
ஏதோ... சொந்த கதையை நான் சொல்வதற்காக இந்த பதிவை தொடராக இடவில்லை... அந்த அளவுக்கு பிரபலமானவனுமல்ல...அதானால் மிகைப்பட்டவர்களுக்கு அதீத ஆர்வம் எடுபட வாய்ப்பும் இல்லை....மிக முக்கியமான காரணம் என்னவென்றால்.....இது சமகாலத்தில் நடக்கும் பிரச்சினை அல்ல.. மேலும் முழுக்க முழுக்க....வாழ்வியலும், வாழ்வில் மிகைப்பட்டவர்கள் நினைக்கவே மறுக்கும் ஒரு நிகழ்வு பற்றிய செய்தி....சரி... நாம் மேற்கொண்டு நகர்வோம்.....
இதுவரை..
பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html
பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html
இனி....
இரவு முழுதும் தூங்கமுடியாமல் ஒராயிரம் கேள்விகள் ஏவுகணையாய் என் மனதை துளைத்தது...இறக்கும் வரை கனவுகள்...ஆசைகள்.....பேச்சுக்கள்....சண்டைகள், காதல், காமம்...பதவி, அந்தஸ்து, பணம்...என்று நான் ... நான் .. நான் என்று வாழும் மனிதர்கள் சட்டென்று ஒரு நாள் போய் சேர்ந்த பின்னால்....இவர்களின் தேடல் எல்லாம் என்னவாகும்....?சடலமாய் ஒரு மனிதரின் உடலை நான் பார்த்தேன்... அந்த மனிதர் என்னிடம் பேசி சிரித்து....எதிர்கால திட்டங்களை கூறி... நன்றாக உடுத்தி...உண்டு..வாழ்ந்தவர்...! இன்று அந்த உடல் இருக்கிறது...மீதி எல்லாம் எங்கே...எங்கே....எங்கே? இது ஒரு பக்கம் என்றால்....
உயிரோடு இருந்த போது அந்த மனிதர் பிரச்சினைகளோடு வாழ்ந்த போது வாயளவில் ஆறுதல் கூட வக்கில்லாத...மானுட கூட்டம்...எங்கே தன்னிடம் ஏதாவது கேட்டு விடுவானோ என்று ஓடி ஒளிந்த மனிதர்கள்...இன்று குய்யோ முறையோ என்று அழுது கொண்டு....ஏன் உயிரோடு இருந்த போது ஏன் இந்த பச்சாதாபம் உஙகளிடம் இல்லை?
இந்த இடத்தில் ஒரு முக்கிய மான கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்....உங்கள் சுற்றங்கள் அல்லது நட்பு வட்டாராத்தில் ஒருவருக்கு பிரச்சினை என்றால்....ஆறுதலாய் அவர் கரம் பற்றி நான் உன் கூட இருக்கிறேன் என்று சொல்லுங்கள்..... நீங்கள் பொருளாதர உதவி செய்வது எல்லாம் அப்புறம்... ! உங்களின் நம்பிக்கை... உங்களின் ஆதரவு..... நம்மோடு ஒருவர் இருக்கிறார் என்ற உத்வேகம்...அவரை மீளவைக்கும். ஆனால் அதை செய்யக்கூட திரணி இல்லாத...மனிதர்கள் நமது சமுதாயத்தில் மிகைப்பட்டு போனது தான்.... ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை!
....இரவு நகர்ந்து செல்ல....மெல்ல மெல்ல சென்னை சோம்பல் முறித்து எழுந்தது..... அதிகாலை சென்னையில் சேவலின் கூவலில்லா குறையை...ஆட்டோ சைரன்கள் போக்கிவிடும். நேரம் நகரத்துவங்கி உச்சியையும் தாண்டிவிட்டது.....12 மணிக்கு சொன்னார்கள்....பரிசோதனை செய்கிறார்கள் என்று.....1:30க்கு சொன்னார்கள் முடிந்து விட்டது என்று....2:30 மணிக்கு வெள்ளை பொட்டலமாய்....மாமவின் உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவுகள் எல்லாம் காரிலும்...ஆட்டோவிலும் வீடு நோக்கி ( நந்தனம் சிக்னல் அருகே....) விரைய... என்னோடு சேர்த்து ஒரு 10 பேர் அங்கே நின்றோம்...! அமரர் ஊர்தியி... மாமாவின் உடல் ஏற்றப்படது....அன்றுதான் அமரர் ஊர்தியின் உள் அமைப்பை பார்த்தேன்..ஒரு பக்கம் மட்டும் நீளவாக்கில் இருக்கை....இருந்தது... மீதி இருந்த ஊர்தியின் தரைப்பகுதியில்.. ..உடல் வைக்கப்படது. 10 பேரில் 6 பேர் ஆட்டோ பிடித்து சென்று விட....
நான் அமரர் ஊர்தியினுள் ஏற எத்தனிக்க.....என் தந்தை ஒரு நிமிடம் என் தோள் தொட்டு மெளனமாய் எனைத்தடுக்க... நானு அதை தடுத்து ஏறியதை பார்த்து...அப்பாவும்.....சித்தப்பாவும் என் கூட ஏறி அமர்ந்தார்கள்....அமரர் ஊர்தி மெல்ல நகர ஆரம்பித்தது....பரபரப்பான சென்னை நகரின் சாலைகள் வழியே.......!
தேவா. S
(தொடரும்.....)
இதுவரை..
பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html
பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html
இனி....
இரவு முழுதும் தூங்கமுடியாமல் ஒராயிரம் கேள்விகள் ஏவுகணையாய் என் மனதை துளைத்தது...இறக்கும் வரை கனவுகள்...ஆசைகள்.....பேச்சுக்கள்....சண்டைகள், காதல், காமம்...பதவி, அந்தஸ்து, பணம்...என்று நான் ... நான் .. நான் என்று வாழும் மனிதர்கள் சட்டென்று ஒரு நாள் போய் சேர்ந்த பின்னால்....இவர்களின் தேடல் எல்லாம் என்னவாகும்....?சடலமாய் ஒரு மனிதரின் உடலை நான் பார்த்தேன்... அந்த மனிதர் என்னிடம் பேசி சிரித்து....எதிர்கால திட்டங்களை கூறி... நன்றாக உடுத்தி...உண்டு..வாழ்ந்தவர்...! இன்று அந்த உடல் இருக்கிறது...மீதி எல்லாம் எங்கே...எங்கே....எங்கே? இது ஒரு பக்கம் என்றால்....
உயிரோடு இருந்த போது அந்த மனிதர் பிரச்சினைகளோடு வாழ்ந்த போது வாயளவில் ஆறுதல் கூட வக்கில்லாத...மானுட கூட்டம்...எங்கே தன்னிடம் ஏதாவது கேட்டு விடுவானோ என்று ஓடி ஒளிந்த மனிதர்கள்...இன்று குய்யோ முறையோ என்று அழுது கொண்டு....ஏன் உயிரோடு இருந்த போது ஏன் இந்த பச்சாதாபம் உஙகளிடம் இல்லை?
இந்த இடத்தில் ஒரு முக்கிய மான கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்....உங்கள் சுற்றங்கள் அல்லது நட்பு வட்டாராத்தில் ஒருவருக்கு பிரச்சினை என்றால்....ஆறுதலாய் அவர் கரம் பற்றி நான் உன் கூட இருக்கிறேன் என்று சொல்லுங்கள்..... நீங்கள் பொருளாதர உதவி செய்வது எல்லாம் அப்புறம்... ! உங்களின் நம்பிக்கை... உங்களின் ஆதரவு..... நம்மோடு ஒருவர் இருக்கிறார் என்ற உத்வேகம்...அவரை மீளவைக்கும். ஆனால் அதை செய்யக்கூட திரணி இல்லாத...மனிதர்கள் நமது சமுதாயத்தில் மிகைப்பட்டு போனது தான்.... ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை!
....இரவு நகர்ந்து செல்ல....மெல்ல மெல்ல சென்னை சோம்பல் முறித்து எழுந்தது..... அதிகாலை சென்னையில் சேவலின் கூவலில்லா குறையை...ஆட்டோ சைரன்கள் போக்கிவிடும். நேரம் நகரத்துவங்கி உச்சியையும் தாண்டிவிட்டது.....12 மணிக்கு சொன்னார்கள்....பரிசோதனை செய்கிறார்கள் என்று.....1:30க்கு சொன்னார்கள் முடிந்து விட்டது என்று....2:30 மணிக்கு வெள்ளை பொட்டலமாய்....மாமவின் உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவுகள் எல்லாம் காரிலும்...ஆட்டோவிலும் வீடு நோக்கி ( நந்தனம் சிக்னல் அருகே....) விரைய... என்னோடு சேர்த்து ஒரு 10 பேர் அங்கே நின்றோம்...! அமரர் ஊர்தியி... மாமாவின் உடல் ஏற்றப்படது....அன்றுதான் அமரர் ஊர்தியின் உள் அமைப்பை பார்த்தேன்..ஒரு பக்கம் மட்டும் நீளவாக்கில் இருக்கை....இருந்தது... மீதி இருந்த ஊர்தியின் தரைப்பகுதியில்.. ..உடல் வைக்கப்படது. 10 பேரில் 6 பேர் ஆட்டோ பிடித்து சென்று விட....
நான் அமரர் ஊர்தியினுள் ஏற எத்தனிக்க.....என் தந்தை ஒரு நிமிடம் என் தோள் தொட்டு மெளனமாய் எனைத்தடுக்க... நானு அதை தடுத்து ஏறியதை பார்த்து...அப்பாவும்.....சித்தப்பாவும் என் கூட ஏறி அமர்ந்தார்கள்....அமரர் ஊர்தி மெல்ல நகர ஆரம்பித்தது....பரபரப்பான சென்னை நகரின் சாலைகள் வழியே.......!
தேவா. S
(தொடரும்.....)
Comments
....... வாழ்வே மாயம் என்ற தலைப்புக் கேற்ற கருத்துக்கள். எல்லோரும் இப்படி புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டால், கவலை ஏது? பின்னணி பாட்டும் பொருத்தம்.
ரொம்ப சரியான... எல்லாரும் கட்டாயமா செய்ய வேண்டிய விஷயம்..
சில சமயங்கள்ல.. ஆறுதலா சொல்ற ஒரு வார்த்தை எவ்வளவோ.. உதவியா இருக்கும்..
எழுதிய விதம் பிடித்துள்ளது..