Skip to main content

சிதறல்...!
















யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்
இந்த முறையும்...தப்பாமல்
நடனமாடுகிறது குளம்....
தடுமாறி நிற்கிறேன் நான்!

***

நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!

***

ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!

***

பேருந்துப் பயணம்
ஜன்னலோர இருக்கை
வழி நெடுக வாழ்க்கை
பார்வையாளனாய் நான்....!

***

ஒரு சிட்டுக் குருவி
ஈரச் சிறகு..
படபடக்கும் உலர்த்தல்
சிறகடிக்கும் மனசு...!

***

காற்றில் பறக்கும்
சருகுகள்....
கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!

***

கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!

***



தேவா. S

Comments

Anonymous said…
//பேருந்துப் பயணம் ஜன்னலோர இருக்கை வழி நெடுக வாழ்க்கை பார்வையாளனாய் நான்....!/// கவிதைகள் ரசனை... பேருந்துப் பயணம் உண்மையை உணர்த்தினாலும் Classic.

By சே.குமார் on சிதறல்...! on 11/16/10

==========================================

அழகான கவிதைகள் மாப்ஸ்...
By TERROR-PANDIYAN(VAS) on சிதறல்...! on 11/15/10

==========================================


//நிசப்தமான நடு நிசி குளிரில் நடுங்கிக் கொண்டே நடக்கிறேன்.... சூடான உன் நினைவுகளோடு....!// ஓஹோ
By அன்பரசன் on சிதறல்...! on 11/15/10


=============================================

அருமைண்ணா ஒவ்வொன்னும்.. புது டெம்ப்ளெட் மின்னுது :)
By இராமசாமி கண்ணண் on சிதறல்...! on 11/15/10

==============================================

பேருந்துப் பயணம் ஜன்னலோர இருக்கை வழி நெடுக வாழ்க்கை பார்வையாளனாய் நான்....! truth
By Anonymous on சிதறல்...! on 11/15/10
ஹேமா said…
தேவா...ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்தி சொல்வதாய் நல்லாயிருக்கு !
கவிதைகள் அனைத்தும் அருமை. குறிப்பை பயணக் கவிதை
கவிதைகள் அனைத்தும் அருமை அண்ணா
//யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்//

ஊ புல்லா வம்பிழுத்தா கல்லால அடிக்காம என்ன பண்ணுவாங்க?

//இந்த முறையும்...தப்பாமல்//

செம அடியா?
//நடனமாடுகிறது குளம்....
தடுமாறி நிற்கிறேன் நான்!//

ஜோடி no 1 ல சேத்துடுவமா? இல்லை மானாட மயிலாட?
//நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!///

நா வேணா ஒரு சஜஷன் சொல்லவா..? அப்படியே சூடா ஒரு கப் காபி-யும் குடிங்க.. :D :D
குட்டிக் கவிதைகள் அனைத்தும் அருமை.. :-))
அனைத்தும் அருமை... ஒவ்வொன்றும் கதைகள் சொல்கின்றன...
//காற்றில் பறக்கும்
சருகுகள்....
கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!//
அருமையான ஒப்பீட்டு உவமை மாப்ள...

//நிற்கப் போகும் காற்று!//
இந்த வரியை நான் ரொம்பவே ரசிச்சேன்...
அருமையான..கவிதைகள்..!
இவைகள் வெறும் "சிதறல்" அல்ல;
ஒவ்வொன்றும் முத்துச் சிதறல்கள்!!

மிக நன்று..
Anonymous said…
அண்ணா செம! :)
இது


இது எவ்வளோ அழகா ரசிக்க முடியுது... இதவிட்டுட்டு தேடல், புரிதல்னு குழப்ப கவிதை எழுதிட்டு...

எல்லாமே கலக்கல் அண்ணே
sakthi said…
நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!

கிளாஸ் தேவ்
Ganesan said…
simple wordings but nice to feel. i love this...
And i shared this page in facebook....
மிக அருமையாக உள்ளன அனைத்தும்!
Unknown said…
இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம் ...
Ramesh said…
வாவ் அற்புதம். சிதறல்களை அன்புடன் ஏற்றுக்கொள்ளும் சிதறல்கள்...என்னோட வலைப்பதிவு பெயரே இதுதான்(ரெட்டை மகிழ்ச்சி)
Ramesh said…
//ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!

சிதறலாய் எங்கள் மனசு..

ரசனையான கவிதை.. ரசனையான பின்னூட்டங்கள்..(ரமேஷ் ரொம்ப நல்லவன் - நான் என்னைச் சொல்லலை)
Unknown said…
புது டெம்பிளேட் மாதிரியே.. கவிதையும் சூப்பர்..
Unknown said…
///கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!////

இந்தக் கவிதை டாப்..
THOPPITHOPPI said…
படிப்பவரை கவரும்படி உங்கள் எழுத்து அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள்
//யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்
இந்த முறையும்//

எத்தனை முறை எறிந்தாலும்... ம்ம்ம்..கூடுதல் அர்த்தம்..அருமை!

***

//நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!//

மௌனமான இரவில் பேசும் நினைவுகள்..அழகு. அனுபவம்.

***

//ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!//

மிகவும் கவர்ந்த கவிதை...ஆறே வார்த்தைகளில் அற்புதம். “நீ”க்கு நிகர் யாருமில்லை.. இப்போது.

***

//ஜன்னலோர இருக்கை
வழி நெடுக வாழ்க்கை//

எதார்த்தம்.. ஒத்த உணர்வுகள் ;-)

***

//படபடக்கும் உலர்த்தல்
சிறகடிக்கும் மனசு...!//

சிறகடிக்குது மனசு.. கவிதையை ரசித்து.

***

//கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!//

நிதர்சனம்.

***

//கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!//

வாவ்...கற்பனை அழகு. :-)

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...