Skip to main content

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா....













இது ஒண்ணும் சொந்தக் கதை சோகக் கதை இல்லங்க முடிக்கிறதுக்கு முன்னால கண்டிப்பா பஞ்ச் பண்ற மாதிரி மேட்டர் இருக்குன்னு..உறுதியா சொல்லிக்கிறேன்.... தைரியமா...மேலே படிங்க....!



எந்த வயசுல இருந்து நான் ரஜினி ரசிகன்னு எனக்கு தெரியல இப்போ கூட நினைச்சு பாக்கும் போது சரியா ஞாபகம் இல்ல.....யாராவது விருந்தாளி வரும் சமயதுல..அம்மாவும் சரி அப்பாவும் சரி...ரஜினி மாதிரி...சிரிப்பான்னு சொல்லுவாங்க... நானும் இடுப்புல ஒரு கைய வச்சுகிட்டு ஹா...ஹா.......ஹா...ன்னு விபரம் தெரியாம சிரிச்சு வைப்பேன்.... இடுப்புல கைய வச்சுக்கிறதும்...தலை முடிய கோதி விட்டுக்கிறதும்....என்னைய கேக்காமலேயே...எனக்கு வந்துடுச்சு.....


ஏதாவது ரஜினி படம் வந்துச்சுன்னா ரஜினி பேண்ட் போட்டு நடிக்கிறாரா..இல்லை...வேஷ்டி கட்டி நடிக்கிறான்னு...யாரவது பெரியவங்ககிட்ட....இல்ல சினிமா போஸ்டர்னு என்னோட முதல் ஆர்வம் அதில்தான் இருக்கும்....ஏன் தெரியுமா? வேஷ்டி கட்டி நடிச்ச....சண்டை அவ்வளவா இருக்காது அப்படீன்றது...அப்போ என்னோட எண்ணம்....அதனாலதான் அப்போ வந்த முரட்டுக்காளை எல்லாம் எனக்குப் பிடிக்காது....பாயும் புலி, தனிக்காட்டு ராஜா, துடிக்கும் கரங்கள்ன்னு ரஜினியோட சூப்பர் பைட் படமெல்லாம்..என் கனவுல எல்லாம் வரும்.....

நானும் பாபுவும்...(என்னோட....பக்கத்து வீட்டு ஸ்னேகிதன்) ரஜினி மாதிரியே...தலை சீவுறது....சட்டை பட்ட்டன் எல்லாம் தொறந்து விட்டுக்கிறதுன்னு சொல்லிட்டு ஒரு பெரிய போட்டியே நடக்கும் ...எனக்கும் 7 வயசு பாபுவிற்கு....8 வயசு....! ரஜினி படம் சேர்க்குறதுல எங்க ரெண்டு பேருக்கும் பயங்கர போட்டியே நடக்கும்....எந்த புக்குல ரஜினி படம் இருந்தாலும்....கிழித்து.....உடனே என்னோட கலெக்க்ஷன்ல வச்சுடுவேன்....! தெருவுல....போகும் போது எல்லாம் குப்பையை எல்லாம் கிளறிக்கிட்டே போவேன்.....ஏதாவது ரஜினி படத்தை பார்த்தல்....ரெண்டு பேரும் புலிப் பாய்ச்சல் பாய்ஞ்சு.....எடுப்போம்.....! என் மனசுல..... நான் ரஜினி ரசிகன் இல்ல.... நான் தான் ரஜினியே....பாபுவும் அப்படித்தான்.....!

பொங்கல் பண்டிகை வருதுன்னு வச்சுக்கங்க....எங்க தெருவுல....இருக்கிற எல்லா வீட்டுக்கும் போய் கெஞ்சி கெஞ்சி....சொல்லிட்டு வருவேன்....அண்ணா அண்ணா என்க்கு ரஜினி படம் போட்ட அட்டி அனுப்புங்கண்ணா.....அக்கா...அக்கா...ப்ளீஸ்க்கா மறந்திடாதீங்கன்னு சொல்லிட்டு வருவேன்.....போஸ்ட்மேன் வந்து குடுக்கும் போது ரஜினி படமா எனக்கு வரணும்....ஹா...ஹா....ஹா....ஆனா இந்த பாபு பயலுக்கு வர்ற வாழ்த்து அட்டை....எல்லாம் வேறு ஏதாச்சும் வரணும்....அவன் முன்னாடியே.... என்க்கு பாத்தியா...எல்லாமே....ரஜினி படம்னு தம்பட்டம் அடித்து பந்தா பண்ணணும்.....!

ஆனா...போஸ்ட்மேன் வந்தார்....வரிசையா எல்லோருக்கும் வாழ்த்து அட்டைகளை கொடுத்துக் கொண்டே வந்தார்.......அப்போ.....



(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....)



தேவா. S


பின் குறிப்பு: எல்லோரை விடவும் சித்ரா இந்த பதிவினை விரும்பி படிக்க போகிற பதிவர் என்று சகலமானவர்களுக்கும் அறிவித்துக் கொள்கிறேன்.

Comments

Chitra said…
///எல்லோரை விடவும் சித்ரா இந்த பதிவினை விரும்பி படிக்க போகிற பதிவர் என்று சகலமானவர்களுக்கும் அறிவித்துக் கொள்கிறேன்.///


.....உண்மையை சொல்லி இருக்கீங்க...... ஹா....ஹா.....ஹா....... எரிமலை பற்றி இருக்கும் என்று வந்தேன்...... அண்ணாமலை பற்றி எழுதி இருக்கீங்க...... கூல்!
எஸ் எஸ்.. இருநூறு பெர்சென்ட் நீங்க சொன்னது கரெக்ட்..சித்ரா.. கரெக்டா ஆஜர் ஆயிருவாங்க..

அப்புறம்.. இப்படியா முக்கியமான டைம்ல கரண்ட் கட் பண்றது..???

போஸ்ட் கார்டு வந்ததா இல்லியா..சீக்கிரம்
சொல்லுங்கப்பா..
//.ஏன் தெரியுமா? வேஷ்டி கட்டி நடிச்ச....சண்டை அவ்வளவா இருக்காது அப்படீன்றது...அப்போ என்னோட எண்ணம்
//
nanum thanum thanka
தம்பி உண்மையாகவா? எனக்கு இதல்லாம் நினைவில் இல்லையே.
நல்ல நினைவலைகள்...!

///நானும் இடுப்புல ஒரு கைய வச்சுகிட்டு ஹா...ஹா.......ஹா...ன்னு விபரம் தெரியாம சிரிச்சு வைப்பேன்.... இடுப்புல கைய வச்சுக்கிறதும்...தலை முடிய கோதி விட்டுக்கிறதும்....என்னைய கேக்காமலேயே...எனக்கு வந்துடுச்சு.....///

ஆஹா ...! இதயெல்லாம் நான் பார்த்தது இல்லையே..!;)
This comment has been removed by a blog administrator.
dheva said…
சித்ரா.... நீங்கதான் அக்மார்க் ரஜினி ரசிகை ஆச்சே....விசில் எல்லம் எடுத்து அதான் கண்ண மூடிகிட்டு...சொல்றேன்!

ஆனந்தி....சஸ்பென்ஸ்ல கொஞ்ச நேரம் இருங்க...ஆனந்தி....ஒரு நெடுந்தொலைக்காட்சி தொடர்ன்னா எப்படி காத்திருக்கீங்க...


தமிழ்.....பாபு உங்களுக்கு தெரியும் தமிழ்... நாம எல்லாம் கிரிக்கெட் விளையாடி இருக்கோம்....!உங்களுக்கு எல்லாம் தெரியாமதான் இந்த வேலையெல்லாம்....ஹா...ஹா...ஹா...

சுனில்.... அண்ணா.....உனக்கு நல்லா தெரியும் ரஜினி ரசிகன்னு..அப்புறம் என்ன...கிண்டல் வேண்டி கிடக்கு!
Anonymous said…
why suspense?
விஜய் said…
seekiram sollunka anna

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த