Skip to main content

இலக்கில்லாத பயணம்...!
















கட்டாய நகர்த்தலாய்....
நகர்ந்து கொண்டிருக்கிறது....காலம்
இந்தக் கணத்திலேயே....
இழுத்து பிடித்து நிறுத்திவிட...
ஓராயிரம் முறை முயன்று.....
தோல்வியின் வெட்கத்தில்...
துவண்டு போய் கிடக்கிறது மனது!

கடந்ததெல்லாம்...
மரத்தில் அடித்த ஆணியாய்...
பிடிங்கிய பின்னும் வடுக்களை...
சுமந்து கொண்டு நினைவுகளாய்..
ஏதேதோ நினைத்தும் ....
மறக்காமல் வேறு
எங்கேயோ கொண்டுபோய்...
நிறுத்தி விடுகிறது எதிர்காலம்!

இரவும் பகலும்..போட்டி போட்டு
நாட்களை பின் தள்ளிவிட...
கடலில் மிதக்கும் கட்டை போல
இலக்கில்லாத பயணமாய்....
நித்தம் காற்றடிக்கும் திசையின்
நகர்தலைத்தான்.. வாழ்க்கை
என்று கற்பிக்கிறது....மானுடம்!

எந்த ஒரு அர்த்தமும் இல்லாவிட்டாலும் கற்பனைகளில் மனிதனுக்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. ஆத்மார்த்த கேள்விகளும் பதில்களும் தனக்குள்ளேயே இருக்கும் போது புறத்தில் கடவுள் என்று விசயம் தேவைப்படுகிறது. டண் கணக்கில் காதல் அவனுக்குள்ளேயே இருக்கிறது இருந்தாலும் புறத்தில் ஒரு சக்தி ஆண் என்றும் பெண் என்றும் ஒரு தூண்டுதலுக்காய் தேவைப்படுகிறது.

வினையூக்கிகளே இப்போது மொத்த வினையாய் பார்க்கப்படுவதால் செயலின் விளைவுகள் மறக்கப்படுகின்றன. ஒரு அனுபவம்தான் கடவுளும் காதலும் இன்ன பிற விசயங்களும்...தனக்குள் ஆழ்ந்து கொண்டே இருக்கும் மனிதனுக்குள்....உருவமற்ற கடவுளும், உடலற்ற காதலும் தோன்றிக்கொண்டே இருக்கும்...அதவாது புறத்தில் இருக்கும் விசயங்களின் இனிமை ஒரு மிட்டாய் சாப்பிடுவது போல இனிப்பு மிட்டாய் முடிந்தவுடன்...போய்விடும். அகத்தில் ஏற்படும் இனிப்பு தீரவே தீராது அது இனித்துக்கொண்டே இருக்கும் ஒரு பேரின்பம். நிரந்தர தித்திப்பில் இருப்பவனுக்கு மிட்டாயில் இருக்கும் பொய்மை தெரியும். இதை தெரிந்தவன் கடமைக்காக மிட்டாய் சாப்பிடுவானே அன்றி ஆவலில் அல்ல!

சூரியனும் நிலவும் காலங்கள் கடந்து பல மனிதர்களைப் பார்த்தது... தன்னில் இருந்து பிய்த்தெரிந்த பிச்சைதான் பூமியும் இன்ன பிற கோள்களும் அதுவும் கூட சூரிய குடும்ப அளவில்....சூரியன் எங்கே இருந்து வந்த பிச்சை என்று தெரியவில்லை. ஆனால் நமது ஆட்டமும் பாட்டமும் கெளரவமும், அகங்காரமும் சூரியனையும் நிலவையும் ஒரு அம்புலியாய் எண்ணி விடுவதில்லையா? என்றாவது இவற்றின் பிரமாண்டத்தை நாம் சிந்தித்திருக்கிறோமா? கோடாணு கோடி இனங்களையும், போர்களையும், சக்கரவர்த்திகளையும், சாம்ராஜ்யங்களையும்...மனிதன் காடுமேடுகளில் உடையில்லாமல் அலைந்த காலம் முதல்.....கண்டிருக்கின்றன இந்த சூரியனும் சந்திரனும் ஆனால் அவை நமக்கு அம்புலிகள்!

நோக்கமற்றதுதான் வாழ்க்கை...பள்ளியில் படிக்கும் போது கல்லூரியும், கல்லூரி படிக்கும் போது வேலையும், வேலை கிடைத்த பின் திருமணமும், திருமணத்திற்கு பிறகு..குழந்தைகளும்....என்று இலக்குகள் மாறி பயணித்தாலும்....எது நிம்மதி.....என்ற கேள்வி மட்டும் கூடவே பயணிக்கும்....இலக்குகள் ஒரு சுழற்சி என்பதை விளங்கிக் கொண்டு நிம்மதி அடையும் இலக்கில் அல்ல பயணத்தில்தான்....என்பது பிடிபடவேண்டும்! அதற்காகத்தான் கடவுளும் வேதங்களும் மதங்களும் கூட தோன்றியிருக்கலாம் ஆனால் இப்போது அவற்றையும் கூட மட்டுப்படுத்தி விட்டான் மனிதன்.

ஏனென்றால்........உண்மையில்... இலக்கு என்று எதுவும் இல்லை!

பயணம்தான் சந்தோசம்!


தேவா. S

Comments

உண்மை நண்பரே...வாழ்த்துக்கள்
Chitra said…
நோக்கமற்றதுதான் வாழ்க்கை...பள்ளியில் படிக்கும் போது கல்லூரியும், கல்லூரி படிக்கும் போது வேலையும், வேலை கிடைத்த பின் திருமணமும், திருமணத்திற்கு பிறகு..குழந்தைகளும்....என்று இலக்குகள் மாறி பயணித்தாலும்....எது நிம்மதி.....என்ற கேள்வி மட்டும் கூடவே பயணிக்கும்....இலக்குகள் ஒரு சுழற்சி என்பதை விளங்கிக் கொண்டு நிம்மதி அடையும் இலக்கில் அல்ல பயணத்தில்தான்....என்பது பிடிபடவேண்டும்! அதற்காகத்தான் கடவுளும் வேதங்களும் மதங்களும் கூட தோன்றியிருக்கலாம் ஆனால் இப்போது அவற்றையும் கூட மட்டுப்படுத்தி விட்டான் மனிதன்.

ஏனென்றால்........உண்மையில்... இலக்கு என்று எதுவும் இல்லை!

பயணம்தான் சந்தோசம்!



....... interesting.....

Finally, the page loaded up without any delay and problem. :-)
வாழ்க்கை...பள்ளியில் படிக்கும் போது கல்லூரியும், கல்லூரி படிக்கும் போது வேலையும், வேலை கிடைத்த பின் திருமணமும், திருமணத்திற்கு பிறகு..குழந்தைகளும்....என்று இலக்குகள் மாறி பயணித்தாலும்....எது நிம்மதி.....என்ற கேள்வி மட்டும். இந்த வாழ்கை குழந்தைகள் படிப்பு வேலை திருமணம் இப்படி தொடரும் ஒரு சுழற்சி போல்
dheva said…
நன்றி சரவணன்....!
dheva said…
சித்ரா @ பெரும்பாலும் உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகுதான் படைப்பு முழுமை அடைகிறது. நன்றிகள்!
dheva said…
சவுந்தர் @ நன்றி நண்பரே!
VELU.G said…
//
ஏனென்றால்........உண்மையில்... இலக்கு என்று எதுவும் இல்லை!

பயணம்தான் சந்தோசம்!
//

சரியாகச் சொன்னீர்கள் நன்பரே, பயணம் தான் வாழ்க்கையே. ஆனால் எல்லோரும் ஏதோ ஒரு இலக்கை நோக்கி செல்வது போல் ஒரு மாயையிலேயே உழல்கிறோம்
ஒரு குறிப்பிட்ட நிலைக்கு பிறகு கடமைகளை நிறைவேற்றுவதே..! இலக்காகி விடுகிறது ...!

அப்போது சில சமயங்களில் பயணத்தில் சந்தோஷங்கள்
குறுக்கிடும் ..! கடமையின் பொருட்டு அதை கூட முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை..!
G.Ganapathi said…
உலகில் எந்த மொழியில் கேட்டாலும் இனிமையான வார்த்தை பயணம் எப்படி வேண்டுமாலும் சொல்லி பாருங்களேன் . இழவுக்கு போகும் பயணத்தில் கூட ஒரு சிறு சந்தோசத்தை அந்த பயணம் தறும் எத்தனை துக்கம் இருந்தாலும்
//இலக்கில்லாத பயணமாய்....
நித்தம் காற்றடிக்கும் திசையின்
நகர்தலைத்தான்.. வாழ்க்கை
என்று கற்பிக்கிறது....மானுடம்!//

உண்மைங்க... என்னதான் ஒரு இலக்கை நோக்கி நகர்ந்தாலும் காற்றின் விசை சற்றேனும் கூடுதலாகிவிடின் மீண்டும் திசைமாறும் நம் இலக்கு...

//தனக்குள் ஆழ்ந்து கொண்டே இருக்கும் மனிதனுக்குள்....உருவமற்ற கடவுளும், உடலற்ற காதலும் தோன்றிக்கொண்டே இருக்கும்... //

//நிரந்தர தித்திப்பில் இருப்பவனுக்கு மிட்டாயில் இருக்கும் பொய்மை தெரியும்//

//இலக்குகள் ஒரு சுழற்சி என்பதை விளங்கிக் கொண்டு நிம்மதி அடையும் இலக்கில் அல்ல பயணத்தில்தான்....என்பது பிடிபடவேண்டும்! //

நல்லாவே அழுத்தமா சொல்லியிருக்கீங்க... ஒரு மிடுக்கான எழுத்து நடை.. ரசிக்கவைக்கிறது..

பயணத்தினை ரசித்தோமாயின் இலக்காகும் பயணமே... மிக அழகாக சொல்லியிருக்கீங்க...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த