Skip to main content

ஏக்கம்...!



















மாமிசமும் இரத்தமுமில்லா
ஒரு இடம் தேடிய எனது
ஓட்டத்தில் எப்போதும்
தூக்கிச் செல்லும்...
தோல்பை கொடுக்கும்
கனத்தில்...தடைப்பட்டுப்
போகிறது எனது நகர்தல்...!

என்னுள் இருந்து
ஏதேதோ சிந்திக்கும்
குழைவான திடப்பொருள்தான்
நானென்று சொல்லும்
சித்தாந்தங்களை எல்லாம்..
செதுக்கி எறிந்துவிட்டு...
கூடு விட்டு பறக்கத் துடிக்கிறது
என் ஆத்மா...!

எல்லாம் கடந்து.....
எங்கேயோ நான் இருந்து......
காற்றைப் போல பரவி
கட்டில்லாமல் சிதறி
ஓசைகள் தாண்டிய..
சப்த இறக்கங்களில்
நான் சரிந்து கொண்டே போய்....
நிசப்த பள்ளத்தாக்கில்
நிரந்தரமாய் வசிக்கும்....
ஆசையெல்லாம்...பெருமூச்சுகளில்...
வெளிப்படுகிறது எப்போதும்...
ஏக்கங்களின் வெளிப்பாடாய்....!


தேவா. S

Comments

///என்னுள் இருந்து
ஏதேதோ சிந்திக்கும்
குழைவான திடப்பொருள்தான்
நானென்று சொல்லும்
சித்தாந்தங்களை எல்லாம்..
செதுக்கி எறிந்துவிட்டு...
கூடு விட்டு பறக்கத் துடிக்கிறது
என் ஆத்மா...!//

உண்மைதான் நாம் நமது உடலைத்தானே நான் என்று நினைத்துக்கொள்கிறோம் ..!!
யாரவது வாங்களேன் ..!! நான் மட்டும் இங்க இருக்கேன் ..
ஆசைகள் ஏக்கமாக மாறிடுச்சோ!
@தேவா
//நிசப்த பள்ளத்தாக்கில்
நிரந்தரமாய் வசிக்கும்....
ஆசையெல்லாம்...//

அது எல்லாம் வேண்டாம் மாப்ஸ்!! நாம இந்த கும்மி சத்தத்துல வசிப்போம்... :))
Anonymous said…
//கட்டில்லாமல் சிதறி
ஓசைகள் தாண்டிய..
சப்த இறக்கங்களில்
நான் சரிந்து கொண்டே போய்....//
மலைச் சரிவில் குதித்தோடும் அருவியாகிப் போகிறது இவ்வரிகள்.. தூள்!
எங்கேயோ நான் இருந்து......
காற்றைப் போல பரவி
கட்டில்லாமல் சிதறி
ஓசைகள் தாண்டிய..
சப்த இறக்கங்களில்
நான் சரிந்து கொண்டே போய்....
நிசப்த பள்ளத்தாக்கில்
நிரந்தரமாய் வசிக்கும்....
ஆசையெல்லாம்...பெருமூச்சுகளில்...
வெளிப்படுகிறது /////

இப்படி ஒரு ஏக்கமா
கவிதை அருமையாக இருக்கிறது தேவா! நேயர்களின் விருப்பத்தை இப்போ நல்லா புரிஞ்சிக்கிட்டீங்க போல இருக்கே.

கவிதை, அருமை + எளிமை = வளமை.

வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் தேவா. இதேப்போலவே எழுத வேண்டும் என்று எல்லோர் சார்பாகவும் கேட்டுக்கிறேன்.
வினோ said…
அண்ணே கவிதை அருமை.. இதை பற்றி பேசுவோம்
VELU.G said…
நல்ல கவிதை தேவா
vinthaimanithan said…
சாமீஈஈஈய்! நா வரலப்பா இந்த செத்து செத்து வெள்ளாடுற ஆட்டத்துக்கு! எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
//வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் தேவா. இதேப்போலவே எழுத வேண்டும் என்று எல்லோர் சார்பாகவும் கேட்டுக்கிறேன்//

உங்க ஆசை மண் விளனும்ன்னு எல்லோர் சார்பாக நான் ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன்
@இம்சைஅரசன் பாபு

//உங்க ஆசை மண் விளனும்ன்னு எல்லோர் சார்பாக நான் ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன்//

ஏன்..ஏன்.. ஏன் இந்த கொலை வெறி? அப்புறம் யாருக்குமே புரியாத மாதிரி கவிதை எழுதி அதுக்கு புரியாத மாதிரி ஒரு விளக்கம் எழுதி....

இது தேவையா இம்சை? நீங்களே சொல்லுங்க!
@என்னது நானு யாரா?

இதுவே எனக்கு ஒன்னும் புரியல இதுல இன்னும் புரியாம என்ன எழுதுவதற்கு இருக்கு
@இம்சைஅரசன் பாபு

//இதுவே எனக்கு ஒன்னும் புரியல இதுல இன்னும் புரியாம என்ன எழுதுவதற்கு இருக்கு//

அப்போ எந்த கற்பனையோட தேவாவோட ப்ளாக்கிற்கு வர்றீங்க? இதுக்கு மேல சுலபமா எழுதுவாருன்னு எனக்கு தோனல
@என்னது நானு யாரா?

எதாவது ரஜினி பற்றி எழுதுவார், சிறுகதை எழுதுவார்ன்னு வந்தேன்
இந்த மாதிரி சமஸ்கிரததுல உள்ளத அப்படியே தமிழ் அ எழுதினா யாருக்கு புரியும் .உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியுமா ?
@இம்சைஅரசன் பாபு:

//இந்த மாதிரி சமஸ்கிரததுல உள்ளத அப்படியே தமிழ் அ எழுதினா யாருக்கு புரியும் .உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியுமா ?//

தேவாவோட கவிதையை படிச்சிப் புரிஞ்சிக்கிற அளவுக்கு சமஸ்கிருதம் தெரியும்
//தேவாவோட கவிதையை படிச்சிப் புரிஞ்சிக்கிற அளவுக்கு சமஸ்கிருதம் தெரியும் //
அதுதான் நீங்க தேவா பத்தி புகழ்ந்து சொல்லுறீங்க ......
நான் எல்லாம் மக்கு பய புள்ள
உள்ள தமிழ் அ நாலு வட்டி எழுதி பாஸ் akirukkom .இதுல்ல வேற சமஸ்கிருதம் எழுதினா எப்படி புரியும் .........
@இம்சைஅரசன் பாபு:

//நான் எல்லாம் மக்கு பய புள்ள
உள்ள தமிழ் அ நாலு வட்டி எழுதி பாஸ் akirukkom .இதுல்ல வேற சமஸ்கிருதம் எழுதினா எப்படி புரியும்//

அப்போ ஒன்னும் செய்ய முடியாது. பேசாம, அவரு சிறுகதை எழுதும் போது மட்டும் அவரோட ப்ளாக்கை எட்டிப் பாருங்க. வேற என்ன வழி இருக்கு?
//super. Excellent. Wonderful. Dont forget 500USD. haahaaa //
உள்ள தமிழ் அ ஒழுங்கா படிக்க தெரியாது வந்துட்டான்.
பய புள்ள ஹிந்தி எதோ கேட்டிருக்கான் பரு தேவா அண்ணா
//அப்போ ஒன்னும் செய்ய முடியாது. பேசாம, அவரு சிறுகதை எழுதும் போது மட்டும் அவரோட ப்ளாக்கை எட்டிப் பாருங்க. வேற என்ன வழி இருக்கு?//

வேற வழி அவர் சொன்ன மாதிரி குழி விழுந்து போய் சேர வேண்டியது தான்
///நானென்று சொல்லும்
சித்தாந்தங்களை எல்லாம்..
செதுக்கி எறிந்துவிட்டு...
கூடு விட்டு பறக்கத் துடிக்கிறது
என் ஆத்மா...!///

ஹ்ம்ம்ம்.. ரொம்ப அழகா உங்க ஏக்கம் சொல்லிட்டீங்க...!!
நல்லா இருக்கு தேவா.. :-))
//இம்சைஅரசன் பாபு.. said...

//super. Excellent. Wonderful. Dont forget 500USD. haahaaa //
உள்ள தமிழ் அ ஒழுங்கா படிக்க தெரியாது வந்துட்டான்.
பய புள்ள ஹிந்தி எதோ கேட்டிருக்கான் பரு தேவா அண்ணா//
நீயும் டெரரும் ஒரு நாள் தமிழ்ல பதிவு எழுதுங்க பாக்கலாம்.
//தோல்பை கொடுக்கும்
கனத்தில்...தடைப்பட்டுப்
போகிறது எனது நகர்தல்...!//

உங்கள் நகர்தல் தடை பட்டு போகும் அளவுக்கு என்ன கனமான பொருளை உள்ளே வைத்திருந்தீர்கள் அந்த தோல்பையில் .........
பெரிய பாறங்கல்லா தேவா அண்ணா
//ஹ்ம்ம்ம்.. ரொம்ப அழகா உங்க ஏக்கம் சொல்லிட்டீங்க...!!
நல்லா இருக்கு தேவா.. //

இப்படி உசுபேத்தி உசுபேத்தி அவருக்கு கூடிய சீக்கிரம் ஒரு காவி வேஷ்டியும் ,கையில் ஒரு கமண்டலமும் கொடுத்தருவீங்க போல இருக்கு
அட ஏம்பா இப்படி சித்த மருத்துவரை கும்முறிங்க
நீயும் டெரரும் ஒரு நாள் தமிழ்ல பதிவு எழுதுங்க பாக்கலாம்//
அத தானே சொன்னேன் பய புள்ள உனக்கு ஒழுங்கா தமிழ் தெரியாது இதுல வேற ஹிந்தி யான்னு
இந்த கும்மி தொல்லை தாங்கமா தான் இவர் இப்படி கவிதை எழுதினார்
//அட ஏம்பா இப்படி சித்த மருத்துவரை கும்முறிங்க //

அடப்பாவிகளா ஒருத்தரு சித்தர் அப்படி சொல்லுறாரு ,இன்னொருத்தர் சித்த மருத்துவர் அப்படி சொல்லுறாரு என்னனு கேளுங்க தேவா அண்ணா
////இப்படி உசுபேத்தி உசுபேத்தி அவருக்கு கூடிய சீக்கிரம் ஒரு காவி வேஷ்டியும் ,கையில் ஒரு கமண்டலமும் கொடுத்தருவீங்க போல இருக்கு ///

ஹா ஹா ஹா.. எனக்கு அப்படி ஏதும் ஐடியா இல்லங்க..:-)
மாமிசமும் இரத்தமுமில்லா
ஒரு இடம் தேடிய எனது
ஓட்டத்தில் எப்போதும்
தூக்கிச் செல்லும்...
தோல்பை கொடுக்கும்
கனத்தில்...தடைப்பட்டுப்
போகிறது எனது நகர்தல்...!

நல்ல வரிகள்
முதல்ல இப்ப இருக்கறத அனுபவிங்க. அப்பறம் தேடிப்போய் அடையலாம்.
////ஓசைகள் தாண்டிய..
சப்த இறக்கங்களில்
நான் சரிந்து கொண்டே போய் //////


நிசப்த்தம் குடிக்கும் சத்தம் வார்த்தைகளில் !

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...