
கண்ணா வாழ்கையில ஒரு விசியத்த..கண்டிப்பா தெரிஞ்சுக்கணும் எப்பவுமே ஒரே ரூட்ல நாம போனா ரெடிமேடா நமக்கு ஒரு பேர வச்சி....ஓரங்கட்டிடுவாங்க...லைஃப்ப எப்பவுமே...லைவா வச்சிக்கணும்....சரி...இப்போ...ஸ்ட்ரெய்ட்டா..மேட்ட்ருக்கு வர்ர்ட்டா....
இதுவரை....
பாகம் I - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_02.html
இனி...
என் வீட்டுக்கு ரெண்டு வீடு முன்னாலயே...பாபுவோட வீடு இருக்கு... வந்த போஸ்ட் மேன் முதல்ல பாபுகிட்ட போய் அவனுக்கு கார்டு எல்லாம் கொடுத்துட்டு எங்க வீட்டு வாசலுக்கு வந்து என் கையில ஒரு 21 கார்டு கொடுத்தாரு....5 ரஜினி படம்...ஒரு பிள்ளையார் படம்..3 முருகன் பாக்கி எல்லம் இயற்கை காட்சிகல், பொங்கல் ..பானைன்னு...கொடுமையா...! அடப்பாவிகளா....இப்படி ஏமாத்திட்டீங்களேன்னு....மனசுல நினைச்சிகிட்டு..பாபு கிட்ட போயி மெல்ல கேட்டேன் ..உனக்கு பொங்கல் வாழ்த்து என்ன படம்டா வந்து இருக்குன்னு....அவ்ளோதான்...
அவன்...டொட்டடாயியியியியியியிங்ங்ங்ங்ங்ங்ங்ன்னு மியூசிக் கோட எடுத்து ஒண்ணு ஒண்ணா என் முன்னால போடுறான் ஒண்ணு..ரெண்டு...மூணு......மொத்தமா 17 ரஜினி படம்...ஒண்ணு ஒன்ணும் ஒரு ஸ்டைலா....என்னோடா...ரஜினி அவன் கையில நிறைய நிறைய இருந்தத பாத்துட்டு அழுகையே வந்துடுச்சு...அதவிட இந்த பாபு காட்டின பிலிம் இப்போ நினைச்சாலும் எனக்கு அழுகையும் ஆத்திரமுமா இருக்கு...ஓட்டப்பந்தயத்துல கடைசில ஓடிவந்த பையன் மாதிரி நின்னேன்....!
நேரே அனுப்பிச்ச ஓவ்வொருத்தரா போய் கேள்வி கேக்க ஆரம்பிச்சேன்...மணிரத்தனம் படம் மாதிரி...ஏன்க்கா...ஏண்ணே... ஏன்...ஏன்..ஏன்?எனக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனைனு கேட்டேன்...எல்லோரும் சிரிச்சுட்டு சொன்ன பதில் எங்க அப்பாவ எனக்கு வில்லனா ரெண்டு செகன்ட்ல மாத்திடுச்சு....ஏன் தெரியுமா...ரஜினி வாழ்த்து அட்டையை அனுப்பிச்சா எங்க அப்பாவிற்கு பிடிக்காதாம்.....! இன்னைக்கு ராத்திரி...அப்பா வரட்டும்.. நேருக்கு நேரா...அவர்கிட்ட...கேட்டுட வேண்டியதுதான்...ஆஃபிஸ் முடிஞ்சு வரட்டும்....யூனியன் ஆஃபிஸ்ல அக்கவுண்டென்ட்னா என்ன கொம்பா?னு நினைச்சேன்....
வீட்டுக்குள்ள நுழையும் போதே ஸ்டைலா ரஜினி மாதிரி ஸ்பீடா போனேன்(அப்படீன்னுதான்... நானா நினைச்சுக்கிறேன்....விட்டுறங்களேப்பா..)அம்மாகிட்ட...போய் அப்பா எப்போமா வருவர்னு கேட்டேன்...அம்மா முறைச்சு பாத்து...என்ன இது அதட்டலா கேக்குற..எப்பவும் வர்ற மாதிரிதான் வருவாரு...ஏண்டா....?அப்படின்னு கேட்டாங்க... நான் அம்மாவோட...செல்லம்..அதனால அதே திமிரோட.....சொன்னேன்...அத எல்லம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாதுன்னு சொல்லிட்டு ஹாலுக்கு போனேன் அங்க என் அக்கா வேற எப்ப பாத்தாலும் புக்க எடுத்து வச்சுட்டு படிச்சிட்டே இருக்கறதால.... நானும் படிச்சே ஆகணும் (என்ன கொடுமை சார்....இது ஒரு ரஜினி ரசிகனப் போய் படி படின்னு சொல்றாங்களே....)ஒப்புக்கு நானும் ஒரு புக்க (வரலாறுன்னு நினைக்கிறேன்...அதுலதான கதை இருக்கும்) எடுத்து வச்சு படிச்சேன்...இல்ல... இல்ல படிக்கிற மாதிரி நடிச்சேன்....!
இரவு மணி 7 வாசல்ல பைக் சத்தம் ...ம்ம்ம்ம்....அப்பாதான்...வரட்டும் வரட்டும்.....ரஜினி பிடிக்காதம்ல....உங்களால எனக்கு எவ்ளோ அவமானம்...கேட் திறக்கும் சத்தம்....ம்ம்ம்ம் பயப்படக்கூடாது..... நான் யாரு....ரஜினி...(ரசிகன் இல்ல...ரஜினியேதான்)...சும்மா விடமாட்டேன்...அநியாயத்தை தட்டிக் கேப்பேன்...செருப்பு கழட்டும் சத்தம்...வாங்க....வாங்க....உங்களுக்காகத்தான் காத்திட்டு இருக்கேன் (எவ்ளோ ரஜினி படம் மைன்ட்ல மனப்பாடமா இருக்கு)....
அப்பா வீட்டுக்குள்ள வந்திட்டார்......அப்போ.....
(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....)
தேவா. S
பின் குறிப்பு: விசில் எல்லாம் எடுத்து ரெடியா வச்சுக்குங்க.....
Comments
ஹா..ஹா.. நல்ல வேளை யூனியன் ஆஃபிஸ் குள்ள புகுந்து ரகளை பண்ணாம விட்டீங்களே...!
சரி சரி.. மேட்டர்க்கு வரேன்.. திரும்பவும் முக்கியமான கட்டத்தில இடைவேளையா?
இப்படியா பிளான் பண்ணி பியூஸ் பிடுங்கி விடறது..
ஆனா, எனக்கு கவலை இல்லையே..
அடுத்த பாகம் போட்டுட்டீங்களே..
அதா போயி இப்ப படிசிருவனே.. :P
சூப்பர் தேவா.. :)