Skip to main content

சந்தியா குட்டியின் பிறந்த நாளும்... நம்ம ஊர் நினைவுகளும்...!

துபாயிலிருந்து அபுதாபிக்கு சென்று கொண்டிருக்கிறேன்....பாலைவனத்துக்கு நடுவே.... எப்படி இந்த சாலைகளை தரமானதாக உருவாக்கிஅதை பராமரிக்கிறார்கள் என்று வியந்து கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.....உச்சி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும் வழியில் நமது ஊர் உணவுகள் கிடைக்காது என்பதால் துபாயில் இருந்தே...சரவண பவனில் தயிர் சாதமும், சாம்பார் சாதமும் வாங்கிக் கொண்டு சென்றோம்.

நல்ல உச்சி வெயில் எங்காவது வண்டியை நிறுத்திவிட்டு மதிய உணவை முடிக்கலாம்.....என்று நிறுத்த நிழல் கூட இல்லையே என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போது சரலென்று...மனம் ஊரை நோக்கி பறந்ததது... நம்ம ஊரில் எல்லாம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்லும் வழி நெடுகிலும் எத்தனை மரங்கள் இருக்கும்....சாலையே தெரியாத அளவிற்கு....எவ்வளவு நிழல் இருக்கும்.....சாலை அப்படி இப்படி இருந்தாலும்.....ஒரு உயிர்ப்பை நமது ஊரில் பார்க்க முடியும்....

ஊர் என்றால் ஒரு கண்மாய்க்கரை ஓர மரமாக வண்டியை நிறுத்திவிட்டு....உணவை முடித்துவிட்டு.....கண்மாய் தண்ணீரில் பாத்திரம் கை எல்லாம் கழுவி விட்டு...எவ்வளவு வெயிலாய் இருந்தாலும் குளு குளு காற்று வீசும் மரத்தினடியில் கொஞ்ச நேரம் ஆழ்ந்து சுவாசித்தால் எவ்வளவு ஆசுவாசமாயிருக்கும்....

வழி நெடுகிலும் கிராமங்களும்....மனிதர்களும்...வாழ்க்கைமுறைகளும் நாம் வேடிக்கையாக பார்த்துக் கொண்டே செல்லலாம்....பள்ளி செல்லும் குழந்தைகளும்....குறுக்கே வரும் மாட்டு வண்டியும்....ஒவ்வொரு சிற்றூரையும் கடந்து செல்லும் போது காணும் டீக்கடைகள்...வாசலிலும் சுற்றிலும் நிற்கும் மனிதர்கள்...முரட்டு மீசையும்... நரைத்த முடியும்....சட்டையில்ல உடம்பில் கம்னியூஸ்ட் சிவப்பு துண்டும் அணிந்த பெரிசுகளும்...மொத்தத்தில்....ஒரு பால்காரரின் மணி ஓசையும், ரோட்டில் யாரோ யாரிடம் சண்டை போடுவதையும் நாம் தவிர்க்காமல் நாம் காணமுடியும்.....

எங்கும் மனிதர்கள்...வெற்றிலை குதப்பிய ஆண்கள் பெண்கள்...காக்கா..குருவி...ஆடு...மாடு.......பாங்க்......பாங்க்....பாங்க்..........ஏதோ ஒரு ஹாரன் ஒலி...என்னை திரும்ப...துபாய் டு அபுதாபி சாலைக்கு மீண்டும் கொண்டுவர......ஏக்கம் கலையாமல் சாலை ஓரமாக இருந்த வண்டியை டபுள் பார்க்கிங்க் இட்டு விட்டு.....வெயில் உள்ளே வராமல் ஏ.சி. யை கூடுதலாக வைத்துவிட்டு....வாங்கி வந்த தயிர் சாதத்தை....காலி பண்ணி விட்டு...மீண்டும் வண்டியை உசுப்பேற்றி அபுதாபி நோக்கி வண்டியை சீர விட்டேன்...

அச்சச்சோ.....எதுக்கு அபுதாபி போறேன்னு சொல்லவே இல்லையே...... நம்ம ராமராஜ் அண்ணன் (குடும்ப நண்பர்) பொண்ணு சந்தியாகுட்டிக்கு பிறந்த நாள்ங்க....15.05.2010 அன்னைக்கு 8 வயது ஆகிறது இந்த பட்டாம் பூச்சிக்கு.....வாழ்த்த போறேங்க.....


குட்டிப்பெண் சந்தியாவை .....என்னோடு சேர்ந்து.... நீங்களும் வாழ்த்துங்களேன்.....!

Comments

குட்டி சந்தியா விற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
AltF9 Admin said…
Biranthanaal valthukal santhiya , athellam ok , thayir sathatha thaniya oru alava sapidanna ,
அனு said…
சந்தியா குட்டிக்கு முதல் வாழ்த்து என்னிடம் இருந்து.. :)
சந்தியாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
வாழ்க்கையெனும் சோலையிலே
வசந்த மலர்கள் வாசம் வீச
விலையில்லா அன்புடனும்
நிலைகொண்ட புகழுடனும்
இன்று போல் என்றும்
சந்தோசமாய் வாழ
சந்தியாவை நானும்
வாழ்த்துகிறேன்...
Anonymous said…
belated happy birth day to sandhyakutty...
சங்கீதமாய் சிரிக்கும் சந்தியாவிற்கு...
சகலமும் இறையருளால் கிடைக்க
வாழ்த்துக்கள்.. :)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த