எதைக் கொடுத்து மடக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.....!///

mmmmmmmmmmmm.....................
இலவசங்களை கொடுத்து மக்களை மடையர்களாகிவிட்டனர். பணத்துக்கும் பதவிக்கும் விருதுக்கும் தன்மானத்தை விட்டு கொடுத்து எழுதுகிறவர்களும், பத்திரிக்கை நடத்துபவர்களும் ஒரு நாள் தமிழீழம் மலர்ந்தது இன்று என எழுதுவைப்போம். அதுவரை தன்மானமுள்ள தமிழர்கள் அனைவரும் போராடாடவேண்டும். எவராலும் நம் பேனாவின் எழுதுக்களை விலைக்கு வாங்க முடியாது. ஒவ்வொரு தமிழனும் எரிமலையாய் வெடிக்க வேண்டும். மலரட்டும் தமிழீழம்..
Kumar said…
excellent thought..fully agree with you
//டி.வியில் நித்யானந்தாவின் லீலைகளைப் பார்த்து விட்டு அது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்ருக்கிறான்....! ஆள்பவர்கள் அடுத்த தேர்தலில் இலவசமாய் எதைக் கொடுத்து மடக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.....! //

மறுக்க முடியாத உண்மை, தேவா.. தனக்கென்ன என்று இருப்பவர் தான் அதிகம் இந்த பூவுலகில்..!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த