Skip to main content

எச்சில் பொழுதுகள்...!
















எச்சில் பொழுதுகளாய்...
விடிகிறது...எமது
இலவச வாழ்க்கை!
வாக்களிக்கும்...
பொழுதுகளிலாவது..
மூன்று வேளை
உண்ண..எண்ணி..
கை நீட்டச்...சொல்கிறது மனம்!

கும்பிட்டு...கும்பிட்டு...
அழிந்து போனது..
எமது ரேகைகள்.....
'வாழ்க' விற்கும்...
'ஒழிக' விற்கும்...
இடையில்...ஒளிந்து
விளையாடிகொண்டிருக்கிறது...
எமது வாழ்க்கை!

கல்விக்காக...செல்லாமல்..
உணவிற்காக
பள்ளி செல்லும்...
எமது குழந்தைகள்!
அடுப்பெரிக்க...விறகே.. இல்லாத...
வீடுகளில் எல்லாம்...
இலவச அரிசி...
என்ன புரட்சி...செய்து விடமுடியும்!

கருப்பு வெள்ளை...
வாழ்க்கையின்
பிரச்சினைகளை
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
எப்படி தீர்க்கும்?
கறை வேஷ்டிகளால்....
கரை தட்டி...நிற்கிறது...
எம் வாழ்க்கை...!
எங்கே இருக்கிறாய்? மகாத்மா....
மீண்டும் வா...
தொடங்கி....வை...
இரண்டாவது சுதந்திர போரை!


எம்மக்கள் பிரச்சினைகள் எப்போதுமே வீரியம் கொண்டு வெளி வந்ததே இல்லை! கோடை ஆரம்பம் ஆகி விட்டது....மின்சாரம் இல்லாமல் எத்தனை வீடுகளில் கைக்குழந்தைகளும், பெண்களும் ஆண்களும் சிரமத்திற்கு ஆளாகிப் போயிருக்கிறார்கள்! வெயிலின் உச்சத்தில் இருக்கும் வேலூர் போன்ற நகரங்களில் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் மின்சாரத்தடை இருக்கிறது என்று அம்மக்களிடம் கேட்டுப் பாருங்கள்.

நிரந்தரமாய் எம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல ஏன் அரசாங்கம் முன் வருவதில்லை. எல்லா வீடுகளிலும் தொலைக் காட்சிப் பெட்டி கொடுத்தாயிற்று என்று சொல்கிறீர்களா...? அடிப்படை வசதிகளான உண்ண உணவு ... உடுக்க உடை...இருக்க இடம் இதிலேயே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது இலவச தொலைக்காட்சி திட்டங்கள் என்ன பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிடப் போகிறது... BBC யையும் CNNனையுமா பார்க்கப் போகிறார்கள் மக்கள்......மானட மயிலாடவும்...சாமியார்களின்....வீடியோக்களையும் பார்த்து இன்னும் சீரழியப் போகிறார்கள்.

தயவுசெய்து இலவசங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டு.... பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை கொடுங்கள். வேலை இல்லை என்று சொல்வதை விட... வேலை வாய்ப்பினை உருவாக்கலாமே..! அரசு அமைப்புகள் எல்லாம் காலை 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு முடிந்து விடுகின்றன..... இதை மாற்றி...சிப்ட் முறையில் இயக்கலாமே? ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களையும்....வருமான வரித்துறையும்.. இன்ன பிற நிறுவனங்களையும் பகல் மற்றும் இரவு நேர சிப்ட் ஆக்கினால்.. வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும் தேங்கி நிற்கும் வேலைகளும் விரைந்து நடக்குமே? நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளே...எத்தனையோ லட்சம் என்கிறார்களே...இரவு பகலாய் நீதிமன்றங்களை இயங்க விட்டால் எத்தனை வழக்கறிஞர்கள் வேலை பெறுவார்கள் எத்தனை வழக்குகள் தீரும்? கணக்கிட்டுப் பாருங்கள்....

காவலர்கள் எப்படி பணி செய்கிறார்களோ அதே முறையில் அரசு இயந்திரம் தனது எல்லா பணிகளையும் முடுக்கிவிட்டல் உற்பத்தி திறனும் கூடும் வேலை வாய்ப்பும் அதிகரிக்கு....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா....ஏதோ என் அறிவுக்கு எட்டியதை ஒரு ஆதங்கத்தில் சொல்லி விட்டேன் ...இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது... எப்படி செயல் படுத்தலாம் என்று சிந்தித்துப் பாருங்கள்.. எம் மக்களே!


இலவசமாய் ஏதாவது அரசாங்கம் கொடுக்கிறது என்றால்.. உங்களுக்குத் தெரியாமலேயே வேறு வகையில் உங்கள் குரல்வளை கடி படப் போகிறது என்று அர்த்தம்.....பொருளாதாய இந்த உலகில் எதுவுமே இலவசம் இல்லை நண்பர்களே.....வேறு வகையில் நாம் தான் அதை ஈடு செய்யவேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம்!

இலவசங்களை புறக்கணிப்போம்! வாழ்வின் அடிப்படி உரிமைகளை பெறுவோம்!


தேவா. S

Comments

//கல்விக்காக...செல்லாமல்..
உணவிற்காக
பள்ளி செல்லும்...
எமது குழந்தைகள்!
அடுப்பெரிக்க...விறகே.. இல்லாத...
வீடுகளில் எல்லாம்...
இலவச அரிசி...
என்ன புரட்சி...செய்து விடமுடியும்!//
good thought.
Chitra said…
///கருப்பு வெள்ளை...
வாழ்க்கையின்
பிரச்சினைகளை
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
எப்படி தீர்க்கும்?////


..... good question. It is a sad situation. :-(
//என்ன புரட்சி...செய்து விடமுடியும்!//

நம்மாள பலகாரம் கூட செய்ய முடியறதில்லீங்க... அதக்கூட ரெடிமேடா வாங்குறோம்
lcnathan said…
INGKE AALUKKU ORU BOTTLE VISHAM INAAM YENTRAAL ''ANNE!!NAMMALAI MARANTHDAATHEENGKA !RENDU BOTTLE YENAKKU VENUMNEYY !! YENDRU ILVASA PITCHAIKKU NAMMALAI THAYAAR PANNI VITTATHU YAAR??? VOTTU PORUKKIKAL THAANE??!!!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த