Skip to main content

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் III


ரொம்ப நாளா விசிலோடு காத்திருக்கும் புலவன் புலிகேசிக்கும்.....என் நண்பன் சிறு குடி ராமுவிற்கும் நன்றி கார்டு போட்டபடி....சீனுக்குள் போவோமா.....


இது வரை
பாகம் I - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_02.html
பாகம் II -http://maruthupaandi.blogspot.com/2010/05/ii.html

இனி.....

அப்பா உள்ளே வந்து விட்டார்.... நான் நிமிர்ந்து அவர் முகத்தை பாரத்து....தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் ரஜினியை நினைத்துக் கொண்டு....வாயைத் திறந்து ரஜினிய உங்களுக்கு ஏன் பிடிக்காது என்று .................கேட்க நினைத்து வாயைத் திறந்தால்.....சத்தம் தொண்டையை விட்டு வெளியே வருவதற்குள் மீண்டும் உள்ளேயே சென்று விட்டது....ரேவதி தேவர் மகனில் சொல்வது போல வெறூம் காத்து தான் வருது....!

உலக அப்பாக்களுக்கு ஒரு விசயம் நான் சொல்ல விரும்புகிறேன், தயவு செய்து மீசையை பெரிதாக வைக்காதீர்கள்...! அப்பா கிட்ட வந்து...என்னடா....என்ன ஒழுங்கா படிக்கிறியான்னு அதட்ட...படிக்கிறேன்பா என்று நான் சொன்னது கூட கீச்சுக் குரலில் தான் வந்தது....ச்சே.....எங்கே போச்சு என் வீரம் எல்லாம் என்று நான் குனிந்த படி யோசிக்கும் போது.....

கிச்சனிலிருந்து அம்மா....ஏங்க...தம்பி ( நான் தான்) உங்கள தேடிட்டு இருந்தாங்க....என்று ஞாபமாய் சொல்ல...(ரொம்ப தேவை) விட்டு விட்டுப் போன அப்பா திரும்ப வந்து என்னடா...என்னை தேடுனியாமே....ன்னு கேட்க...சும்மா கேட்டேங்கப்பா..என்று சொல்லி சமாளித்து விட்டேன். இரவு போர்வையை போத்திக் கொண்டு தீவிர யோசனையில் இருந்தேன்...மனசு முழுதும் ரஜினி... எனக்கு ரஜினி பிடிக்கும் என்ற எண்ணமே.... பக்கத்து வீட்டு பாபுவிடமும் அப்பாவிடமும் நான் தோற்று விட்டேன் என்று எண்ணத் தூண்டியது....பதிலடி கொடுக்கணும்....! நல்லவனுக்கு நல்லவன் படம் ஞாபகம் வந்தது....ரஜினி அடிவாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டு...திரும்ப போய் பதிலடி கொடுக்கிற சீன் எல்லாம் என் ஞாபகத்துக்கு வருது....அப்போ ஒரு முடிவு எடுத்தேன்....ரஜினிக்கு லெட்டர் எழுதணும்னு....எனக்கு மட்டும் ரஜினிகிட்டே இருந்து பதில் வ்ந்துச்சுன்னா.....அது போதும்.....இப்படி யோசனை பண்ணிட்டே...எப்போ தூங்கினேன்னு எனக்கு தெரியல....

என்னைச் சுற்றி இருந்த பெரியவர்கள் எல்லாம் என்னைச் சீண்டுவதற்காகவே ரஜினியை பற்றி தாறுமாறாக பேச எனக்கு ஏன் அப்போது கோபம் வந்தது என்று இப்போது எண்ணிப் பார்க்கிறேன், அப்போது ரசனை என்பது அறிவினைக் கொண்டு ஆராய்ந்து வரவில்லை....அது சினிமாவை சினிமாவாகத்தான் பார்த்தது....ரஜினியை நடிகனாகத்தான் பார்த்தது. அது வேறு எது மாதிரியும் விவரித்துப் பார்க்கவில்லை. சினிமா பார்க்க தியேட்டருக்கு சென்றால் சந்தோசமாய்.....படம் நகர்கிறதா நமது பொழுது கழிகிறதா....என்றூ மட்டுமே நினைத்தது....! சினிமா தியேட்டரில் போய்....தமிழக முதல்வரை அது தேடவில்லை....! வாழ்க்கை வேறு பொழுது போக்கு வேறு என்று எண்ணியதுதும் கூட ஒரு காரணம், மேலும் நடிகனுக்கு ரசினகாய் இருக்க ஆசையாய் இருந்தது...தொண்டனாய் அல்ல...

சினிமா சினிமாதான்....அதை வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி பார்க்கும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது...இன்று எல்லா நடிகனும் கெட்டு குட்டிச்சுவராய் போனதற்கு காரணம் கேவலமான ரசிகர்கள்தானே? நடிகனைத் தலைவனாக்கும் போதுதான் அபத்தங்கள் ஆரம்பிக்கின்றன...! நல்ல திரைப்படங்கள் வருவது நடிகன் கையிலா இருக்கிறது ... நண்பர்களே...? சிந்தித்துப் பாருங்கள்....அது... நல்ல ரசிகனின் கையில் தான் இருக்கிறது...! சினிமாவின் மூலமாய் தலைவர்களாகத் துடிப்பவார்களை இனம் கண்டு கொண்டு அவர்களை எல்லாம் வீட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டுமா? அரசியல் வேறு சினிமா வேறு.....இரண்டும் இரு வேறு துறைகள் என்று ஏன் தமிழ் நாட்டு சினிமா ரசிகன் இதுவரை உணரவே இல்லை?

சரி.. நம்ம மேட்டருக்கு வருவோம்.....ரஜினிக்கு லெட்டர் எழுத உதவி செய்தது....3 வீடு தள்ளி இருந்த பாப்பா அக்கா தான் அவுங்க சொன்னாங்க ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் ரஜினிக்கு லெட்டர் எழுதுவாங்க...உன்னோட லெட்டர படிச்சி திரும்ப லெட்டர் போடணும்னா... நீ வித்தியசமா ஏதாவது செய்யணும்னு....அதற்கு சொன்ன மலிவான ஐடியா...ரத்ததுல லெட்டர் எழுதுறது.....7 வயசுல அதில இருந்த முட்டாள்தனம் எனக்குத் தெரியல....

வீட்டின் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டேன்....என் எதிரே...டிம்மி சீட் லெட்டர் எழுத....மறு கையில் அப்பா ஷேவ் பண்ண வைத்திருந்த....பிளேடு.....


(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....)


தேவா. S

Comments

Chitra said…
சினிமா தியேட்டரில் போய்....தமிழக முதல்வரை அது தேடவில்லை....! வாழ்க்கை வேறு பொழுது போக்கு வேறு என்று எண்ணியதுதும் கூட ஒரு காரணம், மேலும் நடிகனுக்கு ரசினகாய் இருக்க ஆசையாய் இருந்தது...தொண்டனாய் அல்ல...


...... உய்..........உய்....... சரியா pointa பிடிச்சிட்டீங்க.....


ரத்தத்தில் கடிதமா??? ஆஆஆஆ........
அச்சச்சோ.. என்ன தேவா இது.. திரும்பவும்.. முக்கியமான இடத்துல கட்.. சீக்கிரம் சொல்லுங்க..
//வெறும் காத்து தான் வந்தது... சூப்பர் :)

பி.கு.: யாருப்பா அங்க.. ரஜினிக்கு ஒரு போன்-ஐ போடுங்க..
அந்த புள்ள கையில ப்ளேடு வேற வச்சிருக்கு.. :D :D
//..டிம்மி சீட் லெட்டர் எழுத....மறு கையில் அப்பா ஷேவ் பண்ண வைத்திருந்த....பிளேடு//

sirupulla thanamalla irukku
Ahamed irshad said…
(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....///

Appadina sari
Anonymous said…
wow....... i am waiting for ur next relese.

Pandian
creativemani said…
ஏழு வயசுலேயே நீங்க ரஜினி அவர்களின் ரசிகரா?? கலக்கல் போங்க.. :) அடுத்த பாகத்துக்கு மீ தி வெயிட்டிங்.
dheva said…
சித்ரா @ நீங்க ரஜினி ரசிகைன்னு உறுதி பண்ணீட்டீங்க.... விசில் சத்தம் துபாய் வரைக்கும் கேக்குது!


ஆனந்தி @ ரஜினி போன எடுத்தாரா ஆனந்தி.... நான் வெயிட் பண்ணலாமா?

@ ஆமாங்க... ரொம்ப சின்னபுள்ள தனமாத்தான் இருக்கு இப்போ நினைச்சு பாத்தா....

அஹமது இர்ஸாத்@ உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

@சரவணன் நன்றி


மணிகண்டன்.... @ மிக்க நன்றி உங்களின் ஆர்வத்திற்கும் பின்னூட்டத்திற்கும்!
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா....

அது நீதான் தம்பி
Unga viruthukku vazhthukkal.. menmelum kalakkunga Dhevaa :)
Dhevaa.. Rajini phone-a eduththu ippadi oru rasigaraanu rombaaaaaaaa peruma pattar.. :)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த