Skip to main content

சினேகம்...!






















எப்போதாவது...வந்து செல்கிறது...
உன் நினைவுகள்...!
கடந்தகால விதைத்தலின்
விசுவாசமாய்....!
மெலிதாய் கிளர்ந்தெழும்.. நினைவுகளூடே....
மெளனமான பார்வையால்..
நம் கடந்த கால...சந்தோசங்களை
அவ்வப்போது வாரித்தெழிக்கிறாய்....!

எதிர்பார்ப்பே இல்லாமல் ....
நேசித்ததின் அடையாளமாய்...
இன்னமும்....ஒரு எதார்த்த
பிம்பமாய்... என்னை வலம்
வரும் உன் நினைவுகளோடு...
உன் பெயர் சொல்லி...
அழைத்து வாஞ்சையோடு...
என்னருகே இருத்தி...
என் பேத்தியின் தலை தடவும்
பொழுதுகளில்..கோர்க்கும்...
கண்ணீரில் ஒளிந்திருக்கிறது...
இத்தனை காலம் உன்னிடம்
சொல்லாத என்....வயதான காதல்!


காதல் என்பது பல நேரங்களில் ஒரு தயக்கத்திலேயே சொல்ல முடியாமல் போகும் அளவிற்கு காலத்தின் கணக்குகள் இருக்கும். சொல்லாத காதல்கள் சொல்லாததால் இல்லை என்றாகிவிடுமா? வாழ்வின் பல நேரங்களில் கடந்து வந்த நேசங்களின் நினைவுகள் மரிக்கும் வரை மனதை விட்டு அது அகலாது,

பொய்யாய் ஓராயிர மறைத்தல்களை கைக்கொண்டு வாழ்க்கையின் படிகளை கடந்து கொண்டுதானிருப்போம்...கடக்கும் பொழுதுகளில் ஏதோ ஒரு கணங்களில் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் சில நினைவுகள் நினைவுகளை வலுக்கட்டாயமாக கொண்டு வராமலேயே ஒரு வித ஏக்கத்தின் சாயலை உணர்வு நிலையில் நின்று ஒரு வித சந்தோசத்தை உடலெல்லாம் பரவசெய்யும் கண்ணிய மிக்க உறவுகள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது....?

மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்......இல்லை என்று சொல்பவர்கள்...ஒரு கோப்பை சூடான தேனீரோடு கொஞ்சம் தனிமையில் போய் வானம் பார்த்து அமருங்கள்....உங்களுக்கான அனுபவம் வாய்க்கலாம்...!


தேவா. S

Comments

க ரா said…
அது எப்படி வயசான உடனே நான் இப்படித்தான் இருப்பேன்னு நீங்களே உங்களே வரஞ்சு வெச்சிருக்கிங்க.. ஒவியம் சூப்பர்.. கவிதை அத விட :)
Chitra said…
மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்......இல்லை என்று சொல்பவர்கள்...ஒரு கோப்பை சூடான தேனீரோடு கொஞ்சம் தனிமையில் போய் வானம் பார்த்து அமருங்கள்....உங்களுக்கான அனுபவம் வாய்க்கலாம்...!


.......இந்த மென்மையான உணர்வுகளை, வயாதாகும் முன்னே, நீங்கள் உணர்ந்து உள்ளதை, கவிதையிலும் அதன் விளக்கத்திலும் காண முடிகிறது. :-)
Anonymous said…
//கடக்கும் பொழுதுகளில் ஏதோ ஒரு கணங்களில்
விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்
சில நினைவுகளை வலுக்கட்டாயமாக
கொண்டு வராமலேயே
ஏக்கத்தின் சாயலை உணர்வு நிலையில்
நின்று ஒரு சந்தோசத்தை உடலெல்லாம்
பரவசெய்யும் கண்ணிய மிக்க உறவுகள்
இல்லாமல் யாரும் இருக்க முடியுமா?....//

கவிதைக்கு விளக்கமும் கவிதையாகவே இருக்கே அண்ணே!
சூப்பர்:)
//மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்......இல்லை என்று சொல்பவர்கள்...ஒரு கோப்பை சூடான தேனீரோடு கொஞ்சம் தனிமையில் போய் வானம் பார்த்து அமருங்கள்....உங்களுக்கான அனுபவம் வாய்க்கலாம்...!//

நன்றாக இருக்கிறது அண்ணா.மேலே குறிபிட்டது எனக்கு பிடித்த வரிகள்
@dheva
உங்கள் வயது என்ன என்று எனக்கு தெரியாது .ஆனால் சித்ரா கூறியது போல் இருந்தால் உங்கள் மனது பூ போன்றது
தள்ளாடும் வயதில் வரும் பழைய கால நினைவுகளை பற்றி அனுபவிக்காமல்.... அனுபவித்து கூறிய விதம் அருமை அண்ணா...
//கண்ணீரில் ஒளிந்திருக்கிறது...
இத்தனை காலம் உன்னிடம்
சொல்லாத என்....வயதான காதல்!//

ஒரு தலை காதலை பற்றி தானே இது தேவா? அதன் சக்தி வீரியம் ஆனது தான் இல்லையா? மனத்தில் ஒளிந்து கொண்டு தினமும் நம் மனதிரையில் அந்த சொல்லாத காதலை ஓட்டு, நமக்கு ஒரு வேதனையையும், மகிழ்ச்சியையும் ஒரு சேர கொடுத்து...அதன் விளையாட்டுக்கள் அருமை...
ஆகா, சூப்பர்
அருமை
நல்லா எழுதி இருக்கீங்க
கலக்கல் பதிவு
எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்க

ங்கொய்யாலா.... யாராவது இப்படி கமெண்ட் போட்டீங்க, உங்க வீட்டுல வந்து நான், டெரர், ரமெஷ் எல்லாம் சேர்ந்து கும்மி அடிப்போம்
dheva said…
அருண்...@ தம்பி உடையான் படைக்கு அஞ்சான். அப்படின்ன்னு சொல்லிட்டு புரூஃப் பண்றேன்னு சொன்னியே... அதானா இது.....
//தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.//

கண்டிப்பா, நாங்க இருக்கும் போது யார் உங்களை கலாய்கறாங்கனு பாத்துக்கறேன்
பல்லாயிரம் பேரின் காதலை பதிவாக்கி உள்ளிர்கள
ஆகா, சூப்பர்
அருமை
நல்லா எழுதி இருக்கீங்க
கலக்கல் பதிவு
எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்க
//பொய்யாய் ஓராயிர மறைத்தல்களை கைக்கொண்டு வாழ்க்கையின் படிகளை கடந்து கொண்டுதானிருப்போம்...//

இது நிறைய நடக்குது அண்ணா.. எல்லோர் வாழ்கையிலும் இது போன்ற தருணங்கள் கண்டிப்பாக இருக்கும் ..!!

//மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்..//

நானே சில சமயம் அப்படி சிரித்திருக்கிறேன் ..!!
Unknown said…
//காதல் என்பது பல நேரங்களில் ஒரு தயக்கத்திலேயே சொல்ல முடியாமல் போகும் அளவிற்கு காலத்தின் கணக்குகள் இருக்கும். சொல்லாத காதல்கள் சொல்லாததால் இல்லை என்றாகிவிடுமா? வாழ்வின் பல நேரங்களில் கடந்து வந்த நேசங்களின் நினைவுகள் மரிக்கும் வரை மனதை விட்டு அது அகலாது,//

nidarsanamaana unmai....
VELU.G said…
ரொம்ப நல்லாயிருக்குங்க தேவா
Kousalya Raj said…
கவிதைகளின் வரிகளை படிக்கும் போது 'சொல்லாத காதல்' என்ற ஒன்று பலருக்குள்ளும் பசுமையாக இருந்து வயதான காலத்திலும் நினைவுக்கு வந்து வலியை கொடுக்கும் என்பதைத்தான் எனக்கு புரிய வைக்கிறது. பேத்தி பேர் கூட அவங்க பேர்தானா....??!


//மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்......இல்லை என்று சொல்பவர்கள்...ஒரு கோப்பை சூடான தேனீரோடு கொஞ்சம் தனிமையில் போய் வானம் பார்த்து அமருங்கள்....உங்களுக்கான அனுபவம் வாய்க்கலாம்...!//

அனுபவம் வாய்த்தவர்களும், இப்போது அப்படித்தான் வானம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்...!!

:))
வினோ said…
கவிதையும் விளக்கமும் அருமை

நானும் வந்திட்டேன் தேவா...
ஆகா, சூப்பர்
அருமை
நல்லா எழுதி இருக்கீங்க
கலக்கல் பதிவு
எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்க
மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்...../////

தனிமையில் பழைய நினைவுகளை நினைத்து பார்த்தால்
நல்ல அனுபவமாக தான் இருக்கும்
///மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்......இல்லை என்று சொல்பவர்கள்...ஒரு கோப்பை சூடான தேனீரோடு கொஞ்சம் தனிமையில் போய் வானம் பார்த்து அமருங்கள்....உங்களுக்கான அனுபவம் வாய்க்கலாம்...!///

ஹா ஹா.. எனக்கும் இப்படி நேர்ந்திருக்கிறது... அந்த மெல்லிய உணர்வை உணர்வதே பாக்கியம்....!!

இல்லைன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்... (இருந்தாலும் ஏதோ பாத்து ஒரு தேநீர் கிடைக்குமா?? )
எச்சூச்மி... ஒரு கேள்வி கேக்க மறந்துட்டேன்...!!
படத்துல இருக்குற தாத்தா யாருங்க??
ஹேமா said…
உண்மையா உண்மை தேவா.
போனவாரம்தான் "மதராசப்பட்டினம்"பார்த்தேன்.
நீங்கள் குறிப்பிட்டுதுபோல காதலின் ஆழம் காத்திருப்பு மனதைப் பாரமாக்கிவிட்டிருந்தது.
vinthaimanithan said…
//என் பேத்தியின் தலை தடவும்
பொழுதுகளில்..கோர்க்கும்...
கண்ணீரில் ஒளிந்திருக்கிறது...
இத்தனை காலம் உன்னிடம்
சொல்லாத என்....வயதான காதல்!//

இது க்ளாஸ்!
அருமை
நல்லா எழுதி இருக்கீங்க
velji said…
கவிதையே சகலமும் சொல்லிவிடது....தனிமைக்கும்,தேனீர்க்கோப்பைக்கும் தேவையின்றி.அருமை!
கடந்து வந்த நேசங்களின் நினைவுகள் மரிக்கும் வரை மனதை விட்டு அது அகலாது,........excellent
//பொய்யாய் ஓராயிர மறைத்தல்களை கைக்கொண்டு வாழ்க்கையின் படிகளை கடந்து கொண்டுதானிருப்போம்...கடக்கும் பொழுதுகளில் ஏதோ ஒரு கணங்களில் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் சில நினைவுகள் நினைவுகளை வலுக்கட்டாயமாக கொண்டு வராமலேயே ஒரு வித ஏக்கத்தின் சாயலை உணர்வு நிலையில் நின்று ஒரு வித சந்தோசத்தை உடலெல்லாம் பரவசெய்யும் கண்ணிய மிக்க உறவுகள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது....?//
:)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த