Skip to main content

விபத்து....!





















தொலைபேசியின் தொடர்ச்சியான சிணுங்களில் சமையலறையில் மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்தவள் அப்போதுதான் மணி எத்தனை என்று பார்த்தாள். காலை பதினொரு மணிக்கு யாரு இப்படி விடாம போன் அடிகிறது என்று அலுத்தவளாய்.....ரீசீவரை எடுத்து....." ஹலோ... நான் சுமதி பேசுறேன்....என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு கேட்டவளுக்கு தலை சுத்தாத குறையாகிவிட்டது. மூச்சு திணறிய படி.... வந்த அழுகையை அடக்கிக் கொண்டு...சரிங்க.... நான் இப்பவே புறப்பட்டு வர்றேன்...எந்த ஆஸ்பிட்டல் சொன்னீங்க....என்று குறித்துக் கொண்டு... போனை தடாலென்று வைத்தவள் ' ஓ ' வென்று அழத்தொடங்கினாள் அந்த 27 வயது சுமதி.

திருமணமான இந்த 6 வருடத்தில் எவ்வளவு அன்யோன்யம் எவ்வளவு புரிதல். பல நேரங்களில் இவனைப் போல் கணவன் கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சுமதி நினைக்கும் அளவிற்கு அத்தனை அன்பு. காலையில் அலுவலகம் செல்லும் போது எவ்வளவு துள்ளலாக சென்றான் முரளி...இப்போது பைக் ஆக்ஸிடெண்ட் ஆகி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பகுதியில் இருக்கிறான் என்றால் எப்படி தாங்குவாள் சுமதி. இரண்டு தெரு தள்ளி இருந்த முரளியின் அம்மா, அப்பா, தம்பி மூன்று பேரும் வீட்டுக்குள் நுழைய....அத்தேதேதேதே...... என்று அழுதபடி தனது மாமியாரின் தோளில் சாய்ந்து கதறினாள் சுமதி.


பரபரப்பான நிமிடங்களுக்கு இடையே 4 பேரும் மருத்துவமனையை அடைந்து ஓட்டமும் நடையுமாய் அவசர சிகிச்சைப்பகுதிக்கு வந்தார்கள்...உள்ளே நுழைய முடியாமல் வெளியிலிருந்து பார்த்து கதறத்தொடங்கினார்கள். முரளிக்கு தலையில் பெரிய கட்டிடப்பட்டிருந்தது.... காலிலும் வலது காலும் கையும் பெரிய பெரிய கட்ட்டுகளுடன்...சுமதி ஜீரணிக்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள். மாலை வரை எதுவும் சொல்ல முடியாது....உயிர் பிழைக்கிறது கொஞ்சம் கஸ்டம்தான் போல ஒரு நர்ஸ் ரகசியாமாய் முரளியின் தம்பியிடம் சொன்னது சுமதியில் காதில் இடியாய் இறங்கியது.

காலத்தின் நிகழ்வுகளை நாம் தாங்கித்தான் ஆக வேண்டும். சந்தோசங்களை வாழ்க்கை கொன்டு வந்து குவிக்கும் போது ஆடுகிறோம்....பிடிக்காத இது போன்ற நிகழ்வுகளைக் கொண்டுவரும் போது எதிர்கொள்ளத் திரணியின்று மண்டியிட்டு கதறுகிறோம். இன்னும் சொல்லப்போனால் கடவுள் நம்பிக்கை வருவது மிகைப்பட்ட பேருக்கு இது போல ஏதோ நிகழும் போது தான். ஒரு பக்கம் பிள்ளையின் நிலை கண்டு விக்கித்துப் போய் கதறும் தாய் தகப்பன்....பெற்று வளர்த்து 32 வயது மகனாய் உருவாக்கி....கடைசியில் உயிர் பிழைப்பானா ? மாட்டானா என்று எதிர்பார்த்து காத்திருப்பது எவ்வளவு பெரிய அவலம். சுமதி ஒரு ஒரத்தில் சுருண்டு கிடந்தாள்....பேசுவதற்கு திரணி இன்றி எப்போது மாலை வரும் எப்போது தன் அருமை கணவன் அபாயகட்டத்தை தாண்டுவானென்று...முரளியின் நினைவில்..தன் மைத்துனன் கொடுத்த காபியைக் கூட குடிக்க மறுத்துவிட்டாள்.

எல்லோரும் எதிர்பார்த்த அந்த மாலை வந்தது.....சீஃப் டாக்டரின் அழைப்பை எதிர்பார்த்து அன்ன ஆகாரம் இல்லாமல் கிடந்த குடும்பத்தினர்... அவர் அழைத்ததும் ஓடோடிப் போய் நின்றார்கள். செருமலோடு டாக்டர் சொன்ன முதல் வார்த்தை...." நேரடியாவே சொல்லி விடுகிறேன் பிழைக்கிறது ரொம்ப கஷ்டம் என்று சொல்லி முடிக்கும் முன் தனது 5 வயது மகளின் முகம் கேட்காமலேயே....சுமதியின் கண் முன் வந்தது....கணவனின் மீதிருந்த காதல் உருமாறி...மிரட்டலாய் ஒரு இறுக்கத்தை நெஞ்சுக்குள் இறக்கியது...அழுகை அடக்க முடியாமல்...வாய்க்கு முந்தானையை வைத்துக் கொண்டு விம்மும் வயதான மாமியாரையும்...அருகில் தள்ளாமல் நின்று கொண்டிருந்த மாமனாரையும் பார்த்து சுமதியின் அடி வயிற்றில் இருந்த ஒன்று ஏதோ ஒன்று வெடித்து நெஞ்சில் ஏறி..." என்னங்க...." என்ற வாக்கியத்தோடு அவளைத் தலையில் அடித்துக் கொண்டு அழச்செய்தது.


கொஞ்சம் தைரியமாய் இருந்த முரளியின் தம்பி.... டாக்டரிடம் தெளிவாய் கொஞ்சம் தைரியமாய் சொன்னான்...டாக்டர் எங்க அண்ணண எப்படியாச்சும் காப்பத்துங்க..என்று சொல்லி முடிப்பதற்குள் இடை மறித்த டாக்டர்..


"தம்பி....கை, கால்ல அடி பட்டு இருக்கு..அது எல்லாம் கூட பிரச்சினை இல்ல....ஆனா தலையில பயங்கர அடிபட்டு இருக்கு இன்னும் பிளீடிங்க் நிக்கவே இல்ல! இன்னைக்கு நைட் முழுதும் பார்ப்போம் இல்லேன்னா ... நாளைக்கு காலைல 9 மணிக்கு தலையில் ஆப்பரேசன் பண்ணியே ஆகணும் ..... என்று அவர் சொல்லும் போது மணி இரவு 8. டாக்டர் தொடர்ந்து பேசினார்...." ஆப்பரேசன் பண்ணலேன்னா உயிர் பிழைக்க சான்ஸ் கண்டிப்பா இல்ல....! பண்ணினா பிழைச்சலும் பிழைக்கலாம் இல்லேன்னா இல்ல... மேலே கையை உயர்த்தி காட் இஸ் கிரேட்....என்று சொல்லி விட்டு வணக்கம் சொல்லி மறைமுகமாய் அவர்களை இடத்தை விட்டு நகரச்சொன்னார்.

ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருக்க....சுமதி வெறித்துப் போய் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்...தன் கணவர் ஐசியூவில், மகள் பக்கத்து வீட்டு செல்வி அக்கா வீட்டில், தான் இந்த மூலையில்... நேரம் போனது தெரியவில்லை....இரவு 11 மணி அளவில் மைத்துனன் வந்து மறு நாள் காலை ஆப்பரேசனை உறுதிபடுத்தி சென்றான். மிரட்சியாய் அடர்தியாய் ரொம்ப கனமாக அந்த இரவு விடிந்தது. காலை 6 மணிக்கு மாமனார் சொன்னார் " சுமதி நீ வீட்டுக்குப் போய்ட்டு டிரெஸ் மாத்திட்டு பாப்பாவை பாத்துட்டு வாம்மா" என்று....அவர் சொன்னதை மறுக்ககூட சக்தி இல்லை சுமதிக்கு....


9 மணிக்கு ஆப்பரேசன்...சரி வீட்டுக்கு போய்ட்டு வரலாம் என்று கிளம்பினாள். பக்கதிலேயேதான் ஒரு 30 நிமிசத்தில் சென்றடையும் தொலைவில் தான் அவர்கள் வீடு. சுமதி ஆஸ்பிடல் விட்டு கிளம்பும் முன்...தன் ஆசைக்கணவனை பார்த்து விட்டுச் செல்லலாம் என்று நினைத்து வைத்த கோரிக்கை மருத்துவமனையால் நிராகரிக்கப்பட்டது.....!


பக்கத்து வீட்டில் இருந்த மகளை உறக்கதோடு வாங்கித் தோளில் போட்டு....கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு....முரளியின் நினைவுகள் அதிகமாயின....எவ்வளவு கேலி, கிண்டல், காதல் மோகம்.....எதுவுமே குறையில்லாமல் என்னை தீர தீர காதலித்த என் காதலா.....என்னைவிட்டு போய்விடுவாயா....? விசும்பலாய் கண்ணீரை கொட்டின நினைவுகள் மகளை படுக்கையில் போட்டுவிட்டு...தானும் படுக்கையில் கசங்கலாய் சாய்ந்தாள்..... நேரம் ஓடிக் கொண்டிருந்தது.....

தொலைபேசியை எடுத்தவள் ......மூர்ச்சையாகிப் போனாள்..மறுமுனையில் முரளியின் அப்பா அவளது மாமனார் கதறினார்....அம்மா....முரளி நம்மள ஏமாத்திட்டுப் போய்ட்டான்ம்மாமாமமமமமமா......அலறினாள் சுமதி....கடவுளே என்னை இப்படி என்னையும் என் பெண்ணையும் அனாதை ஆக்கிட்டியே... நான் என்ன பன்ணுவேன்...என் தெய்வம் போயிடுச்சே......! எல்லாம் முடிந்து விட்டது துணிப் பொட்டலமாய் வீடு வந்து சேர்ந்தான் முரளி....இறுதி ஊர்வலத்திற்கு எல்லாம் ரெடியாகிக்கொண்டிருந்தது....அழுது அழுது....கதறியபடி...சுமதியும்....என்ன நடந்தது என்று தெரியாமல் அம்மாவைக் கட்டிக் கொன்டு இருந்த 5 வயது மகளும்....எதிர்காலம் கேள்விக்குறியாய்...முரளி போய் சேர்ந்து விட்டான் இவர்கள் நிலைமை.....? வெளியே சேகண்டி மணி அடித்துக் கொண்டிருந்தார்கள் ....தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தது சுமதிக்கு தலையில் இறங்கியது.......கத்தினாள்.....அந்த சேகண்டிய அடிக்காதீங்க.....அடிக்காதீங்க..........அடிக்காதிங்க.... நிறுத்துங்க அலறினாள் ...மணி சத்தம் நிற்கவில்லை......

"
"
"
"
"
"
"
"
செல் போன் மணி விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது....பதறி எழுந்தாள் சுமதி.....ஓஓஒ....தூக்கம் கலைந்தும் கனவிலிருந்து அவள் மீள முடியாத அளவிற்கு அதன் தாக்கம் இருந்தது... போனை எடுத்து ஹலோ சொல்லிவிட்டு மணி பார்த்தாள் 10:25மணி....அண்ணி நான் தான்.........முரளியின் தம்பி பேசினான்...அண்ணி......அண்ணனுக்கு ஆப்பரேசன் முடிஞ்சிருச்சு...இப்போ நல்லாயிருக்கு...இனிமே ஒரு பிரச்சனையும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு.....என்று சந்தோசத்தில் குதித்தப்படி சொல்லிவிட்டு நீங்க வாங்க அண்ணி......வேறு ஏதோ மைத்துனன் சொல்ல....காதில் வாங்கியும் ....வாங்கமலும் உடனே மறந்து போனாள் சுமதி.....

சுமதி.....மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தாள் .....குளிக்காமல், வேறு உடை மாற்றாமல்....மகளை அள்ளிக் கொண்டு வெளியே போய் கதவை மூட நினைத்தவள்......சாமி போட்டோ இருந்த இடத்திற்கு திரும்ப ஓடோடி வந்தாள்.....

" கடவுளே.....எங்கள காப்பாதிட்டே...... என் தாலிய காப்பாதிட்ட....அப்பா...அம்மா.. மகமாயி...ஏதேதொ சொன்னாள் " ஆனால் தன் மைத்துனன் போனில் சொன்ன கடைசி வார்த்தை அவளுக்கு ஞாபகம் வரவில்லை........

"அண்ணி.....அண்ணன் ஹெல்மெட் போடாதனாலேதான் இவ்ளோ பிரச்சினையும்.....எப்படியோ உசுர காப்பாதிட்டங்க....முக தாடையெல்லம் உடைஞ்சு போனதால் முகமே மாறி இருக்கு....எப்படியோ பிழைச்சு வந்தாரே அது போதும்....."

போனில் சுமதி கடைசியாய் கேட்ட வார்தைகள் மறந்து விட்டு...ஆட்டோவில் ஏறி ஆஸ்பிடலுக்குப் பறந்தாள்......பூட்டப்பட்ட அவளது வீட்டுக்குள்....சாமி படம் பக்கத்தில் ஆணியில் மாட்டியிருந்த......காலையில் முரளி அணியாமல் சென்ற.....

" ஹெல்மெட்" மெளனமாய் ஆடிக் கொண்டிருந்தது.

மனிதர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை....எது விபத்து....? எது ஆபத்து என்று..........

திறமை தைரியம் என்ற பெயரில் ஹெல்மெட் அணியாமல் விபத்தை அன்றாடம் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். தவறு நிகழும் வரை....மெளனமாய் பாக்கெட்டில் இருக்கிறது விபரீதம்....

தவறு நிகழும் போது விபரீதம் விஸ்வரூபம் எடுக்கிறது....!

பைக் ஓட்டுற எல்லோரும் கண்டிப்பா ஹெல்மெட் போடுங்க பாஸ்! ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.........



(ரெண்டு பதிவா போட்டா கோபம் வருதுல்ல...உக்காந்து படிங்க ..பொறுமையா....ஹா...ஹா...ஹா)



தேவா. S

Comments

நல்ல இருக்கு வண்டி ஓட்டுவோர் ஹெல்மெட் கட்டாயம் போட வேண்டும். இது நமக்கு தான் நல்லது
ஊருக்கு போன் பண்ணும்போது அண்ணே எங்கன்னு கேட்டா அம்மா வெளியில போய்கிறாருனு சொல்வாங்க, அடுத்த கேள்வி ஹெல்மெட் போட்டுக்கிட்டுபோனாரா? போடலன்னு சொன்னா அடுத்த அழைப்பு அண்ணனுக்கு. வீட்டுக்கு வந்துட்டாரான்னு கன்பார்ம் பண்ணுனதுக்கு பிறகுதான் நிம்மதியா இருக்கும்..
AltF9 Admin said…
Anna Konja nerathulla kankalanka vachudiyaya , you are the great...
அருமைய எழுதி இருக்கீங்க. உங்க எழுத்துல தெளிந்த நடை இருக்கு
அருமையான நடை . . . திரைப்படத்தை மிஞ்சும் உச்சக்கட்டம் என அனைத்தும் அருமை. ஆனால் கதையின் நீதி என்ன என்பது தான் குழப்பம். 'நாயகன்' பட பாணியில் சொன்னால் . . . தலைக்கவசம் நல்லதா இல்லை கெட்டதா?????
எப்டிங்க தினம் ஒரு பதிவு போடறீங்க? உங்க எழுத்து ரொம்ப நல்லா இருக்கு. ஆமா அந்த சாதியே உன்னை வெறுக்கிறேன் என்னாச்சு?
அனு said…
ரொம்ப நல்லா எழுதுரீங்க தேவா.. எழுத்து நடை தெளிவா, தடங்கல் எதுவும் இல்லாம போகுது.. இதே போல தொடர்ந்து எழுதினீங்கன்னா பெரிய ஆளா வருவீங்க.. வாழ்த்துக்கள்..

உங்கள் நினைவிற்கு:
தொடரும் போட்ட கதைய இன்னும் முடிக்கல :)
movithan said…
சூப்பர் தேவா.
உங்கள் எழுத்தில் நிறைய வசீகரம் இருக்கு.
வாழ்த்துக்கள்.
Unknown said…
///////"அண்ணி.....அண்ணன் ஹெல்மெட் போடாதனாலேதான் இவ்ளோ பிரச்சினையும்.....எப்படியோ உசுர காப்பாதிட்டங்க....முக தாடையெல்லம் உடைஞ்சு போனதால் முகமே மாறி இருக்கு....எப்படியோ பிழைச்சு வந்தாரே அது போதும்....."
//////////


மிகவும் சிந்திக்க தூண்டும் ஒரு செய்தியை சொல்லி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி
Riyas said…
நல்லாயிருக்கு தேவா... ரசிக்க முடிகிறது உங்கள் எழுத்துக்களை..
Chitra said…
ஒரு கதை சொல்லி - அதற்கு கருத்தும் சொல்லி --- தேவா .... எங்கேயோ போயிட்டீங்க.....! பாராட்டுக்கள்!
Raj said…
//திருமணமான இந்த 4 வருடத்தில் எவ்வளவு அன்யோன்யம் எவ்வளவு புரிதல்.

டாக்டர் சொன்ன முதல் வார்த்தை...." நேரடியாவே சொல்லி விடுகிறேன் பிழைக்கிறது ரொம்ப கஷ்டம் என்று சொல்லி முடிக்கும் முன் தனது 5 வயது மகளின் முகம் கேட்காமலேயே....சுமதியின் கண் முன் வந்தது....//

திருமணமான 4 வருடங்களில்.....5 வயது மகளா...எப்படி? கொஞ்சம் கவனித்திருக்கலாமே!
dheva said…
ராஜ் @ கவனித்து வாசித்தமைக்கும்....அன்பான திருத்தலுக்கும், புரிதலுக்கும் எனது அன்பான் நமஸ்காரம்கள்.

கதை என்று எது எழுதியது இல்லை பாஸ் கன்னி முயற்சி...அதனால்தான் எழுத்துப் பிழையை கவனிக்கவில்லை.

மேலும் கதையின் கரு நோக்கிய சிந்தனையில் கவனிக்காமல் விட்டு விட்டேன்.....மன்னிக்கவும்!


மாற்றம் செய்து விட்டேன்...தோழர்! மிக்க நன்றி!
விஜய் said…
அண்ணா கலக்கிடீங்க ..எழுதிய விதம் அழகாய் கதை முழுக்க படபடப்போடு பயணிக்க வைக்கிறது அண்ணா, மிக்க நன்று கடைசியல் அழகானதொரு கருத்தை வைத்த விதம்...இன்னும் நிறையா இந்த மாதிரி எழுதுங்க ..வாழ்த்துக்கள் அண்ணா
dheva said…
ஜெயந்தி.... @ ஏதோ ஒரு தாக்கம் வரும் போது டக்குன்னு பிடிச்சு உங்க எல்லோர்கிட்டேயும் கொடுத்துட்டு அடுத்த வேளைய பாக்க போயிடுவேன்.....! எழுதி வச்சு கிட்டு ஒண்ணு ஒண்ணா போடுறது....அப்புறம்...வாரத்துக்கு ஒண்ணுதான் எழுதுவேன்...அப்படீன்னு ஒரு வட்டத்துக்குள் நான் மாட்ட மாட்டேன்....சில நேரத்துல 1 மாசம் கூட எழுத தோணாமலேயே போகலாம்....அது நமக்குள் ஜனிக்கும் வேகத்தைப் பொறுத்தது...ஓசோ...சொல்ற மாதிரி....

" நான் ஒரு வெண்மேகம்....
நிறமோ...குணமோ எனக்கு கிடையாது...
காற்றடித்த திசையில் நகர்கிறேன்....
கனத்தால்... மழையாகப் பெய்கிறேன்..."

அவ்ளோதான்....மேடம்.....! உங்களின் தொடர்ச்சியான வருகை நிறைய உத்வேகம் குடுக்கிறது. சாதி...மேட்டர்.... நாளைக்கு போட்டுடலாம்....ஹா...ஹா...ஹா!
dheva said…
சவுந்தர் @ நன்றி தம்பி

ஜீவன் பென்னி @ முடிந்த வரை நம்மைச் சுற்றி இருக்கும் உறவுகளை கட்டாயமாய் அணியச் சொல்லணும் தம்பி.

சிவா @ தம்பி ஏன் கண் கலங்குற...அழக்கூடாது..அண்ணன் இருக்கேன்ல....ஹா..ஹா...ஹா!

கார்த்திக் @ உங்களின் ஊக்கம்தான் பாஸ்... ஏதோ எழுதுறேன்... விழிப்புணர்வு ரொம்ப முக்கியம் பாஸ்!

ஜெரால்ட் @ மாப்ஸ் ...என்ன குழப்பம்...! கண்டிப்பாய் ஹெல்மெட் அணியவேண்டும்..!


அனு @ மிக்க நன்றி அனு....! அந்த கதையை (வாழ்க்கையில் நடக்கிற எல்லாம் கதைதானே... ஹா...ஹா...ஹா) நாளைக்கு போட்டுடலாம் ...தோழி...!

மால்குடி @ உங்கள் வாசிப்பில் கூட ரசனை இருக்கிறது நண்பரே..... ! மிக்க நன்றி!

அம்மன் @ மிக்க நன்றி.... தோழர்!

ரியாஸ் @ மிக்க நன்றி!


சித்ரா..... @ உங்க கிட்ட கத்துகிட்டதுதான் தோழி..... ஹா... ஹா...ஹா.. !

விஜய்.... @ நன்றிப்பா...!
இதை ஒரு குறும் படமாக எடுக்கலாம்
S Maharajan said…
தல போற வேலை இருந்தாலும் வண்டியில் போகும் போது தலை கவசம் மறக்க வேண்டாம் அப்படின்னு அருமையா சொல்லிடிங்க
Manu said…
Superb Narration and good Concept....
நல்லா எழுதியிருக்கீங்க.
சொல்லியவிதம், எழுத்து நடை அருமை தேவா... கொஞ்சம் சுருக்கி எழுதுங்க... (இதை நான் சொல்லக்கூடாது... ;-) )
semmalar said…
Very nice. Best wishes.
semmalar said…
Very nice. Best wishes
அன்பின் தேவா

கதை செல்லும் விதம் நன்று - ஒரு நீதியினை வைத்து ஒரு கதை. நன்று நன்று.

நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா
//தவறு நிகழும் வரை....மெளனமாய் பாக்கெட்டில் இருக்கிறது விபரீதம்....//

...எவ்ளோ பெரிய விஷயத்தை ரெண்டு வரியில் சொல்லிட்டீங்க. நீங்க நீங்க தான்.

சுமதி...... " நான் என்ன பன்ணுவேன்...என் தெய்வம் போயிடுச்சே......" ன்னு கதறிய இடம்.. என் கண்களில் கண்ணீர். பின்னர்.. கொடுத்த இன்ப அதிர்ச்சிக்கு நன்றிங்க.. சப்பாஹ்... ரொம்ப டென்ஷன் ஆயட்டேன்.

அருமையான கதையுடன், கூடுதலாய் அவசியமான கருத்தையும் சொன்ன உங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்! :)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த