Skip to main content

விலை....!



















அச்சரங்களின் அடுக்குகளில்
துடைக்கப்படும் தூசுகளில்
கூட்டும் அலங்காரங்களில்..
வாசிப்பாளனை... அசத்தும் முயற்சிகளில்
மாறிக் கொண்டே இருக்கிறது
தூரிகைகளின் வர்ணங்கள்...!

கூட்டி குறைத்து, நீட்டி சுருக்கி...
சுருதிகளின் சுத்தங்கள் மழிக்கப்பட்டு...
எதார்த்த குழந்தைகளுக்கு...
மீசைகளிட்டு முறுக்கி
புஜ பலங்கள் காட்டும் முயற்சிகளில்
பின்புலத்தில் விற்றுத்தான் ஆக வேண்டும்...
என்ற வக்கிரத்தின் ஜோடனைகளில்
மரித்துப் போன அர்த்தங்களின்
கல்லறைகளில் தொடங்குகிறது
ஓராயிரம் எழுத்து வியாபாரங்கள்!

கனமா எதையோ எழுதிட்டு அதுக்குள்ள திரும்ப திரும்ப சுத்திகிட்டு இருக்க முடியாம ஒரு மாற்றத்துக்காக ஒரு கமர்சியல் பீட். சூப்பர் ஸ்டார் பதிவு எழுதணும்னு ஆரம்பிச்சேன்....தேன இறக்கி வச்சுட்டேன். கடவுளும் நானும் தொடர் பதிவு எழுத வந்தேன்....வேறு ஏதோ எழுதிட்டு போறேன்.(அடுத்த பதிவு கடவுளும் நானும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... போடுறதே ரொம்ப தாமதம் இதுல என்ன மகிழ்ச்சி வேண்டி கிடக்கு.. (மனசாட்சியின் மிரட்டல்))

வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்....சுவாரஸ்யமான வாழ்க்கையை சுவாரஸ்யமா தொடரவிட்டு வேடிக்கை பாக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் ஏன்னா எப்பவுமே திட்டமிடல்கள் நம்மை துரத்தும் ....ஆனா அப்போ ...அப்போ....சுவாரஸ்யத்தை எகிர்பாராமல் நடப்பதை தொடரவிட்டு... கொஞ்சம் ரசிப்பதில் தப்பு இல்லை.....

என்ன கேக்குறீங்க...? கவிதைக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்னா....?

அதான் சொன்னேனே...வாழ்க்கையை தொடரவிட்டு அப்போ அப்போ ரசிக்கணும்னு.... இப்போ நான் ரசிச்சுகிட்டு இருக்கேன்.... தொடர்பில்லாமல் தொடர்கிறேன்....!


தேவா. S

Comments

Chitra said…
.வாழ்க்கையை தொடரவிட்டு அப்போ அப்போ ரசிக்கணும்னு.... இப்போ நான் ரசிச்சுகிட்டு இருக்கேன்.... தொடர்பில்லாமல் தொடர்கிறேன்....!

..... Sure to enjoy life's blessings with that attitude! :-)
//வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்....//

உண்மைங்க...
Mohamed Faaique said…
//வாழ்க்கையை தொடரவிட்டு அப்போ அப்போ ரசிக்கணும்னு.... இப்போ நான் ரசிச்சுகிட்டு இருக்கேன்.... தொடர்பில்லாமல் தொடர்கிறேன்....!//

எல்லோருடைய நிலையும் இதுதான் ...
Unknown said…
கவிதை நல்லாயிருக்குங்க தேவா..
அடுத்த பதிவு கடவுளும் நானும் !!!!!!!!!!!!
sakthi said…
ஆனா அப்போ ...அப்போ....சுவாரஸ்யத்தை எகிர்பாராமல் நடப்பதை தொடரவிட்டு... கொஞ்சம் ரசிப்பதில் தப்பு இல்லை

நல்ல கருத்து தேவா

மின்னல் வேகத்தில் தொடர்ந்து பதிவிடுவதற்கு வாழ்த்துக்கள்

ஒரு கவிதை எழுதறகுள்ள எனக்கு நாக்கு வெளியே தள்ளிடுது

கலக்குங்க
//கூட்டி குறைத்து, நீட்டி சுருக்கி...
சுருதிகளின் சுத்தங்கள் மழிக்கப்பட்டு...
எதார்த்த குழந்தைகளுக்கு...
மீசைகளிட்டு முறுக்கி
புஜ பலங்கள் காட்டும் முயற்சிகளில்
பின்புலத்தில் விற்றுத்தான் ஆக வேண்டும்...
என்ற வக்கிரத்தின் ஜோடனைகளில்
மரித்துப் போன அர்த்தங்களின்
கல்லறைகளில் தொடங்குகிறது
ஓராயிரம் எழுத்து வியாபாரங்கள்!/ /
சரியாச்சொன்னீங்க... //சுவாரஸ்யத்தை எகிர்பாராமல் நடப்பதை தொடரவிட்டு... கொஞ்சம் ரசிப்பதில் தப்பு இல்லை// இதுலதான் திரில்லே இருக்கு. நடக்குறத அப்புடியே ஏத்துக்கிட்டு எத்தனை பேரால வாழ முடியும்.
//.(அடுத்த பதிவு கடவுளும் நானும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... போடுறதே ரொம்ப தாமதம் இதுல என்ன மகிழ்ச்சி வேண்டி கிடக்கு.. (மனசாட்சியின் மிரட்டல்))///

சீக்கிரமே எழுதுங்க ..

//எதார்த்த குழந்தைகளுக்கு...
மீசைகளிட்டு முறுக்கி
புஜ பலங்கள் காட்டும் முயற்சிகளில்
பின்புலத்தில் விற்றுத்தான் ஆக வேண்டும்...//

இந்த வரிகள் கலக்கல் அண்ணா ..
//வாசிப்பாளனை... அசத்தும் முயற்சிகளில்
மாறிக் கொண்டே இருக்கிறது
தூரிகைகளின் வர்ணங்கள்...!//

Playing to the Galary-ன்னு இதை தான் சொல்லுவாங்க தேவா? வாசிப்பாளனை அசத்துகிற முயற்ச்சிகள் தான் பல மலினமான இலக்கியங்கள் வெளி வருவதற்கு காரணங்களாக இருக்கிறது

நல்ல வரிகள்! பாராட்டுக்கள்
Jey said…
//வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்....சுவாரஸ்யமான வாழ்க்கையை சுவாரஸ்யமா தொடரவிட்டு வேடிக்கை பாக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் ஏன்னா எப்பவுமே திட்டமிடல்கள் நம்மை துரத்தும் ....ஆனா அப்போ ...அப்போ....சுவாரஸ்யத்தை எகிர்பாராமல் நடப்பதை தொடரவிட்டு... கொஞ்சம் ரசிப்பதில் தப்பு இல்லை.....//

very nice.
வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்..

//

உண்மை
சரி அடுத்த பதிவு எப்போ?
அடுத்த பதிவுல என்ன போட போறீங்க? அதிலும் கவிதையா? தத்துவமா? - சும்மா வாழ்க்கையின் சுவாரசியத்திற்கு காத்திருக்க முடியாதவர் சங்கம்
கவிதை ஏதோ சொல்லுது புரியல. காசுக்காக எழுதுறவங்கள பத்தி சொல்லியிருக்கீங்களா?
Riyas said…
//வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்....சுவாரஸ்யமான வாழ்க்கையை சுவாரஸ்யமா தொடரவிட்டு வேடிக்கை பாக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் ஏன்னா எப்பவுமே திட்டமிடல்கள் நம்மை துரத்தும் //

யாவும் உண்மை..
க ரா said…
வந்தேன் .. வாசித்தேன்.. செல்கிறேன் :)
nis said…
உங்களின் வரிகள் ஒவ்வொன்றும் வியக்க வைக்கிறது
nice
vinthaimanithan said…
ம்ம்ம்ம்...கச்சேரி களைகட்டுது...
என்ன கேக்குறீங்க...? கவிதைக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்னா....?
////

யாரு இந்த டவுட்ட கேட்டா ? சொல்லுங்க இப்படியே மசாலா இல்லாம தந்தூரி பண்ணி சாப்ட்டு போயிடுவோம்
கழுகு கூட்டத்தில் ஒருவனாக நான் இணைய எனக்கு தகுதி இருந்தால் சொல்லுங்கள் அண்ணா...உங்கள் கையால் ஒரு blog-ம் open செய்து கொடுங்கள்...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த