எல்லாம் ஒழித்து
நான் ஒளிந்து கொள்ள
செய்யும் முயற்சிகள் எல்லாம்
தெளிவாய் காட்டிக்கொடுக்கின்றன...
என் இருப்பின் அடர்த்தியை...!
விரட்டும் வாழ்க்கையில்
மிகைத்திருக்கும் பொய்களின்
ஆட்டங்கள் சொல்லாமல்
சொல்கின்றன...இருத்தலில்
இருக்கும் இல்லாமை நிறங்களை!
ஜனித்த நாளின் பின்னணியில்
எப்போதும் ஒலிக்கும்
என் தாயின் பிரசவ வேதனையில்
அறுக்கப்பட்ட தொப்புள் கொடியோடு
தொலைந்து போன ஆதியின்..
கதகதப்பு சூட்டை தேடி
ஓடும் ஓட்டத்தின் இடையில்
வயதாய் கணக்கு கொள்கிறது காலம்!
இருண்ட அறையில்.....
இருந்த காலங்கள் மீண்டும் மீண்டும்
முட்டி மோத அடிக்கடி அமரும்
தியானங்களில் எப்போதாவது
தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை...!
தேவா. S
Comments
ஓடும் ஓட்டத்தின் இடையில்
வயதாய் கணக்கு கொள்கிறது காலம்!//
உண்மைலேயே இந்த வரிகள் கலக்கலா இருக்கு அண்ணா ..!!எனக்கு எப்படி கமெண்ட் போடுறதுன்னு கூட தெரியல ..!!
முன்னான....இருப்பின் நுனியை...!//
அண்ணா! கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா!
அது "இருப்பின் நுனி"யா இல்ல "இருந்ததின் நுனி"யா?..
என்னோட புரிதல் என்னன்னா, தியானத்துல தன்னையே காண முடியும் அப்படின்னு கேள்விப் பட்டிருக்கேன் நீங்க ஒரு படி மேல போய் கருவறையில் உயிராய் ஜனிக்கும் முன் அரூபமாய் அலையும் ஆத்மாவின் இருப்பை உணர்ந்துட்டீங்க அப்படின்னு..
என்னோட புரிதல் சரியா அண்ணா?
எனக்கும் இந்த மாதம்தான் பிறந்த நாள். உங்களைவிட 13 வயது பெரியவள் நான்.
இன்னிக்கு வடை எனக்கே .!////
செல்வா இங்க என்ன இட்லி கடைய வைத்து இருக்காங்க
//அண்ணா! கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா!
அது "இருப்பின் நுனி"யா இல்ல "இருந்ததின் நுனி"யா?..//
தேவா என்ற மானஸ்தனை காணவில்லை.... மாப்ஸ் வாசகர் சந்தேகம் கேக்கறாரு இல்ல... வந்த் விளக்கம் கொடுங்க... இதை மாதிரி யாராவது சிக்கினா விட கூடாது... கப்புனு அமுக்கிடனும்... :)))
இட்லி கடை இல்லையா ..? அடடா வடை போச்சா ..?
தேவா. S இது உங்க பேருதான. எப்பூடி...
இருந்த காலங்கள் மீண்டும் மீண்டும்
முட்டி மோத அடிக்கடி அமரும்
தியானங்களில் எப்போதாவது
தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை...!
---
முடிந்ததா உங்களால் :)
இருந்தது என்பது மனித உடம்புகளுக்குள் இருந்து சொல்லும் ஒரு மட்டுப்பட்ட நிலை.....
காலமற்ற பெருவெளியில் இறந்த காலம் இல்லை...அது இருப்பு....அங்கே.... அதை உணரும் இடத்தில்....இருந்த என்று வராது.....இருப்பு என்றூதான் வரும்.
பதிவு பற்றிய உன்னோட கருத்துல இருக்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்குப்பா...!
ஆன் த வே ல இருக்கு மேட்டர்....!
உங்கள் பிறந்த நாளுக்கும் எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
//காலமற்ற பெருவெளியில் இறந்த காலம் இல்லை...அது இருப்பு....அங்கே.... அதை உணரும் இடத்தில்....இருந்த என்று வராது.....இருப்பு என்றூதான் வரும். //
அருமை..
http://riyasdreams.blogspot.com/2010/10/blog-post_08.html
இருந்த காலங்கள் மீண்டும் மீண்டும்
முட்டி மோத அடிக்கடி அமரும்
தியானங்களில் எப்போதாவது
தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை..\\
ரொம்ப வித்யாசமாய் சிந்திக்கிறீங்க. நல்லாயிருக்கு.
இருந்த காலங்கள் மீண்டும் மீண்டும்
முட்டி மோத அடிக்கடி அமரும்
தியானங்களில் எப்போதாவது
தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை...!///
கவிதையின் ஆழம்....
உங்கள் கருத்தை
எங்களுக்கு அளிக்கும் பாலம்..!!
Very niceely done.. :-))
ஒரு டவுட்..( ஏகாந்த வெளிப் பயணத்தில் இருக்கும் போது..இப்படி பீல் பண்ணிங்களா..?? )