அச்சரங்களின் அடுக்குகளில்
துடைக்கப்படும் தூசுகளில்
கூட்டும் அலங்காரங்களில்..
வாசிப்பாளனை... அசத்தும் முயற்சிகளில்
மாறிக் கொண்டே இருக்கிறது
தூரிகைகளின் வர்ணங்கள்...!
கூட்டி குறைத்து, நீட்டி சுருக்கி...
சுருதிகளின் சுத்தங்கள் மழிக்கப்பட்டு...
எதார்த்த குழந்தைகளுக்கு...
மீசைகளிட்டு முறுக்கி
புஜ பலங்கள் காட்டும் முயற்சிகளில்
பின்புலத்தில் விற்றுத்தான் ஆக வேண்டும்...
என்ற வக்கிரத்தின் ஜோடனைகளில்
மரித்துப் போன அர்த்தங்களின்
கல்லறைகளில் தொடங்குகிறது
ஓராயிரம் எழுத்து வியாபாரங்கள்!
கனமா எதையோ எழுதிட்டு அதுக்குள்ள திரும்ப திரும்ப சுத்திகிட்டு இருக்க முடியாம ஒரு மாற்றத்துக்காக ஒரு கமர்சியல் பீட். சூப்பர் ஸ்டார் பதிவு எழுதணும்னு ஆரம்பிச்சேன்....தேன இறக்கி வச்சுட்டேன். கடவுளும் நானும் தொடர் பதிவு எழுத வந்தேன்....வேறு ஏதோ எழுதிட்டு போறேன்.(அடுத்த பதிவு கடவுளும் நானும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... போடுறதே ரொம்ப தாமதம் இதுல என்ன மகிழ்ச்சி வேண்டி கிடக்கு.. (மனசாட்சியின் மிரட்டல்))
வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்....சுவாரஸ்யமான வாழ்க்கையை சுவாரஸ்யமா தொடரவிட்டு வேடிக்கை பாக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் ஏன்னா எப்பவுமே திட்டமிடல்கள் நம்மை துரத்தும் ....ஆனா அப்போ ...அப்போ....சுவாரஸ்யத்தை எகிர்பாராமல் நடப்பதை தொடரவிட்டு... கொஞ்சம் ரசிப்பதில் தப்பு இல்லை.....
என்ன கேக்குறீங்க...? கவிதைக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்னா....?
அதான் சொன்னேனே...வாழ்க்கையை தொடரவிட்டு அப்போ அப்போ ரசிக்கணும்னு.... இப்போ நான் ரசிச்சுகிட்டு இருக்கேன்.... தொடர்பில்லாமல் தொடர்கிறேன்....!
தேவா. S
Comments
..... Sure to enjoy life's blessings with that attitude! :-)
உண்மைங்க...
எல்லோருடைய நிலையும் இதுதான் ...
நல்ல கருத்து தேவா
மின்னல் வேகத்தில் தொடர்ந்து பதிவிடுவதற்கு வாழ்த்துக்கள்
ஒரு கவிதை எழுதறகுள்ள எனக்கு நாக்கு வெளியே தள்ளிடுது
கலக்குங்க
சுருதிகளின் சுத்தங்கள் மழிக்கப்பட்டு...
எதார்த்த குழந்தைகளுக்கு...
மீசைகளிட்டு முறுக்கி
புஜ பலங்கள் காட்டும் முயற்சிகளில்
பின்புலத்தில் விற்றுத்தான் ஆக வேண்டும்...
என்ற வக்கிரத்தின் ஜோடனைகளில்
மரித்துப் போன அர்த்தங்களின்
கல்லறைகளில் தொடங்குகிறது
ஓராயிரம் எழுத்து வியாபாரங்கள்!/ /
சரியாச்சொன்னீங்க... //சுவாரஸ்யத்தை எகிர்பாராமல் நடப்பதை தொடரவிட்டு... கொஞ்சம் ரசிப்பதில் தப்பு இல்லை// இதுலதான் திரில்லே இருக்கு. நடக்குறத அப்புடியே ஏத்துக்கிட்டு எத்தனை பேரால வாழ முடியும்.
சீக்கிரமே எழுதுங்க ..
//எதார்த்த குழந்தைகளுக்கு...
மீசைகளிட்டு முறுக்கி
புஜ பலங்கள் காட்டும் முயற்சிகளில்
பின்புலத்தில் விற்றுத்தான் ஆக வேண்டும்...//
இந்த வரிகள் கலக்கல் அண்ணா ..
மாறிக் கொண்டே இருக்கிறது
தூரிகைகளின் வர்ணங்கள்...!//
Playing to the Galary-ன்னு இதை தான் சொல்லுவாங்க தேவா? வாசிப்பாளனை அசத்துகிற முயற்ச்சிகள் தான் பல மலினமான இலக்கியங்கள் வெளி வருவதற்கு காரணங்களாக இருக்கிறது
நல்ல வரிகள்! பாராட்டுக்கள்
very nice.
//
உண்மை
யாவும் உண்மை..
nice
////
யாரு இந்த டவுட்ட கேட்டா ? சொல்லுங்க இப்படியே மசாலா இல்லாம தந்தூரி பண்ணி சாப்ட்டு போயிடுவோம்