Skip to main content

கலையப் போகும் வேஷங்கள்....!


















சுற்றி சுற்றி பார்க்கிறேன்.... மொத்தமாய் என்னிடம் வந்து மோதும் எண்ணங்களில் இருந்து வரும் வார்த்தைகளின் வீச்சு என்னை எப்போதும் மனம் என்ற பெயரில் ஆளுமை செய்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஏதோ ஒரு கட்டளை உள்ளிருந்து ஆணையிட... இது அது என்று சுற்றி சுற்றி செயல்கள் செய்யும் பொம்மையாய் இருக்கும் இவ்வுடலையும் என்னையும் பிரித்துப் போட்டு மூன்றாவதாய் ஏதோ ஒன்று ஆளுமை செய்கிறதே அது என்ன?

நான் என்று கூறுவது என்னுடைய மனமாய் இருந்த போதும் அதையும் தாண்டிய வேறு ஏதோ ஒன்று பின்னிருந்து இயக்கிக்கொண்டே இருக்கிறது. பல நேரங்களில் மறுத்து மனம் அதன் போக்கில் ஓடுகிறது சில நேரங்கலில் அதன் போக்கிலேயே நிற்கிறது. அதன் போக்கில் எடுத்த முடிவுகள் ஒரு வித திருப்தியை உடனே கொடுப்பதையும் உணர முடிகிறது. தங்கு தடையில்லாமல் எல்லா நேரங்களிலும் வார்த்தைகளுக்குள் நுழைந்து எண்ணமாய் மனமாய் அது இருந்ததில்லை ஆனால் அது ஒரு குளிர் சாதன அறையின் குளிர் போல என்னுள் விரவி கிடக்கிறது.

இது... அது என்று என்னால் சுட்டியுணரப்படாததாய் மனதுக்கும் அன்னியப்பட்டதாய்..விரவியிருக்கும் அதற்கு ஆட்டம் என்று எதுவுமில்லை. எப்போதும் சாந்தமாயும் சலனமற்றும் எப்போதா முன்பிருந்த நிலை போலவே இருக்கிறது....ஆடி...ஆடி...மனது அடங்கும் போது மெளனமாய் அதன் இருப்பு காட்டுகிறது. நிலையாமல் இவ்வுலகம் விட்டு நகரும் பொருள்கள் காணும் போது எல்லாம் நெஞ்சின் ஓரம் சிலிர்ப்பாய் அதன் இருப்பு காட்டும் அவ்வளவே...! மற்றபடி அது மனம் பேசுவது போல என்னோடு பேசுவது இல்லை.

சிறுவயது முதல் நான் நடந்தாலும் ஓடினாலும் அசையாமல் அந்த ஒன்று சலனமில்லாமல் என்னையே கவனித்து வந்து இருக்கிறது....! நான் மழலையாய் இருந்தபோதும் சரி...சிறுவனாய் இருந்த போதும் ஏன் இன்று வரை அதனிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. சொல்லவதற்கு வார்த்தைகள் தேடிக்கொண்டேதான் எழுதுகிறேன்...ஆனால் இதுவரை ஒரு சொல் கூட கிடைக்கவில்லை....! நல்ல வெயிலில் தாகத்தோடு வந்து நீர் அருந்தி .....தாகம் தீர்ந்த நிறைவைப் போல மனம் அடங்கும் நேரமெல்லாம்..மெளனமாய் அதை உணர முடிகிறது.

சந்தோஷமான தருணங்கள் என்று மனம் மகிழும், உடல் மகிழும் நேரங்களில் அதன் சாரத்தை வாங்கிக் கொண்டும், சோகமான, வெறுமையான தருணங்களின் சாரத்தை வாங்கிக் கொண்டும் சலனமின்றி அது இருக்கிறது. சலனமற்று இருந்தாலும் புலன்களின் மூலம் மனதை அலையவிட்டு அலையவிட்டு...ஏதேதோ அனுபங்களை பெற்றுக் கொள்வதில் முனைப்போடு இருக்கிறது. இதற்கு மனது மிக உதவி செய்கிறது. எப்போதோ ஆசை பட்டதை எல்லாம் அடையவும், மறுத்ததை எல்லாம் ஆராயவும் இப்படி செய்து கொண்டே இருப்பாதாக தோன்றுகிறது. இப்படி தோன்றுவதையும் மனதின் மூலம் மூளைக்குச் சொல்லி மூளையின் மூலம் ஒரு அழுத்தம் கொடுத்து இந்த கட்டுரை செய்யவேண்டும் என்று ஒரு தன்முனைப்பைக் கொடுத்து எழுதச் செய்து விட்டு அது மெளனமாய் இருக்கிறது.

ஒரு நிறமில்லாமல் குணமில்லாமல் உடல் முழுதும் விரவி இது அது என்றில்லாமல் இருக்கும் அது...ஆழ்ந்து நோக்கும் தருணங்களில், மனது ஒடுங்கும் தருணங்களில் மட்டுமே வெளிப்படுகிறது. வெளிப்படும் தருணங்களில் அதன் அதீத சக்தியை கண நேரங்களில் உணர்ந்தாலும் அதன் விளைவு ஒரு மெல்லிய உணர்வாய் தொடர்ந்து கொண்டிருப்பதாய் தோன்றுகிறது. கண்ணாடியை மறைத்து இருக்கும் தூசு போல.. மனம் தொடர்ந்து அங்கும் இங்கும் ஓட....உடலும் அதன் பின் ஓடி, ஆடி, அழுது, சிரித்து.... அனுபங்களை சேர்த்து களைக்கும் போது உள்ளிருந்து மெதுவாய் தூசி நகர்ந்து கண்ணாடியில் பிம்பம் மங்கலாய் தெரிவது போல அதை மங்கலாக பார்க்க முடிகிறது.

அப்படி மங்கலாய் தோன்றும் நேரங்களில் எல்லாம்....மறைவாய் கேள்விகள் எழுகிறது....ஏன்...?ஏன்...?ஏன்...? இந்த ஆட்டம்? எதை நோக்கி ஓட்டம்....ஏன் இந்த கொக்கரிப்பு....? ஏன் இந்த வீராப்பு....என்று கேள்விகள் எழுப்பி தூசிகளை துடைத்து மெலிதாய் வெளிவருகிது. அப்படிப்பட்ட தருணங்கலிள் நெஞ்சடைத்து...தொண்டை வறண்டு...கண்கள் சொருகி...மூச்சு சீராகி....எங்கிருந்தோ ஏதோ ஒன்று அழுத்தம் கொடுக்க...கண்கள் கண்ணீரை கொண்டுவருகின்றன....! ஏதோ ஒன்றின் மீது நன்றி உணர்ச்சி வருகிறது...எதை நோக்கியோ வணக்கம் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது..இந்த சலனமற்ற நிலைக்கும்....புறத்தில் இருக்கும் ஆட்டத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

கோவிலுக்குப் போய்...போய்....அங்கு உள்ளே இருப்பது கடவுள் என்று நம்பி... நம்பி....வழிபட்டு வழி பட்டு...உள்ளே இருப்பது கல் அதற்கு எப்படி சக்தி வரும் என்று கேள்வி கேட்டு ...அந்த கோவிலின் பிராமண்ட மூலையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து கண்மூடி கேள்விகள் கேட்டு..கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது...உள்ளிருக்கும் உள்ளே இருந்து அது கிசுகிசுக்கும்...இங்கு வருவது என்னை பார்ப்பாதற்கு என்று ....!அப்படிப்பட்ட தருணங்களில் கருவறைக்குள்ளிருப்பதும் எல்லோருக்குள்ளும் மறைந்து இருந்து இயக்குவதும்...ஒன்றே தான் என்றுணர்ந்து...அந்த பிரமாண்ட சக்கியில் மயங்கி...இருக்கும் போது மீண்டும் கண்ணீர் வரும்.....! நீதானா.. நீதானா? என்று கேள்வி கேட்டுக் கொண்டும் சுற்றும் முற்றும் பார்க்கும் போதுசுற்றி நிற்கும் மனிதர்களுக்குள்ளும் சூட்சுமமாய் அது இருப்பதும் மெலிதாய் தெரியவரும்.

வெயிலின் உக்கிரத்தில் மயக்கம் போட்டு ரோட்டோரத்தில் விழுந்து கிடந்த பெரியவரை பார்த்தவுடன் ஓடோடி வந்து தூக்கி தண்ணீர் தெளித்து பதறிய அனைவரிடத்திலும் அது இருந்தது....கடவுளென்றும், கோவிலென்றும் சமூகப் பணியென்றும், காமமென்றும், காதலென்றும், பகைமையென்றும், சுற்றி நிகழும்...எல்லா விஷயங்களும் அதனை அறியும் பொருட்டே நிகழ்கின்றன...! இருக்கு... என்று சொல்பவரும் இல்லை என்று சொல்பவரும் இரண்டும் பொய் என்றறியர் மாறாக இதை உணரும் பொருட்டே....ஜென்ம ஜென்மமாய் ஆதரித்து மறுத்து, மறுத்து..ஆதரித்து என்று....தொடருகிறது வேஷங்கள்........

ஏதோ ஒன்று நிகழும் உங்களுக்குள்ளும்...எனக்குள்ளும்....அப்போது கண்டிப்பாய்.... கலையும் இந்த..வேஷங்கள் எல்லாம்!




தேவா. S

Comments

அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்...
விஜய் said…
அண்ணா ,
//அப்படி மங்கலய் தோன்றும் நேரங்களில் எல்லாம்....மறைவாய் கேள்விகள் எழுகிறது....ஏன்...?ஏன்...?ஏன்...? இந்த ஆட்டம்? எதை நோக்கி ஓட்டம்....ஏன் இந்த கொக்கரிப்பு....? ஏன் இந்த வீராப்பு....என்று கேள்விகள் எழுப்பி தூசிகளை துடைத்து மெலிதாய் வெளிவருகிது. அப்படிப்பட்ட தருணங்கலிள் நெஞ்சடைத்து...தொண்டை வறண்டு...கண்கள் சொருகி...மூச்சு சீராகி....எங்கிருந்தோ ஏதோ ஒன்று அழுத்தம் கொடுக்க...கண்கள் கண்ணீரை கொண்டுவருகின்றன....!//
அருமையான கேள்வி நிறைந்த வரிகள்,

//கோவிலுக்குப் போய்...போய்....அங்கு உள்ளே இருப்பது கடவுள் என்று நம்பி... நம்பி....வழிபட்டு வழி பட்டு...உள்ளே இருப்பது கல் அதற்கு எப்படி சக்கி வரும் என்று கேள்வி கேட்டு ...அந்த கோவிலின் பிராமண்ட மூலையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து கண்மூடி கேள்விகள் கேட்டு..கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது...உள்ளிருக்கும் உள்ளே இருந்து அது கிசுகிசுக்கும்..இங்கு வருவது என்னை பார்ப்பாதற்கு என்று .//

மிக அழகான உணர்வுகள் நிறைந்த மனதின் வெளிப்பாடு..எழுத்தில் வடித்த விதம் மிக அருமைங்க அண்ணா..
இன்னும் நிறையா முறை படித்துவிட்டு இன்னும் நிறையா பின்னூட்டம் இடுகிறேன் ..இப்போதைக்கு கொஞ்சம் தான் இந்த சிறுவனுக்கு புரிந்தது அண்ணா ....
vasu balaji said…
Good one really..
மனசு எதாவது சொல்லி கொண்டே இருக்கிறது...
Unknown said…
உண்மைதான் தேவா ஆதரிப்பதில் ஆயிரம் வேசங்கள் இருந்தால் பரவாயில்லை,, இப்போது எதிர்ப்பதிலும் வேசங்கள் வந்துவிட்டன..
பெரியார் கண்ட பாதையை கலைஞரும், வீரமணியும் சிதைத்து விட்டனர்.. பணம் சேர சேர அதைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்கின்றனர்..

மார்கெட்டிங் எல்லா இடங்களிலும் புகுந்துவிட்டன...
தத்துவ விசாரனை நன்றாகவுள்ளத நண்பா..

எல்லோருக்குள்ளும் தோன்றும் ஆனால் எழுத்துவடிவத்தில் கொண்டுவருவது சிலரால் மட்டுமே முடியும்..

நன்று..
ஆன்மா, அறிவு என்பதை எல்லாம் சரியாக புரிந்து கொள்வதும், புரிந்து கொண்டதை எழுத்தில் கொண்டுவருவதும் சற்றுக் கடினமானதே..

இது உங்கள் எழுத்தில் எளிமையாக வந்துள்ளது.

மிக்க மகிழ்ச்சி தேவா !!!

வாழ்த்துகள்
SASIKUMAR said…
yaaridam intha நன்றி kaaatuvathu yengeh ullathu yendru கண்ணீரை கொண்டுவருகின்றன....!
ஆன்மா, அறிவு என்பதை எல்லாம் சரியாக புரிந்து கொள்வதும், புரிந்து கொண்டதை எழுத்தில் கொண்டுவருவதும் சற்றுக் கடினமானதே..

இது உங்கள் எழுத்தில் எளிமையாக வந்துள்ளது.
--shyssian
Admin said…
அனைவரையும் சிந்திக்க வைக்கம் நல்ல பதிவு...
veeramanikandan said…
மிக ஆழமான பதிவு... எனது சிந்தனைக்கு கொஞ்சம் மட்டுமே புரிகிறது... புரிய முயற்சி செய்கிறேன்... நன் இன்னும் இந்த படைப்பின் அளவுக்கு முதிர்ச்சி அடையவில்லை என்று நினைக்கின்றேன்...
VELU.G said…
மிக பயனுள்ள அருமையான பதிவு
க ரா said…
பின்றீங்க.
அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் brother
Chitra said…
அப்படி மங்கலாய் தோன்றும் நேரங்களில் எல்லாம்....மறைவாய் கேள்விகள் எழுகிறது....ஏன்...?ஏன்...?ஏன்...? இந்த ஆட்டம்? எதை நோக்கி ஓட்டம்....ஏன் இந்த கொக்கரிப்பு....? ஏன் இந்த வீராப்பு....என்று கேள்விகள் எழுப்பி தூசிகளை துடைத்து மெலிதாய் வெளிவருகிது. அப்படிப்பட்ட தருணங்கலிள் நெஞ்சடைத்து...தொண்டை வறண்டு...கண்கள் சொருகி...மூச்சு சீராகி....எங்கிருந்தோ ஏதோ ஒன்று அழுத்தம் கொடுக்க...கண்கள் கண்ணீரை கொண்டுவருகின்றன....! ஏதோ ஒன்றின் மீது நன்றி உணர்ச்சி வருகிறது...எதை நோக்கியோ வணக்கம் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது..இந்த சலனமற்ற நிலைக்கும்....புறத்தில் இருக்கும் ஆட்டத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.


....... சிஷ்யா ..... இன்று முதல் நீங்க குருவாயிட்டீங்க..... அருமையா கருத்துக்களை அள்ளி வீசி இருக்கீங்க.... சூப்பர்!
Paleo God said…
கட உள்...!

:)

சீக்கிறம் வெளிய வாங்க. ரிலாக்ஸ் தேவா! :))
எப்பப்பாரு உங்களுக்குள்ள எதையாவது தேடிக்கிட்டே இருப்பீங்களா? போதும் ரொம்ப உள்ள போகாதீங்க.
அருமை மகன்ஸ்! கட்டுரைக்கு இணையான படம்.
Santhini said…
மிகக் சரியான விசாரணை !!
பயனுள்ள சிந்திக்க வைக்கம் நல்ல பதிவு...
/// வெயிலின் உக்கிரத்தில் மயக்கம் போட்டு ரோட்டோரத்தில் விழுந்து கிடந்த பெரியவரை பார்த்தவுடன் ஓடோடி வந்து தூக்கி தண்ணீர் தெளித்து பதறிய அனைவரிடத்திலும் அது இருந்தது....///

ரொம்ப நல்லா இருக்கு தேவா..
உங்க எழுத்து, மனதை தொடும் வண்ணம் அழுத்தமா இருக்குங்க.
நன்றி :)
//ஏதோ ஒன்று நிகழும் உங்களுக்குள்ளும்...எனக்குள்ளும்....அப்போது கண்டிப்பாய்.... கலையும் இந்த..வேஷங்கள் எல்லாம்//!

காத்திருப்போம் அதுவரை...
நீங்க மனோ தத்துவ நிபுணரோ ..!!!
dheva said…
பின்னூட்டமிட்ட..அத்துனை பேருக்கும் எனது அன்பான நமஸ்காரங்கள்..மற்றும் நன்றிகள்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த