Skip to main content

சுவாசமே காதலாக....(தொகுப்பு:6)!


உன்னிடம் நானும் என்னிடம் நீயும் இதுவரை காதலை சொன்னதில்லை. காதல் என்ற வார்த்தைக்குள் சிக்காமல் உன்னோடு பழகத்தொடங்கி இன்றோடு மூன்றாண்டுகளைக் கடந்துவிட்டோம் என்ற நினைவின் பின்னணியில் வெளிப்பட்ட நீண்ட பெருமூச்சோடு....நடந்து கொண்டிருக்கிறேன்...ஒரு அதிகாலை ஆள் அரவமற்ற ஒற்றையடிப் பாதையில்.....

இந்தக் கணம் வரை எந்த முரண்களும் இல்லாமல் நேசித்தலைப் பிரதானமாகக் கொண்டு நாம் சிரித்ததும் சிரிக்கையில் பேசியதும் பேசுகையில் கவிதை சொன்னதும் அதைக் காட்சிகளாய் வர்ணித்ததும் கைகட்டிக் கைக்கு எட்டாத் தொலைவுகளில் உடல் உரசா ஆனால் உள்ளம் உரசிய நடைகளில் எல்லாம் எதைப் பயின்றோம்? காதலா? இல்லை நட்பா இல்லை இந்த இரண்டும் தொலைந்து போன இடத்தில் முளைத்த புதிதான வேறு எதுவோவா?

ஞானத்தின் உச்சம் பெண்களிடமிருந்து வருகையில் அதை அதீத வேகத்தில் ஓர் ஆண் வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்காக நான் வெகுகாலம் தவமிருந்தேன்... நீ தவம் கலைத்தாய் வரம் கொடுத்தாய்... தாகத்தில் பருகும் நீர் போல இருகரம் குவித்து மொத்த நீரையும் உள்வாங்கிக் கொள்வது போல சிந்தாமல் சிதறாமல் உன்னை என்னுள் நிறைத்துப் போட்டேன். நிறைந்து போனேன். ஒரு அடர்த்தியான அமிலம் போல என்னை கரைத்துப் போட்டாய்... எனக்குள் கனவுக்கடைகளை வேக வேகமாய்த் திறந்து போட்டாய்...!

கலர்க்கலராய் நீ பேசிய கவிதைகளும் கவிதைகளை உச்சரித்த உனது பாவங்களும் ஒன்று சேர்ந்து என்னை மூர்ச்சையாக்கிப் போட்டு முன்னூறு கதைகள் பேசியது உனக்குத் தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியாது. ஒரு முறை பேச்சு வாக்கில் ஐ லவ் யூ என்று சொன்ன மறு கணத்தில் உன் முகத்தில் உற்சாகமும் ஒரு சாந்தமுமாய் வெளிப்பட்ட உணர்வுக்கு உதவுவது போல வந்து விழுந்த வார்த்தைகள் சொல்லாமல் இருக்கும் எல்லாம் சுகமானது என்று எனக்குள் ஒரு பால பாடத்தை நடத்தி விட்டு... போரில் வென்ற இருமாப்பின்றி வெறுமனே நகர்ந்து செல்லும் அரசனைப் போல அடுத்த வாக்கியத்துக்குள் நுழைந்து வேறு விசயத்துக்குச் சாதரணமாய் திரும்பி விட்டன...

ஆனால்... தேக்கிவைத்த உணர்வுகளோடு நேசித்தலைச் சொல்லாமலேயே நேசிக்கும் வித்தையை எனக்கு கற்றுக் கொடுத்த குரு நீ என்பதும் உனக்குத் தெரியாது. மெளனங்களால் பேசும் மொழியை உன்னிடம் இருந்து நான் கற்றுக் கொண்டதும் தெரியாது. பகிராமல் ஒரு பயணம் செய்வதில் சராசரியான எனக்கு இருந்த சிரமங்களில் தலையாயது எனக்காக நீ ஒரு நாள் அழுத போது உன்னைத் தொட்டு ஆறுதல் சொல்ல முடியாமல் நான் தடுமாறியது, அன்று என் கலக்கம் புரிந்து ஆறுதலுக்காய்த் தொடுதலில் தவறு இல்லை. செயல்களை விட நோக்கங்களில் தான் இருக்கிறது தவறும் சரியும் என்று நீ சொன்ன இடத்தில் தெளிவாய்ப் புரிந்து போனது வாழ்க்கையும் வாழ்வியல் முறைகளும் உறவுகளும்...

திருமணமும் பந்தமும் மட்டுமே உறவுகளை வரையறுத்துப் போட்டு ஒரு கட்டுக்குள் நிறுத்தி வைத்து விடுகின்றன என்ற ஒரு பேச்சினூடே திருமணம் என்பது வாழ்வியல் தேவை ஆனால் அதுவே வாழ்வியல் இல்லை. காமம் வரைமுறைக்குள் இருக்க வேண்டும் என்றுதான் திருமணம் அதில் தவறுகள் இல்லை. ஆனால் காதல் வரைமுறைக்குள் இருக்க வேண்டும் என்று மனிதர்கள் எண்ணுவதில்தான் முரண்பாடுகள் இருக்கின்றன. காமத்தைக் கட்டுக்குள்ளும் காதலை விரித்து பேரன்பு நோக்கம் கூடிய பார்வையில் நோக்கி வாழும் போதுதானே வாழ்வின் ஓட்டத்தில் இருக்கும் ஜீவன்அறியப்படும்.

உடல் சார்ந்த காமம் கட்டுக்குள்ளும் அங்கே ஒருத்தனுக்கு ஒருத்தி மாண்பும், மனம் சார்ந்த காதல் அன்பே சிவமாய் விரிந்து பரந்தும் இருத்தலில் தானே மனிதனுள் இருக்கும் எல்லாச் சக்கரங்களும் விழிக்கும், அவன் உடலென்னும் தோட்டத்தில் எல்லாப் பூக்களும் பூத்துச் சிரிக்கும். தடுக்க வேண்டியதைத் தடுத்து அனுமதிக்க வேண்டியதை அனுமதித்து வாழும் வாழ்க்கையை நடத்திச் செல்வது ஒரு கலை. ஆனால் மனிதர்கள் தடுக்க வேண்டியதை அனுமதித்தும் அனுமதிக்க வேண்டியதைத் தடுத்தும் ஒரு குழப்பத்தில்தான் பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாகக் காமத்தை நேர்மையாக அறியவேண்டும். இவர்கள் திருட்டுத்தனமாய் அதை அடக்கி அடக்கியே....அதை அறிவதைத் தவிர்த்துப் பேசுவதைத் தவிர்த்து... இப்போது அறிதல் இல்லாமல் புரிதல் இல்லாமல் பார்க்கும் பொருளில் எல்லாம் காமம் வெளிப்பட்டுச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. கடவுளும் அப்படித்தான்...அறிதலும் புரிதலும் இல்லாமல் முரண்பட்டுப் போயிருக்கிறது...

நான் பேசிக் கொண்டிருந்தேன்....

என்னைத் தடுக்காமல் நீ அவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு கண்களால் ஒரு உணர்வை எனக்குள் பாய்ச்சிவிட்டு அந்தப் பாய்ச்சல் பரப்பிய சந்தோச அலைகளை என்னுள் பரவவிட்டு நான் லயித்துக் கண்மூடி அதை அனுபவித்த நொடியில் என் உள்ளங்கை பற்றி மேலும் நீ பரவவிட்ட அதிர்வுகளில் சுத்தமான அன்பு இருந்ததைச் சூடாக உணர முடிந்தது.....

தட்சிணாமூர்த்தி தத்துவம் போல இருந்ததை இருந்தது போல இருந்து காட்டி இன்று வரை தொடரும் உன்னோடான உறவு நட்பில்லை, காதலுமில்லை அது ஒரு குரு சிஷ்யன் உறவு.....

ஆமாம் நீ என் ஞான குரு என்று உன்னிடம் சொன்னதை என்னிடம் நீயும் திருப்பி சொன்னாய்.......

தொடர்ந்து கொண்டிருக்கிறது.....நமது பயணம்....

உடல்தாண்டி உணர்வுகளாயும் தொடரட்டும் என்று நீ சொன்னதையே நானும் சொல்லி இந்தக் கட்டுரையையும் உனக்கே சமர்ப்பித்து........

இதோ நடந்து கொண்டே இருக்கிறேன்......என் ஒற்றையடிப் பாதையில்......மெளனத்தில் நிறைந்திருந்த சப்தமான உன் நினைவுகளோடு....


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா...!

(இன்னும் சுவாசிப்போம்.....)


தேவா. S

Comments

அழகான சுவாசம்...
இன்னைக்கு என்ன எல்லா இடத்திலும் காதலா இருக்கு!
karthikkumar said…
தாகத்தில் பருகும் நீர் போல இருகரம் குவித்து மொத்த நீரையும் உள்வாங்கிக் கொள்வது போல சிந்தாமல் சிதறாமல் உன்னை என்னுள் நிறைத்துப் போட்டேன். நிறைந்து போனேன்.///
சூப்பர் சார் ... NICE FEEL...........
SASIKUMAR said…
me: hi
dheva2000: hi sasi
me: சுவாசமே காதலாக....(தொகுப்பு:6
intha topic eppavum naan padikkirathu illa
ungal mel enaaku kobamum poraaamyuim athikarithu vidum
dheva2000: hahahaha
me: ithellaam munbeh eluthi vaithirunthaatha?
//உதாரணமாகக் காமத்தை நேர்மையாக அறியவேண்டும். இவர்கள் திருட்டுத்தனமாய் அதை அடக்கி அடக்கியே....அதை அறிவதைத் தவிர்த்துப் பேசுவதைத் தவிர்த்து... இப்போது அறிதல் இல்லாமல் புரிதல் இல்லாமல் பார்க்கும் பொருளில் எல்லாம் காமம் வெளிப்பட்டுச் சீரழித்துக் கொண்டிருக்கிறது.//



முற்றிலும் உண்மை அண்ணா ....ரொம்பநாளைக்கு அப்புறம் புரியும் படியான பதிவு (எனக்கு அண்ணா புரிஞ்சது ....)
ஹி ....ஹி ....மேல உள்ள பொண்ணு யாரு அண்ணா .....வீட்டுல பொய் எத்தனை கமெண்ட்ஸ் விழுந்திருக்குன்னு பார்க்காதீங்க ...பிறகு பூரி கட்டை உடஞ்சி போகும் ......அப்புறம் கம்பெனி ஆஸ்பத்திரி செலவை ஏற்காது
//பகிராமல் ஒரு பயணம் செய்வதில் சராசரியான எனக்கு இருந்த சிரமங்களில் தலையாயது எனக்காக நீ ஒரு நாள் அழுத போது உன்னைத் தொட்டு ஆறுதல் சொல்ல முடியாமல் நான் தடுமாறியது, அன்று என் கலக்கம் புரிந்து ஆறுதலுக்காய்த் தொடுதலில் தவறு இல்லை. செயல்களை விட நோக்கங்களில் தான் இருக்கிறது தவறும் சரியும் என்று நீ சொன்ன இடத்தில் தெளிவாய்ப் புரிந்து போனது வாழ்க்கையும் வாழ்வியல் முறைகளும் உறவுகளும்.../


வாய்ப்பே இல்ல அண்ணா . ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு .. இந்த வரிகளில் சொல்லப்பட்ட விசயங்களைக் கற்பனை செய்யும் போதே ஹய்யோ ..!!
சில உணர்வுகளை உணர்ந்தவர்களால் மட்டுமே முழுமையாக உணர முடியும்!
ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ..!!
என் உள்ளங்கை பற்றி மேலும் நீ பரவவிட்ட அதிர்வுகளில் சுத்தமான அன்பு இருந்ததைச் சூடாக உணர முடிந்தது.....////

nice dheva sir
//நான் பேசிக் கொண்டிருந்தேன்....//

ஆமா...நீங்க மட்டும்தான் பேசிட்டு இருந்தீங்க
////இந்தக் கணம் வரை எந்த முரண்களும் இல்லாமல் நேசித்தலைப் பிரதானமாகக் கொண்டு நாம் சிரித்ததும் சிரிக்கையில் பேசியதும் பேசுகையில் கவிதை சொன்னதும் அதைக் காட்சிகளாய் வர்ணித்ததும் கைகட்டிக் கைக்கு எட்டாத் தொலைவுகளில் உடல் உரசா ஆனால் உள்ளம் உரசிய நடைகளில் எல்லாம் எதைப் பயின்றோம்? காதலா? இல்லை நட்பா இல்லை இந்த இரண்டும் தொலைந்து போன இடத்தில் முளைத்த புதிதான வேறு எதுவோவா?/////

உண்மைதான் தேவா, காதல்/நட்பு போன்ற வார்த்தைகளால் இதை விளக்கமுடியாது......!
Arun Prasath said…
ஐ லவ் யூ என்று சொன்ன மறு கணத்தில் //

ஆங்கிலத்தில் சொல்லி ஆட்டத்தில் இருந்து விலக படுகிறீர்கள்
Anonymous said…
//செயல்களை விட நோக்கங்களில் தான் இருக்கிறது தவறும் சரியும் என்று நீ சொன்ன இடத்தில் தெளிவாய்ப் புரிந்து போனது வாழ்க்கையும் வாழ்வியல் முறைகளும் உறவுகளும்...//

//காமத்தைக் கட்டுக்குள்ளும் காதலை விரித்து பேரன்பு நோக்கம் கூடிய பார்வையில் நோக்கி வாழும் போதுதானே வாழ்வின் ஓட்டத்தில் இருக்கும் ஜீவன்அறியப்படும்.//

மிகச் சிறப்பான உங்கள் புரிதல் எங்களுக்கும் தந்து உய்விக்கிறீர்கள் அண்ணே!
மொத்தக் கட்டுரையும், உள்வாங்கியதில்.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
ஒவ்வொரு வரியிலும் உங்க உணர்வுகளை.. வெளிப்படுத்த ஒரு போர் வீரனாய்... நீங்க உபயோகிக்கும் எழுத்து ஆயுதம்..

எண்ணங்களை எல்லாம் எழுத்தாய் ....எல்லாவற்றையும் உணர்ந்து எழுதி
காதல், காமம், நட்பு, குரு ஸ்தானம்..... ஹ்ம்ம்ம்...அத்தனையும் அதனதன் போக்கில் விவரித்த விதம்... மனதை தொடுவதாய் இருக்கு..!

தொடரட்டும் உங்கள் புரிதலும்... போர் முரசும்...!! :-))
காதலை உணர்ந்து எழுதுறிங்க ம்ம்ம்
பிரமாதம்ங்க..

ஒவ்வொரு வரியும் ஓராயிரம் அர்த்தம் சொல்கிறது...
மிகவும் ரசித்தேன்...
//எஸ்.கே said...

சில உணர்வுகளை உணர்ந்தவர்களால் மட்டுமே முழுமையாக உணர முடியும்!//

அதே! அதே! :-)
காற்று வெளியிடைக் கண்ணம்மா , --நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; --அமு
தூற்றினை யொத்த இதழ்களும் --நில
வூறித் ததும்பும் விழிகளும் --பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் --இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் -- எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே -இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே! --இந்தக் (காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா! --எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் --துயர்
போயின, போயின துன்பங்கள் --நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே --என்றன்
வாயினி லேயமு தூறுதே --கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே --உயிர்த்
தீயினி லேவளர் சோதியே! -என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)
காதல் - கொடுப்பதன்று, எடுப்பதன்று, ஈர்த்துக் கவிழ்ப்பதன்று, மடக்குதல் அன்று, மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்… எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று. தேடல்கள்… தம் காத்திருத்தலின் தற்செயல் நொடியில் திகைத்துச் சந்தித்து… உள்திரும்பி… சந்திப்பில் நிறைவடைவது
* அறிவுமதி
வினோ said…
/ தாகத்தில் பருகும் நீர் போல இருகரம் குவித்து மொத்த நீரையும் உள்வாங்கிக் கொள்வது போல சிந்தாமல் சிதறாமல் உன்னை என்னுள் நிறைத்துப் போட்டேன். நிறைந்து போனேன். /

இந்த உறவுக்கு என்ன பெயர் வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம்... காதல் என்றோ, நட்பு என்றோ.. ஆனால், புரிதலில் என்று ஓர் புள்ளியில் இணைந்து இருக்கும்...
" தாகத்தில் பருகும் நீர் போல இருகரம் குவித்து மொத்த நீரையும் உள்வாங்கிக் கொள்வது போல சிந்தாமல் சிதறாமல் உன்னை என்னுள் நிறைத்துப் போட்டேன். நிறைந்து போனேன்."

அருமையான கவிதை வரிகள்!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த