ஒரு புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது மனம். விரிந்து பரவ ஆசை இருந்தாலும் விருப்பமில்லை. இப்படியே இருப்பதில் ஒரு சுகம் இருக்கிறது. சுற்றி நிகழும் நிகழ்வுகளின் விசய குப்பைகளை எனக்குள் அள்ளிக் கொட்டிக்கொள்வதில் எனக்கு என்ன சந்தோசம் கிடைக்கப் போகிறது. எல்லாவிசயத்துகும் தன்னை முன்னிலைப்படுத்த மனிதன் எடுக்கும் பிராயத்தனங்களைப் பார்க்கும் போது குரங்காட்டி வித்தையில் ஆடும் குரங்குகளைப் போலத்தான் இருக்கிறது.
எப்போதும் கடந்தகாலத்தில் அல்லது எதிர்காலத்தில் நிற்கும் இந்த மனக்குரங்கை நம்பிதான் மனிதன் பல முடிவுகளை எடுத்து விடுகிறான். ஏதோ ஒரு அதிருஷ்டத்தில் சில நேரம் அது நல்ல முடிவாகவும் சில நேரங்களில் வேறு விதமாகவும் முடிகிறது. முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து முடிவெடுப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
நின்று நிதானிக்க ஒன்று மனிதனுக்கு தெரியவில்லை அல்லது புரியவில்லை. புறத்தில் நடக்கும் அவசரங்களுக்கு நாம் பொறுப்பேற்க முடியாது அது நியதியின் அடிப்படையில் எங்கோ ஓடிக்கொண்டிருக்கிறது. அகத்தில் ஏன் இத்தனை குழப்பங்கள், இத்தனை அவசரங்கள்? கலைத்துப் போட்ட வீடாய்....கலங்கிக் கிடக்கிறது மனிதர்களின் மனம். ஏதோ ஒன்று செய்யவேண்டும் என்ற எண்ணம், சாதித்து காட்டவேண்டும் என்ற வெறி என்று ஏதோ ஒன்றின் பின் ஓடிக் கொண்டே இருப்பது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. ஏன் ஓட வேண்டும் என்ற கேள்வி வரும் வரை ஓட்டம் நடந்து கொண்டே இருக்கும்.
கிளர்ச்சியாய் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களை வகைப்படுத்தி எழுத்துக்களாக்கி மீண்டும் படிக்கும் போது அதிலிருந்து எழுகின்றன ஒராயிரம் கேள்விகள். சில கேள்விகள் அர்த்தம் பொதிந்ததாய் அடுத்த நிலைக்கு அதுவே கூட்டிச் செல்லும். சில கேள்விகள் அந்த இடத்திலேயே நம்மை நிறுத்தி வைத்து மேலே முன்னேறவிடாமல் வழிமறித்து சடுகுடு ஆடும்.
அப்படிப்பட தொக்கி நின்ற கேள்விகள் ஒரு நாளில் சிதறிப் போய் கதறிக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு ஓடி ஒளிந்த கதைகளும் உண்டு. ஒரு நாள் இப்படி வழி மறித்த ஒரு கேள்வியை ஒருவரிடம் கேட்டுவிட்டு ஏண்டா கேட்டோம் என்ற நிலைக்கு வந்து விட்டேன். ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டுதானே? இது நான் கேட்ட கேள்வி. கேள்வி கேட்கப்பட்டவர் அறிவியலின் அடிப்படையில் தான் எல்லாவற்றையும் நம்புவார். அறிவியலின் அடிப்படையில் அவரும் பதிலளித்தார். நியூட்டனின் மூன்றாவது விதியை உதாரணமாக காட்டியவர் அடித்து சொன்னார் " ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு" .
அவர் கடவுள் மறுப்பாளர் என்பது எனக்கு தெரியாது. எனக்கு பதில் வேண்டும் என்று கூடவே இன்னொரு கேள்வியும் கேட்டேன்....
" மனிதனாய் இந்த பூமியில் வாழ்ந்து இவ்வளவு செயல்கள் செய்கிறோமே.....இந்த செயலுக்கு எதிர் வினை உண்டா? அப்படி இருந்தால் அது எப்படி இருக்கும்? "
இல்லை என்று சொல்ல முடியாது இருக்கு என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு மனிதன் இறந்தவுடன் ஒன்றுமில்லை என்று அவர் வாதிட்டு எனக்கு புரியாத ஏதேதோ தத்துவ விளக்கங்களை எல்லாம் சொன்னார். கார்ல்மார்க்ஸ், ஏங்கல்ஸ், பிளேட்டோ, சாக்ரடீஸ், ஐன்டீன், நீல்ஸ்போர்.... நாசா, இஸ்ரோ என்று எங்கெங்கோ போனார் ஆனால் நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.
கண்டிப்பாய் எந்த மதவாதிகளிடமும் இந்த கேள்வியை நான் கேட்கவில்லை ஏனென்றால் அவர்களுக்கு பதில் சொல்வது மிக எளிது. நல்லது செய்தால் சொர்க்கம் இல்லை என்றால் நரகம் என்று சொல்வார்கள் ஆனால் அதை அவர்களால் அறிவியல் ரீதியாக விளக்க முடியாது. தங்களது மதத்தில் உள்ள அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் கூறி என்னையும் நம்புகள், நம்பித்தான் ஆகவேண்டும் என்று பயமுறுத்துவார்கள். அதானால் எந்த மதாவதியிடமும் நான் இந்த கேள்வியை முன் வைக்கவில்லை.
எனக்குள் சில பதில்கள் இருந்தாலும் நேர்மையான பதில் கிடைக்குமா என்று தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்! என்னங்க பண்றது....வாழ்க்கையே தேடலாயிடுச்சு......தேடலே வாழ்க்கையாயிடுச்சு.....!
தேவா. S
Comments
ஆமாம் உண்டுதான்.
கடவுள் இல்லை - கடவுள் இருக்கு?
உதாரணத்துக்கு சில எதிர்வினை!!!
ராவணன் காத்த சீதையின் கற்பை,
தீயில் கருகி அழித்தான் ராமன்...
தேனீர்க் கடையில்
இரட்டைக் குவளை - அதே
கடையில் ஒரே
கல்லாப் பெட்டி..
வாழ்வில் வெளிச்சம்
மலர வேண்டும்
என பிரார்த்தித்தான்
கருவறை இருட்டில்
இருக்கும்
கடவுளைப் பார்த்து...
சொர்க்க வாயில் திறப்பு;
சொர்க்கம் புகுந்தனர்
மிதிபட்ட தம்பதியினர்!
பூசெய் அறையில்
கோடீசுவரி
களவு போனது கழுத்து நகை!
அய்ம்பொன் சிலையின் அடிப்பீடம் உடைப்பு
களவு போயின சிலையும் உண்டியலும்!
கேட்டவரம் தருவாள்
கருமாரியம்மன்
பிள்ளைவரம் கிடைத்தது
கன்னிப் பெண்ணுக்கு!
வெள்ளம் தாங்கி அம்மன்
குடிசைகளோடு சேர்ந்து
மூழ்கினாள் வெள்ளத்தில்!
மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான்
மேலே இருப்பவனின் பார்வையில் பாலியல் கொடுமை!
பெருஞ்செலவில் குடமுழுக்கு!
பேரிடியால் குடம் உடைப்பு
பத்தர் கூட்டம் அலைக்கழிப்பு!
கருவறையில் அருச்சகனின் கற்பழிப்பு
தட்டுகளில் தட்சணைகள்!
தமிழ்மொழி தள்ளல்
தமிழன் பொருள் கொள்ளல்
இந்துக் கோயில்கள்!
தமிழினில் குடமுழுக்கு
தீட்டு ஆனதாய் அருச்சகன் பூட்டு
மானம் இல்லாத் தமிழன்!
என்ன தேவா இப்ப சொல்லுங்க ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டுதானே?
உண்மை
To every action there is always an equal and opposite reaction: or the forces of two bodies on each other are always equal and are directed in opposite directions.
நியுட்டனின் முதல் மற்றும் இரண்டாவது விதிகள் 'ஒரு' object ஐ அடிப்படையாகக் கொண்டவை. மூன்றாவது விதி இரண்டு objectகளை அடிப்படையாகக் கொண்டது. அது விசைகளைப் பற்றி (force) பேசுகிறது.
இன்னும் விளக்கமாக
To every action there is always opposed an equal reaction: or the mutual actions of two bodies upon each other are always equal, and directed to contrary parts. — Whatever draws or presses another is as much drawn or pressed by that other. If you press a stone with your finger, the finger is also pressed by the stone. If a horse draws a stone tied to a rope, the horse (if I may so say) will be equally drawn back towards the stone: for the distended rope, by the same endeavour to relax or unbend itself, will draw the horse as much towards the stone, as it does the stone towards the horse, and will obstruct the progress of the one as much as it advances that of the other. If a body impinges upon another, and by its force changes the motion of the other, that body also (because of the equality of the mutual pressure) will undergo an equal change, in its own motion, toward the contrary part. The changes made by these actions are equal, not in the velocities but in the motions of the bodies; that is to say, if the bodies are not hindered by any other impediments. For, as the motions are equally changed, the changes of the velocities made toward contrary parts are reciprocally proportional to the bodies
Newton's Laws of Motion என்பதை சிலர் Newton's Law of Everything என்று நினைத்துக்கொள்கிறார்கள். :-)
அவ்ளோதான் பாஸ், வாழ்க்கை.
வழியில கிடைக்கிறவனோட நட்போட கைய குலுக்கிட்டு போயிட்டே இருக்க வேண்இயதுதான். :-)
இருக்கு...:))
மரணித்த பிறகு நம் வழித்தோன்றல்களும் சமுதாயமும் அவைகளைச் சந்திக்கும்.
பலவற்றை நாமே சந்திப்போம் ..
வாழ்த்துகள் நண்பரே
இதே சம்பவத்தை கொஞ்சம் திருப்பிப் போட்டுப் பார்ப்போம்.திருமணத்திற்கு முன் அதே பெண் கருவுறுகிறாள். கருவுற்ற செய்தி,கருவுற்றப் அந்தப் பெண்ணையே திகலடைய வைக்கிறது. அவளுடைய தாய் அவமானத்தால் அலறுகிறாள். ஒட்டு மொத்த அந்தப் பெண்ணின் குடும்பமே பயந்துபோய் அந்தச் செய்தியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் பாதுகாக்கிறது. குடும்பத்தையே சொல்ல முடியாத சோகம் சூழ்கிறது.
சம்பவம் ஒன்றுதான்.
இவர்களின் உணர்வை எது தீர்மானிக்கிறது?
மனமா?
சமூகமா?
//நேர்மையான பதில் கிடைக்குமா என்று தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்//
நேர்மையான பதில் என்பதை விட.. உங்களால் ஒத்துக் கொள்ளக் கூடிய பதிலாகவும் இருக்க வேண்டும்.. காரணம்.. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு புரிதல்கள், அனுபவங்கள் இருக்கக் கூடும்.. அவை மற்றோரால் முழுவதுமாகவோ/பகுதியாகவோ ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ படலாம்.. அனுபவங்களே நல்ல தீர்வைக் கொடுக்கின்றன.. எனவே, அறிவியலோ, ஆன்மீகமோ நமக்கான தேடல்களை நாமே முழுமூச்சுடன் இறங்கித் தேடினால் பதில்கள் கிடைக்கலாம்.. அடுத்தவரைக் கேட்பதினால் நம் தேடல் திசைதிரும்பவும் நேரிடலாம்..
//பட்டுன்னு எதிர் வினை இருக்கா இல்லையா?//
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும் - வள்ளுவர்.
நினைக்கப்படும் என்பதற்கான விளக்கமே ஒவ்வொருக்குமான புரிதல்.
http://pirathipalippu.blogspot.com/2008/12/blog-post.html
http://pirathipalippu.blogspot.com/2009/08/blog-post_24.html
1) //To every action there is always opposed an equal reaction; or, the mutual actions of two bodies upon each other are always equal, and directed to contrary parts.
- Newton's Third Law of Motion, translated from the Principia's Latin //
2) //இயற்பியல் அல்லது பௌதீகவியல் (Physics) என்பது அறிவியலின் ஓர் அடிப்படை இயல்பாகும். இயற்பியல் உலகின் இயல்பை, இயற்கையை நோக்கிய அறிவை தேடி நிற்கின்றது. வெவ்வேறான சூழ்நிலைகளில் இயற்கையில் உள்ள பருப்பொருட்களின் பண்புகளை முறையாக அறிந்து கொள்ளுதல் எனவும் இயற்பியலை வரையறுக்கலாம்.// (thanks wikipedia)
காமெடிதாங்க பண்றீங்க.....! நம்மையும் உள்ளடக்கியதுதான் இயற்பியல் பாஸ்! வாழ்வியல் அது இதுன்னு ஏன் மறுபடியும் குழப்புறீங்களே....
பாமரர்களுக்கு நேரிடையான பதில்கள்தாங்க போய் சேரும்....இதுவரைக்கு நேரான பதில் சொன்ன திருப்தி உங்களுக்கு இருக்கிறதா? தெரியாம தேடுறவங்கள மேலும் குழப்புறீங்களே.....!
இன்னும் புரியவில்லை என்றால் இயற்பியலாளர் ஒருவரிடம் சென்று Gravitational Forceக்கு எதிர் வினை என்ன என்று கேளுங்கள். அப்பொழுது நியூட்டனின் மூன்றாம் விதியைப் பற்றி விரிவாக விளக்குவார்.
புரிந்தால் உங்கள் தேடல் வேறு திசை நோக்கிச் செல்லும்; இல்லாவிட்டால் இருட்டறையில் இல்லாத கறுப்புப் பூனையை தேடுவதாக இருக்கும்.
எங்கேயோ இடிக்குதுல்ல மேடம்...கொஞ்சம் கிட்ட வந்துட்டமா..இல்ல வந்துட்ட மாதிரி நினைக்கிறேனா தெரியல ஜெயந்தி....! ஆனா உங்க பதில் கொஞ்சம் என்னை நகர்த்தி விட்டு இருக்கு! நன்றிகள்!
முதல் வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றிகள் நண்பரே!
நண்பர் பாலசி
நண்பர் அகல் விளக்கு ராஜா
தம்பி ஜீவன் பென்னி
நண்பர் மகராஜன்..
அனைவரின் பின்னூட்டத்திற்கும் நன்றி....! நீங்களும் என்னைப் போலவே தேடலி இருக்கிறீர்கள்....பார்க்கலாம் பாஸ் ஏதாவது உபோயகமான கருத்து நம்ம தேடலை நகர்துதான்ன்னு!
"செயல் விசையும் எதிர்ச்செயல் விசையும் ஒரே பொருளின் மீது செலுத்தப்படுவது இல்லை; அவை செயலெதிர் செயலில் ஈடுபடும் இரு வெவ்வேறு பொருள்களின் மீது செலுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு -- தரையின் மீது நாம் நிற்கையில் நம் எடை தரையின் மீது செலுத்தப்படும் செயல் விசை; இதற்குச் சமமான எதிர்ச்செயல் விசை தரை நம் மீது செலுத்தும் செங்குத்துத் தாங்கு விசை. "
நான் கேட்பது...பூமியின் மீது உங்களின் விசை படர்ந்து அது எதிர் விசை கொடுக்கிறது. அது போல நீங்கள் செய்யும் மற்ற செயல்களின் விளைவு அல்லது எதிர்விசை என்ன என்றுதான்.....!
அடாஅடா...இவர்கிட்ட கேள்வி கேட்டா இவர் என்னை இயற்பியல் பாடம் நடத்தச்சொல்லுவார் போல இருக்கிறதே....!
பதில் சொல்லவந்தவர் மேலும் மெலும் குழம்பிக்கிட்டு இருக்காரே....ஒரு வேள பதில் கிடைக்கதோ...?
செயலில் இடம்பெறும் இன்னொரு பொருளைப் பொறுத்து அது அமையும்.
இந்த இடத்துக்கு கும்மிய கூட்டிட்டு வரவே இவ்ளோ பாடா போச்சே! ரொம்ப நன்றிங்க கும்மி....அடுத்து....உயிரோடு இருக்கும் போது அந்த எதிர்வினை நம்மள பாதிப்பதை உணரலாங்க....மரணித்த பிறகு .... அப்படிப்பட்ட எதிர்வினை யார பாதிக்குமுங்க...இல்லா எதிர் வினை இருக்காதா....இதுக்கும் பதில் சொல்லிட்டீங்கண்ணா...கொஞ்சம் தெளிவா இருக்கும்!
மரணித்தபிறகு 'இரண்டு' பொருள்கள் எங்கே என்று தேடுங்கள். இந்த விதி ஏன் பொருந்தாது என்று நான் கூறியது புரியும்.
என் சின்ன மூளைக்கு இதெல்லாம் புரியலை
நிறைய இருக்கு :))
அது மிக நுணுக்கமான கணக்கீடுகளின் அடிப்படையில் எதிர்வினை/விளைவு வரும். அதை நாமும் அனுபவிக்க வேண்டி வரும். எது எப்போது என்பதுதான் செயல்விளைவுத் தத்துவம்,
அதற்கான காரணங்களே முன்னர் நாம் செய்த/முன்னோர் செய்த வினைகள் அனைத்தும்..
ஆகவே நம் வினை தெளிந்து ஆற்றுவோம். வருங்காலத்தை உருவாக்குவோம்
நன்றி தேவா. அவசியமான பகிர்வுக்கு நன்றி
மீண்டும் அதே கேள்வியை வேறு விதமாக என்னை நோக்கி நீங்கள் கேட்டு தேடச்சொல்லுவது பதிலா இல்லை விதண்டாவாதமா?
இறந்த பின் விளைவு யாரையும் பாதிக்காது நியூட்டன் ஒரு முட்டாள் அதை படித்த நான் ஒரு முட்டாள் என்று சொல்லிவிட்டுப் போங்கள்....!
இல்லை என்றால் தெரியவில்லை என்று விட்டுப் போங்கள்....! உங்கள் குழப்பத்தை ஏன் சமுதாயத்தின் மீது திணிக்கிறீர்கள் ... நியூட்டனின் விதிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லவதிலேயே....மும்முராமாயிருக்கிறீர்கள்...! இன்ன்னும் சொல்லப் போனால் நியூட்டன் விதியே.... பொய் என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை...!
இறப்புக்கு பின் ஒன்றும் இல்லை என்பது உங்கள் வாதம் எனில் அதை ஒற்றை வரியில் சொல்லுங்கள்...அடுத்த கேள்வியைக் கேட்கிறேன்....!
வாழ்த்துக்கள்!
சம்பந்தமே இல்லாத இடத்தில் நியூட்டனின் விதியை தொடர்புபடுத்த முனைந்ததால், அந்த விதி பற்றி பேச வந்தேன்.
உங்களுடைய புரிதல் வேறு வகையில் இருந்தால், அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை.
உங்களுக்கு பலவிசயங்கள் தெரிந்துள்ளது, அதில் நூலிழை தேடல் உள்ளதாக நினைக்கிறேன்.
கேள்விகளை எனக்கு அனுப்பி வையுங்கள். இது குறித்து சிந்திக்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்.
arivhedeivam@gmail.com
உங்களின் புரிதலை வெளிப்படுத்தியதற்கு நன்றி!
நன்றி கும்மி!
தேவாவின் தேடலுக்கு விடை சொல்ல நான் இங்கு வரவில்லை. நியூட்டனின் விதி தவறான இடத்தில் பிரயோகிக்கப்பட்டு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே வந்தேன்.
இன்னும் கூட, அந்த விதிதான் மரணத்திற்கு பின்னும் பொருந்தும் என்று கூறினால் :-)
சாதாரணமா.... நாம செத்துப் போனா பிறகு அல்லது ஒட்டு மொத்த உலகமும் அழிஞ்ச பிறகு மீதி என்ன இருக்கும்? ஆரோக்கியமான விவாதம்தான் நண்பரே பயப்படாமல் உங்களின் கருத்துக்களை சொல்லுங்கள்!
Laws of Motionனை கொண்டு போய் laws of gravitationனில் பொருத்த முடியுமா? Newton's Third Law of Motion குறித்த உரையாடல் போதும் என்று நினைக்கின்றேன்.
//நாம செத்துப் போனா பிறகு அல்லது ஒட்டு மொத்த உலகமும் அழிஞ்ச பிறகு மீதி என்ன இருக்கும்?//
நாம் செத்தபிறகு, புதைத்தால் உடல் மக்கிப்போய் விடும். நீங்கள் மனம் குறித்து பேசுகிறீர்கள் என்றால், இறந்த பிறகு மனம் ஒன்று இருக்காது.
ஒட்டுமொத்த உலகமும் அழிந்த பின்பு என்ன நடக்கும் என்று மதவாதிகள்தான் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு வேண்டுமானால் அவை முக்கியமாய் இருக்கலாம். வாழும் வரை, சக மனிதனுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கின்றேன்.
சாதாரணமாக எந்த விசய ஞானமும் தெரியாதவர்கள் கூட சொல்லாக்கூடிய பதிலகளை தெரிஞ்சும் சொல்ல மாட்டேன்றீங்க....!
மதவாதிகள.... நான் எப்பவோ ஓரங்கட்டிடேன் அவங்கள விடுங்க...உங்கள மாதிரி பகுத்தறிவு சிந்தனை உள்ளவர்கள் சொல்லும் கருத்து எல்லோருக்கும் பயன்படும் என்ற மரியாதைதான் உங்களை கேட்கத்தூண்டுகிறது...!
இல்லை பகுத்தறிவாலும் சொல்ல இயலவில்லை என்றால்...உங்களுக்கும் தெரியவில்லை என்று ஒரு முத்திரை குத்திவிட்டு...தேடலை தொடர வேண்டியதுதான்....!
சாதாரணமா.... நாம செத்துப் போனா பிறகு அல்லது ஒட்டு மொத்த உலகமும் அழிஞ்ச பிறகு மீதி என்ன இருக்கும்?
இந்த கேள்வியால் யாருக்கு என்ன பயன்? பொழுது போகாத சில பேர் இதற்கு எதாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள்.நீங்கள் கேட்ட்கும் கேள்விகளினால் யாராவது ஒருவர் பயன் பெறும் அளவுக்கு இருக்கும் வேண்டும் என்பதே இந்த சிறியவனின் ஆசை...
நான் கிடைக்கும் நேரங்களை சில நல்ல செயல்களுக்காக பயன் படுத்துவோம். எதற்கு சொல்கிறேன் என்றால் இப்படி தேவை இல்லாத விவாதத்தினால் சில நல்ல நண்பர்களுக்கு பிரச்சனை வந்து பிரிய நேர்ந்து விடுகின்றது.
இது என் தனிப்பட்ட கருத்து இது உங்களையும் ,உங்கள் நண்பர்களையும் பாதிக்குமாயின் மன்னிக்கவும்...நன்றி..
வெறுமனே கடவுள் இல்லை அது பற்றி ஒன்றும் பேசமாட்டேன்... கடவுள் இருக்கு என்று சொல்பவர்களை விளாசு விளாசு என்று விளாசுவேன்.... என்பதில் என்ன அறிவு பூர்வம் இருக்கிறது....!
கடவுள் இருக்கிறது என்றால் எங்கே இருக்கிறது என்று காண்பியுங்கள்....என்று ஆணித்தரமாய் கேட்கிறீர்களே.... !
இப்போது நான் கேட்கிறேன்....
எல்லாம் அழிந்த பின் என்ன எஞ்சும் ....? சொல்லுங்கள் பார்க்கலாம்....! ஒன்றுமில்லாத ஒன்று எஞ்சும் என்று கூட உங்களுக்கு பயம்தானே....!
//
எல்லாம் அழிந்தபின்பு Vacuum தானே நண்பரே இருக்கும்.!
மரணத்திற்கு பின்னான நிகழ்வுகளைப் பற்றியோ, உலக அழிவுகளுக்குப் பின்னானவற்றையோப் பற்றி சிந்திப்பதை விடுத்து, வாழும் காலத்தில் சமூகத்திற்கான நமது பங்களிப்பை வழங்க முயல்வோம்.
நன்றி கும்மி கரெக்டா புரியுது.....மேல சொல்லுங்க பாஸ்....ப்ளீஸ்....!
" ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஒரு வகை ஆற்றல் வேறு ஒரு ஆற்றலாத்தான் மாறும்" அப்படீன்னு இராபர் ஹூக் என்கிற அறிவியல் அறிஞர் சொன்னாருன்னு சொல்றாங்களே...அது உண்மையா?
உண்மையா இருக்கும் பட்சத்துல நீங்க சொல்ற வெற்றிடம் கான்செப்ட் உதைக்குதே..... பாஸ்..!
இல்லாதை ஒன்றை ஏன் தேடுகிறார்கள்.சில பேர் இல்லதை ஒன்றை தேடுவதிலேயே வாழ்க்கையை தொலைக்கிறார்கள். இருப்பவையை வைத்து சந்தோசப்படட்டும். எல்லாரும் போய் விட்ட பிறகு எதும் மிஞ்சினால் என்ன மிஞ்சாவிட்டால் என்ன?
இது தேவையற்ற விவாதமாகவே எனக்கு தோன்றுகிறது..
என்ன இல்லைன்னு தெளிவா சொல்லுங்கா..பாஸ்!
அந்த விதி Isolated System நிலையில் தானே நண்பரே. Black Holes அவற்றுக்கு உட்பட்டவை இல்லையே
எதற்கு விளக்கப்படம் என்று கூறுங்கள் நண்பரே. நியூட்டன் விதிக்கா? வெற்றிடத்துக்கா?
இல்லை என்று சொல்ல முடியாது இருக்கு என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு மனிதன் இறந்தவுடன் ஒன்றுமில்லை என்று அவர் வாதிட்டு எனக்கு புரியாத ஏதேதோ தத்துவ விளக்கங்களை எல்லாம் சொன்னார். கார்ல்மார்க்ஸ், ஏங்கல்ஸ், பிளேட்டோ, சாக்ரடீஸ், ஐன்டீன், நீல்ஸ்போர்.... நாசா, இஸ்ரோ என்று எங்கெங்கோ போனார் ஆனால் நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.
//
அன்பு நன்பரே, நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வாழ்க்கை வேடிக்கை பார்க்க மட்டுமே
நிகழ்வதை புரிந்து கொள்ள முயற்சிக்கும் போதே மட்டுமே குழப்பம் வருகிறது.
பின்னர் மேலே நீங்கள் சொன்னது போல் நிறைய பேர் தோன்றி நிறைய விஷயங்களை சொல்லி மேலும் குழப்பி எதற்கு இத்தனை பிரச்சனை
இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்
நமக்கு மேலுள்ள சக்தி கடவுளோ, இயற்கையோ ஏதோவொன்று அது மனித சக்தி புரிந்து கொள்ளும் நிலையில் வைக்கப்படவில்லை
அப்படி மனிதனால் புரிந்து கொள்ளமுடியுமெனில் அது கடவுளோ, இயற்கையோ அல்ல அதற்கு ஒரு தியரி வைத்து இது கடவுள் தியரி, இது இயற்கை தியரி என்று நம் எல்லைக்குள் கொண்டு வந்து விடுவோம்
வானுக்கு கீழும் பூமிக்குமேலும் இடைப்பட்ட இடத்திலிருக்கும் நமக்கு.நம்மை படைத்த இறைவன்மேலே சந்தேகங்கள் எழுவதும். சாஷ்டாங்கமாய்விழுவதும் நம் நம்பிக்கையில்தானிருக்கு.
நம்க்கறியாமல். நம்மையறிந்த ஓதோ ஒன்று நம்மை இயக்குகிறதென்பது அனைவருக்கும் தெரியும் ஆனாலும் அதை சில மனம் ஏற்றுக்கொள்ளத்தவறும்.
ஆகவே நம் பிறக்கும் முன் எப்படியிருந்தோம் என்பதையும் நாமறியோம் இறந்தபின்பு எப்படியிருப்போம் என்பதையும் நாமறியோம்.
ஒன்றுமட்டும் உறுதி. நம்மையும் மீறிய ஒரு சக்தியிருக்கு என்றநம்பிக்கையோடு நன்மைசெய்தால் நல்லதே நடக்கும்..
http://ia301528.us.archive.org/3/items/AP_Physics_C_Lesson_05/Container.html
நீங்கள் சொல்லும் வெற்றிடத்திற்கு கொஞ்சம் விளக்கெம் கொடுங்களேன்...புண்ணியாமா போகும்!
//
ஒன்றுமட்டும் உறுதி. நம்மையும் மீறிய ஒரு சக்தியிருக்கு என்றநம்பிக்கையோடு நன்மைசெய்தால் நல்லதே நடக்கும்.. //
ஏதோ ஒரு நெருடலுடன் கூடிய பதிலின் பக்கத்து வீடு வரை வந்துட்டமாதிரி தெரியுது.... நல்லது செஞ்சா.. நல்லது நடக்கும்...கரெட்ங்க....! ஆதாரம் இல்லேன்னாலும் ஒரு லாஜிக் இருகு நீங்க சொல்றதுல!
பின்னூட்டத்திற்கு நன்றி மலிக்கா!
//நமக்கு மேலுள்ள சக்தி கடவுளோ, இயற்கையோ ஏதோவொன்று அது மனித சக்தி புரிந்து கொள்ளும் நிலையில் வைக்கப்படவில்லை
அப்படி மனிதனால் புரிந்து கொள்ளமுடியுமெனில் அது கடவுளோ, இயற்கையோ அல்ல அதற்கு ஒரு தியரி வைத்து இது கடவுள் தியரி, இது இயற்கை தியரி என்று நம் எல்லைக்குள் கொண்டு வந்து விடுவோம் //
மனித மூளையில் ஆராய்ச்சி செய்து விளங்க முடியாதது சில நிகழ்வுகள்...அது நாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு கப்பாசிட்டர் இல்ல.. என்று சொல்கிறார் வேலு....! அருமை....உண்மை நோக்கிய அடுத்த நகர்வு!
நன்றி வேலு!
மரணித்தபின் பாவம் செய்தவனுக்கும் புண்ணியம் செய்தவனுக்கும் ஒன்றுமில்லைதான். ஆனால் வாழும்போது நன்மை செய்தால் அதன் எதிர்வினை நமக்கு நன்மை வந்து சேரும். தீமை செய்தால் நமக்கு தீமை வந்து சேரும். அதை அனுபவித்துத்தான் ஆகணும். நாம் வாழும்போது நல்லவர்களாக வாழுகிறோம் என்கிற மனநிறைவு இருக்கிறதே அதுதான் வாழ்க்கை. இறந்தபின் நாம் என்ன ஆனால் என்ன?
//மரணித்தபின் பாவம் செய்தவனுக்கும் புண்ணியம் செய்தவனுக்கும் ஒன்றுமில்லைதான். ஆனால் வாழும்போது நன்மை செய்தால் அதன் எதிர்வினை நமக்கு நன்மை வந்து சேரும். தீமை செய்தால் நமக்கு தீமை வந்து சேரும். அதை அனுபவித்துத்தான் ஆகணும். நாம் வாழும்போது நல்லவர்களாக வாழுகிறோம் என்கிற மனநிறைவு இருக்கிறதே அதுதான் வாழ்க்கை. இறந்தபின் நாம் என்ன ஆனால் என்ன? ///
எது எப்படி இருந்தாலும் வாழும் போது நிறைவா வாழ்ந்திடுவோம்... மத்த விசயம் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்...ஏன் இப்பவே போட்டு மண்டைய உடைக்கணும்....! எதார்த்தமான ஒரு ....இயல்பான கருத்து ஜெயந்தி.....கிரேட்...வாழ்த்துக்கள்! என் தேடலை நகர்த்தியிருக்கிருக்கிறீர்கள்! நன்றி!