Skip to main content

மாவீரர் நாள்...!





















எமக்காக ஆதவன் ஒரு விடியலைப் பரப்புவான்....அப்போது எமக்கான கானங்களும், இசையும், பறவைகளின் சங்கீதமும் ஒலிக்கும்....எமது ஆ நிறைகள் சந்தோசத்தில் தன்னிச்சையாக பால் சொரியும்...! எம் குல பெண்டிரின் முகங்களில் பூரிக்கும் சந்தோசத்தின் வெளிச்சத்தில் வெட்கி கதிரவன் சில கணங்கள் தன் முகம் மறைப்பான்....!

தினவெடுத்த எம்மவரின் தோள்கள் பூமாலைகளை தாங்கி நிற்கும்... தமிழ் தேசமெங்கும் சுதந்திர ஈழக்காற்று சுற்றிப் பரவி தென்றலாய் நடனமாடி மலர்களில் இருந்து நறுமணத்தை காற்றில் பரப்பி எமது தமிழ் ஈழம் முழுதும் பரவவிடும்....

எம்மவர் சிந்திய இரத்தத்துளிகளும்....மண்ணில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் ஆன்மாக்களும் அன்றைய தினத்தில் சர்வ நிச்சயமாய் எமது உணர்வுகளுக்குள் உயிர்த்தெழுந்து...ஆனந்தக் கண்ணீராய்....மண்ணில் வீழ்ந்து அஞ்சலிகளை ஆத்மார்த்தமாக்கும்....

குள்ள நரிகளும் கபட நாய்களும் வெறி பிடித்த மிருகங்களும்...எமது தமிழ்தேசிய கொடியின் பட்டொளி காற்றில் உரசி தெறிக்க வைக்கும் தீப்பொறிகளின் உக்கிரம் தாங்க முடியாமல்....செத்து வீழும் காட்சிகளை எம் மழலையர் கண்டு காரணம் கேட்க எம் குலப் பெண்களும் ஆண்களும் அதன் பின்ணனியில் உள்ள துரோகக் கதைகளை...சொல்லி சொல்லி சிரிப்பர்....

எம் கனவுகள்....அழிந்துவிடவில்லை..
அது கனல் போல் கனன்று கொண்டிருக்கிறது...
வல்லூறுகள் வாழ்வது போலத் தோன்றூம்..
ஆனால் காலத்தின் கணக்குகள்...
எல்லாவற்றையும் கலைத்துப் போடும்...!

ஒரு தொன்மையான இனத்தின் வேர்கள்
அழிந்துவிட்டதாய் நினைப்பதின்
பின்ணணியில் பிழையாமல் விழித்திருக்கிறது
எம் எதிரிகளின் அறியாமை...!

காலமே...காட்சிகளை மாற்றும்...
அன்று மேல் கீழ் ஆகும்...
கீழ் மேல் ஆகும்....
ஆமாம்..மாற்றம் பிரபஞ்ச நியதியன்றோ?

வெகு தூரமில்லை உறவுகளே...! சிங்க நிகர் தலைவனின் கனவுகள் நிறைவேறும்...தமிழும் தமிழனும்...அழியும் என்று உலகம் மகிழும் தறுவாயில் எல்லாம்..எம் இனமும் எம் மொழியும் வெகுண்டு எழுந்து...உலக எண்ணங்களைத் தவிடு பொடியாக்கிவிடுவது வழமையான ஒன்று...!

ஒப்பற்ற ஒரு சீரிய தொல் இனம் நாம்....தொன்மையான செம்மொழியை கொண்டவர்கள் நாம்....!!!!!!! ஈழம் என்பது ஈழத்தில் பிறந்தவர்க்கு மட்டுமின்றி...ஒவ்வொரு தமிழனின் கனவாய்க் கொள்வோம்....!

எம் மக்களுக்காக போராடி.. எமது வாழ்வாதரங்களுக்காக மண்ணில் தலை சாய்த்த வெற்றித் திருமகன்களுக்கும்...மாவீரர்களுக்கும்...இந்த மாவீரர் தினத்தில் (27.11.2010)

எமது வீர வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறோம்....!!!!!!!

வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே!
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்க செல்கவே!

தேவா. S

Comments

vinthaimanithan said…
//எமக்காக ஆதவன் ஒரு விடியலைப் பரப்புவான்....அப்போது எமக்கான கானங்களும், இசையும், பறவைகளின் சங்கீதமும் ஒலிக்கும்....எமது ஆ நிறைகள் சந்தோசத்தில் தன்னிச்சையாக பால் சொரியும்...! எம் குல பெண்டிரின் முகங்களில் பூரிக்கும் சந்தோசத்தின் வெளிச்சத்தில் வெட்கி கதிரவன் சில கணங்கள் தன் முகம் மறைப்பான்....! //

நாளை விடியும் என்கிற நம்பிக்கைதான் எம்மை நடத்திச் செல்கிறது. எமது விடியலின் பூபாளம் இசைக்கும் நேரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன கடியார முட்கள்!

மாவீரர்தின வணக்கங்கள்!
NaSo said…
மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்!!
மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்!!
எமது வீரவணக்கங்கள்...
Kousalya Raj said…
//ஈழம் என்பது ஈழத்தில் பிறந்தவர்க்கு மட்டுமின்றி...ஒவ்வொரு தமிழனின் கனவாய்க் கொள்வோம்....!//

வீரமும், கோபமும் தெறிக்கும் வார்த்தைகள் உணரவைக்கின்றன தமிழனின் மாண்பை...!!
விடியும் நேரம் வெகு தூரம் இல்லை....நம்பிக்கை கொள்வோம்...

எனது வீர வணக்கங்கள் !!
//காலமே...காட்சிகளை மாற்றும்...
அன்று மேல் கீழ் ஆகும்...
கீழ் மேல் ஆகும்....
ஆமாம்..மாற்றம் பிரபஞ்ச நியதியன்றோ?//தமிழீழம் என்பது வரலாற்றின் கட்டாயம் ...
ஏனெனில் அது பிச்சை கேட்கவில்லை ...
தன்னுரிமையை நாடி நிற்கிறது .
போளுர்தயாநிதி
//எம் குல பெண்டிரின் முகங்களில் பூரிக்கும் சந்தோசத்தின் வெளிச்சத்தில் வெட்கி கதிரவன் சில கணங்கள் தன் முகம் மறைப்பான்....//

நிச்சயமா நடக்கும் அண்ணா ., எனது சார்பாகவும் மாவீரர் வணக்கங்கள் ..!!
veera vanakkam vera vanakkam
engal thayagam kakka vera savadaintha
maveerar galukku veera vanakkam
polurdhayanithi
அவர்கள் அனைவருக்கும் வீர வணக்கங்கள்!
ஒரு தொன்மையான இனத்தின் வேர்கள்
அழிந்துவிட்டதாய் நினைப்பதின்
பின்ணணியில் பிழையாமல் விழித்திருக்கிறது
எம் எதிரிகளின் அறியாமை...!////


எனது வீர வணக்கங்கள் !!
sakthi said…
எம் கனவுகள்....அழிந்துவிடவில்லை..
அது கனல் போல் கனன்று கொண்டிருக்கிறது...
வல்லூறுகள் வாழ்வது போலத் தோன்றூம்..
ஆனால் காலத்தின் கணக்குகள்...
எல்லாவற்றையும் கலைத்துப் போடும்...!


சத்தியமான வார்த்தைகள்
மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள் !!
எழுத்திலாவது வீரவணக்கம் சொல்லிக்கொள்கிறேன்.
dheva said…
nis @ ஈழம் பற்றி பகிர உங்களிடம் எதுவும் இல்லையா...! இல்லை சோக உச்சத்தில் வார்த்தைகள் கிடைகக்வில்லையா?
arasan said…
நிச்சயம் இந்நிலை மாறும்..
அப்போ நம்மை வெல்ல எவனும் இருக்க கூட மாட்டான்..

வீர வணக்கம்..
வரலாற்றில் எதுவுமே நிரந்தரம் இல்லை. நாளைய பொழுது நமதாகட்டும். வீர வணக்கங்கள்.
தமிழன் வணங்கிட தகுதியானதொரு மற்றொரு நாள்.. எனது வணக்கங்களும்.
Unknown said…
தாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்...
வினோ said…
எனது வீர வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
madhiyarasu said…
வீரவணக்கங்கள். ஈழம் மலர்வது உறுதி. 27.11.2011 என தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

நன்றி
Unknown said…
எமது வீர வணக்கங்கள்.
dheva said…
மதியரசு... @ நன்றிகள். மாற்றப்பட்டு விட்டது.. !
Unknown said…
எமது வீர வணக்கங்கள்.
எழுத்திலாவது வீரவணக்கம் சொல்லிக்கொள்கிறேன்.
இயக்க வேறுபாடுகள் ஏதுமின்றி அனைத்து இயக்கத்தவர்களின் மாவீரர்களுக்கும் போராளிகளுக்கும் எளியோனின் வீர வணக்கங்கள்! ... கடைசி வரி முத்தாய்ப்பு!!! உறுதி கொள்கிறேன் தோழர்!
VELU.G said…
அப்படியே வழிமொழிகிறேன் தேவா
VR said…
துயுளுங்கள் எங்கள் சகோதரர்களே!
மனதுக்குள் இன்னும் இருக்கிறது விடுதலை நெருப்பு.
உங்கள் தியாகத்திற்கு வீர வணக்கங்கள்.
மாவீரர்தின வணக்கங்கள்!
ஹேமா said…
காலத்தையே வெல்வோம்.
காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.
தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம் !
Anonymous said…
indha sodhaniyum vedhanaiyum nirandharam all.
enadhu veera vanakkangal
Anonymous said…
mannikkavum nirandharam alla enbadhu all endru type aagi vittadhu.
மாவீரர்தின வணக்கங்கள்!
Anonymous said…
மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்..
எப்போதும் உங்களுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு,

வீர வணக்கம் சொல்வதிலும் வெளிப்பட்டு இருக்கிறது..

வெல்க நம் நாடு..!!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த