Skip to main content

சிதறல்...!
















யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்
இந்த முறையும்...தப்பாமல்
நடனமாடுகிறது குளம்....
தடுமாறி நிற்கிறேன் நான்!

***

நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!

***

ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!

***

பேருந்துப் பயணம்
ஜன்னலோர இருக்கை
வழி நெடுக வாழ்க்கை
பார்வையாளனாய் நான்....!

***

ஒரு சிட்டுக் குருவி
ஈரச் சிறகு..
படபடக்கும் உலர்த்தல்
சிறகடிக்கும் மனசு...!

***

காற்றில் பறக்கும்
சருகுகள்....
கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!

***

கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!

***



தேவா. S

Comments

Anonymous said…
//பேருந்துப் பயணம் ஜன்னலோர இருக்கை வழி நெடுக வாழ்க்கை பார்வையாளனாய் நான்....!/// கவிதைகள் ரசனை... பேருந்துப் பயணம் உண்மையை உணர்த்தினாலும் Classic.

By சே.குமார் on சிதறல்...! on 11/16/10

==========================================

அழகான கவிதைகள் மாப்ஸ்...
By TERROR-PANDIYAN(VAS) on சிதறல்...! on 11/15/10

==========================================


//நிசப்தமான நடு நிசி குளிரில் நடுங்கிக் கொண்டே நடக்கிறேன்.... சூடான உன் நினைவுகளோடு....!// ஓஹோ
By அன்பரசன் on சிதறல்...! on 11/15/10


=============================================

அருமைண்ணா ஒவ்வொன்னும்.. புது டெம்ப்ளெட் மின்னுது :)
By இராமசாமி கண்ணண் on சிதறல்...! on 11/15/10

==============================================

பேருந்துப் பயணம் ஜன்னலோர இருக்கை வழி நெடுக வாழ்க்கை பார்வையாளனாய் நான்....! truth
By Anonymous on சிதறல்...! on 11/15/10
ஹேமா said…
தேவா...ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்தி சொல்வதாய் நல்லாயிருக்கு !
கவிதைகள் அனைத்தும் அருமை. குறிப்பை பயணக் கவிதை
கவிதைகள் அனைத்தும் அருமை அண்ணா
//யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்//

ஊ புல்லா வம்பிழுத்தா கல்லால அடிக்காம என்ன பண்ணுவாங்க?

//இந்த முறையும்...தப்பாமல்//

செம அடியா?
//நடனமாடுகிறது குளம்....
தடுமாறி நிற்கிறேன் நான்!//

ஜோடி no 1 ல சேத்துடுவமா? இல்லை மானாட மயிலாட?
//நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!///

நா வேணா ஒரு சஜஷன் சொல்லவா..? அப்படியே சூடா ஒரு கப் காபி-யும் குடிங்க.. :D :D
குட்டிக் கவிதைகள் அனைத்தும் அருமை.. :-))
அனைத்தும் அருமை... ஒவ்வொன்றும் கதைகள் சொல்கின்றன...
//காற்றில் பறக்கும்
சருகுகள்....
கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!//
அருமையான ஒப்பீட்டு உவமை மாப்ள...

//நிற்கப் போகும் காற்று!//
இந்த வரியை நான் ரொம்பவே ரசிச்சேன்...
அருமையான..கவிதைகள்..!
இவைகள் வெறும் "சிதறல்" அல்ல;
ஒவ்வொன்றும் முத்துச் சிதறல்கள்!!

மிக நன்று..
Anonymous said…
அண்ணா செம! :)
இது


இது எவ்வளோ அழகா ரசிக்க முடியுது... இதவிட்டுட்டு தேடல், புரிதல்னு குழப்ப கவிதை எழுதிட்டு...

எல்லாமே கலக்கல் அண்ணே
sakthi said…
நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!

கிளாஸ் தேவ்
Ganesan said…
simple wordings but nice to feel. i love this...
And i shared this page in facebook....
மிக அருமையாக உள்ளன அனைத்தும்!
Unknown said…
இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம் ...
Ramesh said…
வாவ் அற்புதம். சிதறல்களை அன்புடன் ஏற்றுக்கொள்ளும் சிதறல்கள்...என்னோட வலைப்பதிவு பெயரே இதுதான்(ரெட்டை மகிழ்ச்சி)
Ramesh said…
//ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!

சிதறலாய் எங்கள் மனசு..

ரசனையான கவிதை.. ரசனையான பின்னூட்டங்கள்..(ரமேஷ் ரொம்ப நல்லவன் - நான் என்னைச் சொல்லலை)
Unknown said…
புது டெம்பிளேட் மாதிரியே.. கவிதையும் சூப்பர்..
Unknown said…
///கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!////

இந்தக் கவிதை டாப்..
THOPPITHOPPI said…
படிப்பவரை கவரும்படி உங்கள் எழுத்து அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள்
//யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்
இந்த முறையும்//

எத்தனை முறை எறிந்தாலும்... ம்ம்ம்..கூடுதல் அர்த்தம்..அருமை!

***

//நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!//

மௌனமான இரவில் பேசும் நினைவுகள்..அழகு. அனுபவம்.

***

//ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!//

மிகவும் கவர்ந்த கவிதை...ஆறே வார்த்தைகளில் அற்புதம். “நீ”க்கு நிகர் யாருமில்லை.. இப்போது.

***

//ஜன்னலோர இருக்கை
வழி நெடுக வாழ்க்கை//

எதார்த்தம்.. ஒத்த உணர்வுகள் ;-)

***

//படபடக்கும் உலர்த்தல்
சிறகடிக்கும் மனசு...!//

சிறகடிக்குது மனசு.. கவிதையை ரசித்து.

***

//கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!//

நிதர்சனம்.

***

//கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!//

வாவ்...கற்பனை அழகு. :-)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த