Skip to main content

படைப்பு.....!



















வார்த்தை இல்லா வார்த்தை பேச வேண்டும்; அதில் யாரும் சொல்லாத சொற்கள் கொண்டு நான் நிரப்பவேண்டும்; இல்லாத கருத்தை நான் பகிர வேண்டும்; மொழியற்ற மொழி ஒன்றை கற்க வேண்டும் அதில் சொல்லாத மேன்மைகள் நான் சொல்லவேண்டும்.

படித்தன எல்லாம் சுமையாகிப் போயின; பகிர்ந்தவை எல்லாம் எண்ணமாக உருக்கொண்டு திடமாகிப்போயின; திட்டமெல்லாம் கலைந்து கொண்டே இருந்தன; மனிதரெல்லாம் மாண்டு கொண்டே இருந்தனர்; பொருளான எல்லாம் பொருளற்று போனது; பொருளற்றது எல்லாம் பொருளாகிப் போனது. விந்தை மனமோ அதற்கு ஆயிரம் கற்பிதங்கள் கொண்டது.

வீசும் காற்றும், கொட்டும் மழையும், பளிச்சிடும் மின்னலும், வெக்கையான வெயிலும், மரமும், செடியும், கொடியும் ,விலங்கும், பறவையுமென பரவி விரிந்த இவ்வுலகில் பார்த்தவை எல்லாம் அழியும் என்ற விந்தை வாழ்க்கைக்கு விளக்கங்கள் கேட்டு, பெற்று பொதி சுமக்கும் மனிதராய் ஆகிப்போய் ஒரு நாள்.... அந்த ஒரு நாள்... மறு பக்கம் கிடக்கும் எலும்புத் துண்டினை கவ்வ நினைத்து சாலை கடக்கும் நாய் சட்டென வந்த ஒரு கன வாகனத்தில் அடிப்பட்டு உயிர் விடுவது போல முடிந்து போகிறதே எம் வாழ்க்கை....

மிச்சமில்லை சொச்சமில்லை மொத்தமாய் கொண்டு போய்க் கொண்டு இருக்கின்ற வாழ்க்கையில், அறிஞர் என்றும், ஞானி என்றும், விஞ்ஞானி என்றும், தலைவர் என்றும், மன்னரென்றும் கூவி கூவி மார்தட்டி மாண்டு கொண்டிருந்தனர் மனிதரெல்லாம்.இவர் சென்றவிடம் எதுவன்றியாமல், எரிந்து போன அல்லது மண்ணோடு மட்கிப் போனதே இவரின் இறுதியென்றால் கூவி... கூவி... நான் இன்னாரென்று கூறுவதின் அர்த்தம்தான் என்ன?

இன்னதென்று அறிவேனில்லை; என்னவென்றும் புரிவேனில்லை ஆனால் நித்தம் நான் கட்டும் வேசத்துக்கொன்றும் குறைவு இல்லை. ஒரு நாளேனும் தனித்தமர்ந்து சிந்திப்பெனில்லை, வெட்டவெளி ஆகாயம் உற்று நோக்குவேனில்லை உருத்தெரியாமல் அழிவெய்யும் தேகத்தின் செயல் பாடு அறிவேனில்லை.

கற்பனையாய் யாரோ நானென்ற ஆத்திர அறிவகன்ற ஒரு கற்பனை வாழ்க்கை குதிரையில் பயணம் செய்யும் ஒரு மூடனாய்...என்னையே ஏமாற்றி ஏமாற்றி....பகலெல்லாம் ஜம்பம் பேசி...போகும் இடமெல்லாம் தடையின்றி புலன் பறக்கவிட்டு தெருவோர நாய் போல வாய்பிளந்து மூச்சிறைக்க கடந்து இரவென்னும் மற்றுமொறு ரகசியத்துக்குள் நுழைந்து பேய் போல பிணம்தழுவும் ஒரு காமம் கொண்டு அதற்கும் காதலென்ற வெற்றுப் பெயரிட்டு பூதமாய் உறங்குவேன் கடை வாய் எச்சில் ஒழுக மற்றுமொரு விடியலுக்காய் பொய்மையில் கரைத்த என் ஜம்பங்களின் விற்பனைக்காய்...

ஒரு புள்ளியாய் நான் கரைந்து போய்...போக்கிடம் இல்லாத ஒரு வெற்று பொருளற்ற பொருளாய், நிறமற்ற நிறமாய், சுவையற்ற சுவையாய், என்றுதான் கரையுமோ என் ஜீவன். சிறுவனாய் மிட்டாய்க்கும், தெருவோர விளையாட்டுக்கும் ஆசைப்பட்டு, பதின்ம வயதில் எதிர் பாலார் மீதிருந்த ஈர்ப்பினில் ஆசைப்பட்டு, இளைஞனாய் பதவிக்கும் பகட்டுக்கும் காமத்துக்கும் ஆசைப்பட்டு, மத்திம வயதில் தலைமுறைக்கு வேண்டுமென செல்வம் சேர்க்க ஆசைப்பட்டு, நரையோடிப் போய் நாடி தளர்ந்த வயதினில் மீண்டும் இளமைக்கு ஆசைப்பட்டு....மாயா புள்ளியை நோக்கி ஓடி ஓடி உடலில் பல நோய் சேர்ந்து....மரணிக்கும் முன்பு என்ன நிகழ்கிறதென்றறிய ஒரு தடிமனான மூளை கொண்டு....மரித்துப் போவதுதான் வாழ்க்கையோ.....?

பொய்மையில் சேராமல் நித்தம் உள் நோக்கி என்னின் தவம் அறிந்து வாழ்வின் பொருளறிந்து ஒரு மெல்லிய மலர் மலர்ந்து விதை பரப்பி பின் மடிவதுபோல நிகழாதோ எம் வாழ்க்கை? எம் மூளையின் மடிப்புகளி எத்தனை சிந்தனைகள் இருந்து என்ன பயன்? கோடி கோடி செல்வம் சேர்த்துதான் என்ன பயன்? எம்மின் கல்வியும் செல்வமும் ஆக்கமும் புறத்திலிருக்கும் எம்மை ஒத்த மானிடருக்கு பயன் தராவிடில் அவற்றை பெறுவதின் நோக்கம்தானென்ன? எம் இரைப்பை நிரப்பி எமக்கு வேண்டுவோர் இரைப்பை மட்டும் நிரப்பும் சுயநலம்தானா வாழ்க்கை?

உடலெல்லாம் அக்னி தின்னும் முன் அல்லது மண் அரிக்கும் முன் மரணித்த உடனே எடுக்கச் சொல்லியிருக்கிறேன் என்னின் உடலின் பாகமெல்லாம். எதுவெல்லாம் பயன் தருமோ அதுவெல்லாம் கொள்ளுங்கள்...என்ற சாசனம் எழுத்தில் உறுதி செய்து உறவுகளிடம் சமர்ப்பித்தேன்....! எமது கண்களும், சிறு நீரகமும், இன்னும் என்னவெல்லாம் உதவுமோ அத்தனையும் பிய்தெடுத்து உபயோகம் கொள்வீர் ஏனெனில் யாம் கொனர்ந்தெதென்று எதுவுமில்லையன்றோ?

இதைக் கூட மிகைப்பட்ட செயலென்ற ஒரு வேசம் கட்டி காண்பித்த மமதை கொண்ட மானம் கெட்ட மனதோடு சண்டையிட்டு...எம்மின் இவ்வறிவிப்பு மிகைப்பட்ட மனிதரின் சிந்தனைகளை உயிர்ப்பிக்கும்.....அந்த உயிர்ப்பிப்பில் கோடணு கோடி கண்கள் பார்க்கும்....., மனிதம் வாழும்....என்ற எண்ணம் திண்ணமானதின் விளைவு இக்கட்டுரை......

என்னவெல்லாம் செய்ய இயலும்? இயன்றவரை செய்வோமே....அதுவன்றி வெறுமனே மரித்துப் போனால்.....எதற்குதான் இந்த படைப்பு.....?



தேவா. S

Comments

Kousalya Raj said…
//உடலெல்லாம் அக்னி தின்னும் முன் அல்லது மண் அரிக்கும் முன் மரணித்த உடனே எடுக்கச் சொல்லியிருக்கிறேன் என்னின் உடலின் பாகமெல்லாம். எதுவெல்லாம் பயன் தருமோ அதுவெல்லாம் கொள்ளுங்கள்...என்ற சாசனம் எழுத்தில் உறுதி செய்து உறவுகளிடம் சமர்ப்பித்தேன்....! எமது கண்களும், சிறு நீரகமும், இன்னும் என்னவெல்லாம் உதவுமோ அத்தனையும் பிய்தெடுத்து உபயோகம் கொள்வீர் ஏனெனில் யாம் கொனர்ந்தெதென்று எதுவுமில்லையன்றோ?//

கவிதை போன்ற எழுத்து நடையும் , நெகிழ்ச்சியான கருத்துகளும் தொடர்ந்து படித்து கொண்டே இருக்கிறேன், முற்று பெறவே இல்லை......
என்னா ஆச்சி பாஸ்..???
என்னவெல்லாம் செய்ய இயலும்? இயன்றவரை செய்வோமே....அதுவன்றி வெறுமனே மரித்துப் போனால்.....எதற்குதான் இந்த படைப்பு.....?
இது சூப்பர் இப்படி ஓரு அழகான வரி என்ன தத்துவம் அனைத்தும் இதில் அடங்கி இருக்கிறது
Unknown said…
பெருமைபடுகிறேன் தேவா.. அற்புதமான கவிதையான எழுத்து நடை ..
பிரமிக்க வைத்தது எழுத்தும்... கருத்தும்..
பேச்சற்று போகிறேன்..மேற்கொண்டு பேச...
மாப்ள, சூப்பருடா . . . ரொம்ப நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்
Jey said…
// சிறுவனாய் மிட்டாய்க்கும், தெருவோர விளையாட்டுக்கும் ஆசைப்பட்டு, பதின்ம வயதில் எதிர் பாலார் மீதிருந்த ஈர்ப்பினில் ஆசைப்பட்டு, இளைஞனாய் பதவிக்கும் பகட்டுக்கும் காமத்துக்கும் ஆசைப்பட்டு, மத்திம வயதில் தலைமுறைக்கு வேண்டுமென செல்வம் சேர்க்க ஆசைப்பட்டு, நரையோடிப் போய் நாடி தளர்ந்த வயதினில் மீண்டும் இளமைக்கு ஆசைப்பட்டு....மாயா புள்ளியை நோக்கி ஓடி ஓடி உடலில் பல நோய் சேர்ந்து....மரணிக்கும் முன்பு என்ன நிகழ்கிறதென்றறிய ஒரு தடிமனான மூளை கொண்டு....மரித்துப் போவதுதான் வாழ்க்கையோ.....?//

ரூம் போட்டு யோசிச்சீங்களோ??>, அருமையான பதிவு, தொடருங்கள்.
க ரா said…
வீட்டுல ரொம்ப அடி வாங்கிட்டீங்களோ ? :)
VELU.G said…
//என்னவெல்லாம் செய்ய இயலும்? இயன்றவரை செய்வோமே....அதுவன்றி வெறுமனே மரித்துப் போனால்.....எதற்குதான் இந்த படைப்பு.....?
//

யோசிக்கிறீர்களா தேவா?
Anonymous said…
இயன்றவரை, நாம் இருக்கும் வரை,, என்னைப்
பொருத்தவரை,,, கல்விக்காக பல உதவிகளை செய்துகொண்டே இருக்கவேண்டும் .
படைப்பு மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.

க.பார்த்திபன்
சிங்கப்பூர்.
மிக ஆழமா சிந்திக்கின்றீர்கள்... கட்டுரைகவிதைக்கு பாராட்டுக்கள்.
Paleo God said…
தொடர்ந்து அசத்தறீங்க!
வற்றாத அருவியாக, ஊற்றாக பொங்கிப் பிரவாகமெடுத்து கட்டுரையாய், கவிதையாய் மற்றுமின்றி ஒரு விதையாய் மனதில் பதியச்செய்யும் உங்கள் வீச்சு என்னை வியக்க வைக்கிறது.
எழுத்தில் புதுமைகள் மிளிர்கிறது . நேர்த்தியான எழுத்து நடை . சிறப்பான பதிவு பகிர்வுக்கு நன்றி . தொடரட்டும் . அமீரகத்து விடிவெள்ளி உங்களின் வெற்றி பயணம் .
ஹேமா said…
மனம் கேள்விகளோடேயே பயணித்துக்கொண்டிருக்கிறது தேவா.
சிந்தனை ஆழம் அதிகம்.
நல்லதையே செய்வோம்.
Mahi_Granny said…
அழகாய் ஆவேசமாய் சொல்லியிருக்கிறீர்கள் . எழுத்துநடை அமர்க்களம். சொல்ல வந்ததை சொல்லியதில் திருப்தி.
///இவர் சென்றவிடம் எதுவன்றியாமல், எரிந்து போன அல்லது மண்ணோடு மட்கிப் போனதே இவரின் இறுதியென்றால் கூவி... கூவி... நான் இன்னாரென்று கூறுவதின் அர்த்தம்தான் என்ன?///
அருமை அண்ணா .. இதை தான் நான் உங்களுடைய இன்னொரு பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தேன் ..
//பொய்மையில் கரைத்த என் ஜம்பங்களின் விற்பனைக்காய்...//
ஐயோ .. எப்படி அண்ணா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க .. அருமை ..
//உடலெல்லாம் அக்னி தின்னும் முன் அல்லது மண் அரிக்கும் முன் மரணித்த உடனே எடுக்கச் சொல்லியிருக்கிறேன் என்னின் உடலின் பாகமெல்லாம். எதுவெல்லாம் பயன் தருமோ அதுவெல்லாம் கொள்ளுங்கள்...என்ற சாசனம் எழுத்தில் உறுதி செய்து உறவுகளிடம் சமர்ப்பித்தேன்....! எமது கண்களும், சிறு நீரகமும், இன்னும் என்னவெல்லாம் உதவுமோ அத்தனையும் பிய்தெடுத்து உபயோகம் கொள்வீர் ஏனெனில் யாம் கொனர்ந்தெதென்று எதுவுமில்லையன்றோ?//
உண்மை அண்ணா .. நிச்சயம் அனைவரும் செய்ய வேண்டிய ஒன்று ..!!
Anonymous said…
நாம் மற்றவர்களுக்கு முடிந்த அளவு அனைத்து விதத்திலும் உதவியாக இருக்க வேண்டும்.இறப்புக்கு பின்பு கூட உடல் உறுப்புகளை தான செய்வது முலம் என்பதை தான் உங்கள் பதிவு உணர்த்துகிறது.கவிதை நடையில் நல்ல கட்டுரை.படிப்பவர்களையும் பதிவுடன் ஒண்றினைந்து தான் உங்கள் எழுத்தின் வெற்றி.( கலக்கிபுட்டே தேவா ஊர் பாசத்தில் -)
dheva said…
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
விஜய் said…
தேவா அண்ணா ,


வாழ்க்கையின் யதார்த்தத்தை அழகா சொல்லி இருக்கீங்க அண்ணா . ஒவ்வொரு கல்வியற்ற பாமரன் மனசும் கூட இரக்கும் கடைசி துளிகளில் நினைத்து இருக்க கூடும் இவைகளை, எழுத்துக்களை அமைத்த விதம் மிக அழகா இருக்குங்க அண்ணா . நிச்சயம் அடிப்படை கல்வியரிவாலன் கூட இந்த மனித வாழ்க்கையின் யதார்த்தத்தை உங்க எழுத்து மூலம் புரிஞ்சுக்க முடியும் அண்ணா .மிக அழகான பதிவு என்பதை காட்டிலும், மிக அவசியமான பதிவு இது என்று கூறுவது மிக பொருத்தமாய் இருக்கும் ..

எப்பவும் போல இந்த பதிவுலயும் கலக்கி இருக்கீங்க ..
dheva said…
ஹா...ஹா...ஹா.....

நன்றி ஜெய்....... ! பயத்தினால் நான் மிகைப்பட்டவர்கள் என்றூ போடவில்லை அப்படியிருந்தால் கட்டுரை எப்படி எழுதுவேன்.

நிறைவு செய்யும் போது எதிர்மறையான எண்ணத்தோடு வாசகர்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் செல்லக்கூடாது என்று நினைத்தேன். மேலும் எதிர் மறை எண்ணங்களை விதைப்பதும், அவலங்களை எடுத்துக்காட்டும் அளவில் நிற்பது ஒரு வித சுயவிளம்பரம் என்பது எனது ஒரு அபிப்ராயம்..... ஒரு தீர்வினை எட்டவேண்டும் என்று நினைப்பது உண்மையான சமூக அக்கறை.....

IF WE ARE NOT PART OF SOLUTION, THEN....WE ARE THE PROBLEM!

நன்றி ஜெய்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த