தேர்தல்ல தொகுதி ஒதுக்கீட்டுக்கே இம்புட்டு குழப்பம் பண்றீகளே..? நீங்களுவோ ஒண்ணா சேந்து குத்தாட்டம் போட்டு செயிச்சு நாட்ட வெளங்க வைக்க போறீகளா? கதர் சட்டை போட்ட சோனியா காங்கிரசுக்கு எம்புட்டு ஆசை ....ஆத்தாடி? தொகுதிய மட்டும் வக்கனைய வாங்கி செயிச்சு என்னாத்த பண்ணி கிழிக்கப்போற ஆயா நீயி...?????
ரோட்ல எறங்கி எப்பய்யா போராடீ இருக்கு காங்கிரசு? பாத்தியளா...பாத்தியளா.. தேவையில்லாம சொதந்திரம் வாங்கி கொடுத்தானுவோன்னு சொல்லுறீய? இவனுவளா வாங்கி கொடுத்தானுவ.... பெரிசா தேசிய கொடி கலருக்கு ஒரு கட்சிக்கொடிய வச்சிகிட்டு இவனுவோ அடிக்கிற லூட்டி.....நான் சொல்ல மாட்டேன்.. உங்களுவளுக்கே தெரியும்.
ஏஞ்சாமி இவனுவொளுக்கு வேற கலர்ல எதுனாச்சும் கொடிய மாத்திவுடுங்களேன்....????
அது மட்டும் இல்ல...காங்கிரசுங்கறது சொதந்திரத்துக்கு போராடின கச்சி, அந்த பேர படுவா பயலுவளா நீங்க இனிமே வைக்கப்புடாது வேற என்னாமாச்சும் பேர வச்சி செயிச்சுக்கோங்கடா பயலுவலா? பொறவு...மாகாத்மா காந்தின்றவரு நம்ம தேசப்பிதா அல்லாருக்கும் பொதுவான ஆளு அவரு போட்டாவ போட்டு ஓட்டுக் கேக்கபடாது...இப்படி ஏதாச்சும் ஒரு சட்ட திட்டத்த போட்டு இவனுவள சலிச்சு பிரிச்சு எடுங்கப்பா...! நேத்திக்கு அந்த கச்சில உறுப்பினரா சேந்தவன் கூட தியாகி ரேஞ்சுக்கு கொடுக்குற் பில்டப்பு...சாமியோவ்.. தாங்க முடியலடா ....ங்கப்பா!
காலம் போன காலத்துல இவனுவளுக்குன்னு வந்து மாட்டுனாருய்யா திராவிட திலகம். வாழ்க்க புல்லா முடிஞ்சு மவராசன் நிம்மதியா ரெஸ்ட்டு எடுத்து சொச்ச காலத்தையும் போக்க வேண்டிய நேரத்துல நல்லா கேக்குறாருய்யா டீட்டெயிலு..! ஏஞ்சாமி இன்னுமா பதவி ஆச புடிச்சுகிட்டு உலுக்குது உங்கள? பேயாம மூத்தவரையோ இல்லை எளயவரையோ புடிச்சு தமிழ்நாட்டு சனத்துக்கிட்ட கொடுத்துபுட்டு அக்காடான்னு போயி ரெஸ்ட் எடுக்கலாம்ல... ! உம்ம உயிர எடுக்கறதுக்குன்னே... ஒரு அல்டாப்பு கூட்டணியும் உம்ம பேர கெடுக்கறதுக்கே புள்ள குட்டியளும் ....! ரொம்ப கஷ்டமா இருக்குங்க அய்யா உங்க பொழப்ப பாத்தா...
நாட்டை எத்தனவாட்டியோ ஆண்ட மவராசன், இன்னுமா கிடந்து இப்படி அல்லாடிகிட்டு இருக்கணும்.... கூட்டணி அமைச்சு போட்டு....எந்த தொவுதிய ஒதுக்கணும்னு மறுபடியும் சோனியா காங்கிரசு கிட்ட மல்லுக்கட்டு வேற...! ஐயா சாமி.. இந்த கதர் சட்டை போட்ட டுபாக்கூர் எல்லாம் உம்ம தோள்பட்டையில ஏறி செவிய கடிக்கிறானுவோளே... ! வேணுமுன்னே ஊழலை எல்லாம் நடக்கவுட்டு கம்முனு இருத்துபுட்டு... நல்லா அனுப்புறாய்கய்யா சி.பி.ஐ எல்லாம் உம்ம வீட்டுக்க்கு தேர்தல் நேரமா பாத்து....
தனியா மட்டும் நின்னு இருந்திருக்கணும்....காங்கிரசுன்னு ஒரு கச்சியா இருந்துச்சுன்னு..? கேக்குறமாறி செஞ்சுருப்பானுவ நம்மாளுவ? பெரியவரு, தமிழின தலிவரு இப்போ வேற வழியில்லாம உங்கள பிணைய கைதிமாறி புடிச்சு வச்சுகிட்டு பேச்சு நடத்துறானுவளே ரோமாபுரி காங்கிரசு ஆளுக? உங்க வேதனை ரொம்ப கஷ்டமய்யா சாமி...! எம்புட்டு இருந்து என்னங்கய்யா தமிழ் நாட்ல கூலி வேலை பாத்து பொழைக்கிற் ஒரு சாதாரண பொறப்பு கூட நிம்மதியா உறங்கி நிம்மதியா எந்திருக்கும்... ஆனா...உங்க நெலமை.......?
தொகுதி உடன்பாட்டுக்கு காங்கிரசு ஐவர் குழு அமைச்சு இருக்காம்.. ! ஐ.....!!!!! இந்த ஐவர் குழுக்கும் பின்னால ஐம்பாதாயிரம் குழுவுல்ல இருக்கும். இவனுவ பேசி முடிவு பண்ணி ஐஞ்சு பேறா சேர்றதுக்கே எழவு ஒரு மாசம் ஆவும்.. அப்புறம் எப்புடி பேச்சுவார்த்தை நடத்துறது......? எம்புட்டு அராஜகம், அழிச்சாட்டியம் பண்ணிப்புட்டு.. தெகிரியமா தேர்தல்ல கூட்டணி வச்சுப்புட்டாவோ இந்த காங்கிரசு ஆளுக....
இப்படி நீங்களுவோ பண்ற எல்லா கொழப்பத்தையும் பாத்து அம்புட்டையும் சிக்சரா மாத்த விடுமுறை நாயகி, ஓய்வெடுப்பில் காலம் கடத்திய கழக பெண் சிங்கம், கேப்புடன் கூட கைய கோத்துகிட்டு அடுத்த முதல்வராவே கனவுல சஞ்சரிச்சுகிட்டு இருக்கு...! ஆமாம் இன்னும் தேர்தலுக்கு முன்னால அநேகமா...கொல்லூரு கோவிலுக்கு போவும், அப்புறம் குருவாயுருக்கு போவும்... (பயப்படாதீக செயிக்கிறதுக்கு முன்னால போச்சுன்னா.. ஒண்ணியும் பயம் இல்ல.......ஆனா செயிச்ச பின்னால போயி ஒரு ஆனைக்குட்டியும் வாங்கிவிட்டுச்சுன்னா.............எதிரணிக்காரவுக எல்லாம் எச்சரிக்கயா இருந்துகோங்க....)எப்படியும், ரெண்டு மூணு யாகம் செய்யும்....அட.. எல்லாம் மக்க நல்லதுக்குதான் செய்யிதுன்னு நம்புறீகளா? நம்புங்க .. நம்புங்க..
வேற என்னத்த பண்ணி தொலைக்கிறது?
எஞ்சனம் கொள்ளை பேர கொன்னுப்புட்டு ராட்சனனா ஆச்சி பண்ற ராசபக்சே, எதாச்சும் பண்ணி கொறச்சு சீட்டாசும் புடிச்சுபுடலாம்ன்ற கனவுல சோனியா, எப்படியும் செயிச்சு புடலாம்னு கலிஞர் ஐயா, கேப்புடானாச்சும் காப்பத்தமாட்டாறான்னு செயலலிதா அம்மா, எப்படா எவன்டா செயிப்பான் நாமளும் போயி ஓட்டிக்கிட்டு காசுபாப்போம்னு பாக்குற சந்தர்ப்பவாதிய இவுகளுக்கு நடுவுல...
எப்படியாச்சும் இல்ல ஏதாவது ஒரு வழியில் நல்ல பொழைப்பு பொழைக்கமாட்டமான்னு ஆட்காட்டி விரல நீட்டிகிட்டு (வோட்டு மை வைக்கதான்) புறத்தலா... கைய யாருக்கும் தெரியாம நீட்டிகிட்டு (ஹி ஹி ஹி......அது எதுக்குனு சொல்ல மாட்டம்ல) காத்து கெடக்குது எஞ்சனம்....
ஒண்ணுமே நடக்கப்போறதுல்ல பெரிசா...இருந்தாலும் தேர்தலு ஒரு நல்ல டைம்பாஸ் மக்கா....!
பசிக்கிற வவுத்தையும்
எரியாத அடுப்பையும்
பொழைக்க பொழப்பு இல்லாதவனையும்
ஒதுங்க கூரையில்லவதனையும்
உரம் வாங்க காசில்லாதவனையும்
கடலுக்கு போயி சாகுற உசுரையும்
மாத்திப்புடுமா சாமி உங்க தேர்தலு? இல்லை தெரியாமத்தான் கேக்க்குறேன்....
தேவா. S
Photo Courtesy: Mr. Suresh Babu
Comments
good boss
hahaa
ennathaan nadanthalum nama innum thiruntha mattom anna...