வாழ்த்துக்களும் பண்டிகைகளும் மனிதர்கள் தமக்குத்தாமே படைத்துக் கொண்டதின் பின்ணனியில் ஒரு கூட்டு வாழ்க்கையின் முக்கியத்துவம் இருக்கிறது.அதனால்தான் நாடு கடந்து மொழி கடந்து இனம் கடந்து விழாக்கள் எப்போதும் மனித வாழ்வின் அங்கமாகவே இருக்கிறது.
எப்படி வேண்டுமானாலும் மனிதன் தன்னை பிரித்துக் கொள்ளட்டும்.தத்துவங்களின் பெயரால், சித்தாந்தங்களின் பெயரால், கொள்கைகளின் பெயரால் முரண்பட்டு கிடக்கட்டும் ஆனால் கொண்டாட்டங்களையும், விழாக்களையும் விரும்பாத மனிதன் இருக்க முடியாது.
பல வகையில் நம்மை சுத்திகரித்துக் கொள்ளவும் புத்துணர்வூட்டிக் கொள்ளவும் எல்லா சராசரி நிகழ்வுகளில் இருந்தும் விடுவித்துக் கொண்டு ஒரு பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கவும் பண்டிகைகள் மறைமுக காரணியாகின்றன.
எந்த ஒரு பண்டிகையாக இருக்கட்டும் கொண்டாடுவதற்காக ஒரு காரணத்தை நாம் சொல்லிக் கொள்கிறோமே தவிர அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியும் தோழமையும், ஒருவரை ஒருவர் பரஸ்பரம் வாழ்த்திக் கொள்வதில் கிடைக்கும் நிறைவும் வேறு எந்த வகையிலும் ஈட்டப்பட முடியாத ஒன்று.
சமீபத்திலிருப்பது தீபாவளியாயிருந்தாலும் எல்லா பண்டிகைகளையும் ஒரு ஈடுபாட்டோடு நோக்கி, ஏன்? எதற்கு என்ற அர்த்த விவாதங்களை தூக்கி கடாசி விட்டு நம்மை சுத்திகரித்துக் கொள்வது அவசியமாகிறது. எல்லோரும் சந்தோசப்படும் போது ஒரு வித நேர்மறையான அலையியக்கம் தன்னிச்சையாக நடைபெறுகிறது....மேலும் ஒருமித்த சந்தோசம் என்ற ஒரு காஸ்மிக் மைண்ட் இருக்கும் போது ஏற்படும் ஒத்ததிர்வுகளால் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது.....(ஆமாம்... பட்டர் பிளை தியரி மாதிரிதான்..)
நமது ஒவ்வொரு எண்ணமும் நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு பரிசளிக்கப்படுகிறது. இப்போ முடிவு பண்ணுங்கள் என்ன மாதிரியான எண்ணங்களை நாம் நமக்குள் விதைப்பது என்று.....நான் யாரையோ பார்த்து பொறாமைப் பட்டால் என்னைப் பார்த்தும் ஒருவன் பொறாமைபடுவான்...! நான் யாரையாவது வாழ்த்தினால் என்னையும் ஒருவன் வாழ்த்துவான்....! ஆமாம் நாமதான் முடிவு பண்றோம் நமக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை தேவை என்று....!
பணம் இருந்தால் சந்தோசம் கிடைக்கும் என்று நம்பும் மனிதம் மனம்...., சந்தோசமாக இருந்தால் பணம் வரும் என்று ஏன் நம்ப மறுக்கிறது? நான் சொல்கிறேன்.. நீங்கள் சந்தோசமாக ...உச்சகட்ட மகிழ்ச்சியாக வாழ்க்கையைப் பாருங்கள்....உங்களுக்கு தேவையான பணம் மட்டுமில்லை, மனிதர்களும் சூழ்நிலைகளும் வரும்....! அது எப்டிய்யா?? இது என்ன மோடி மஸ்தான் வேலையானு பகுத்தறிவோடு கேக்குறீங்களா.....?
சந்தோசமா இருக்கும் போது செய்யுற வேலைய ஆர்வமா செய்வோம்....! செய்யமுடியாத வேலையையும் செய்ய துணிவோம்...! ஆனந்தமா இருக்குற நாம நம்ம ஆனந்தத்த மத்தவங்களுக்கு பறிமாற்றம் செய்வோம்.....
அவுங்க அதுக்கு என்ன செய்வாங்க.....? முடிஞ்சவரைக்கும் நம்மள நேசிப்பாங்க...இப்டி சுத்தி சுத்தி எல்லாமே சாதகமா ஆன பின்னால....கிடைக்கப்போறது வெற்றிதானே? .வெற்றி என்ன கொடுக்கும்.......அத நான் சொல்லமாட்டேன்... உங்களுக்கே தெரியும்....(மோடி மஸ்தான் வேலை இல்லேல்ல...!!!!!!!)
சரிங்க...நவம்பர் 5 தீபாவளி கொண்டாடுற எல்லோரும்....வீட்ல அம்மா, அப்பா, அக்கா, தம்பிங்க, தங்கசிங்க, அண்ணன், தாத்தா, பாட்டிங்க, குட்டீஸ் இன்னும் எல்லா உயிரான உறவுகளுக்கு எல்லாம் என் ப்ரியமான வாழ்த்துக்களை சேர்த்துடுங்க.
இந்த பண்டிகையில் உலகம் பூரா உறவுகள் இருக்குது அப்டீன்றதே ரொம்ப நெகிழ்ச்சியா இருக்குங்க....! தனியா வந்து தனியா போகப் போற வாழ்க்கைக்கு நடுவுல....ஒரு பெரிய பூந்தோட்டத்த கடந்து செல்ற ஒரு உணர்வு இருக்கு....! அன்பும் நேசமும்தானுங்களே பெரிய விசயம்.
அப்புறம் ஒரு விசயம், எந்த பண்டிகை கொண்டாடினாலும் மறக்காம நம்ம ஈழத்து இரத்த பந்தங்களை மறந்துடாதீங்க....! எல்லோரும் அது பத்தி கண்டிப்பா வீட்ல பேசுங்க... நினைவு கூர்ந்து உங்க வேண்டுதல்களின் போது, ஈழத்திலும் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் எல்லா உறவுகளுக்கும் வலு சேர வேண்டும் அவர்கள் வாழ்க்கை தீபச்சுடராய் ஒளிர வேண்டும்னு ஜஸ்ட் வேண்டிக்கோங்க.....ப்ளீஸ் மனசார இதை செய்ங்க....! சரீங்களா?
கடந்த வாரத்தில் நிறைய மின்னஞ்சல்கள் வந்தன அதில் மிக முக்கியமான விசயம் ஒண்ணு எல்லோரும் சொல்லியிருந்தது.....
" தினமும் பதிவுகள் போடுவதால் வாசிக்க நேரமும் அதை ரியலைஸ் பண்ண டைமும் இல்லை அதனால் போதிய இடைவெளி கொடுங்க" ன்னு கேட்டு இருந்தாங்க!
இது பற்றி ஏற்கனவே எங்க ஊர் வலைப்பதிவர் தமிழ் அமுதன் (கண்ணாடி) என்கிட்ட சொல்லியிருந்தாங்க....! கூட்டிக் கழிச்சு பாத்து... வாரத்துக்கு இரண்டு (புதன் & சனிகிழமைகள்) பதிவுகள் பப்ளிஷ் பண்ணுவோம்னு முடிவும் பண்ணிட்டேன்.... (அப்பாடா சாமி ஆள வுடுடானு சில அன்பான உள்ளங்கள் நினைக்கும்.. அந்த சந்தோசத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்ங்க....)
நிறைய புது பதிவர்கள் அட்டகாசமா பட்டைய கிளப்புற அதே நேரத்தில்.....செமயா குறுக்கு வழில கூட்டத்த சேத்துகிட்டு அட்டூழியமும் அழிச்சாட்டியமும் நடக்குது....எப்டி பாத்துகிட்டு சும்மா போறது.....
தேசத்தின் ஜனாதிபதியையும், பிரதம மந்திரியையும், முதலமைச்சரையும் விமர்சிக்க சுதந்திரம் உள்ள தேசத்தில்.....சக பதிவர்களை உரிமையாக சுட்டிக்காட்ட முடியாதா என்ன? முடியும்தானே......?????
சரி ரொம்ப பெரிய ஹாய் சொல்லிட்டேன்.....! தீபாவளிய செமயா சந்தோசமா பட்டய கிளப்புற மதிரி கொண்டாடுங்க..........அன்பும் சந்தோசமும்...எங்கும் பரவட்டும்.......
கேட்ச் யூ ஆல் லேட்டர்...............!
அப்போ வர்ர்ர்ர்ட்ட்ட்டா!
தேவா. S
Comments
எல்லோரும் எந்திருச்சி நின்னு ஜோரா கை தட்டுங்க ....................
என்ன பதிவர்கள் பற்றி விமர்சனம் வர போகிறதா..?
இனிமே வாரத்துல ரெண்டு பதிவுதானா? ஏன் மாப்ள இப்டி பண்ணிப்புட்டீங்க? சரி, பரவால்ல... தமிழ் அமுதன் (கண்ணாடி) மற்றும் உன்னிடம் கேட்டுக்கிட்டவுங்களுக்காக ஒத்துக்கிறேன்... ஆல் தி பெஸ்ட்.
நேர்மறையான எண்ணங்களே நமக்கு வேண்டும் அண்ணா . அதே சமயம் என்னைப் பொறுத்த வரை பொறாமை கொள்வதில் தவறு இல்லை என்றே கருதுகிறேன் .. பொறாமையால் அடுத்தவரின் வளர்ச்சியை நாம் கட்டுப்படுத்த நினைக்கும் வரை . பொறமை என்பது அடுத்தவரின் வளர்ச்சியை விட நமது வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் அதற்காக நாம் வளரவேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தால் வரவேற்க்கத்தக்கதே .. அதைவிடுத்து அடுத்தவரின் வளர்ச்சியை குறைத்து நான் பெரியவன் என்ற எண்ணம் வருமேயானால் அது தவறானதே ..!!
//இது பற்றி ஏற்கனவே எங்க ஊர் வலைப்பதிவர் தமிழ் அமுதன் (கண்ணாடி) என்கிட்ட சொல்லியிருந்தாங்க....!//
சாமி சத்தியமா சொல்லு.... நான் உனக்கு போன் பண்ணி... சரிரிரிரி சரிரிரிரி... நீ போன் பண்ண அப்பொ கேப் விட்டு பதிவு போடு சொல்லல??? அப்பொ ஏன் போனிலும் மிரட்டல் வந்தது சொல்லல??
அப்புறம் சத்தம் இல்லாம பட்டாசு வெடிக்க விரும்புவோர் கோமாளியைத் தொடர்புகொள்ளவும் ..!!
//செமயா குறுக்கு வழில கூட்டத்த சேத்துகிட்டு அட்டுழியமும் அழிச்சாட்டியமும் நடக்குது....எப்டி பாத்துகிட்டு சும்மா போறது.....//
மக்கா நம்மள தான் சொல்றாரு.... வா ஓடி போய்டலாம்...
@தேவா
சொம்பு தூக்க தனியா ஆளுங்க இருக்காங்க மாப்ஸ்!! அதே மாதிரி போட்டு தள்ள ஒரு டீம் இருக்கு மாப்ஸ் (நாங்க இல்லை நாங்க இல்லை). நீங்க எல்லாம் அன்பு மட்டும் ஆயுதமா எடுத்து உலக பூந்தோட்டமா வச்சிகோங்க. போர்களத்த நாங்க... ச்சீ... அவங்க பாத்துபாங்க... என்னயா சொல்ற பட்டா டீல் ஓகேவா?? அங்க பாரு அதுக்குள்ள வெளியூர் கத்தி எடுக்கறான்...
உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நா எப்பவும் திங்கள் and வியாழன் என்று வைத்துள்ளேன்.
சரி. நிச்சயம் நம் உறவுகளை இந்த தீப திரு நாளில் நினைத்து அவர்களுக்காக வேண்டுவது நம் கடமை. அன்பு ஒன்றே ஆனந்தம்... பிறருக்காக வேண்டுவதும் வேண்ட சொல்வதும் நல்ல பண்பு...
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
அருமையான வரிகள்
அப்ப பட்டாசு கொளுத்திட வேண்டியதுதான்.
அண்ணன் நம்மலத்தான் குறி வெக்கிறாரு, சட்டுப்புட்டுன்னு எடத்த காலி பண்ணுவோம்!
ஹிஹிஹி... மைன்ட் வாய்ஸ் எல்லாம் நல்லாஆஆ கேட்ச் பண்றீகளே..... :-)))))
ஆமாம்..! தேவா கடந்த காலங்களை விட தற்போது தமிழக மக்களிடம் ஈழத்து உறவுகள் மீதான அக்கரை குறைகிறதோ என்ற அச்சம் உண்டாகிறது..! அரசியல் வாதிகள் சோரம் போய் இருக்கலாம் ஆனால் நம்மை போன்றோர் சோர்ந்து போய் விட கூடாது. குறைந்த பட்சம் நம் குழந்தைகளிடமாவது ஈழ சகோதரர்கள் மீதான அன்புணர்வை ஊட்டி வளர்க்க வேண்டும்..!
ப்ளாக் பிக்சர சொன்னேன்... இனி ரெண்டே ரெண்டு பதிவு தானாம்..........இப்பிடி திரும்புங்க.....
ப்ளீஸ்...!!! :-))))
தேவா.. உங்க ப்ளாக் பிக்சருக்கு... ஒரு கமெண்ட்...
நா வாரியர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஒரு தரம் பதிவு எழுதிட்டா...
என் பதிவ நானே திரும்பி பாக்க மாட்டேன்.. அப்டியா..??? :D :D :D
(ஆத்தா நா இல்ல.. நா இல்ல...)
....... Righttu!!
HAPPY DEEPAVALI!!! :-)
முதலில் ஈழத்து உறவுகளை நினைவு கூர்ந்ததிற்கு நன்றி. ஆனாலும் இது, " ஜஸ்ட் வேண்டிக்கோங்க.." GREAT ESCAPE ங்கோ. தமிழகத்தமிழர்கள் ஜஸ்ட் வேண்டிகிட்டா (யாருகிட்டக்க....) மட்டும் போதாதுங்கோ, யோசிங்கோ. உங்கள் எழுத்தைப் படிப்பவர்களை அதை யோசிக்க வைங்கோ.
யாரிடமும் வேண்டத் தேவையில்லை...மனதில் நினனத்தல்....அந்த நினைப்பு வேதனையை கொடுத்தால் வேதனையையில் இருந்து தீர்வாக்கான...கோபமும் கோபத்திலிருந்து செயலும் பிறந்து விடாதா என்ற ஆதங்கமும்தான்....
என்னுடைய முந்தைய பதிவுக்கான சுட்டு இது....நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள்....சகோதரி...!
http://maruthupaandi.blogspot.com/2010/05/iii.html